தத்தாத்திரேயர் - பாகம் -4
ஏகநாத்தும் தத்தாத்திரேயரும்
தத்தாத்திரேயரின் வரலாற்றைப் படித்தால் அவருக்கு மராட்டிய மாநிலத்தில் பக்தர்கள் அதிகம் உண்டு என்பது தெரியவரும். தத்தாத்திரேயர் யாருக்காக ஏன் உதவி செய்வார் என்பது தெரியாது. ஆனால் தத்தாத்திரேயரின் பெருமையை விளக்கும் கதைகள் நிறைய உள்ளன. அதில் ஒன்றே ஏக்நாத்தின் இந்தக் கதையும்.
மராட்டிய மானிலத்தில் ஸ்வாமி ஞானதேவா வழியை சார்ந்தவரும் வராகாரி குளத்தை சேர்ந்தவருமான ஏகநாத் என்ற முனிவர் 17-18 ஆம் நூற்றாண்டுகளில் தந்தோபந்த் என்பவருடன் வசித்து வந்தார். இருவருமே மராட்டிய மாநிலத்தில் பிறந்த அந்தனர்கல்தான். அந்த காலங்களில் ஒருவரை குருவாக ஏற்றுக் கொண்டு மற்றவர்கள் அவர் வழியில் சன்யாசப் பாதையில் செல்வார்கள். அந்த வழியிலேயே ஏகநாத் தனது பத்தாவது வயதிலேயே ஸ்வாமி ஜனார்தனா என்பவரை குருவாக ஏற்றுக் கொண்டு இருந்தார். ஏக்நாத் தீவீரமான பாடுறாங்க வித்தலாவின் பக்தர்.ஸ்வாமி ஜனார்தனா தேவகிரி எனும் மலைப் பகுதியில் நெல்லி மரத்தடியில் அமர்ந்து கொண்டு ஞானம் பெற்றவர். அவர் பிறப்பால் அந்தணர் என்றாலும் ஜாதி பேதம் பார்த்தவர் இல்லை. அவர் தேவகோட் பகுதியில் இருந்த ஒரு முஸ்லிம் மன்னனின் அரண்மனையைக் காக்கும் வேலையில் இருந்தார். கூடவே தியானமும் செய்து வருவார். அவர் தியானத்தில் அமர்ந்து உள்ள போது எந்த காரணத்தைக் கொண்டும் தன்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறி விடுவார். அவர் தியானத்தில் இருக்கும்போது அவருக்கு ஏகநாத் காவலுக்கு நிற்பார்.
ஒரு முறை அந்த முஸ்லிம் மன்னனின் அரண்மனை மீது வேறு நாட்டவன் படையெடுத்து வந்தான். அப்போது ஜனார்தனா தியானத்தில் இருந்தார். எதிரிகளின் படைகளோ வேகமாக முன்னேறிக் கொண்டு வந்தன. ஆனால் தியானத்தில் அமர்ந்து உள்ள குருவை எழுப்புவது மிகப் பெரிய குற்றம் என எண்ணிய ஏகநாத் குருவை மனதில் தியானித்தார். அவரை மானசீகமாக வணங்கி விட்டு யுத்த உடைகளை அணிந்து கொண்டு எதிரிகளின் படையுடன் மோதினார். அப்போது அந்த யுத்தத்தில் அவர் பக்கத்தில் குதிரையில் அமர்ந்து இருந்தபடி வேறு ஒரு வீரனும் ஆக்ரோஷமாக எதிரிப் படையினருடன் சண்டை இட்டபடி அவர்களை துவம்சம் செய்து கொண்டு இருந்ததைக் கண்டார். யுத்தம் முடிந்தது. எதிரிப் படைகள் தோற்று ஓடின. தியானத்தில் இருந்து கண் விழித்த ஏகநாத் குருவிடம் நடந்த விவரங்களைக் கூறி தன்னுடன் ஒரு வீரன் பக்க துணையாக இருந்து எதிரிகளை எப்படி துவம்சம் செய்தான் என்பதையும் விளக்கினார். அதைக் கேட்ட எகநாத்தின் குருநாதர் அவர் பக்கத்தில் இருந்தவாறு போர் புரிந்த வீரன் வேறு யாருமல்ல அவர் தத்தாத்திரேயரே என்பதை விளக்கிக் கூறினார்.
இன்னொரு முறை ஏகநாத்துக்கு இன்னொரு சம்பவம் நடந்தது. தத்தாத்திரேயர் தன்னுடன் சில நாய்களையும் வயதான ஒரு பெண்மணியும் அழைத்துக் கொண்டு ஒரு பகீர் உருவில் வந்து ஏகநாத்தை தன்னுடன் வந்து உணவு அருந்துமாறு அழைத்தார். ஆனால் ஏகநாத்தோ ஆசார பிராமணரான தன்னால் எப்படி ஒரு முஸ்லிம் பக்கத்தில் அமர்ந்து கொண்டு சாப்பிட முடியும் என்று எண்ணிக் கொண்டு சற்று தொலைவில் நின்று கொண்டு இருந்த குருநாதரைப் பார்க்க அவரோ முஸ்லிம் உருவில் வந்துள்ளவர் தத்தாத்திரேயரே என ஜாடைக் காட்டினார். அதைக் கேட்டு அதிசயித்த ஏகநாத் திரும்பி அந்த பகீரைத் தேடியபோது அவரைக் காணவில்லை. மாயமாக மறைந்து விட்டார். ஏகநாத் என்ற தனி மனிதருக்கு தத்தாத்திரேயர் ஏன் அப்படிக் கருணைக் காட்டினார் என்று நினைத்தால் அதற்குக் காரணம் தத்தோத்பவாவின் வாழ்கையில் தெரியும்.
தத்தோத்பவாவும் தத்தாத்திரேயரும்
தத்தோத்பவா தனது இளமைக் காலத்தில் இருந்தே தத்தாத்திரேயரின் பக்தராக இருந்தவர். அவருடைய ஆசிகளைப் பெற்றே சன்யாசவாசத்தை மேற்கொண்டவர். அவருக்கு பன்னிரண்டு வயதானபோது அவருடைய தந்தை ஒரு மன்னனிடம் கடன்பட்டு விட்டார். அதை திருப்பித் தர இயலாமல் போனபோது அந்த மன்னன் தத்தோத்பவாவை பயணக் கைதியாக வைத்துக் கொண்டு பணத்தை திருப்பித் தந்துவிட்டு அவனை அழைத்துப் போகுமாறு கூறி விட்டான். தத்தோத்பவாவின் குடும்பத்தினர் தத்தாத்திரேயரின் பக்தர்கள். தன்னுடைய மகன் அந்த மன்னனிடம் எப்படி எல்லாம் சித்திரவதைப் படுகிறானோ என எண்ணிய அவர் தந்தை தத்தரின் படத்தின் முன்னால் நின்று கதறி அழுதார். அதைக் கண்டப் பின்னும் தத்தர் சும்மா இருப்பாரா? தானே தத்தோத்பவாவின் தந்தையின் நண்பர் போல மன்னனிடம் சென்று அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தந்து விட்டு தத்தோத்பவாவை வீட்டிற்கு அழைத்து சென்று அவர் தந்தையிடம் மன்னன் அவனை அனுப்பி விட்டதாகக் கூறி அங்கு விட்டு விட்டுச் சென்றுவிட்டார். அதன் பின்னரே நடந்த உண்மையை அறிந்து கொண்ட அவர் தந்தை தத்தரின் கருணையை எண்ணி மனம் உருகினார்.
அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தத்தோத்பவா தத்தாத்திரேயரிடம் இன்னும் அதிக ஈடுபாடு கொண்டார். அவர் மனம் எப்போதும் தத்தரை நினைத்தபடியே இருந்தது. வயது பன்னிரண்டு ஆயிற்று. தத்தரைக் காண வேண்டும் என மனம் துடிதுடிக்க மலைப் பகுதிகளில் சென்று தத்தரை தேடித் திரியலானார். உணவு, உடை என அனைத்தையும் துறந்தார். தியானத்தில் அமர்ந்துகொண்டு தத்தரை வேண்டினார். மண் மீதும் முள் மீதும் வெறும் தரை மீதும் படுத்து உறங்கினார். காலம் உருண்டது. சுமார் இருபது ஆண்டுகள் இப்படியாக தத்தாத்திரேயரை காண வேண்டும் என திரிந்து கொண்டு இருந்தவரின் பக்தியைக் கண்ட தத்தாத்திரேயர் மகிழ்ச்சி அடைந்து ஒருநாள் திடீர் என அவர் முன் வந்து நின்று அவரைக் கட்டி அணைத்தார். அப்படி அவரைக் கட்டி அனைத்ததின் மூலம் அவரை தெய்வப் பிறவியாக மாற்றினார். அதன் பின் காட்டை விட்டு வெளியேறியபோதுதான் தத்தோத்பவாவை ஏகநாத் சந்தித்தார். இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டு இருந்தார்கள். ஒரு முறை ஏகநாத் இருந்த இடத்தில் கிருஷ்ண ஜெயந்தி நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக தத்தோத்பவாவும் சென்று இருந்தார். அங்கு வாயிலில் காவல்காரன் உருவில் தத்தர் நின்று கொண்டு இருந்ததைக் கண்ட தத்தோத்பவா அவர் அருகில் ஓடிச் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கி அங்கு ஏன் காவல்காரன் உருவில் நின்று கொண்டு இருக்கின்றீர்கள் என தத்தரிடம் சென்று கேட்டபோது தத்தர் கூறினாராம் தான் காவல் காத்து நிற்பது ஏகநாத் என்ற தனி மனிதருக்கு அல்ல எனவும் ஏகநாத் பாண்டுரங்கனே என்பதினால் தான் பாண்டுரங்கனுக்காகவே காவலில் நிற்பதாகக் கூற அதைக் கேட்ட தத்தோத்பவாவும் மெய் சிலிர்த்து நின்றார்.
தத்தாத்திரேயரின் வரலாற்றைப் படித்தால் அவருக்கு மராட்டிய மாநிலத்தில் பக்தர்கள் அதிகம் உண்டு என்பது தெரியவரும். தத்தாத்திரேயர் யாருக்காக ஏன் உதவி செய்வார் என்பது தெரியாது. ஆனால் தத்தாத்திரேயரின் பெருமையை விளக்கும் கதைகள் நிறைய உள்ளன. அதில் ஒன்றே ஏக்நாத்தின் இந்தக் கதையும்.
மராட்டிய மானிலத்தில் ஸ்வாமி ஞானதேவா வழியை சார்ந்தவரும் வராகாரி குளத்தை சேர்ந்தவருமான ஏகநாத் என்ற முனிவர் 17-18 ஆம் நூற்றாண்டுகளில் தந்தோபந்த் என்பவருடன் வசித்து வந்தார். இருவருமே மராட்டிய மாநிலத்தில் பிறந்த அந்தனர்கல்தான். அந்த காலங்களில் ஒருவரை குருவாக ஏற்றுக் கொண்டு மற்றவர்கள் அவர் வழியில் சன்யாசப் பாதையில் செல்வார்கள். அந்த வழியிலேயே ஏகநாத் தனது பத்தாவது வயதிலேயே ஸ்வாமி ஜனார்தனா என்பவரை குருவாக ஏற்றுக் கொண்டு இருந்தார். ஏக்நாத் தீவீரமான பாடுறாங்க வித்தலாவின் பக்தர்.ஸ்வாமி ஜனார்தனா தேவகிரி எனும் மலைப் பகுதியில் நெல்லி மரத்தடியில் அமர்ந்து கொண்டு ஞானம் பெற்றவர். அவர் பிறப்பால் அந்தணர் என்றாலும் ஜாதி பேதம் பார்த்தவர் இல்லை. அவர் தேவகோட் பகுதியில் இருந்த ஒரு முஸ்லிம் மன்னனின் அரண்மனையைக் காக்கும் வேலையில் இருந்தார். கூடவே தியானமும் செய்து வருவார். அவர் தியானத்தில் அமர்ந்து உள்ள போது எந்த காரணத்தைக் கொண்டும் தன்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறி விடுவார். அவர் தியானத்தில் இருக்கும்போது அவருக்கு ஏகநாத் காவலுக்கு நிற்பார்.
ஒரு முறை அந்த முஸ்லிம் மன்னனின் அரண்மனை மீது வேறு நாட்டவன் படையெடுத்து வந்தான். அப்போது ஜனார்தனா தியானத்தில் இருந்தார். எதிரிகளின் படைகளோ வேகமாக முன்னேறிக் கொண்டு வந்தன. ஆனால் தியானத்தில் அமர்ந்து உள்ள குருவை எழுப்புவது மிகப் பெரிய குற்றம் என எண்ணிய ஏகநாத் குருவை மனதில் தியானித்தார். அவரை மானசீகமாக வணங்கி விட்டு யுத்த உடைகளை அணிந்து கொண்டு எதிரிகளின் படையுடன் மோதினார். அப்போது அந்த யுத்தத்தில் அவர் பக்கத்தில் குதிரையில் அமர்ந்து இருந்தபடி வேறு ஒரு வீரனும் ஆக்ரோஷமாக எதிரிப் படையினருடன் சண்டை இட்டபடி அவர்களை துவம்சம் செய்து கொண்டு இருந்ததைக் கண்டார். யுத்தம் முடிந்தது. எதிரிப் படைகள் தோற்று ஓடின. தியானத்தில் இருந்து கண் விழித்த ஏகநாத் குருவிடம் நடந்த விவரங்களைக் கூறி தன்னுடன் ஒரு வீரன் பக்க துணையாக இருந்து எதிரிகளை எப்படி துவம்சம் செய்தான் என்பதையும் விளக்கினார். அதைக் கேட்ட எகநாத்தின் குருநாதர் அவர் பக்கத்தில் இருந்தவாறு போர் புரிந்த வீரன் வேறு யாருமல்ல அவர் தத்தாத்திரேயரே என்பதை விளக்கிக் கூறினார்.
இன்னொரு முறை ஏகநாத்துக்கு இன்னொரு சம்பவம் நடந்தது. தத்தாத்திரேயர் தன்னுடன் சில நாய்களையும் வயதான ஒரு பெண்மணியும் அழைத்துக் கொண்டு ஒரு பகீர் உருவில் வந்து ஏகநாத்தை தன்னுடன் வந்து உணவு அருந்துமாறு அழைத்தார். ஆனால் ஏகநாத்தோ ஆசார பிராமணரான தன்னால் எப்படி ஒரு முஸ்லிம் பக்கத்தில் அமர்ந்து கொண்டு சாப்பிட முடியும் என்று எண்ணிக் கொண்டு சற்று தொலைவில் நின்று கொண்டு இருந்த குருநாதரைப் பார்க்க அவரோ முஸ்லிம் உருவில் வந்துள்ளவர் தத்தாத்திரேயரே என ஜாடைக் காட்டினார். அதைக் கேட்டு அதிசயித்த ஏகநாத் திரும்பி அந்த பகீரைத் தேடியபோது அவரைக் காணவில்லை. மாயமாக மறைந்து விட்டார். ஏகநாத் என்ற தனி மனிதருக்கு தத்தாத்திரேயர் ஏன் அப்படிக் கருணைக் காட்டினார் என்று நினைத்தால் அதற்குக் காரணம் தத்தோத்பவாவின் வாழ்கையில் தெரியும்.
தத்தோத்பவாவும் தத்தாத்திரேயரும்
தத்தோத்பவா தனது இளமைக் காலத்தில் இருந்தே தத்தாத்திரேயரின் பக்தராக இருந்தவர். அவருடைய ஆசிகளைப் பெற்றே சன்யாசவாசத்தை மேற்கொண்டவர். அவருக்கு பன்னிரண்டு வயதானபோது அவருடைய தந்தை ஒரு மன்னனிடம் கடன்பட்டு விட்டார். அதை திருப்பித் தர இயலாமல் போனபோது அந்த மன்னன் தத்தோத்பவாவை பயணக் கைதியாக வைத்துக் கொண்டு பணத்தை திருப்பித் தந்துவிட்டு அவனை அழைத்துப் போகுமாறு கூறி விட்டான். தத்தோத்பவாவின் குடும்பத்தினர் தத்தாத்திரேயரின் பக்தர்கள். தன்னுடைய மகன் அந்த மன்னனிடம் எப்படி எல்லாம் சித்திரவதைப் படுகிறானோ என எண்ணிய அவர் தந்தை தத்தரின் படத்தின் முன்னால் நின்று கதறி அழுதார். அதைக் கண்டப் பின்னும் தத்தர் சும்மா இருப்பாரா? தானே தத்தோத்பவாவின் தந்தையின் நண்பர் போல மன்னனிடம் சென்று அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தந்து விட்டு தத்தோத்பவாவை வீட்டிற்கு அழைத்து சென்று அவர் தந்தையிடம் மன்னன் அவனை அனுப்பி விட்டதாகக் கூறி அங்கு விட்டு விட்டுச் சென்றுவிட்டார். அதன் பின்னரே நடந்த உண்மையை அறிந்து கொண்ட அவர் தந்தை தத்தரின் கருணையை எண்ணி மனம் உருகினார்.
அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தத்தோத்பவா தத்தாத்திரேயரிடம் இன்னும் அதிக ஈடுபாடு கொண்டார். அவர் மனம் எப்போதும் தத்தரை நினைத்தபடியே இருந்தது. வயது பன்னிரண்டு ஆயிற்று. தத்தரைக் காண வேண்டும் என மனம் துடிதுடிக்க மலைப் பகுதிகளில் சென்று தத்தரை தேடித் திரியலானார். உணவு, உடை என அனைத்தையும் துறந்தார். தியானத்தில் அமர்ந்துகொண்டு தத்தரை வேண்டினார். மண் மீதும் முள் மீதும் வெறும் தரை மீதும் படுத்து உறங்கினார். காலம் உருண்டது. சுமார் இருபது ஆண்டுகள் இப்படியாக தத்தாத்திரேயரை காண வேண்டும் என திரிந்து கொண்டு இருந்தவரின் பக்தியைக் கண்ட தத்தாத்திரேயர் மகிழ்ச்சி அடைந்து ஒருநாள் திடீர் என அவர் முன் வந்து நின்று அவரைக் கட்டி அணைத்தார். அப்படி அவரைக் கட்டி அனைத்ததின் மூலம் அவரை தெய்வப் பிறவியாக மாற்றினார். அதன் பின் காட்டை விட்டு வெளியேறியபோதுதான் தத்தோத்பவாவை ஏகநாத் சந்தித்தார். இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டு இருந்தார்கள். ஒரு முறை ஏகநாத் இருந்த இடத்தில் கிருஷ்ண ஜெயந்தி நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக தத்தோத்பவாவும் சென்று இருந்தார். அங்கு வாயிலில் காவல்காரன் உருவில் தத்தர் நின்று கொண்டு இருந்ததைக் கண்ட தத்தோத்பவா அவர் அருகில் ஓடிச் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கி அங்கு ஏன் காவல்காரன் உருவில் நின்று கொண்டு இருக்கின்றீர்கள் என தத்தரிடம் சென்று கேட்டபோது தத்தர் கூறினாராம் தான் காவல் காத்து நிற்பது ஏகநாத் என்ற தனி மனிதருக்கு அல்ல எனவும் ஏகநாத் பாண்டுரங்கனே என்பதினால் தான் பாண்டுரங்கனுக்காகவே காவலில் நிற்பதாகக் கூற அதைக் கேட்ட தத்தோத்பவாவும் மெய் சிலிர்த்து நின்றார்.
..............பாகம் -5
கருத்துகள்
கருத்துரையிடுக