Sri Uchi Vinayagar Aalayam, Kajang (Selangor)
வினோத வெளிநாட்டு ஆலயங்கள் -5
சித்தி விநாயகர் ஆலயம்
முக்கிய அறிவிப்பு:- நாம் அனைவரும் இதுவரை நம் நாட்டில்தான் பல மகிமைகள் வாய்ந்த ஆலயங்கள் உள்ளதாக நினைத்து இருப்போம் . ஆனால் பல அற்புதங்களை செய்துள்ள நம்முடைய ஆலயங்கள் மலேசிய நாட்டிலும் உள்ளன என்பதை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. ஆகவே அதைப் பற்றி நான் கேட்டறிந்தவுடன், அந்த ஆலயங்களைப் பற்றி இந்த தளத்தில் பிரசுரிக்க நண்பர் திரு குமரேஷ் பட்டுமலாயிடம் இருந்து ( kbatumalai@gmail.com ) அனுமதி பெற்று தமிழில் அவற்றை பிரசுரித்து உள்ளேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி . இவற்றை அவருடைய அனுமதி என்றி எவரும் வெளியிடக் கூடாது - சாந்திப்பிரியா
மலேஷியா கஜாங் உச்சி விநாயகர் ஆலயம்
மலேஷியாவில் கஜாங் எனும் இடத்தில் 1937 ஆம் ஆண்டு ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அது முனீஸ்வரர் ஆலயம். ஆனால் அந்த ஆலயத்தில் முருகன் மற்றும் விநாயகரின் சிலைகளும் பூஜிக்கப்பட்டு வந்தன. ஆலயத்தின் நிர்வாகம் புதிய குழுவிடம் சென்றதும் அவர்கள் அந்த ஆலயத்தில் பெரிய அளவிலான விநாயகருடைய சிலையை வைத்து அதை விநாயகருக்கு முக்கியத்துவம் தரும் ஆலயமாக மாற்ற விரும்பினர். ஆனால் விநாயகரை எங்கிருந்து வரவழிப்பது என்று யோசித்தனர்.
அப்போது கிளாங் எனும் துறைமுகத்தில் இருந்த கிடங்கில் பல காலமாக எவரும் வந்து பெற்றுக் கொள்ளாமல் இருந்த மரப் பெட்டிகளை ஏலத்துக்கு விட்டனர். அப்போது அந்த ஏலத்துக்கு வந்து இருந்த ஒரு செல்வந்தர் அந்த பெட்டிகள் ஒன்றில் ஒரு பெரிய விநாயகரின் சிலை இருந்ததைப் பார்த்தார். அது தமிழ் நாட்டில் இருந்து வந்திருந்த பெட்டி. ஒரு வேளை அதை விற்க திருட்டுத்தனமாக எவராவது கடத்தி வந்து இருக்கலாம் என எண்ணியவர் அது தவறான ஆட்கள் கையில் செல்லக் கூடாது என எண்ணி அதை ஏலத்தில் தானே எடுத்து விட்டார்.
அப்போது கிளாங் எனும் துறைமுகத்தில் இருந்த கிடங்கில் பல காலமாக எவரும் வந்து பெற்றுக் கொள்ளாமல் இருந்த மரப் பெட்டிகளை ஏலத்துக்கு விட்டனர். அப்போது அந்த ஏலத்துக்கு வந்து இருந்த ஒரு செல்வந்தர் அந்த பெட்டிகள் ஒன்றில் ஒரு பெரிய விநாயகரின் சிலை இருந்ததைப் பார்த்தார். அது தமிழ் நாட்டில் இருந்து வந்திருந்த பெட்டி. ஒரு வேளை அதை விற்க திருட்டுத்தனமாக எவராவது கடத்தி வந்து இருக்கலாம் என எண்ணியவர் அது தவறான ஆட்கள் கையில் செல்லக் கூடாது என எண்ணி அதை ஏலத்தில் தானே எடுத்து விட்டார்.
முனீஸ்வரர்
சில நாட்கள் கழிய அவர் எந்த ஆலயத்துக்காவது விநாயகர் சிலை தேவையா என விசாரித்ததில் கஜாங்கில் உள்ள முனீஸ்வரர் ஆலயக் குழுவினர் நல்ல விநாயகர் சிலையை வாங்க தேடிக்கொண்டு உள்ளனர் என்பதைக் கேள்விப்பட்டு அந்த சிலையை அந்த ஆலயத்துக்கே இலவசமாகத் தந்து விட்டார். அந்த ஆலயத்தில் உள்ள முனீஸ்வரர் பக்தர்களுக்கு அவ்வப்போது வழிகாட்டிக் கொண்டு இருந்தார். ( கனவிலும், குறி கூறுபவர் மூலமும் ) . அப்படி இருக்கையில் மிகவும் கஷ்டத்தில் இருந்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய முனீஸ்வரர் இனிமேல் அந்த ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு பூ, பழம், பிரசாதம் படைத்தப் பின்னரே தனக்கும் அவற்றை தர வேண்டும் என ஆணையிட அது முதல் அனைவரும் முனீஸ்வரர் கூறியது போலவே செய்யலாயினர். முனீஸ்வரர் கனவில் தோன்றிய அந்த பக்தரின் கஷ்டங்களும் அது முதல் தீர்ந்து விட்டதாம். ஆகவே அவர் அந்த ஆலயத்தின் மீது இன்னமும் அதிக பக்தி கொண்டு அவரை வணங்கி வருகிறாராம். அவர் விநாயகருக்கு வெள்ளித் தலை கிரீடம் செய்து தந்து உள்ளார். மிகவும் சக்தி வாய்ந்த விநாயகர்- முனீஸ்வரர் ஆலயமாம் அது.
ஆலய விலாசம் :
Lot 463, Jalan Changkat Off Jalan Bukit, 43000 Kajang.
Lot 463, Jalan Changkat Off Jalan Bukit, 43000 Kajang.
கருத்துகள்
கருத்துரையிடுக