Wonderful Temple for Snakes in Malasia -5

வினோத வெளிநாட்டு ஆலயங்கள் -5         
  பாம்பு ஆலயம் 


படம் நன்றி:- www.zuzutop.com
இதுவரை பாம்புகளை வணங்கும் ஆலயம் இந்தியாவில் நாகர்கோவிலில் மட்டுமே உள்ளதாக நினைத்து இருந்தோம். அனால் அது தவறு மலாசியா நாட்டில் பினாங் எனும் நகரில் என்னும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம் பாம்புகளுக்காக உள்ளது என்பதை அறிந்தபோது வியப்பாகவே இருந்தது. அந்த ஆலயம் புத்த துறவியான சோர் சோ காங் என்பர் நினைவாக 1850 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு உள்ளது. அறுபத்தி ஐந்து வயது வரை வாழ்ந்த அவர் பாம்புகளுக்கு அடிக்கலாம் தந்தவர். அவர் யார் ? அவர் வாழ்ந்த கால கட்டம் கீ பி 960-1276 ஆகும். இளம் வயதிலேயே துறவி ஆனவர் அவர். சீனாவில் தயுன்யான் எனும் மடத்தில் துறவியாக இருந்தவர் பின்னர் எளிய வாழ்வை மேற்கொள்ள காட்டுக்குச் சென்றார். கீ பி 1070 ஆம் ஆண்டில் நாட்டில் மழையே இல்லை. பஞ்சம் ஏற்பட்டது . அப்போது அந்த நட்டு மன்னன் அவரை கேட்டுக் கொண்டதற்கு இணங்கி சோர் சோ காங் மழை பெய்ய வேண்டும் என வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்ய பெரும் மழை பெய்ததாம்.

  சோர் சோ காங்
படம் நன்றி:- http://www.penang-traveltips.com
ஆகவே அவருடைய சக்தியை கண்டவர்கள் அவருக்கு தனி மாடாலயத்தை கட்டிக் கொடுத்தனர். அவர் அங்கிருந்தபோது காட்டில் இருந்த பாம்புகளுக்கு அடைக்கலாம் தந்தார். யாரையும் அவற்றைக் கொல்ல விடவில்லை . அவை அவர் இருந்த இடத்தில் அவை சுதந்திரமாக சுற்றித் திரிந்தன. அவர் அவைகளுக்குப் பாதுகாப்பாக இருந்தார். ஆனால் அவை எதுவுமே எவரையும் கடித்தது இல்லையாம் . காட்டில் இருந்தாலும் அவர் மக்களுக்கு மூலிகை மூலம் மருத்துவ சிகிச்சை தந்து வந்தார்.

ஆலய மணி
படம் நன்றி:- http://www.penang-traveltips.com
அவரை பெரிய துறவியாக அல்லாமல் தமது தெய்வமாகவே மக்கள் போற்றி வந்தனர். அவர் மேலும் பல மகிமைகளை செய்தாராம். அவர் மறைவுக்குப் பின்னால் சீனாவில் இருந்து மலாசியாவுக்குச் சென்ற ஒரு சீன நாட்டவர் தன்னுடன் சோர் சோ காங்கின் ஒரு சிறு சிலையை எடுத்துச் சென்று இருந்தார்.

ஆலயத்தில் பாம்புகள்
படம் நன்றி:- www.zuzutop.com
அவர் மயாசியாவில் சோர் சோ காங்கின் மூன்று ஆலயங்களைக் கட்டினாராம். அவற்றில் ஒன்று மட்டுமே பினாங்கில் உள்ள பாம்பு ஆலயம். அந்த ஆலயத்தில் பலவகை பாம்புகள் வந்து இருந்து விட்டுச் செல்லுமாம்.

பூஜை அறையில் பாம்புகள்
படம் நன்றி:- www.zuzutop.com
அவை அங்கு வருவதின் காரணம் சோர் சோ காங்கிற்கு தமது வணக்கத்தை தெரிவிக்கத்தான் என்கிறார்கள். அந்த ஆலயத்தில் வந்து ஊதுபத்தி ஏற்றி தீபம் ஏற்றிச் செல்பவர்களையும் அவை தீண்டுவது இல்லை. அவர்கள் பக்கத்திலேயே ஊறிச் சென்றாலும் அவை எவரையும் அங்கு தொடுவது இல்லை. அதுவே அந்த ஆலயத்தின் அதிசயம். அண்டை நாடுகளில் இருந்தும் பலர் அந்த பாம்பு ஆலயத்தில் வந்து அவற்றுக்கு பூஜை செய்து வணங்கி விட்டுப் போகிறார்கள். அந்த ஆலயத்தில் உள்ள சோர் சோ காங் சிலையின் முகம் கருப்பாக உள்ளது. அவர் தயாரித்து வந்த கொடிய விஷ முறிவு மூலிகைகளை கையாண்டதினால்தான் முகம் கருப்பாகி விட்டது எனக் கருதுகிறார்கள்.

ஆலயக் கதவுகளில் காக்கும் தேவதைகளின் படங்கள்
படம் நன்றி:- http://www.penang-traveltips.com
ஆலயத்தின் கதவுகளில் காக்கும் தேவதைகளைப் போல இரண்டு பக்கமும் சில அசுரனின் படங்கள் உள்ளன. அவை இருந்தால் தீய ஆவிகள் உள்ளே நுழையாது எனக் கருதுகிறார்கள்.

ஆலயத்தில் பிரார்த்தனை செய்யும் கூடம்
படம் நன்றி:- http://www.penang-traveltips.com
சில செய்திகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்த  www.zuzutop.com  மற்றும் http://www.penang-traveltips.com  இணையதளங்களுக்கு  நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Vasanthapura Temple ( E)

Kudai Swamigal -E