இடுகைகள்

Spirits and Ghosts லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Spirits and Ghosts -2

படம்
 எரிந்து போன  போன பச்சை மரம்   ?........ எனக்கு விடை கிடைக்காத  இன்னொரு  உண்மை சம்பவம்  -2   நான் நேரிலே  பார்த்த   இந்த சம்பவமும் அதிசயமான சம்பவமாகவே எனக்கு உள்ளது.  ஆனால் இதில் சம்மந்தப்பட்டு உள்ளவரின் பெயரை வெளியிட விரும்பவில்லை. ஏன் எனில் அவர் இன்றும் ஒரு உயர் அதிகாரியாக மத்திய அரசாங்கத்தின் ஒரு அலுவலகத்தில் உள்ளார் என்பதினால் அவர் பெயரைக் கூற விரும்பவில்லை . இந்த சம்பவம் நடந்து 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகி இருக்கும்.  அப்போது நான் மத்தியப் பிரதேசத்தில்  மத்திய அமைச்சகத்தின் கீழ் இருந்த காகித நோட்டுக்கள் அச்சடிக்கும் அலுவலகத்தில் பணி ஆற்றிக் கொண்டு இருந்தேன். ஒரு முறை நான் வேலை விஷயமாக  மைசூருக்கு சென்று இருந்தேன் . என்னுடன் இதில் சம்மந்தப்பட்டு உள்ள என் நண்பரும்  வந்து இருந்தார்.  அவர் எப்போதுமே சற்று மன வருத்தத்துடன் காணப்பட்டார் . நான் அது அவருடைய சொந்த விஷயம்  என நினைத்து அதைப் பற்றிக் கேட்காமல் இருந்தேன். நாங்கள் தாசப்பிரகாஷ் என்ற ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தோம். அந்த ஹோட்டலில்  கீ...

Spirits and Ghosts -1

படம்
பில்லி  சூனியம் என்பது   உண்மையா  அல்லது  பொய்யா  ?........ எனக்கு விடை கிடைக்காத ஒரு உண்மை சம்பவம்  -1 சாந்திப்பிரியா  மற்றவர்கள் மீது ஏவப்படும் ஆவிகள் இரவில்தான்  சுற்றுகின்றன என்பது உண்மையா?  படம்  நன்றி  :http://en.wikipedia.org/wiki/Ghost ஆவிகளைப் பற்றி நான் வெளியிட்டு உள்ள கட்டுரையைக் படித்தப் பின் எனக்கு என் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவம் நினைவுக்கு வருகின்றது. இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்களின் பெயர்களும், நடந்த இடங்களும் நிஜமானவை.  இன்று வரை அந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை. இன்று நினைத்தால்  கூட அந்த காட்சிகள் இப்போது  நடந்தது போலவே தெரிகின்றது. அது 1966 அல்லது 1967 ஆம் ஆண்டு இருக்கும் என்று நினைக்கின்றேன் . ஆண்டு மட்டும் சரிவர நினைவில்லை.  மத்திய அமைச்சகத்தின் ஒரு பிரிவில் CSIR என்ற  ஆராய்ச்சி மையம் இருந்தது. அதற்கு நாடெங்கும் பல கிளைகள் இருந்தன.  பெங்களூரிலேயே அதற்கு பல பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றான  CSIR  கீழ் இருந்த  INSDOC எனும்   அலுவலகத்தி...