Fourteen Gods Temple - Tripura- 32

ஆலமரத்து அடியில் கேட்ட ஆலய செய்திகள் -32

திரிபுரா மக்களின்  குல  தெய்வம் 
பதினான்கு கடவுட்கள்
சாந்திப்பிரியா
திரிபுரா மாநிலத்து மக்கள் தெய்வ நம்பிக்கை மிகுந்தவர்கள். அவர்கள் தமது குல தெய்வமாக ஒரே பீடத்தில் உள்ள பதினான்கு கடவுட்களை வணங்குகிறார்கள். அவற்றில் பெண் கடவுளும் ஆண் கடவுளும் உண்டு. அந்த வழிபாடு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளதாம். அவர்கள் அந்த கடவுட்களை வணங்குவதற்கு பல கதைகள் கூறப்படுகின்றன என்றாலும் அதிகாரபூர்வமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவை பற்றி கூறப்படும் கிராமியக் கதைகள் இரண்டு உள்ளன .
தைத்யா என்ற தன்னுடைய தந்தை இறந்தப் பின் அவர் மகனான திரிபுரா என்ற மன்னன் அரியணை ஏறினார். பதவிக்கு வந்ததும் அண்டை மாநிலங்களில் இருந்த மன்னர்களை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததும் இல்லாமல் தானே கடவுள் என்ற மனப் பிரமையில் வாழ்ந்து வந்தான். நாட்டில் உள்ள அனைவரும் தன்னையே கடவுளாக வணங்க வேண்டும் என ஆணை இட்டான். ஆலய வழிபாட்டை நிறுத்தினான். அவன் கொடுங்கோல் ஆட்சியை சகிக்க முடியாமல் போன மக்கள் சிவபெருமானை வணங்கி அவன் கொடுமையில் இருந்து தம்மைக் காத்தருளுமாறு வேண்டினார்கள். சிவபெருமானும் அந்த மன்னன் முன் தோன்றி அவனுடைய போக்கை மாற்றிக் கொள்ளுமாறு கூறினார். ஆனால் அவன் அகந்தையினால் அதை ஏற்க மறுத்தான். அதனால் கோபம் அடைந்த சிவன் அவனை தனது சூலத்தினால் கொன்றார். அதன் பின் நாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. நாட்டை திறமையாக ஆள ஒருவருமில்லை. இறந்து போன அரசனுக்கு வாரிசும் இல்லை. ஆகவே மீண்டும் மக்கள் சிவனை வேண்டினார்கள். ஆகவே சிவனும் அந்த மன்னனின் மனைவியின் கனவில் தோன்றி அவளை பதினான்கு கடவுள் ஆலயத்தை மீண்டும் திறந்து அதை பூஜித்து வழிபட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என்றார். அவளும் அந்த கட்டளைக்கு ஏற்ப மீண்டும் பதினான்கு கடவுளின் வழிபாட்டை துவக்க அமைதி திரும்பியதாம்.
 இன்னொரு கதையின்படி அந்த திரிபுரா மன்னன் கொல்லப்பட்ட பிறகு அவன் மனைவி காட்டில் இருந்த ஓடையில் குளிக்கச் சென்றபோது ஒரு மரத்தடியில் சிறுவர்கள் போல இருந்த பதினான்கு குழந்தைகளை பெரிய காளை போன்ற உருவம் துரத்திக்கொண்டு இருக்க அவை கத்தியவாறே அவளிடம் ஓடி வந்து தம்மைக் காப்பாற்றுமாறு அவளை கேட்க அவள் அந்த பெரும் காளையை விரட்டினாளாம். அந்த குழந்தைகளும் தம்மை குல தெய்வமாக வழிபாட்டு வந்தால் நல்லது நடக்கும் எனக் கூறி கடவுள் சிலையாகி விட்டனர். அந்த காளையும் மறைந்து விட அவள் சிலையாகிவிட்ட அந்த பதினான்கு கடவுட்களை எடுத்து வந்து ஆலயம் அமைத்து அவர்களை தமது குல தெய்வமாக வழிபட திரிபுராவினர் அது முதல் பதினான்கு கடவுளை தமது குல தெய்வமாக வழிபடுகிறார்கள்.
( மூல செய்தியை பிரசுரித்திக் கொள்ள அனுமதி தந்துள்ள  http://www.tripura.org.in/index.htm   இணைய தளத்துக்கு நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Vasanthapura Temple ( E)

Kudai Swamigal -E