Patti Ponnandaal Suga Munivar Preached Parishat
பாட்டி பொன்னாண்டாள் ராமநாதன் எழுதிய
சுக முனிவர் சொன்ன கதை- பாகவதத் துளிகள்
முன்னுரை:-
பரமனுக்கும் சுயப் பிரகாசனுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். பரம் பொருளே அனைத்து பிரபஞ்சத்துக்கும் மூல காரணம். அதன் வளர்ச்சியும், ஒடுக்கமும் பஞ்ச பூதங்களின் சேர்கையினால்தான். பிருமாண்டத்தையே சரீரமாகக் கொண்டவன். அவனே விராட்டி புருஷன். அவனுடைய கண் சூரியன். வாய் அக்னி. மனது சந்திரன். முகம் பிராமணன். புஜம் சத்ரியன். தொடை வைஷ்யன். என இந்தப் பிரபஞ்சமே பகாவானின் ஸ்தூல சரீரமாக உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணாய நமஹா
ஸ்ரீ வியாச குருப்யை நமஹா
நாரத முனிவர் வியாசரை ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றுமாறு கூறினார்
http://www.maransdog.net/TVG/picture.php
பாகவத கர்நாம்ருத கர்னாம்ருத சரித்திரம் என்ற நூல் மக்கா முனிவரான வியாசரால் இயற்றப்பட்டு அவருடைய மகன் சுகப் பிரும்ம ரிஷியினால் பிரசாரம் செய்யப்பட்டது.கல்ப விருஷத்தில் பழுத்தக் கனி இருந்தது. அதை சுகர் என்ற கிளி ஒன்று கொத்தி சுவைத்துக் கொண்டு இருந்தபோது அதை கீழே நழுவ விட்டது. அதுவே சுகப் பிரும்மம். அதற்கு ஈடு எனை கிடையாது. நாரதர் சொல்படி வியாசர் எழுதிய இந்தப் புராணத்தை ஏழு நாட்களாக பரிஷித் மன்னனுக்கு நைமீஷாரண்யத்தில் சுகப் பிரும்ம ரிஷி கூறினாராம். அதில் இருந்து சில துளிகள் கீழே உள்ளவை. படித்து ஆனந்தம் பெறுங்கள்.
சுக முனிவர் கதை சொல்ல ஆரம்பித்தார்
படம் நன்றி:- http://www.maransdog.net/TVG/picture.php
சுக முனிவர் மன்னன் பரிஷித்துக்கு கூறிய கதை
சுக முனிவர் மன்னன் பரிஷித்துக்கு கூறினார் '' ஹே ராஜனே ஸ்வயம்பு மனுவின் மூத்த மகன் பிரியவ்ரதன் வம்சத்தைப் பற்றிய கதையைக் இப்போது கூறுகிறேன் கேள். அவன் நாரதரிடம் உபதேசம் பெற்றவன். உலக வாழ்கையில் இச்சை இல்லாதவன். அச்சரமம் அமைத்து அத்மபோதாவிசாரத்தில் ஆழ்ந்து இருந்தான். ஒரு முறை பிரும்மா அவனைப் பார்க்க வந்து இருந்தார். அவர் கூறினார் 'அப்பா நாம் எல்லோரும் கடவுளின் கை பொம்மையே. அவன் அட்டுவிக்கும்படி நாம் ஆடியே தீர வேண்டும். மேலும் ஞானம் மற்றும் ஆத்மா , போதம் போன்றவற்றை சம்சார வாழ்வில் இருந்து கொண்டும் பெறலாம். அதற்கு மனக் கட்டுப்பாடும் அடக்கமுமே தேவை. கிரஹாச்ரமம் என்பது எந்த விதத்திலும் குறைவில்லாதது. ஆகவே நீயும் உன் தந்தையின் சொல்படி நடந்து வம்ச விருத்தியை ஏற்படுத்தி உரிய காலத்தில் வைராக்கியம் பெற்று மோட்ஷத்தையும் அடையலாம்'. அதை கேட்ட பிரியவ்ரதன் பிரும்மாவின் அறிவுரைப்படி தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற சம்மதித்தார். விஸ்வகர்மாவின் பெண்ணான பர்ஹிஷ்மதியை மணந்து கொண்டு ஊர்ஜச்வதி என்ற ஒரு பெண்ணையும் பத்து பிள்ளைகளையும் பெற்றெடுத்தார். அவர்களில் மூன்றுபேர் பக்தநிஷ்டர்களாக இருந்து விட்டு முக்தர்கள் ஆனார்கள். மற்றொரு மனைவி மூலம் கிடைத்த மூன்று பிள்ளைகள் மன்வந்த்ரங்களுக்கு அதிபதியானார்கள். சூரிய வெளிச்சம் முழுக்க ஒரு பகல் இருக்க , ஒரு இரவு என இரவு பகல் ஏற்பட அரசன் ஆசைப்பட்டு அதற்காக பகவானை ஆராதித்து தன ரதத்தில் ஏறி மேரு மலையை ஏழு தடவை சுற்றி வந்தார். அந்த ரதம் ஏறியதினால் ஏற்பட்ட பள்ளங்கள் ஏழும் சமுத்திரங்களாயின . அவற்றின் இடையிலுள்ள பகுதிகள் ஜம்பூததீபமானது. அதில் ஜம்பூத்வீபம் முக்கியமானது. நாம் சங்கல்பங்கள் எடுத்துக் கொள்ளும்போது 'ஜம்பூத்திவே, பரதகண்டே' எனக் கூறுவது உண்டல்லவா? அதுவே இதுவும். தனது பெண்ணான ஊர்ஜச்வதியை சுக்க்ராச்சாரியாருக்கு மணம் முடித்தார். அவர்களுக்குப் பிறந்தப் பெண்ணே தேவயானி. பிரியவ்ரதன் இப்படியாக தனது கடமைகளை செய்து முடித்தப் பின் உலக வாழ்வை துறந்து ஞானம் பெற்று முக்தி அடைந்தான்.
பன்னிரண்டாம் நூற்றாண்டு சிற்பம்:- அப்சரா
படம் நன்றி :- http://en.wikipedia.org/wiki/Apsara
அடுத்து அவனுடைய மகன் அங்கீதரன் அரசனானான். சத் புத்திர பாக்கியத்தை வேண்டி மந்திர மனையடியில் தவம் இருந்தபோது பிரும்ம தேவன் அனுப்பிய அப்சரா எழுப்பிய சலங்கை ஒலியைக் கேட்டு அவன் தவம் கலைந்தது. அவன் அவளை மோகித்து அவளை மணந்து கொண்டு ஒன்பது பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டான். ஜம்பூததீபத்தை ஒன்பதாகப் பிரித்து தனது ஒன்பது பிள்ளைகளுக்கும் அதை தந்தான். அதன் பின் அவனுடைய மனைவி பூர்வசித்தி சுவர்க்கத்துக்குச் சென்று விட அவள் பிரிவால் வருந்தியவன் தானும் உலகை துறந்து விட்டான்.நாபியின் சரித்திரம்
அங்கீதரனின் முதல் குமரன் நாபி என்பவர். அவர் மேரு பர்வதத்தின் மகளை மணந்து கொண்டார். அவர்களுக்கு பல காலம் குழந்தை பிறக்கவில்லை என்பதினால் பரம புருஷரை பல காலம் ஆராதித்து வந்தான். மகிழ்ச்சியுற்ற பகவான் அவர் முன் பிரசன்னமானார். அங்கிருந்த ரிக் வித்துக்கள் உடனேயே அவரை நோக்கி ஸ்தோத்திரம் செய்யத் துவங்கினார்கள். அவர்கள் கூறினார்கள் '' பகவானே துளசி , அருகம்புல் , ஆஷதை போன்ற எளிய பொருட்களைக் கொண்டு உன்னை துதித்தாலும் நீ திருப்தி அடைந்து உள்ளாய். பக்தர்களிடம் நீ காட்டும் அன்பை அது காட்டுகின்றது. எங்கள் ஆராதனை சொற்பமானது என்றாலும் உன்னுடைய கருணை அளவில்லாதது. கொட்டாவி, தும்மல், இருமல், மரணம், துக்கம், தடுக்கி விழுதல் போன்ற எந்த எங்கள் நிலையிலும் உன் நினைவு எங்களிடம் இருந்து மறையாது. உன் நாமத்தை சொல்லிக் கொண்டுதான் இருப்போம். அனைத்தையும் கொடுக்கவல்ல உன்னிடம் நாங்கள் யாசிப்பது குபேரனிடம் உமியை யாசிப்பது போல இருக்கும். ஆனாலும் எங்களுடைய எஜமானனான நாபிக்கு சந்தான பாக்கியம் வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை. நாங்கள் இப்படிக் கேட்பதில் குற்றம் இருந்தால் எங்களை மன்னித்து அருள வேண்டும்'' என்றார்கள். அதை கேட்டு மகிழ்ந்த பகவானும் தானே அவருக்கு குழந்தையாகப் பிறக்கின்றேன் என உறுதி அளித்தார்.
ரிஷப அவதாரம்.
பகவான் கூறியபடியே அவரும் காளைப் போல கம்பீரமான தோற்றம் கொண்ட ஆண் மகனாக அவர்களுக்குப் பிறந்தார். அந்தக் குழந்தை பிறந்து பெரியவனானதும், ஆட்சியை ஏற்றான். அவன் ஆட்சியைக் கண்டு பொறாமை கொண்ட இந்திரன் அவன் நாட்டில் மழை பொழிவதை நிறுத்தி விட தனது யோகா சக்தியினால் ரிஷபன் அதை முறியடித்து விட்டான். அதனால் தோற்றுப் போன இந்திரனே தன்னுடைய பெண்ணான ஜெயந்தியை அவருக்கு மணமுடித்துத் தந்தான். அவர்களுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் முக்கியமானவர் பரத தேசன் என்பவர். அவர் ஆண்டது பாரத தேசம். மற்ற பிள்ளைகள் சிலர் வேதியர்களாகவும் வேறு சிலர் பாகவதர்களாகவும் ஆனார்கள். ரிஷபனும் வர்ணாஷ்ராமத்தை அனுஷ்டித்து வந்தான். சம நோக்கு, மற்ற ஜீவன்களிடம் அன்பு காட்டுதல், ராஜ த்வேஷம் இல்லாமை, மற்றவர் துக்கத்தில் பங்கு கொள்ளுதல் போன்றவற்றை தானும் அனுஷ்டித்து, மற்றவர்களுக்கும் அதை உபதேசித்தார். நூற்றுக் கணக்கான யாகங்களை செய்தார். ரிஷிகள் கூடி இருந்த பிரும்மவர்த்த தேசத்தில் தன்னுடைய பிள்ளைகளுக்கு தர்மோபதேசம் செய்தான். அவன் செய்த தர்மோபதேசம் பகவானே அவனுக்கு சொன்னது. அதையே மீண்டும் ரிஷபன் '' இந்த மானிட ஜென்மம் கிடைப்பதற்கு அரியது. அதை மிருகம் போல வாழ்ந்து வீணடிக்காமல் ஸ்வதர்மம், பாகவதாதனம், தவம் போன்றவற்றை செய்து வளர்க்க வேண்டும். தேகம் அழியக் கூடியது, ஆனால் ஆத்மா மட்டுமே அழிவில்லாதது. பக்தி ஒன்றே என்னை அடையும் சாதனம். ஆகார நியமம், இந்திரிய நிர்ரகம், பிரும்மச்சர்யம், சர்வமும் பிரும்ம மயம் என உணர்தல், பேச்சை அடக்குதல், தானத்தில் ஈடுபாடு, வேதாந்தத்தை ஆராதித்தல் முதலியன. பிராமணர்கள் எனக்குப் பிரியமானவர்கள். சுயநலம் இல்லாதவர்கள்'' எனக் கூறினார்.
அதன் பின் பரதனுக்குப் பட்டத்தைக் கட்டி ராஜ்யத்தை விட்டு வெளியேறினார். பித்தனைப் போல பல இடங்களிலும் சுற்றித் தெரிந்தார். பல சித்திகளைப் பெற்றார். அவரால் ஆகாயத்தில் சஞ்சரிக்க முடிந்தது , மனோ வேகத்தில் செல்ல முடிந்தது, ஒரு சரீரத்தில் இருந்து என்னொரு சரீரத்தில் புகுதல், தூர்தர்சனம், ( வெகு தூரத்தில் உள்ளதைப் பார்த்தல்) , தூரச்ஸ்ரவனம் ( வெகு தூரத்தில் உள்ளவர்களிடமும் இருந்த இடத்தில் இருந்தே பேசுதல்) போன்ற சக்திகளைப் பெற்று இருந்தார். ஆனால் அவற்றை அவர் துர்உபயோகம் செய்யாமல் ஆத்மா நிஷ்டையில் இருந்தவாறே தேக வியாகம் செய்து கொண்டார்.
படம் நன்றி:- http://www.maransdog.net/TVG/picture.php
ஜட பரதர் சரித்திரம்
அடுத்து பரதன் ஆட்சிக்கு வந்து பஞ்சஜநினியை மணந்து ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்தார். அவர் அக்னியோத்ரம் போன்ற பல யாகங்களை பண்ணி பகவானை ஆராதிக்க அவன் பெயரால் இருந்த அஜநாபம் என்றப பெயர் போய் பாரத தேசம் என ஆயிற்று. இப்படியாகத்தான் பாரத தேசம் என்ற பெயர் வந்தது. பல்லாண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்தப் பின் தன்னுடைய பிள்ளைகளிடம் ராஜ்யத்தை ஒப்படைத்துவிட்டு கண்டகி நதிக்கரையில் புலஹருடைய ஆசிரமத்துக்குப் போய் தியானத்தில் ஈடுபட்டான். ஒரு நாள் நதியில் நீராடிவிட்டு நித்ய கர்மானுஷ்டம் செய்து கொண்டு இருக்கையில் கருவுற்ற மான் ஒன்று நீர் பருகிக் கொண்டு இருப்பதைப் பார்த்தார். அப்போது எங்கிருந்தோ வந்த சிங்கத்தின் கர்ஜனைக் கேட்ட மான் துள்ளி குதிக்க அதன் வயிற்றில் இருந்த சிசு நீரில் விழுந்தது. அதை கண்ட ஜடபரதர் தவம் கலைய நீரில் திண்டாடிக் கொண்டு முழுக இருந்த மான் குட்டியை பார்த்தார். நதியில் குதித்து அதை காப்பாற்றி கரை சேர்த்தார். நாளுக்கு நாள் அதன் மீது பாசம் வளர்ந்தது. அது அவருடைய நித்ய வழிபாடுகளைக் குறைத்தது. தவ வாழ்கை இப்படியாகக் குறைய மரணம் வந்தது. சாகும்போது அவர் மானின் நினைவாகவே இருந்ததினால் அவர் அடுத்த ஜன்மத்தில் மானாகப் பிறந்தார். அப்போதுதான் தன் தவறை உணர்ந்து அந்த ஜென்மத்தில் அங்கும் இங்கும் சுற்றித் தெரிந்து உயிர் நீத்தார். அடுத்து அவர் ஆங்கீரச கோத்திரத்தில் பிறந்த பிராமணர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார். எப்பொழுதும் பூர்வ ஜென்ம பிறப்பு அவருக்கு நினைவுக்கு வர இந்த ஜென்மத்திலாவது நல்லபடியாக கடை தேற வேண்டும் என நினைத்தவர் பித்தனைப் போலவே சுற்றித் திரிந்தார். அவரை ஊர் மக்கள் ஏசினார்கள். விரைவில் பெற்றோரும் கால கதி அடைந்துவிட அவருடைய உடன் பிறந்தோரும் அவரை ஒதுக்கி துரத்தி விட்டனர். வரும் வழியில் சிலர் அவரை மனித பலியாக காளிக்கு கொடுக்க முனைந்தபோது காளியே அவதரித்து அவர்களைக் கொன்று அவரை காப்பற்றி அனுப்பினாள்.ஜட பரதர் சரித்திரம்
படம் நன்றி:- http://www.maransdog.net/TVG/picture.php
பக்தி ஸ்ரமனையோடு இருந்தவருக்கு ரகுகுணன் என்ற அரசனிடம் பல்லக்கு தூக்கும் வேலை கிடைத்தது. ஆனால் அவருடைய பல்லக்கு தூக்கும் ஏற்ற தாழ்வில் மன்னனுக்கு சிரமம் உண்டாக அவர் கோபமுற்று வார்த்தைகளைக் கொட்டி விட்டார். உன்னை தண்டிக்கின்றேன் எனக் கூறிய மன்னனைப் பார்த்து ' நீ யாரை தண்டிப்பாய்? இந்த உடலையா இல்லை அதனுள் உள்ள ஆத்மாவையா?. உன்னால் என்னுடைய ஆத்மாவை நீ தண்டிக்க முடியாது மன்னா , ஏன் எனில் இன்று நீ அரசன், நான் சேவகன், நாளை நான் அரசனாகலாம், நீயும் சேவகனாகலாம். இந்த சூழ்நிலையில் தவித்துக் கொண்டு இருக்கும் எனக்கு உன்னுடைய தண்டனை பிசைந்த மாவை மீண்டும் பிசைவதற்கே ஒப்பானது. ''.அதைக் கேட்ட மன்னன் துணுக்குற்றான். இத்தனை தத்துவம் பேசும் இவர் சாதாரண மனிதரல்ல...பெரிய ஞானியாகவே இருக்க வேண்டும் என நினைத்து தான் தேடிப்போகும் கபிலரே இவர்தானோ என ஐயம் கொண்டு அவரிடம் மன்னிப்புக் கோரி தனக்கு தத்வோபதேசம் செய்யுமாறு வேண்டினான். அதை ஏற்றுக் கொண்ட ஜட பரதர் அந்த மன்னனுக்கு ஆத்மா ஞான போதனை செய்தார்.
ஜட பரதர் மன்னனுக்கு போதனை செய்தார்.
படம் நன்றி:- http://www.maransdog.net/TVG/picture.php
அவர் மன்னனுக்குக் கூறினார் '' மன்னனே இந்த உலகமே சொப்பனம் போன்றது. சொப்பனம் கலைந்து எழுவது போல இதுவும் நிலை இல்லாதது. நான் என்பது நமது உடல் அல்ல. அதனுள் உள்ள ஆத்மாவே. ஆத்மஞான ஸ்வரூபியாய், சர்வ வ்யாபகனாய் ஒவ்வொன்றிலும் ஒரே ரீதியில் பரவி உள்ள பரமாத்மாவே வாசுதேவன் எனப்படுபவர். சத்சங்கத்தினால் அவரிடம் பக்தியும் அதன் மூலம் கிடைக்கும் முக்தியையும் பெறலாம். நானும் ஒரு ஜென்மத்தில் அரசனாக இருந்து, மான் ஜென்மம் எடுத்து மரித்து இப் பிறவியில் பற்றற்றவனாக இருக்கிறேன். சம்சாரம் என்பது ஒரு காடு. அதில் சுற்றித் திரியும் சிங்கம், புலி போன்றவை ஆபத்தானவையே. காட்டில் உள்ள சிங்கம் மற்றும் ஓநாய்கள் மானைக் கவ்விப் பிடிப்பது போல மனித உடலில் உள்ள இந்திரியங்களும் திருடர்களே. மனைவி, மக்கள் என்ற பந்தம் மனித உடலைக் கவ்விப் பிடிக்கின்றது. கானல் நீரை தேடி ஓடுவது போல மனிதன் காமத்தால் ஈர்க்கப்படுகிறான். ஜீவனும் ஒரு வணிகன். பிரவிர்த்தி மார்கத்தில் செய்யும் எந்த காரியமுமே ஒருவரை சம்சார சாகரத்தில் தள்ளி விடும். நிவ்ருத்தி மார்கமே ஏகபரத்தில் ஆனந்தத்தை தருவது. ஆகவே அரசனே உன் மனதில் உள்ள ஆசையை விட்டு விடு , இன்திரியங்களை அடக்கு, பக்தி மார்கத்தில் ஈடுபடு, அதுவே பரமானந்தத்தைத் தரும். முக்தி அடைய வழி காட்டும்'' என்றார். இப்படியாக ஜடா பரதரின் புண்ணிய சரித்திரம் முடிவுற்றது'' என சூதர் கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக