Manik Prabhu -9
அத்தியாயம்-9
இறைவன் ஒருவனும் அவனே இவன் என
எல்லா நிலையம் எனக்கே ஆக்கி
என்னுடன் இருந்து
என்னுடன் கலந்து
என்னுள் நிறைந்த
எல்லோரையுமே
ஜனனம், சம்சாரம், மரணம் எனும்
கடலைக் கடந்து
கரை சேர்த்திடுவேன்
நின் மனம் என்பால்
நிலைபெற வைப்பாய்
என்னையே நினைத்திட வைப்பாய்
பகவத் கீதையில் கண்ணன்
எல்லா நிலையம் எனக்கே ஆக்கி
என்னுடன் இருந்து
என்னுடன் கலந்து
என்னுள் நிறைந்த
எல்லோரையுமே
ஜனனம், சம்சாரம், மரணம் எனும்
கடலைக் கடந்து
கரை சேர்த்திடுவேன்
நின் மனம் என்பால்
நிலைபெற வைப்பாய்
என்னையே நினைத்திட வைப்பாய்
பகவத் கீதையில் கண்ணன்
ஆன்மீக மையம் உருவானது
ஹும்னபாத்தில் பக்தி மார்க்க சமஸ்தானத்தை நிறுவ பிரபு முடிவு செய்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. அந்த இடம் பொருளாதார, மத, அரசியல் பேதங்களினால் மிகவும் சீரழிந்து இருந்தது. அங்கு பெருமளவில் முஸ்லிம் மக்களே அக்கம் பக்கத்து நகரங்களை ஆண்டு வந்தார்கள். அவர்களில் பலர் முஸ்லிம் மத வெறியர்கள். அதனால் இந்துக்கள் அங்கிருந்து துரத்தப் பட்டார்கள். அங்கு இருந்தவர்களோ கட்டாய மத மாற்றத்துக்கு உள்ளானார்கள். ஆகவே அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு தேவையாக இருந்தது. அது மட்டும் அல்ல. அங்குதான் இரண்டு வில்வ மரங்களும் எரிந்து விட்டன. அப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில் அங்கு சமஸ்தானத்தை நிறுவுவது சரியா என மானிக் பிரபுவை சுற்றி இருந்தவர்கள் சந்தேகத்தை எழுப்பினாலும் ஸ்ரீ மானிக் பிரபு தீர்மானமான முடிவுடன் இருந்தார். அங்கு இரண்டு நதிகள் இணைகின்றன. அது பிரும்மராக்ஷசர்கள் எறிந்து போன இடம். ஆகவே மத வெறியர்களின் மனதை அழிக்க வைக்கும் இடம் இதுவே என அவர் நம்பினார். அந்த இடத்தில்தான் மானிக் பிரபு ஆன்மீக மையம் அமைக்க உள்ளார் என்பதை தெரிந்து பலரும் அங்கு வரலாயினர். முதலில் அங்கு ஒரு ஓலைக் குடுசை அமைக்கப்பட்டு மையம் ஆரம்பிக்கப்பட மெல்ல மெல்ல அந்த மையம் பெரியதாகத் துவங்கியது. பிரபுவின் மகிமையினால் மையம் பெரியதாகிக் கொண்டே இருந்தது. அங்கு அமர்ந்தபடி பிரபு பிரசங்கம் செய்வார், ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவார். அதனால் அந்த இடத்தை சுற்றி இருந்த அனைத்துப் பகுதிகளிலும் ஆன்மீக சூழ்நிலை நிறைந்தது. ஏழை பணக்காரன் என்ப்ற பேதம் இன்றி அனைவரும் அங்கு வந்து பஜனைப் பாடல்களைப் பாடினார்கள். பக்தி பிரவாகத்தினால் அந்தப் பகுதி முழுகியது. பக்தர் கூட்டம் அலை மோதியது.
காலம் வேகமாக சுழன்றது . ஸ்ரீ மானிக் பிரபுவின் தாயாரும் பிற உறவினர்களும் அங்கு வந்து சேவை செய்யத் துவங்கினார்கள். ஆகவே அனைவரும் தங்குவதற்கு ஏற்ப பெரிய இடம் கட்டவேண்டியது ஆயிற்று. பெரிய பண்டிதர்களை அழைத்து, நல்ல நாள் பார்த்து அடிக்கல் நட்டு கட்டிடங்கள் கட்டப்படத் துவங்கின. சில மாதங்களிலேயே அந்தப் பகுதி முழுவதும் சிறிய ஆலயங்களும் கட்டிடங்களும் எழுந்தன. கல்யாண் நகரில் நவாப்பிடம் வேலை பார்த்து வந்த ஸ்ரீ மானிக் பிரபுவின் சகோதரரும் வேலையை ராஜினமா செய்துவிட்டு அங்கு வந்து விட்டார். அது போல மற்றொரு சகோதரரும் வேலையை விட்டுவிட்டு அங்கு வந்து விட்டார்.
ஆன்மீக மையம் அமைக்கப்பட்ட பின் சன்யாசிகளும் சாதுக்களுமே அங்கு தங்க அனுமதிக்பட்டு இருந்தார்கள். ஆனால் ஸ்ரீ மானிக் பிரபுவின் குடும்பத்தினர் அங்கு வந்து விட்ட பின் அதன் விதிகளை தளர்த்த வேண்டியதாயிற்று.
பிரபுஜி பிரசங்கம் செய்துவந்த இடமும் பெரியதாக்கபட்டு பல கடுமையான விதிமுறைகள் அமலாக்கப்பட்டன. பிரபுஜி வந்ததும் அனைவரும் எழுந்து நின்று ஒரே குரலில் பிரபு வந்தனம் பாட வேண்டும். அந்தப் பாடலை இயற்றியவர் அவருடைய சகோதரர் நரசிம்மன் என்பவரே. வந்து அமரும் இடங்கள் பண்டிதர்கள், மகான்கள், பாட்டு பாடுவோர் என பல பகுதிகளாக பிரிக்கப்பட்டன. ஸ்ரீ மானிக் பிரபு ராஜ யோகி என்பதினால் அவர் பகட்டான உடைகளை உடுத்திக் கொண்டே பிரசங்கத்துக்கு வந்தாலும் மற்ற நேரங்களில் அவர் எளிய உடைகளை அணிவதையே விரும்பினார். பிரசங்கத்தின் இடையே வினா விடைகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. அனைவரும் கேள்விகளை தொடுப்பார்கள். அவற்றுக்கு பிரபுஜி அருமையான விளக்கத்தை தருவார். அவருக்கு எங்கிருந்து கிடைத்தது அத்தனை ஞானம் என அனைவரும் வியப்பார்கள்.
அங்கு வந்து அவரை வணங்கியதுமே தமது மன பாரம் குறைவதை பலரும் கண்டார்கள். சூரிய ஒளியைப் போன்றவர் அவர். முக்காலத்தையும் உணர்ந்தவர். ஒரு மகான் என்றால் இரக்க குணம் இருக்கும். முன்கூட்டியே அனைத்தையும் அறிந்திடுவார்கள். சகிப்புத் தன்மை, பொறுமை, பரோபகாரம் என அனைத்தும் இருக்கும். எவரையும் அவர்கள் வெறுக்க மாட்டார்கள். இவையே ஒரு மகானின் அணிகலன்கள் என்பதாக பாகவதப் புராணம் கூறுகின்றது. ஆகவே அவை அனைத்தையும் ஒன்று சேர பெற்று இருந்த ஸ்ரீ மானிக் பிரபுவை மகான் என அழைத்தார்கள் என்றால் அதில் வியப்பதற்கு என்ன உள்ளது?
ஸ்ரீ மானிக் நகர் மையத்துக்கு எங்கிருந்து பணம் வந்தது, எப்படி வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. முன் பின் அறியாதவர்கள் வந்து பொன்னையும் பொருளையும் கொட்டிவிட்டுச் சென்றார்கள். அதனால் அந்த சன்னிதானத்தில் எதற்குமே குறை இல்லாமல் இருந்தது.
காலம் வேகமாக சுழன்றது . ஸ்ரீ மானிக் பிரபுவின் தாயாரும் பிற உறவினர்களும் அங்கு வந்து சேவை செய்யத் துவங்கினார்கள். ஆகவே அனைவரும் தங்குவதற்கு ஏற்ப பெரிய இடம் கட்டவேண்டியது ஆயிற்று. பெரிய பண்டிதர்களை அழைத்து, நல்ல நாள் பார்த்து அடிக்கல் நட்டு கட்டிடங்கள் கட்டப்படத் துவங்கின. சில மாதங்களிலேயே அந்தப் பகுதி முழுவதும் சிறிய ஆலயங்களும் கட்டிடங்களும் எழுந்தன. கல்யாண் நகரில் நவாப்பிடம் வேலை பார்த்து வந்த ஸ்ரீ மானிக் பிரபுவின் சகோதரரும் வேலையை ராஜினமா செய்துவிட்டு அங்கு வந்து விட்டார். அது போல மற்றொரு சகோதரரும் வேலையை விட்டுவிட்டு அங்கு வந்து விட்டார்.
ஆன்மீக மையம் அமைக்கப்பட்ட பின் சன்யாசிகளும் சாதுக்களுமே அங்கு தங்க அனுமதிக்பட்டு இருந்தார்கள். ஆனால் ஸ்ரீ மானிக் பிரபுவின் குடும்பத்தினர் அங்கு வந்து விட்ட பின் அதன் விதிகளை தளர்த்த வேண்டியதாயிற்று.
பிரபுஜி பிரசங்கம் செய்துவந்த இடமும் பெரியதாக்கபட்டு பல கடுமையான விதிமுறைகள் அமலாக்கப்பட்டன. பிரபுஜி வந்ததும் அனைவரும் எழுந்து நின்று ஒரே குரலில் பிரபு வந்தனம் பாட வேண்டும். அந்தப் பாடலை இயற்றியவர் அவருடைய சகோதரர் நரசிம்மன் என்பவரே. வந்து அமரும் இடங்கள் பண்டிதர்கள், மகான்கள், பாட்டு பாடுவோர் என பல பகுதிகளாக பிரிக்கப்பட்டன. ஸ்ரீ மானிக் பிரபு ராஜ யோகி என்பதினால் அவர் பகட்டான உடைகளை உடுத்திக் கொண்டே பிரசங்கத்துக்கு வந்தாலும் மற்ற நேரங்களில் அவர் எளிய உடைகளை அணிவதையே விரும்பினார். பிரசங்கத்தின் இடையே வினா விடைகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. அனைவரும் கேள்விகளை தொடுப்பார்கள். அவற்றுக்கு பிரபுஜி அருமையான விளக்கத்தை தருவார். அவருக்கு எங்கிருந்து கிடைத்தது அத்தனை ஞானம் என அனைவரும் வியப்பார்கள்.
அங்கு வந்து அவரை வணங்கியதுமே தமது மன பாரம் குறைவதை பலரும் கண்டார்கள். சூரிய ஒளியைப் போன்றவர் அவர். முக்காலத்தையும் உணர்ந்தவர். ஒரு மகான் என்றால் இரக்க குணம் இருக்கும். முன்கூட்டியே அனைத்தையும் அறிந்திடுவார்கள். சகிப்புத் தன்மை, பொறுமை, பரோபகாரம் என அனைத்தும் இருக்கும். எவரையும் அவர்கள் வெறுக்க மாட்டார்கள். இவையே ஒரு மகானின் அணிகலன்கள் என்பதாக பாகவதப் புராணம் கூறுகின்றது. ஆகவே அவை அனைத்தையும் ஒன்று சேர பெற்று இருந்த ஸ்ரீ மானிக் பிரபுவை மகான் என அழைத்தார்கள் என்றால் அதில் வியப்பதற்கு என்ன உள்ளது?
ஸ்ரீ மானிக் நகர் மையத்துக்கு எங்கிருந்து பணம் வந்தது, எப்படி வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. முன் பின் அறியாதவர்கள் வந்து பொன்னையும் பொருளையும் கொட்டிவிட்டுச் சென்றார்கள். அதனால் அந்த சன்னிதானத்தில் எதற்குமே குறை இல்லாமல் இருந்தது.
.....10
கருத்துகள்
கருத்துரையிடுக