Pancharama Shetra - Anthra Pradesh
பஞ்ச லிங்க ஷேத்திரங்கள் ஆந்திரப் பிரதேசத்தில் ஐந்து சிவ லிங்க ஆலயங்கள் சாந்திப்பிரியா ஆந்திரப் பிரதேசத்தில் மற்ற மாநிலங்களைவிட அதிக அளவிலான ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒரு முக்கியமானது பஞ்ச லிங்க ஷேத்ர ஆலயங்கள். ஐந்து சிவாலயங்களை உள்ளடக்கியது அந்த ஐந்து ஷேத்ரத்தில் உள்ள ஆலயங்கள். அந்த ஆலயங்களைக் கட்டியவர்கள் இந்திரன், சந்திரன், சூரியன், மஹா விஷ்ணு மற்றும் குமாரசுவாமி என்கிறார்கள். அந்த ஐந்து சிவாலயங்களிலும் உள்ள சிவ லிங்கங்கள் ஒரே ஒரு சிவ லிங்கத்தில் இருந்து வெளிவந்த ஐந்து சிவ லிங்கங்கள் என்று புராணக் கதையைக் கூறுகிறார்கள். அந்த ஐந்து ஆலயங்களும் வந்த பல கதைகள் இவை. அமரேஸ்வரர் ஆலய சிவ லிங்கம் தாரகாசுரன் என்ற அசுரன் சிவ பக்தன். அவன் தனது தொண்டையில் சிவ பெருமானிடம் இருந்து பெற்ற ஒரு சிவ லிங்கத்தை அடக்கி வைத்து இருந்ததினால் அவனை எவராலும் வெல்லவோ அடக்கவோ முடியாமல் இருந்தது. ஆகவே அவனை அழிக்க அவதாரம் எடுத்த முருகப் பெருமான் தாரகாசுரனை யுத்தத்தில் வென்று அவன் தொண்டையை நோக்கி ஆயுதத்தை வீச அவன் தொண்டையில் மறைத்து வைத்திருந்த சிவ லிங்கம் வெளியில் வி...