இடுகைகள்

patti ponnaandaal sonna kathai லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Patti Ponnandaal sonna kuttik kathaigal - Part- 2

படம்
சாந்திப்பிரியா  சூரிய பகவானை நமது வலது நேத்திரம் (கண்) இன்று கூறுவார்கள். அதைப் போலவே போல சந்திர பகவான் நமது இடது நேத்திரமாம். சூரிய பகவானின் சக்தி அபாரமானது. தினமும் எவன் ஒருவன் சூரியனைப் பார்க்காமல் உணவு அருந்துகிரானோ அந்த உணவு சாணியில் உள்ள புழுவிற்கு சமம் என்று சாஸ்திரம் கூறுகின்றது. அதாவது சாணியே  ஒரு கழிவுப் பொருள், அதை சாப்பிடும்  பூச்சிகளை பற்றிக்  கூற வேண்டுமா?  அதனால்தான் அத்தனை கேவலமான பிறவி என்பதைக் கூற சாஸ்திரத்தில் அப்படிப்பட்ட வார்த்தைப் பிரயோகம் செய்யப்பட்டு உள்ளது.  சூரியனை ஆராதித்தால்  ஆரோக்கியம் மட்டும் அல்ல ஞானமும் ஐஸ்வர்யமும்  , நன்மைகளும் கூடும் என்பதே உண்மை. அதற்கு உதாரணமே இந்தக் கதைகள் . வைசம்பாயனர் என்பவர் ஒரு முனிவர். அவருடைய சிஷ்யரே யாக்கியவால்யகர்.  ஒரு முறை  வைசம்பாயனர் நதியில் குளித்துவிட்டு வந்தபோது கால் தவறி அங்கு அமர்ந்து இருந்த சிறுவன் மீது மோதி விட்டார் . அவர் மோதிய அந்த அதிர்ச்சியில் அந்த சிறுவனும் மடிந்து விட்டான். ஆகவே அவருக்கு பிருமஹத்தி தோஷம் ஒட்டிக் கொண்டுவிட அதைக் கண்ட  யாக்கியவால்யகர் தனத...

Ponnaandaal patti sonna kuttik kathaigal - 1

படம்
சாந்திப்பிரியா  அன்று  கிருஷ்ணபட்ச  பஞ்சமி . சிவ கைலாயத்தில் அம்மையும் அப்பனும் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். அப்போது பார்வதிக்கு ஒரு விளையாட்டு ஆசை ஏற்பட்டது.  'தினமும் நாம்  அனைவருக்கும்  உணவு தருகின்றோம். ஒரு நாள் கொடுக்காவிடில் என்ன ஆகும். அவை  இன்று பட்டினியால்  கிடக்கட்டும் . நாளை பார்ப்போம்'  என எண்ணியவள் தனது அருகில் சென்று கொண்டு இருந்த சிறிய கருப்பு நிறத்தில் இருந்த எறும்புகளை பிடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிவிட்டாள்.   மறுநாள்  அதைத் திறந்து பார்த்தாள். அவை அனைத்தும் அப்போதும் உயிருடன் இருந்தன. அதை விட ஆச்சர்யமாக எல்லாவற்றின் வாயிலும் சிறிது வெள்ளையாக உணவு ஒட்டிக் கொண்டு இருந்தது.   பார்வதிக்கு  ஒரே குழப்பம். அவைகளுக்கு எங்கிருந்து உணவு கிடைத்தது?  தான் தவறு செய்து விட்டோம் எனவும் அனாவசியமாக ஜீவராசிக்கு தொந்தரவு கொடுத்து விட்டோமே என நினைத்து அதற்கு பிராயச்சித்தம் தேட தானும் பட்டினி  இருந்து தபஸ் செய்யக் கிளம்பியபோது  எதிரில் பிள்ளையார் வந்து கொண்டு இருந்தார். அவர் வயிறு ஒட...