Thirumeeyachur- Sree Lalithambigai Temple
திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயம் சாந்திப்பிரியா ஆலயம் படம் நன்றி : -http://divinebrahmanda.blogspot.com மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் சுமார் இருபது கிலோ தொலைவில் உள்ளது திருமீயச்சூர் என்ற சிறிய கிராமம். மயிலாடுதுறைக்கு பக்கத்தில் உள்ள நன்னிலம் மற்றும் பேரளத்தில் இருந்து மிகவும் அருகில் உள்ளது. இந்த ஆலயமும் சோழர்கள் காலத்தில் ராஜேந்திர சோழன் என்பவரால் கட்டப்பட்டதுதான். ஆலயத்தில் மேகநாதர் சமேதமாக லலிதாம்பிகை உள்ளார். இந்த ஆலய வரலாறும் சுவையானது. லலிதாம்பிகை படம் நன்றி : -http://divinebrahmanda.blogspot.com ஒருமுறை காஷ்யப முனிவர் அங்கு இருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு. சிவபெருமான் பிரசாதமாகத் தந்த முட்டையில் இருந்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர் . ஒருவளுக்கு கருடனும் மற்றவளுக்கு அருணனும் பிறந்தனர். ஆனால் ஒருநாள் மோகினி போல தன்னை உருமாற்றிக் கொண்டு திரிந்த அருணனை சூர்யா பகவான் கெடுத்து விட அருணன் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். ஆகவே கோபமடைந்த சிவபெருமானும் சூரியனாரின் ஓளி மறையுமாறு சாபமிட பயந்து போன சூரியனா...

கருத்துகள்
கருத்துரையிடுக