இடுகைகள்

ஜூலை, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

About the Book on Sree Manik Prabhu

படம்
முன்னுரை இந்தப் புத்தகத்தை நான் மானிக்  பிரபுவின் சமஸ்தானத்தினருக்காக எழுதிக் கொடுத்து இருந்தேன். அதை என்னுடைய வலை தளத்தில் வெளியிட்டுக் கொள்ள அனுமதி தந்த சமஸ்தானத்தினருக்கு நன்றி சாந்திப்பிரியா     

Manik Prabhu-1

படம்
அத்தியாயம் -1 ''தேவா உன் திரு உடல் எங்கும் தேவர் அனைவரும் திரிந்திடக் கண்டேன் விலங்குக் கூட்டம் விளையாடுதலையும் பிறப்புக் கடவுள் பிரும்மா முதல் முனிவர்வரை அனைவரையும் கண்டேன் சொல்லில் அடங்கா அங்கம் அனைத்தும் அழிவில்லாது ஜொலிக்கும் வடிவையும் கண்டேன் இன்னிலே தேவா முதலும் இல்லை, நடுவும் இல்லை முடிவோ நிச்சயம் இல்லை. பகவத் கீதை தத்தாத்திரேய அவதாரம் தத்தாத்திரேயர் ஒருமுறை பூமியில் அவதாரம் எடுக்க நினைத்தார். அதனால் ஒரு சிறிய நாடகம் நடத்தி அத்ரி முனிவர் மற்றும் அனுசூயா தம்பதிகளுக்கு சிவா, விஷ்ணு மற்றும் பிரும்மாவின் அவதார மகனாகப் பிறந்தார். உலக நன்மையைக் கருதி அவதூதராக பூமியிலே பிறந்தார். பால்ய லீலைகளை செய்து காட்டியபடி இருந்த அவருடைய யோக சாதனைகள் ஆயிரம் ஆயிரம் உண்டு. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்த முனிவர்கள்கூட எண்ணிப் பார்க்க முடிந்திராத லீலைகள் அவை. நன்மையை நாடி வந்தவர்கள், பற்றற்ற வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருந்த மாமுனிவர்கள் போன்றவர்கள் அவர் சாமான்யர் அல்ல என்பதை புரிந்து கொண்டு , அவர் பரப் பிரும்மனின் அவதாரம் என்பதையும் மிகத...

Manik Prabhu -2

படம்
அத்தியாயம் -2 பிரபோ, உலக அபிமானத்தை துறந்து சின்னஞ்சிறு குழந்தைப் போல சுகமாக இருப்பேனாக ஓர் கன்னிகை கையில் மிஞ்சி இருந்த பிறர் கூட்டு அற்ற ஒற்றை வளையல் போல வீண் பேச்சில் அகப்படாமல் சஞ்சரிப்பேனாக அம்புக் குறி வைத்தவன் அரசன் வரும் ஊர்வல சப்தத்தைக் கூட உணராமல் இருப்பது போல உம்மிடம் மட்டுமே மனதை வைத்து விட்டு வேறு ஒன்றையும் அறியாமல் இருப்பேனாக ஸ்ரீமத் நாராயணீயம் ஸ்ரீ  மானிக் பிரபுவின் அவதாரம் முன்னாள் ஹைதிராபாத் சமஸ்தானத்தில் இருந்த ஒரு சிற்றூர் கல்யாண் என்ற இடம். அது ஒரு கிராமம். ஸ்ரீ மனோகர் நாயக் மற்றும் பாபா தேவி என்ற தம்பதியினருக்கு பிறந்தவரே ஸ்ரீ மானிக் பிரபு. அந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்து இருந்தனர். 1817 ஆம் ஆண்டு. அந்த ஊரில் தத்த ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு கொண்டு இருந்தது. அந்த தேதியில்தான் மானிக் பிரபு மனோகர் நாயக் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தத்தாத்திரேயரின் குரு சரித்திர புத்தகத்தை ஆசாரபூர்வமாக பதினாறு வருடங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டு ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து கொண்டு இருந்த தம்பதியினருக்கு அவர்களின் புதல்வராக...

Manik Prabhu-3

படம்
அத்தியாயம் -3 நான் யார் என்று கூறி மண்ணிலே நடந்திடும் லீலைகளைக் கூறி தான் கொண்ட பிறப்பில் உள்ள தனித்தன்மையை எடுத்துச் சொல்லி தன்னிடம் வந்த மனிதர்களுக்கெல்லாம் உள்ளமே நான்தான் என வான் நிறக் கண்ணன் சொல்ல வலியத் தோள் விஜயன் கேட்டான் பகவத் கீதை மானிக் பிரபுவின் பால காண்டமும் உபனயனமும் ஸ்ரீ மானிக்கின் நிலை குறித்து மற்ற உறவினர்களிடமும் கலந்து ஆலோசனை செய்தப் பின் அவனுடைய பெற்றோர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். பையனுக்கு பூணல் கல்யாணம் செய்துவிட்டால் திருந்தி விடுவான். ஸ்ரீ மானிக்கின் வயது ஏழு ஆகியது. அப்போது அவனுக்கு உபநயனம் செய்து வைத்தார்கள். உபநயன சடங்குகளில் பையனின் காதுகளில் காயத்ரி மந்திரத்தை ஓதுவார்கள். அதற்கேற்ப உபனயன நிகழ்ச்சியில் பையனின் காதுகளில் காயத்ரி மந்திரத்தை பண்டிதர்கள் ஓதத் துவங்கினார்கள். ஸ்ரீ மானிக்கோ அவர்கள் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் முன்னரே கடகடவென அனைத்து மந்திரங்களையும் பொங்கி வழியும் நீர் ஊற்று போல கூறத் துவங்கினார். அனைவரும் வாய் அடைத்து நின்றார்கள். எங்கிருந்து அவர் அத்தனை மந்திரங்களையும் கற்று அறிந்து உள்ளார்? காண்பது கனவா அல்லத...

Manik Prabhu-4

படம்
அத்தியாயம்-4 அழிவற்றவர் அவர் பார்த்ததும் இல்லை இப்படி ஒரு மகானை கேள்விப்பட்டதும் இல்லை அவர் யார் என ஆனால் அவரோ அனைத்தையும் கேட்டுக் கொண்டே இருக்கிறார் நினைத்துப்ப் பார்த்ததும் இல்ல அவரைப் பற்றி அவரோ எண்ண ஓட்டத்தில் மிதக்கிறார் நமக்கோ ஒன்றும் தெரியவில்லை அவரோ அனைத்தையும் அறிந்தவராக இருக்கின்றார் இவரைத் தவிர வேறு எவர் மகானாக இருக்க முடியும் ? இயற்கைக் கூட இவரிடம் குறுக்கும் நெடுக்குமாக பின்னிப் பின்னி இணைந்து இருக்குமோ? பிரகத் ஆரண்ய உபநிஷத் நான் யார் தெரியுமா ? சிறுவர் என்ற வயதைக் கடந்து வயதுக்கு வந்தவர் ஆனார்  ஸ்ரீ மானிக். பசி, உறக்கம் என எதுவும் இல்லை. சாப்பாடு கிடைத்தால் சாப்பிடுவது, இல்லை என்றால் பட்டினி கிடப்பது. உடலைப் பற்றிக் கவலைப்படவில்லை. மனதிலே சொந்த வெறுப்போ, விருப்போ, சொந்த பந்தங்கள் என்றோ எதையுமே வைத்துக் கொண்டு இருக்கவில்லை. அனைத்தையும் கடந்துவிட்ட அவர் ஒரு அவதூத பிரும்மச்சார்யராகவே வாழ்ந்து வந்தார். அவருக்கு இயற்கையே வழிகாட்டி. இயற்கையே துணைவன். என்னதான் மகன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாலும் சொந்த பந்தம் விலகி விடுமா என்ன? அந்த இள...

Manik Prabhu-5

படம்
அத்தியாயம் - 5 பார்த்தா இப்போது என்னைப் பார் வகைவகையான என் வடிவங்களைப் பார் ஆதித்யர்களை, அஷ்ட வசுக்களை அஸ்வினித் தேவர் ருத்ரம் தமை ஏழு மருந்துகள் என்னுள் அடங்கி எங்கும் தெரிவதை நன்கே பார் காண வரும்பும் அனைத்தையும் காண நினைத்தால் என்னையேப் பார் இந்தக் கண்களால் என் உருவைக் காண்வது கடினம் அதனால்தான் பார்த்தா தெய்வப் பார்வையை சேர்த்தே உனக்குத் தருகிறேன் பகவத் கீதை விஸ்வரூப தரிசனம் எத்தனை வேண்டிக் கொண்டும் வீடு திரும்ப மறுத்து விட்ட ஸ்ரீ மானிக்கின் பிரிவு வருத்தம் தந்தாலும் வேறு வழி தெரியாமல் ஊர் திரும்பினார்கள் அவர் உறவினர். ஸ்ரீ மானிக் என்றப பெயர் மறைந்து ஸ்ரீ மானிக் பிரபு என அவர் அழைக்கப்படலானார். அப்போது ஸ்ரீ மானிக் பிரபு இருந்த இடம் மன்தால்  என்ற பகுதி ஆகும். அந்த இடத்தை சுற்றியே நிறைய மரம் செடிகள் மற்றும் காடுகள் உண்டு. அங்கு சென்று சுய தரிசனத்தில் ஈடுபடுவார் ஸ்ரீ மானிக் பிரபு. மலை மீது இருந்து இறங்கி வந்து மக்களுக்கு தொண்டு செய்வார். பல நேரங்களில் அவர் போக்கே விசித்திரமாகவும் ஜீரணிக்க முடியாமலும் இருக்கும். எ...

Manik Prabhu - 6

படம்
அத்தியாயம் - 6 குருவே உன்னிடம் சரண் அடைந்தேன் எங்கும் நிறைந்தவரே நீர் யார் எப்படிப்பட்டவர், எதற்கு ஒப்பானவர் எதையுமே நான் அறிந்து இருக்கவில்லை நீங்கள் எப்படிப்பட்டவராக இருப்பினும் நான் மனதில் வேறு ஒன்றையும் வைத்திராமல் உம்மை தியானிப்பதையே விரும்புகிறேன் நாராயணீயத்தில் த்யான யோகம் தக்ஷிண காசி என்று அழைக்கப்படும் இடத்தில் பழம் பெருமை வாய்ந்த சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. அதன் பெயர் மார்த்தாண்ட பைரவர். பல இடங்களில் இருந்தும், தூர தேசங்களில் இருந்தும் மக்கள் அங்கு வந்து வழிபடுவார்கள். அங்கு வரும் பக்தர்கள் சிவ பெருமானை வணங்கியப் பின் மானிக் பிரபுவையும் வந்து வணங்கிச் செல்வார்கள். அதற்க்கான காரணம் மானிக் பிரபு தத்தாத்திரேயரின் அவதாரமே என்ற செய்தி பரவலாக பரவி இருந்ததே. தத்தாத்திரேயர் சிவன்-விஷ்ணு-பிரும்மா என்பவர்களின் அவதாரமே என்பதினால் அவரை வந்து வணங்கினார்கள். இப்படி இருக்கும்போது அவருடைய ஆசிரமத்துக்கு அடிக்கடி வந்து சென்றவர்களில் வெங்கம்மா என்ற பெண்மணியும் உண்டு. நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர் அவர். வணிகத் தொழில் செய்து வந்தார். தினமும் கோவிலுக்கு வந்து மானிக் பிரபு...

Manik Prabhu - 7

படம்
அத்தியாயம் -7 உள்ளே உள்ள உள்ளம் கறுத்து வெளியில் உள்ள உடலும் வெளுத்து உள்ள அந்த மக்களை பக்தி மார்கத்தில் இணைக்கவும் இணைந்த அவர்கள் அனைவரும் இந்த உலகிலேயே சொர்க்கத்தைப் பெற்று மகிழவும் வழிகாட்ட என்றே என்னை இந்த உலகில் இறைவன் படைத்தான் திரு அருட்பா பயணம் தொடர்ந்தது.....பாதையும் நீண்டது ஸ்ரீ மானிக்  பிரபுவின் புகழ் அனைத்து இடங்களிலும் தொடர்ந்தது. எங்கிருந்தெல்லாமோ வந்த மக்கள் அவரிடம் இருந்து ஆசி பெற்றுச் சென்றார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்கையில் பல பிரச்சனைகள். தங்களுக்கு ஏற்பட்டு உள்ள சங்கடங்கள் விலக வேண்டும் என அவரிடம் வந்தார்கள். மற்றும் சிலரோ அவருடைய தரிசனம் மட்டுமே கிடைத்தால் போதும் எனவும் அவரிடம் வந்தார்கள். பாமர மக்களுக்கு என்ன தெரியும், எந்த ஞானியும் மகானும் தம்மிடம் உள்ள சக்தியை பயன்படுத்தி உடனேயே வந்தவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பது இல்லை என்பது. ஆனாலும் அவற்றை எல்லாம் மீறி அனாவசிய பிரச்சனைகளுக்கு உடனே விடிமோட்ஷம் வேண்டும் என எண்ணியபடி அவரிடம் பெருமளவில் மக்கள் வரத் துவங்கினார்கள். அதனால் மனம் கலக்கமுற்ற பிரபு அப்படிப்பட்ட பிரச்சனைகளில் தான் மூழ...

Manik Prabhu - 8

படம்
அத்தியாயம் - 8 பரமாத்மா நான் பற்றிய தலைவா பார் படைப்புக் கடவுளை படைத்தவன் நீயே யார் உன்னைப் பணியார்? முடிவே இல்லாத மூலத்தின் மூலமே சத்திய தேவன் ஜகன்னாதன் நீ உண்மை, இன்மை இரண்டிலும் உயர்ந்தவன் நீ அழிவில்லாதவன் நீ ஆத்மா தத்துவம், பூரண புருஷன் பூமியின் மூலமும் அறிந்தவன் நீ பரமபதம் நீ, உலகம் எங்கும் பரவி நிற்பவனும் நீயே பகவத் கீதையில் அர்ஜுனன் என்னைப் பார்...என் சக்தியைப் பார் ஸ்ரீ மானிக் பிரபுவை மக்கள் அனைவரும் அவர் ஜார்னி நரசிம்மா என்ற அந்த இடத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என விரும்பினாலும் அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மற்ற இடங்களில் உள்ளவர்களும் அவர் தமது பகுதிகளில் வந்து வசிக்க வேண்டும் என விரும்பினார்கள். இப்படி வேண்டுகோட்கள் வந்த இடங்கள் பல இடங்களிலும் பரவி இருந்தன. அவர்கள் அனைவருடைய வேண்டுகோட்களையும் ஸ்ரீ  மானிக் பிரபுவினால் தட்டவும் முடியவில்லை, ஏற்கவும் முடியவில்லை. ஆனால் ஸ்ரீ மானிக் பிரபு எவரையும் ஏமாற்ற விரும்பவில்லை. நான் நிச்சயம் வருவேன். எதிர்பார்த்து காத்திருங்கள் என்றே அனைவரிடமும் கூறுவார். பிரபுவின் சிஷ்யர்களோ இடைவிடாது அங்கும் இங்கும்...

Manik Prabhu -9

படம்
அத்தியாயம் -9 இறைவன் ஒருவனும் அவனே இவன் என எல்லா நிலையம் எனக்கே ஆக்கி என்னுடன் இருந்து என்னுடன் கலந்து என்னுள் நிறைந்த எல்லோரையுமே ஜனனம், சம்சாரம், மரணம் எனும் கடலைக் கடந்து கரை சேர்த்திடுவேன் நின் மனம் என்பால் நிலைபெற வைப்பாய் என்னையே நினைத்திட வைப்பாய் பகவத் கீதையில் கண்ணன் ஆன்மீக மையம் உருவானது ஹும்னபாத்தில் பக்தி மார்க்க சமஸ்தானத்தை நிறுவ பிரபு முடிவு செய்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. அந்த இடம் பொருளாதார, மத, அரசியல் பேதங்களினால் மிகவும் சீரழிந்து இருந்தது. அங்கு பெருமளவில் முஸ்லிம் மக்களே அக்கம் பக்கத்து நகரங்களை ஆண்டு வந்தார்கள். அவர்களில் பலர் முஸ்லிம் மத வெறியர்கள். அதனால் இந்துக்கள் அங்கிருந்து துரத்தப் பட்டார்கள். அங்கு இருந்தவர்களோ கட்டாய மத மாற்றத்துக்கு உள்ளானார்கள். ஆகவே அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு தேவையாக இருந்தது. அது மட்டும் அல்ல. அங்குதான் இரண்டு வில்வ மரங்களும் எரிந்து விட்டன. அப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில் அங்கு சமஸ்தானத்தை நிறுவுவது சரியா என மானிக் பிரபுவை சுற்றி இருந்தவர்கள் சந்தேக...

Manik Prabhu - 10

படம்
அத்தியாயம் - 10 திருவிளையாடல்கள்  தேவர்களின் குரு பிரஹச்பதியும் நானே செனாதிபதிகளில் கந்தன் நானே தாவிவரும் நீர்நிலையின் கடலும் நானே தவ முனிவர் பரம்பரையில் பிருகு முனிவரும் நானே நாவில் வரும் சொற்களின் ஓலமும் நானே நல வேள்வி வகையில் ஜெபமும் நானே பகவத் கீதையில் கண்ணன் மாணிக் பிரபுவின் மகிமைகளை அறியாமல் அவரை சீண்டிப் பார்த்து வாங்கிக் கட்டிக் கொண்டவர்களும், மோதி அடிபட்டதும் பலர் உண்டு. அவர் பல அதிசயங்களை நிகழ்த்தி உள்ளார்.  அற்புதங்களைக் காட்டி உள்ளார். மருத்துவர்கள் இறந்துவிட்டதாக சான்று இதழ் தந்தவர்களையும் உயிர் பெற்று எழுந்து வைக்க வைத்து உள்ளார்.  அவர் நண்பரான கோவிந்தன்  என்பவர் உயிர் பிழைத்தக் கதை அதற்கு சான்று. அது போல பீமா பாய் என்ற பெண்மணிக்கு மழலை செல்வம் கிடைக்க அருளிய கதை, மாட்டு இறைச்சியை தின்பண்டங்களோடு  கலந்து வந்து தந்த முஸ்லிம் வெறியர்களின் கொட்டத்தை அடக்கியது போன்ற பலவும் உண்டு. அவற்றின் விளைவாக  மாணிக் பிரபுவின் புகழ் மேலும் பரவிக் கொண்டே இருந்தது. ஒரு முறை ஆன்மீக மையம் அமைக்கத் துவங்கிய காலகட்டத்தில் பெரிய யாகம் நடைபெற்றது.  அந்த யாக...

Manik Prabhu - 11

படம்
அத்தியாயம் - 11   ஒன்றாகக் கூடுங்கள், ஒன்றாகிப் பேசுங்கள் உங்கள் அனைவர் மனமும் ஒன்றினை நோக்கியே இருக்கட்டும் மூவுலக தேவர்களும் ஒன்றாகி அடையும் இன்பத்தை உங்கள் பக்தி மார்கங்களும் உங்கள் சந்திப்பும் காட்டட்டும் உங்கள் மனதை ஒன்றாக்குங்கள் உங்கள் ஆசிகளும் ஒன்றாகியே இருக்கட்டும் அதன் பயனாக அனைவருமே ஆசி பெற்று நல்வாழ்வு பெறட்டும் ஒரு வழிப்போக்கன் கவிதை மானிக் பிரபுவும் மன்னர்கள் மற்றும் மகான்களும் சகலமாதா சம்பிரதாயம் என்பதை பிரபுஜி முழுமையாக ஏற்றுக் கொண்டார். அதில் ஒருவருக்குக் கூட அவர் மீது எந்த சந்தேகமும் எழவில்லை. அவரை ஒரு அவதார புருஷராகவே ஏற்றுக் கொண்டார்கள். பிரபுஜியின்  வாழ்கையில் பல சம்பவங்கள் நடந்தேறி உள்ளன. அவரை பல மகான்கள் சந்தித்து உள்ளார்கள். அவர்களைப் பற்றி முழுமையாக கூற முடியாது என்பதினால் ஜாடை மாடையாக மட்டுமே கூற இயலும். ஒரு முறை சிருங்கேரி மற்றும் ஹம்பி மடாதிபதிகளுக்கு இடையே ஒரு கருத்து வேற்றுமை தோன்றியது . நிஜாம் மன்னர் ஆட்சி செய்து வந்த பகுதிகளில் எந்த மடத்தினர் சென்று ஆதி சங்கரரின் புகழைப் பரப்புவது என்ற ...