இடுகைகள்

ஆகஸ்ட், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Pancharama Shetra - Anthra Pradesh

படம்
  பஞ்ச லிங்க ஷேத்திரங்கள் ஆந்திரப் பிரதேசத்தில் ஐந்து சிவ லிங்க ஆலயங்கள் சாந்திப்பிரியா ஆந்திரப் பிரதேசத்தில் மற்ற மாநிலங்களைவிட அதிக அளவிலான ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒரு முக்கியமானது பஞ்ச லிங்க ஷேத்ர ஆலயங்கள். ஐந்து சிவாலயங்களை உள்ளடக்கியது அந்த ஐந்து ஷேத்ரத்தில் உள்ள ஆலயங்கள். அந்த ஆலயங்களைக் கட்டியவர்கள் இந்திரன், சந்திரன், சூரியன், மஹா விஷ்ணு மற்றும் குமாரசுவாமி என்கிறார்கள். அந்த ஐந்து சிவாலயங்களிலும் உள்ள சிவ லிங்கங்கள் ஒரே ஒரு சிவ லிங்கத்தில் இருந்து வெளிவந்த ஐந்து சிவ லிங்கங்கள் என்று புராணக் கதையைக் கூறுகிறார்கள். அந்த ஐந்து ஆலயங்களும் வந்த பல கதைகள் இவை.   அமரேஸ்வரர்  ஆலய சிவ லிங்கம் தாரகாசுரன் என்ற அசுரன் சிவ பக்தன். அவன் தனது தொண்டையில் சிவ பெருமானிடம் இருந்து பெற்ற ஒரு சிவ லிங்கத்தை அடக்கி வைத்து இருந்ததினால் அவனை எவராலும் வெல்லவோ அடக்கவோ முடியாமல் இருந்தது. ஆகவே அவனை அழிக்க அவதாரம் எடுத்த முருகப் பெருமான் தாரகாசுரனை யுத்தத்தில் வென்று அவன் தொண்டையை நோக்கி ஆயுதத்தை வீச அவன் தொண்டையில் மறைத்து வைத்திருந்த சிவ லிங்கம் வெளியில் வி...

Patti Ponnandaal Suga Munivar Preached Parishat

படம்
பாட்டி பொன்னாண்டாள் ராமநாதன் எழுதிய  சுக  முனிவர் சொன்ன கதை- பாகவதத் துளிகள்  முன்னுரை:-  ஸ்ரீ கிருஷ்ணாய நமஹா ஸ்ரீ வியாச குருப்யை நமஹா பரமனுக்கும் சுயப் பிரகாசனுக்கும் அனந்த  கோடி  நமஸ்காரங்கள். பரம் பொருளே அனைத்து பிரபஞ்சத்துக்கும் மூல காரணம். அதன் வளர்ச்சியும், ஒடுக்கமும் பஞ்ச பூதங்களின் சேர்கையினால்தான். பிருமாண்டத்தையே சரீரமாகக் கொண்டவன். அவனே விராட்டி புருஷன். அவனுடைய கண் சூரியன். வாய் அக்னி. மனது சந்திரன். முகம் பிராமணன். புஜம் சத்ரியன். தொடை வைஷ்யன். என இந்தப் பிரபஞ்சமே பகாவானின் ஸ்தூல சரீரமாக உள்ளது.  நாரத முனிவர் வியாசரை  ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றுமாறு கூறினார்  http://www.maransdog.net/TVG/picture.php பாகவத கர்நாம்ருத கர்னாம்ருத சரித்திரம் என்ற நூல்  மக்கா முனிவரான வியாசரால் இயற்றப்பட்டு அவருடைய மகன் சுகப் பிரும்ம ரிஷியினால் பிரசாரம் செய்யப்பட்டது. கல்ப விருஷத்தில் பழுத்தக் கனி இருந்தது. அதை சுகர் என்ற கிளி ஒன்று கொத்தி சுவைத்துக் கொண்டு இருந்தபோது அதை கீழே நழுவ விட்டது. அதுவே சுகப் பிரும்மம். அதற்கு ஈடு எனை கிடையாது. ந...

Thirunilai Periyandavar Temple- Kancheepuram, Tamilnadu -35

படம்
  ஆலமரத்து அடியில் கேட்ட ஆலயக் கதைகள் - 35 திருநிலை பெரியாண்டவர்  ஆலயம் சாந்திப்பிரியா செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருகழிக்குன்றத்தில் இருந்து சுமார் ஏழு கிலோ தொலைவில் உள்ளதே பெரியாண்டவர் சிவன் ஆலயம். வயல் வெளியில் இருந்த சிவலிங்கத்திற்கு சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆலயம் எழுந்துள்ளது. அந்த ஆலயத்தின் வரலாறு என்ன? ஒரு முறை பார்வதி கொடுத்த சாபத்தின் காரணமாக சிவபெருமான் பூமியில் மானிடனாக அவதரிக்க வேண்டி இருந்தது. அவர் பூமிக்கு வந்து தன் நிலை மறந்து அங்கும் இங்குமாக பைத்தியக்காரர் போல அலைந்து திரிந்து கொண்டு இருந்தார். அவர் அந்த நிலையில் இருந்ததினால் அனைத்து இயக்கங்களும் தடைப்பட்டன. தேவர்கள் கவலை அடைந்தனர். அவர்கள் பார்வதியிடம் சென்று அந்த நிலையை மாற்றுமாறு வேண்டிக்கொள்ள அவளும் சுற்றி அலைந்து கொண்டு இருந்த சிவபெருமானின் நிலையைக் கண்டு மனம் வருந்தினாள். ஆனாலும் சாப விமோசனம் குறிப்பிட்ட காலத்தில்தானே நடக்க முடியும். அதற்கேற்ப அவர் இந்த ஆலயம் இருந்த இடத்துக்கு வந்தபோது சாபத்தை தன்னுள் வைத்து இருந்த அவர் கையில் இருந்த சூலாயுதம் கீழே விழ சாப ...

Waynad Tirunelli Vishnu Temple- Kerala -34

படம்
  ஆலமரத்து அடியில் கேட்ட ஆலயக் கதைகள் - 34 கேரளத்து வயநாடு திருநெல்லி விஷ்ணு ஆலயம் சாந்திப்பிரியா   படம் நன்றி : http://www.kisaso.com/tirunelli-temple/ கேரளத்தில் வயநாட்டில் உள்ள மனந்தவாடி எனும் இடத்தில் இருந்து சுமார் முப்பது கிலோ தொலைவில் உள்ள பிரும்மகிரி மலைப் பகுதியில் பாபநாசினி நீர்வீழ்ச்சி ஓடும் இடத்தில் உள்ளதே திருநெல்லி விஷ்ணு ஆலயம். ஆலயம் ஆயிரத்துக்கும் முற்பட்டது. ஆலயம் முழுமையாக கட்டப்படாமல் இருக்கின்றது என்றாலும் அந்த ஆலயம் மிகவும் புகழ் பெற்று உள்ளது. ஆலயம் எவரால் கட்டப்பட்டது என்பது குறித்து விவரங்கள் கிடைக்கவில்லை.  ஆலயத்தின் ஒரு தோற்றம்  அநேகமாக ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் அது கட்டப்பட்டு இருக்கலாம் எனவும் இரண்டு மன்னர்களுக்கு இடையே எழுந்த தகராறினால் ஆலயம் முழுமையாகக் கட்டப்படாமல் நின்றுள்ளது எனக் கிராமியக் கதையைக் கூறுகிறார்கள். அதனால்தான் ஆலயத்தின் மேற்கூரை பாதி கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது. மேலும் அந்த நாட்டை ஆண்டு வந்த மன்னனின் ஒரு இளவரசி அங்கு வந்தபோது ஆலயத்தில் பகவானுக்கு அர்ச்சனை செய்ய தண்ணீர்கூட இல்லையே ...

Chinthpoorni devi Temple- Himaachal Piradesh - 33

படம்
ஆலமரத்து அடியில் கேட்ட ஆலயக் கதைகள் - 33   ஹிமாச்சலப் பிரதேசத்தில் அற்புத  சின்னமஸ்தா தேவி  ஆலயம்  சாந்திப்பிரியா    மகாவித்யாவில் வரும் சின்னமஸ்திகா தேவியின் ஆலயமே ஹிமாச்சலப் பிரதேசத்தில் உனா எனும் மாவட்டத்தில் உள்ளது. அந்த ஆலயத்தின் பெயர் சிந்த்பூரணி ஆலயம். அந்த ஆலயம் சக்திபீட ஆலயங்களில் முக்கியமான ஒன்றாகும். ஆலயத்தில் உள்ள தேவியை தலை இல்லாத  துர்கா தேவியின் அவதாரமான சின்னமஸ்திகா தேவியாகவே வணங்குகின்றார்கள். அந்த தேவியை முறைப்படி வணங்கித் துதிப்போருக்கு வேண்டியதை அவள் தருவதாக நம்பிக்கை உள்ளது. வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்கள் விலகும்  . மன அமைதி கிடைக்கும் , எதிரிகள் மீதான பயம் ஒழியும், வீட்டிலும் தீயவை வராது .  அவளை சித்தி கொண்டால் பல அபூர்வ சக்திகள் கிடைக்குமாம் . படங்கள் நன்றி:- http://en.wikipedia.org/wiki/File:Jai_Mata_Di...Maa_Chintpurni தேவர்களை துன்புறுத்தி வந்த நிஷும்பவை  அழிக்கக் கிளம்பிச் சென்ற துர்க்கை  தன்னுள் இருந்து ஒரு பயங்கரமான தேவியை படித்தால். அகோர உருவமும், ஆக்ரோஷமுமான...

Patti Ponnandaal ezhuthiya Gaya Yathra - Part- 2

படம்
பாட்டி பொன்னாண்டாள் ராமநாதன் எழுதிய  காசி மகத்துவத்தைத் தொடர்வது .....காயா  மகத்துவம்    கங்கையில் காரியங்களை முடித்துக் கொண்டப் பிறகு நாம் கிளம்பிச் செல்ல வேண்டியது காயாவுக்கு. காயா நகரம் பீகாரில் உள்ளது.  வாரணாசியில் இருந்து ஒரு நாள் பயணம் . காயாவை அடைந்ததும் அங்கு ஓடும் பால்குனி நதியில் சென்று குளிக்க வேண்டும். அங்கு குளித்தப் பின்னர் அருகில் உள்ள ஸ்ரீ காதரன் எனும் விஷ்ணுவின் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு விஷ்ணு நம்முடைய சடங்குகளை ஏற்றுக் கொண்டு இறந்துவிட்ட நம்முடைய முன்னோர்களையும் பெற்றோர்களையும் கரையேற்றி பரமபதம் தந்தருள காத்துக் கொண்டு இருக்கின்றார். ஆகவே நாம் இங்கு செய்ய இருப்பது அதற்கான சடங்குகளையே. ஸ்ரீ காதரன் ஆலயத்தில் உள்ள பெரிய ஹாலில் பண்டிதர்களை வைத்துக் கொண்டு சங்கல்பம் எடுத்துக் கொண்டு, தர்பண காரியங்களை செய்தவுடன் நாம் அங்கு செய்து தயாராக வைத்துள்ள சாதத்தை எடுத்து பிண்டங்களாகப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் . படங்கள்  நன்றி  : - http://en.wikipedia.org/wiki/File:Vishnupadh_Temple.jpg இறந்துவிட்ட நம்...

Marudeeswarar Temple, Tiruvanmiyoor, Chennai (24)

படம்
தெரிந்த ஆலயம்...பலருக்கும் அறிந்திடாத வரலாறு - 24 சென்னை திருவான்மியூர் மருதீஸ்வரர்  ஆலயம் சாந்திப்பிரியா   படம் நன்றி:- http://en.wikipedia.org/wiki/Marundeeswarar_Temple சென்னையில் உள்ள திருவான்மியூர் எனும் இடத்தில் உள்ளது மற்றுமொரு வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம். அதை மருதீஸ்வரர் ஆலயம் எனக் கூறுகிறார்கள். மூலவர் பால்வண்ணனாதர்  எனும் பெயரைப் பெற்ற  ஒன்றரை அடி உயரமான சிவன். வடிவம் சிவ லிங்கம். இந்த ஆலயம் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இந்த இடத்தில்தான் சிவ பெருமான்  வாதாபிக்குச் சென்று திரும்பிய அகஸ்திய முனிவரின் வயிற்றுக்  கோளாறுக்கும்  சூரியன் மற்றும் சந்திரனுக்கு அவர்களது  குருபத்தினி தோஷத்துக்கும் குணப்படுத்தியதான ஐதீகம்  உள்ளது. மேலும் மருதீஸ்வரர்  இங்குதான் அகஸ்தியருக்கு மூலிகை வைத்தியம் பற்றி கற்றுக் கொடுத்தாராம். ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் இந்த ஆலயத்தில் அகஸ்தியர், சூரியன் மற்றும் சந்திரன் வந்து சிவ பெருமானை பூஜிக்கின்றனர் என்பது ஒரு நம்பிக்கை.  ஆலயத்தில் உள்ள சிவ லிங்கம்  தானாகவே தோன்றி உள்...

Someshwarar Temple, Hulimavu, Bangalore

படம்
சோழ மன்னர்கள் கட்டிய  சோமேஸ்வரர் எனும் சிவன் ஆலயம் சாந்திப்பிரியா  முன்  காலத்தில்  இருந்த  ஆலயத்  தோற்றம்  மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்கள். அதற்கு எடுத்துக் காட்டாக  உள்ளதே சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு உள்ள ஒருசிறிய  சிவன் ஆலயம். ஆலயம் உள்ள இடம் பெங்களூர் நகரின் ஒரு கோடியில் உள்ள ஹுலிமாவு எனும் பகுதியில் உள்ள சோமேஸ்வரர் என்ற சிவன் ஆலயம். ஆலயம்.  சுமார் இருநூறுக்கும் அதிகமான வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டு உள்ளது அந்த ஆலயம் .  அந்த காலத்தில் சோழ மன்னர்கள் இந்தப் பகுதியில் சில முக்கியமான சிவன் ஆலயங்களைக் கட்டி உள்ளனர். அவற்றில் பஞ்சலிங்க சிவன் ஆலயம் (ஹுலிமாவு அருகில் உள்ள  பேகூர் பகுதியில் உள்ளது) , இந்த சோமேஸ்வரர் ஆலயம் போன்றவை உண்டு.  ஒரு காலத்தில் ஹுலிமாவு  என்பது ஒரு கிராமமாக இருந்தது. ஆகவே அங்கு  நிறைய நிலங்கள் காடுகளைப் போலவே இருந்துள்ளன. சரியான சாலைகள் கூடக் கிடையாது. ஆனால் அது புண்ணிய பூமியாகவே இருந்து இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக சிறப்பு வாய்ந்த ராமர் ஆலயம், ஹன...

Patti ponnandaal ezhuthiya Kaasi Yathra - Part-1

படம்
பாட்டி பொன்னாண்டாள் ராமநாதன் எழுதிய    காசி மகாத்மியம்  - பாகம்-1  முன்னுரை  காசியில் அமர்ந்து இருக்கும் துந்தி கணபதிக்கு என் தோப்புக்கார நமஸ்காரங்கள். என்னுள் இருக்கும் பரப் பிரும்மம் என்னை எழுத இயக்க வைத்து பூரணமாக எழுத வைக்கட்டும். காசி என்றால் பிரகாசம் அதாவது ஞானம் என்று பொருள்.  இதுவே  காசியின் பலன். காசிக்குப் போனால் ஞானம் ஏற்படும், ஞானத்தை அடைவதையே முக்தி கிடைக்கும் என்பார்கள். அது ஏன் ? காசியில் அமர்ந்து இருக்கும் அன்னபூரணி, காசி விசாலாட்ஷி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதஸ்வாமி அங்கு வருபவர்களுக்கு பிரகாசம் என்கின்ற ஞானத்தைத் தந்து அங்கு வந்து மரணம் அடைபவர்களுக்கு அந்த கடைசி மூச்சோடு அவர்கள் செவிகளில் தாரக மந்திரமான ஸ்ரீ ராம நாமத்தை உபதேசம் செய்து அவர்களையும் அதை உச்சரிக்கச் செய்து அவர்களுக்கு முக்தி தருகின்றார். ஒவ்வொரு இரவும் இரண்டாம் ஜாமத்தில் அன்று இறந்தவர்களின் சாம்பலை தன் உடலில் பூசிக்கொண்டு ஆனந்தத் தாண்டவம் ஆடுவதாக இதீகம் உண்டு. பகவானே தன் உடலில் பூசிக்கொள்வது தன் சாம்பலை என்பது இறந்தவர்களுக்கு கிடைக்கும் பெருமை அல்ல...

Vadapalani Murugan Temple- Chennai - (23)

படம்
தெரிந்த ஆலயம்...பலருக்கும் அறிந்திடாத வரலாறு- 23 சென்னை வடபழனி முருகன்  ஆலயம் சாந்திப்பிரியா     படம் நன்றி: - http://www.egctraders.com/Vadapalani_Murugan_Temple.htm சுமார் நூற்றி ஐம்பது அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சென்னையில் அண்ணாஸ்வாமி நாயகர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் முருக பக்தர். அவர் தினமும் முருக பூஜை செய்த பின்னரே தனது கடமைகளைத் துவக்குவாராம். அவர் கனவில் ஒருமுறை முருகன் தோன்றி தன்னை திருத்தணிக்கு வந்து வணங்குமாறு கூற அவரும் திருத்தணியில் இருந்த சுப்பிரமணியர் ஆலயத்துக்குச் சென்று அவரை வணங்கினார். அப்போது அவர் தன்னை மறந்து அமர்ந்து இருந்தார். அவர் அங்கு அமர்ந்து இருப்பதை கவனிக்காத குருக்கள் அவரை ஆலயத்துக்குள் வைத்து பூட்டிவிட்டுச் சென்றார். சற்று நேரம் பொறுத்து தன் நிலைக்கு வந்த அண்ணாஸ்வாமிகள் தான் தனிமையில் உள்ளே இருந்ததை உணர்ந்தார். ஆகவே முருகனிடம் தனக்கு வாசன சித்தி தருமாறு வேண்டிக் கொண்டு தன் நாக்கை அறுத்துக் கொண்டாராம். வாசன சித்தியை வேண்டுபவர்கள் தமது நாக்கை அறுத்துக் கொண்டே காணிக்கை செலுத்துவார...

Vinayaga Thaththuvam

படம்
விநாயகர் உருவத்தின் தத்துவம் என்ன?  கீழே உள்ளதை படியுங்கள் கருத்து   :-   சாந்திப்பிரியா  படத்தின் மீது கிளிக் செய்தால் பெரியதாக பார்க்கலாம் 

Fourteen Gods Temple - Tripura- 32

படம்
ஆலமரத்து அடியில் கேட்ட ஆலய செய்திகள் -32 திரிபுரா மக்களின்  குல  தெய்வம்  பதினான்கு கடவுட்கள் சாந்திப்பிரியா திரிபுரா மாநிலத்து மக்கள் தெய்வ நம்பிக்கை மிகுந்தவர்கள். அவர்கள் தமது குல தெய்வமாக ஒரே பீடத்தில் உள்ள பதினான்கு கடவுட்களை வணங்குகிறார்கள். அவற்றில் பெண் கடவுளும் ஆண் கடவுளும் உண்டு. அந்த வழிபாடு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளதாம். அவர்கள் அந்த கடவுட்களை வணங்குவதற்கு பல கதைகள் கூறப்படுகின்றன என்றாலும் அதிகாரபூர்வமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவை பற்றி கூறப்படும் கிராமியக் கதைகள் இரண்டு உள்ளன . தைத்யா என்ற தன்னுடைய தந்தை இறந்தப் பின் அவர் மகனான திரிபுரா என்ற மன்னன் அரியணை ஏறினார். பதவிக்கு வந்ததும் அண்டை மாநிலங்களில் இருந்த மன்னர்களை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததும் இல்லாமல் தானே கடவுள் என்ற மனப் பிரமையில் வாழ்ந்து வந்தான். நாட்டில் உள்ள அனைவரும் தன்னையே கடவுளாக வணங்க வேண்டும் என ஆணை இட்டான். ஆலய வழிபாட்டை நிறுத்தினான். அவன் கொடுங்கோல் ஆட்சியை சகிக்க முடியாமல் போன மக்கள் சிவபெருமானை வணங்கி அவன் கொடுமையில் இருந்து தம்மைக் காத்...