Spirits and Ghosts -2

எரிந்து போன போன பச்சை மரம் ?........ எனக்கு விடை கிடைக்காத இன்னொரு உண்மை சம்பவம் -2 நான் நேரிலே பார்த்த இந்த சம்பவமும் அதிசயமான சம்பவமாகவே எனக்கு உள்ளது. ஆனால் இதில் சம்மந்தப்பட்டு உள்ளவரின் பெயரை வெளியிட விரும்பவில்லை. ஏன் எனில் அவர் இன்றும் ஒரு உயர் அதிகாரியாக மத்திய அரசாங்கத்தின் ஒரு அலுவலகத்தில் உள்ளார் என்பதினால் அவர் பெயரைக் கூற விரும்பவில்லை . இந்த சம்பவம் நடந்து 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகி இருக்கும். அப்போது நான் மத்தியப் பிரதேசத்தில் மத்திய அமைச்சகத்தின் கீழ் இருந்த காகித நோட்டுக்கள் அச்சடிக்கும் அலுவலகத்தில் பணி ஆற்றிக் கொண்டு இருந்தேன். ஒரு முறை நான் வேலை விஷயமாக மைசூருக்கு சென்று இருந்தேன் . என்னுடன் இதில் சம்மந்தப்பட்டு உள்ள என் நண்பரும் வந்து இருந்தார். அவர் எப்போதுமே சற்று மன வருத்தத்துடன் காணப்பட்டார் . நான் அது அவருடைய சொந்த விஷயம் என நினைத்து அதைப் பற்றிக் கேட்காமல் இருந்தேன். நாங்கள் தாசப்பிரகாஷ் என்ற ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தோம். அந்த ஹோட்டலில் கீ...