Manik Prabhu - 6

அத்தியாயம் - 6
குருவே உன்னிடம் சரண் அடைந்தேன்

எங்கும் நிறைந்தவரே நீர் யார்
எப்படிப்பட்டவர், எதற்கு ஒப்பானவர்
எதையுமே நான் அறிந்து இருக்கவில்லை
நீங்கள் எப்படிப்பட்டவராக இருப்பினும்
நான் மனதில் வேறு ஒன்றையும் வைத்திராமல்
உம்மை தியானிப்பதையே விரும்புகிறேன்
நாராயணீயத்தில் த்யான யோகம்

தக்ஷிண காசி என்று அழைக்கப்படும் இடத்தில் பழம் பெருமை வாய்ந்த சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. அதன் பெயர் மார்த்தாண்ட பைரவர். பல இடங்களில் இருந்தும், தூர தேசங்களில் இருந்தும் மக்கள் அங்கு வந்து வழிபடுவார்கள். அங்கு வரும் பக்தர்கள் சிவ பெருமானை வணங்கியப் பின் மானிக் பிரபுவையும் வந்து வணங்கிச் செல்வார்கள். அதற்க்கான காரணம் மானிக் பிரபு தத்தாத்திரேயரின் அவதாரமே என்ற செய்தி பரவலாக பரவி இருந்ததே. தத்தாத்திரேயர் சிவன்-விஷ்ணு-பிரும்மா என்பவர்களின் அவதாரமே என்பதினால் அவரை வந்து வணங்கினார்கள். இப்படி இருக்கும்போது அவருடைய ஆசிரமத்துக்கு அடிக்கடி வந்து சென்றவர்களில் வெங்கம்மா என்ற பெண்மணியும் உண்டு. நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர் அவர். வணிகத் தொழில் செய்து வந்தார். தினமும் கோவிலுக்கு வந்து மானிக் பிரபுவை தியானித்தவாறு ஒரு மூலையில் அமர்ந்து கொள்வார். அவர் யார் என்பதையோ, தினமும் ஆலயத்திற்கு எதற்க்காக வருகிறார் என்றோ எவரும் கவனித்தது இல்லை. தரிசனம் முடிந்ததும் அனைவரும் எழுந்து செல்லும்போது அந்தப் பெண்மணியும் எழுந்து சென்று விடுவார். யாரிடமும் பேசுவது இல்லை.
மானிக் பிரபுவின் கடைக் கண் பார்வை அவர் மீது விழுந்தது. அனைவரும் சென்றப் பின் அந்தப் பெண்மணியை அவர் அழைத்தார். அவளிடம் கேட்டார் '' அம்மணி, உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. நிறைய பிரார்த்தனையும் செய்து விட்டாய். இனி உன் வீட்டிற்குச் சென்று விடுவதுதானே". அதைக் கேட்டதும் அந்தப் பெண்மணியின் கண்களில் நீர் வழிந்தது. அவள் கூறினால் ''பிரப்ஹோ, எனக்கு வீடு, வாசல், உற்றார் உறவினர் என எவருமே கிடையாது. நான் உங்களுடைய பாத கமலத்தில் சரண் அடைந்து வாழ்நாள் முழுவதும் என் பொழுதைக் கழிப்பதையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். குருவே நான் உங்களுடன் என்னைத் தந்துவிட்டேன். ஆகவே என்னை போகும்படிக் கூறாதீர்கள்''.
தன்னலம் அற்று தனக்காக வாழாது முழுமையாக எவர் ஒருவர் தன்னை ஒரு குருவிற்கு அற்பணிக்கின்றாரோ அவர்களையே உண்மையான சிஷ்யர்கள் என கருத வேண்டும். குரு ஒருவருக்கு சிஷ்யர் கிடைப்பது, சிஷ்யனுக்கு குரு கிடைப்பது என்பதை எதிர் பார்த்து ஒற்றை அடிப்பாதையில் வருபவர்களே அதிகம். கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறினார் '' ஆயிரக்கணக்கான மக்களில் ஒரு சிலரே மனதை நிலைப்படுத்தி குறிப்பிட்ட இலக்கை அடைய மன உறுதியுடன் தியானத்தைக் கற்கிறார்கள். அந்தப் பலரில் ஒரு பகுதியினர் மட்டுமே சத்தியமான உண்மையைத் தேடி என்னுடன் வருகிறார்கள். நானோ அந்த ஒரு சிறு பகுதியினரில் ஒருவனையோ அல்லது இருவரையோ நன்கு கவனித்தப் பின் எவன் முற்றிலும் திறமைசாலியோ அவர்களை மட்டுமே என்னுடயவனாக ஏற்கின்றேன்''.
வேங்கம்மாவும் அப்படித்தான் மானிக் பிரபுவினால் பரிஷிக்கப்பட்டு ஏற்கப்பட்டாள். இயற்கையிலேயே உடம்பில் ஊறி இருந்த பக்திப் பிரவாகத்தினால் மனதை ஒரு நிலைப் படுத்தி, பக்குவப்படுத்தி, குரு சேவைக்கு தன்னை அர்பணித்து உள்ளால். குரு சேவை செய்பவர்களையே குரு தன்னுடைய சிஷ்யர்களாக ஏற்பார்கள். அதனால்தான் மனப்பக்குவம் முழுமையாகப் பெற்று தன்னிடம் சரண் அடைந்த வேங்கம்மாவை தன்னுடைய சிஷ்யராக ஏற்று தனக்கு எப்படி பணிவிடை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காக அவளை தன்னுடைய தாயாரிடமே அனுப்பி வைத்தார் பிரபு. அவள் அந்தக் கடமைகளை நன்கு புரிந்து கொண்டு தேர்ச்சி பெற்றப் பின்னரே அவள் சாதாரண மனுஷி அல்ல, தெய்வ சொரூபம் என்பதை உலகிற்க்குக் காட்டினார். அவளிடம் கூறினார் '' என்னுள் உன்னை நிலைபடுத்தி என்னையே தியானித்தவாறு இரு. எனக்கே பனி செய். என்னுள்ளே உன்னுடைய முழு மனதையும் ஐக்கியப்படுத்தி தியானித்துக் கொண்டு இருந்தால் உனக்கு ஏது துன்பம் ?''.
அன்று முதல் அவள் அவருக்கு பரம சிஷ்யை ஆகிவிட்டால். சில நாட்கள் அவருக்கு தானே முழு பணிவிடையையும் செய்தாள்.
ஒரு கால கட்டத்தில் மானிக் பிரபு அவளை அழைத்தார். அவளிடம் கூறினார் '' உன் இளமையை வீணடித்துக் கொண்டு இனியும் நீ இங்கு இருக்க வேண்டாம். எனக்கு இங்கு வேலை செய்ய நிறைய ஆட்கள் உள்ளனர். நீ செய்த சேவை போதும். அது எனக்கு ஆத்மா திருத்தி அளிக்கின்றது. ஆகவே ஊருக்கு திரும்பிச் சென்று உற்றார் உறவினருடன் சேர்ந்து வாழத் துவங்கு''. அதக்கு வெங்கம்மா கூறினால் '' பிரபு, நான் திடமான முடிவுடன் நன்கு யோசனை செய்தப்பின்னர்தான் எந்த சேவையை விரும்பி ஏற்றேன். என் தாய் தந்தை, உறவினர் என அனைவரையும் மறந்துவிட்டு வந்துதான் இங்கு உங்களிடம் சரண் அடைந்தேன். ஆகவே இங்கு தொடர்னு உங்களக்கு பணிவிடை செய்ய அருள் புரிய வேண்டும்''. மானிக் பிரபு அவள் கூறிய பதிலைக் கேட்டு வியப்பு அடையவில்லை. அவள் அமைந்து தன்மீதான பக்தியில் எத்தனை ஆழமாக உள்ளது என்பதை உலகுக்கு தெரிவிக்கவே அப்படி ஒரு நாடகத்தை ஆடினார்.
ஸ்ரீ பாகவதத்தில் குந்தி செய்யும் ஸ்துதியைக் குறித்து இப்படிக் கூறுவார்கள். அவள் செய்யும் ஸ்துதி '' ஹே அந்தம காரண நியத்தாவே, யதுபதியே, எல்லாவற்றுக்கும் அந்தராத்மாவாக இருப்பவரே, சரீரமாக அனைத்தையும் தாங்கி நிற்பவரே, எப்படி கங்கை நதியானது அனைத்து தடங்கல்களையும் பொருட்படுத்தாமல் தனது பிரவாகத்தை கடலில் சென்று சமர்பிக்கின்றதோ , அது போலவே எனது பிரீதியான உன்னை அடையாது வேறிடம் செல்ல முடியாது. உன்னிடமே என்றும் நிலை கொண்டு இருக்க எனக்கு மனதைக் கொடு''. எப்படிப்பட்ட மனநிலைதான் வேங்கம்மாவுக்கும் இருந்தது. பிரபுவிற்கு பணிவிடை செய்ய அவள் தீர்மானமாக முடிவு செய்ததும் தன்னிடம் இருந்த ஆடை, ஆபரணங்கள். சொகுசுப் பொருட்கள் என அனைத்தையும் தன்னுடைய வீட்டாரிடம் தந்து விட்டு வந்து குருவிற்கு பணிவிடை செய்து வரலானாள்.
1865 ஆம் ஆண்டு ஒரு நாள் அவளுக்குப் புரிந்தது தனக்கு முடிவு காலம் வந்துவிட்டது என்பது. இரவு முழுவதும் பகவானை நினைத்து ஆடினால், பாடினால், பஜனை செய்தாள். மனம் அலுக்கும் வரை பாடினாள். மறுநாள் காலை இறைவன் பாதத்தை அடைந்தாள். அவளுக்கு அங்கேயே ஒரு சமாதி கட்டி எழுப்பியப் பின் ஒவ்வொரு வருடமும் அவள் பெயரால் நவராத்திரி பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்தார் மானிக் பிரபு.
.......7

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Vasanthapura Temple ( E)

Kudai Swamigal -E