Manik Prabhu - 10
அத்தியாயம் - 10
திருவிளையாடல்கள்
தேவர்களின் குரு பிரஹச்பதியும் நானே
செனாதிபதிகளில் கந்தன் நானே
தாவிவரும் நீர்நிலையின் கடலும் நானே
தவ முனிவர் பரம்பரையில் பிருகு முனிவரும் நானே
நாவில் வரும் சொற்களின் ஓலமும் நானே
நல வேள்வி வகையில் ஜெபமும் நானே
பகவத் கீதையில் கண்ணன்
மாணிக் பிரபுவின் மகிமைகளை அறியாமல் அவரை சீண்டிப் பார்த்து வாங்கிக் கட்டிக் கொண்டவர்களும், மோதி அடிபட்டதும் பலர் உண்டு. அவர் பல அதிசயங்களை நிகழ்த்தி உள்ளார். அற்புதங்களைக் காட்டி உள்ளார். மருத்துவர்கள் இறந்துவிட்டதாக சான்று இதழ் தந்தவர்களையும் உயிர் பெற்று எழுந்து வைக்க வைத்து உள்ளார். அவர் நண்பரான கோவிந்தன் என்பவர் உயிர் பிழைத்தக் கதை அதற்கு சான்று.
அது போல பீமா பாய் என்ற பெண்மணிக்கு மழலை செல்வம் கிடைக்க அருளிய கதை, மாட்டு இறைச்சியை தின்பண்டங்களோடு கலந்து வந்து தந்த முஸ்லிம் வெறியர்களின் கொட்டத்தை அடக்கியது போன்ற பலவும் உண்டு. அவற்றின் விளைவாக மாணிக் பிரபுவின் புகழ் மேலும் பரவிக் கொண்டே இருந்தது.
ஒரு முறை ஆன்மீக மையம் அமைக்கத் துவங்கிய காலகட்டத்தில் பெரிய யாகம் நடைபெற்றது. அந்த யாகத்திற்கு பல பண்டிதர்கள் அழைக்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள் அனிவரும் யாகத்திற்கான பொருட்களை தாமே கொண்டு வர வேண்டும் என்ற ஏற்பாடும் செய்யப்படட்டு இருந்தது. மணிக் நகர் வரும் வழியில் கொள்ளையர் கூட்டம் உண்டு. பண்டிதர்கள் யாகத்திற்கு வேண்டிய சாமான்களை தம் தலிமீது வைத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தார்கள். அப்போது வழியில் வந்த ஒரு திருடர் கூட்டம் அவர்களிடம் வந்து அனைத்து பொருட்களையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டது. அந்த பொருட்களை தாங்கள் யாகத்திற்காக எடுத்துச் செல்வதாகக் கூறி கெஞ்சியும் அந்த திருடர்கள் மசியவில்லை. கண்களில் நீர் மல்க அந்த பண்டிதர்கள் மானிக் பிரபுவிடம் சென்று நடந்ததைக் கூறி அழுதார்கள். மாணிக் பிரபு அவர்களிடம் கவலைப்பட வேண்டாம் எனவும் யாகத்திற்கான பொருட்கள் குறிப்பிட்ட நேரத்தில் மறுநாள் வந்துவிடும் என அவர்களை தேற்றி அனுப்பினார். இதற்க்கு இடையில் காட்டில் அந்தப் பொருட்களை கொள்ளையடித்த திருடர்கள் தாம் கொள்ளையடித்தப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடினார்கள். ஆனால் எத்தனை தூரம் ஓடியும் அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த கொள்ளையடித்த இடத்திற்கே வந்து கொண்டு இருப்பதைக் கண்டார்கள். எத்தனை ஓடியும், எந்தப் பக்கம் போனாலும் போக வழி தெரியவில்லை. களைத்துப் போனவர்கள் மானிக் பிரபுவிடம் மனதார மனிப்புக் கேட்டு கதறினார்கள். தாம் கொள்ளையடித்தப் பொருட்களை திரும்ப யாகசாலயிலேயே கொண்டு தந்துவிடுவதாக சத்தியம் செய்தார்கள். அவ்வளவுதான் அடுத்த கணம் சிறு குகை வழிபோல ஒரு வழி அவர்கள் கண்ணில் பட்டது. அதன் வழியே சென்றவர்கள் ஆன்மீக மையத்தின் வாயிலை அடைந்து அங்கு இருந்த பண்டிதர்களிடம் தாம் கொள்ளையடித்தப் பொருட்களை திருப்பித் தந்தார்கள். யாகமும் நன்கு நடந்து முடிந்தது.
இன்னொரு நிகழ்ச்சி நடந்தது. மெஹபூப் பாஷா என்ற நிஜாம் ஒருவருக்கு முதுகில் சிறு கட்டி வந்தது. அது மெல்ல மெல்ல பெரியதாகிக் கொண்டே சென்று அவரை மிக்க வேதனைக்கு உள்ளாக்கியது. வலி தாங்க முடியவில்லை. அப்போது அவர் நண்பர் ஒருவர் மானிக் நகரில் சாது ஒருவர் வந்து உள்ளதாகவும் அவரை சந்திக்குமாறும் கூற அவரும் அங்கு சென்றார். அந்த சாது வேறு யாரும் அல்ல. மானிக் பிரபுதான். அந்த நிஜாம் மானிக் பிரபுவிடம் தனக்கு வந்துள்ள வியாதி குறித்துப் பேசினார். அதுமட்டும் அல்லாமல் மனம்விட்டும் தம்மைப் பற்றிப் பேசினார். தன்னால் வழியை தாங்கிக் கொள்ள முடியாம அவஸ்தைப் படுவதாக அவர் கூற மானிக் பிரபுவும், அந்த வியாதியை குணப்படுத்த அவருடைய உடலில் தான் சிறிது நேரம் தங்கி இருப்பேன் எனவும், அதே நேரத்தில் நிஜாமின் ஆத்மா தன் உடலில் தங்கி இருக்கும் எனவும், அதன் பின் மீண்டும் அவரவர் உடலில் அவரவர் சென்று விடுவார்கள் எனவும் கூற அதை நிஜாம் ஏற்றுக் கொண்டார். மானிக் பிரபு கூறியது போலவே அவர்களது ஆத்மா மற்றவர்களின் உடலில் புகுந்துக் கொண்டு சிறிது நேரம் இருந்து விட்டு மீண்டும் அவரவர் உடலில் திரும்பியதும் நிஜாம் தனது முதுகில் இருந்தக் கட்டி மறைந்து இருந்ததைக் கண்டார். குணம் அடைந்த நிஜாமும் ஊருக்குத் திரும்பியதும் பிராமணர்கள் அணிந்து கொள்ளும் மாலையைப் போல தங்க மாலையை கழுத்தில் போட்டுக் கொண்டார். பிரபுவின் சீடர்களுக்கு நிறைய தானம் தந்தார். அது மட்டும் அல்ல அந்த நிஜாமின் உடலில் சிறுது நேரம் மானிக் பிரபுவின் ஆத்மா தங்கி இருந்ததினால் அவர் விசேஷ சக்தியைப் பெற்றவராக இருந்தார். அதனால் பாம்புக் கடித்தவர்களின் உடலில் இருந்து அந்த விஷத்தை எடுக்கும் விசேஷ சக்தியைப் பெற்று பலரை குணப்படுத்தி உள்ளாராம்.
இன்னொரு நிகழ்ச்சி நடந்தது. அந்த ஊரில் ஒரு மகா கஞ்சன் இருந்தார். அவரிடம் இருந்து சல்லிக் காசுகூடப் பெற முடியாது. அவன் மானிக் பிரபுவிடம் சென்று தனக்கு ஒரு காரியம் ஆகா வேண்டி உள்ளது என்றும், அது நடந்துவிட்டால் ஒரு பிடி சக்கரையை தானமாக தருவதாக வேண்டிக் கொண்டான். மானிக் பிரபுவின் அருளினால் எது நடக்க இயலாதோ அது அவனுக்கு நடந்துவிட்டது. ஆகவே பெரும் லாபம் பெற்ற அவன் அந்த மகிழ்ச்சியில் ஒரு கைப்பிடி சக்கரை கொடுப்பது சரியாக இருக்காது என்று எண்ணியவனாக பல மூட்டை சக்கரையை தன்னுடைய வேலை ஆட்கள் மூலம் மானிக் பிரபுவிற்கு சன்மானமாக அனுப்பினார். அது அவர் செய்த பெரும் தவறு. தானே கொண்டு சென்று கொடுத்து இருந்தால் கெளரவமாக இருந்திருக்கும். மானிக் பிரபு தனக்கு அந்த கஞ்சன் அனுப்பி இருந்த சக்கரை மூட்டைகளைப் பார்த்தார் . அதில் இருந்து ஒரே ஒரு கைப்பிடி சக்கரையை மட்டுமே எடுத்துக் கொண்டு மீதியை அந்த கஞ்சப் ப்ரபுவிற்கே அனுப்பி விட்டார். தன தவறை உணர்ந்த அந்த வியாபாரியும் அவமானப்பட்டு ஓடி வந்து மானிக் பிரபுவின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.
பல முறை தன முன் வந்து நிற்கும் சில ஏழைகளின் வறுமை நிலையைக் கண்டு பொறுக்காத மானிக் பிரபு தன் படுக்கை அடியில் கையை விடுவார். நிறையப் பணம் வரும். அதை வந்தவர்களுக்கு தந்துவிடுவார். இதைப் பல முறைக் கண்ட ஒருவன் ஒரு நாள் பிரபுஜி இல்லாத நேரத்தில் சென்று அவர் படுக்கைக்கு அடியில் எத்தனை பணம் உள்ளது என சோதனை செய்ய அதன் அடியில் ஒன்றுமே இல்லாததைக் கண்டு வியந்தான். மீண்டும் படுக்கையை அப்படியே பழையபடி வைத்து விட்டான் . சற்று நேரத்தில் தன்னைக் காணவந்த ஒரு ஏழைக்கு மீண்டும் படுக்கை அடியில் கையைவிட்டு மானிக் பிரபு பணத்தை எடுத்துத் தந்தார். அதக் கண்ட சோதனை போட்டவன் வெட்கம் அடைந்து, மானிக் பிரபுவிடம் சென்று அவர் இல்லாத நேரத்தில் அவர் படுக்கையை தான் சோதனை போட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை என்ற விவரத்தைக் கூறி அவரிடம் தான் செய்த செயலுக்கு மன்னிப்புக் கேட்டான்.
இப்படியாக பல சம்பவர்களை நேரடியாகக் கண்டு அனுபவித்தவர்கள் பலர் உண்டு. பிரபுவின் எதிரில் சென்று அமர்ந்தால் தனது துயரங்கள் விலகியத்தைக் கண்டேன் என அவருடைய ஒரு பக்தர் கூறினார். பிரபுவைக் குறித்து மற்றும் ஒருவர் இப்படியாக எழுதினர் ' எங்கிருந்து இடைவெளி விடாமல் அள்ளிக் கொட்டுகின்றது அவர் தரும் பொருளும் பணமும் என்பது தெரியவில்லை ? அவர் படுக்கை அடியில் கைவிட்டாலோ கைநிறையப் பணம் வருகின்றது. அடுத்த நிமிடம் அதை எதிரில் உள்ளவருக்கும் கொடுத்து விடுகிறார். அவர் அமர்ந்த இடத்தை தோண்டித் துருவிப் பார்த்தாலும் ஒன்றுமே கிடைப்பது இல்லை. ஆனால் அவர் எப்போது அங்கு வந்து அமர்ந்தாலும் அனைவருக்கும் பசி தீரும்வரை மீண்டும் மீண்டும் அள்ளியள்ளித் தருகின்றாரே அதுவே வியப்பானது.
....11
கருத்துகள்
கருத்துரையிடுக