Dasa Mahavidyas - Ten aspects of Sakthi Devi - Part - 11
படம் நன்றி :- http://taramaa.net/index.html
படம் நன்றி:- http://www.kheper.net/index.htm
அதனால்தான் அவள் ஞான சக்தியாக உள்ளாள். அவளை ஆராதிப்பத்தின் மூலம் பிறப்பு இல்லாத நிலை பெற்று மோட்ஷத்தைப் பெறலாம், மனதில் அமைதி தோன்றி வாழ்க்கை வளம் பெரும். பாபங்கள் விலகும், துன்பங்கள் மறையும் என்று நம்புகிறார்கள். அவளுக்கு நான்கு கைகள். அழகு சொட்டும் முகம். பார்பதற்கு திரிபுர சுந்தரி போலவே காட்சி தருவாள். கைகளில் பாசாங்கமும், அங்குசமும் கொண்டு காட்சி தருகிறாள். சில நேரங்களில் அவள் பல கைகளுடன், பல ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டும், தாமரை மலர்மீது ஒய்யாரமாக நிர்வாண கோலத்தில் அமர்ந்தபடியும் காட்சி தருவாளாம் .
கருத்துகள்
கருத்துரையிடுக