Fourteen Gods Temple - Tripura- 32
ஆலமரத்து அடியில் கேட்ட ஆலய செய்திகள் -32
திரிபுரா மக்களின் குல தெய்வம்
பதினான்கு கடவுட்கள்
பதினான்கு கடவுட்கள்
சாந்திப்பிரியா
திரிபுரா மாநிலத்து மக்கள் தெய்வ நம்பிக்கை மிகுந்தவர்கள். அவர்கள் தமது குல தெய்வமாக ஒரே பீடத்தில் உள்ள பதினான்கு கடவுட்களை வணங்குகிறார்கள். அவற்றில் பெண் கடவுளும் ஆண் கடவுளும் உண்டு. அந்த வழிபாடு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளதாம். அவர்கள் அந்த கடவுட்களை வணங்குவதற்கு பல கதைகள் கூறப்படுகின்றன என்றாலும் அதிகாரபூர்வமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவை பற்றி கூறப்படும் கிராமியக் கதைகள் இரண்டு உள்ளன .
இன்னொரு கதையின்படி அந்த திரிபுரா மன்னன் கொல்லப்பட்ட பிறகு அவன் மனைவி காட்டில் இருந்த ஓடையில் குளிக்கச் சென்றபோது ஒரு மரத்தடியில் சிறுவர்கள் போல இருந்த பதினான்கு குழந்தைகளை பெரிய காளை போன்ற உருவம் துரத்திக்கொண்டு இருக்க அவை கத்தியவாறே அவளிடம் ஓடி வந்து தம்மைக் காப்பாற்றுமாறு அவளை கேட்க அவள் அந்த பெரும் காளையை விரட்டினாளாம். அந்த குழந்தைகளும் தம்மை குல தெய்வமாக வழிபாட்டு வந்தால் நல்லது நடக்கும் எனக் கூறி கடவுள் சிலையாகி விட்டனர். அந்த காளையும் மறைந்து விட அவள் சிலையாகிவிட்ட அந்த பதினான்கு கடவுட்களை எடுத்து வந்து ஆலயம் அமைத்து அவர்களை தமது குல தெய்வமாக வழிபட திரிபுராவினர் அது முதல் பதினான்கு கடவுளை தமது குல தெய்வமாக வழிபடுகிறார்கள்.
( மூல செய்தியை பிரசுரித்திக் கொள்ள அனுமதி தந்துள்ள http://www.tripura.org.in/index.htm இணைய தளத்துக்கு நன்றி)
கருத்துகள்
கருத்துரையிடுக