Patti Ponnandaal sonna kuttik kathaigal - Part- 2
சாந்திப்பிரியா
சூரிய பகவானை நமது வலது நேத்திரம் (கண்) இன்று கூறுவார்கள். அதைப் போலவே போல சந்திர பகவான் நமது இடது நேத்திரமாம். சூரிய பகவானின் சக்தி அபாரமானது. தினமும் எவன் ஒருவன் சூரியனைப் பார்க்காமல் உணவு அருந்துகிரானோ அந்த உணவு சாணியில் உள்ள புழுவிற்கு சமம் என்று சாஸ்திரம் கூறுகின்றது. அதாவது சாணியே ஒரு கழிவுப் பொருள், அதை சாப்பிடும் பூச்சிகளை பற்றிக் கூற வேண்டுமா? அதனால்தான் அத்தனை கேவலமான பிறவி என்பதைக் கூற சாஸ்திரத்தில் அப்படிப்பட்ட வார்த்தைப் பிரயோகம் செய்யப்பட்டு உள்ளது. சூரியனை ஆராதித்தால் ஆரோக்கியம் மட்டும் அல்ல ஞானமும் ஐஸ்வர்யமும் , நன்மைகளும் கூடும் என்பதே உண்மை. அதற்கு உதாரணமே இந்தக் கதைகள் .
வைசம்பாயனர் என்பவர் ஒரு முனிவர். அவருடைய சிஷ்யரே யாக்கியவால்யகர். ஒரு முறை வைசம்பாயனர் நதியில் குளித்துவிட்டு வந்தபோது கால் தவறி அங்கு அமர்ந்து இருந்த சிறுவன் மீது மோதி விட்டார் . அவர் மோதிய அந்த அதிர்ச்சியில் அந்த சிறுவனும் மடிந்து விட்டான். ஆகவே அவருக்கு பிருமஹத்தி தோஷம் ஒட்டிக் கொண்டுவிட அதைக் கண்ட யாக்கியவால்யகர் தனது குருவிடம் அந்த பாவத்தை தன்னால் போக்க முடியும் எனக் கூறி அதை செய்ய அவரிடம் அனுமதி கேட்டார். ஆனால் அகம்பாவத்தில் இருந்த வைசம்பாயனர் தன்னை விட தனது சிஷ்யன் பெரிய ஆளாக தன்னை காட்டிக் கொள்ள விரும்புகின்றார் என்று அவரைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு கோபம் கொண்டார். அந்த நாள் வரை தான் கற்றுத் தந்து இருந்த அனைத்து வேத பாடங்களையும் அங்கேயே கக்கிவிட்டு தன்னை விட்டு விலகிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளை இட்டார்.
அதைக் கேட்ட யாக்கியவால்யகர் மனம் வருந்தினாலும், குருவின் ஆணைப்படி அவரிடம் பயின்ற அனைத்து கல்வியையும் அங்கேயே கக்கி விட்டுச் சென்று ஒரு மலை அடிவாரத்தில் அமர்ந்துகொண்டு சூரியனை ஆராதனை செய்தார். பல வருடங்கள் அவர் செய்த ஆராதனையை ஏற்றுக் கொண்டு சூரிய பகவானும் அவருக்கு கரை கண்ட வேத சாஸ்திர ஞானத்தைக் கொடுத்தார். அதன் பின் யாக்கியவால்யகர் அவரை எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு பெறும் பாண்டித்தியம் பெற்ற முனிவராக மாறினார்.
இன்னொரு கதையும் மகாபாரதத்தில் உண்டு. மகாபாரத நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்த வேளை. பாண்டவ சகோதரர்கள் வனவாசம் செய்ய காட்டுக்குள் வந்து விட்டார்கள். அவர்களில் ஒருவனான பீமனின் பசிக்கு எங்கிருந்து உணவை பெறுவது என அனைவருக்கும் கவலை வந்து விட்டது. அப்போது அவர்கள் கிருஷ்ணரின் ஆலோசனையை ஏற்று சூரிய பகவானை தியானம் செய்தார்கள். அதைக் கண்டு மகிழ்ந்து போன சூரிய பகவானும் அவர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு அட்சய பாத்திரம் ஒன்றை தந்துவிட்டுச் சென்றாராம். அதுவே துரியோதனனால் ஏவப்பட்ட துர்வாச முனிவரின் வஞ்சக நோக்கத்தையும் முறியடிக்க உதவியாக இருந்தது .
கருத்துகள்
கருத்துரையிடுக