Himachal Pradesh - Champa Temples

ஹிமாச்சலப் பிரதேசத்து ஆலயங்கள் சாந்திப்பிரியா ஹிமாசலப் பிரதேசத்தில் பல ஆலயங்கள் உள்ளன. அவற்றில் சம்பா எனும் மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் அற்புதமானவை. ஆச்சர்யப்பட வைக்கும் கதைகளை உள்ளடக்கியவை. அவற்றைப் படித்து மகிழவும்: சுஹி மாதா ஆலயம் இந்த ஆலயத்தைக் கட்டியவர் ராஜா சாஹில் வர்மன் என்ற ராஜ்புத் மன்னன். அவரே சாஹூ எனும் நகரையும் நிர்மாணித்தவர். சாஹூ நகரை அவர் அமைத்தபோது அங்கு குடிநீர் கிடைக்கவில்லை. ஆகவே அவர் ஒரு கட்டுக் கால்வாயைக் கட்டினார். ஆனாலும் அதில் தண்ணீர் வரவில்லை. ஆகவே அதன் அருகில் அவர் ஒரு ஆலயத்தை அமைத்தார். அப்போதும் அங்கு தண்ணீர் வரவில்லை என்பதினால் அவர் கடவுட்கள் தன மீது கோபமாக இருப்பதாக நினைத்தார். ஆகவே அவர் பண்டிதர்களைக் கலந்து ஆலோசனை செய்ய அவர்கள் கோபமாக உள்ள அந்த நீர் நிலையின் தேவதையை சாந்தப்படுத்தினால் மட்டுமே அங்கு நீர் வரும் என்று ஆரூடம் கூறினார்கள். அதற்கு மேலும் அவர்கள் அவனுடைய மனைவி அல்லது மகனை பலி கொடுத்தால் மட்டுமே அந்த தேவதை சாந்தி அடையும் என்று கூற மன்னனும் தனது மகனை பலி கொடுக்க ஏற்பாடு செய்தான். ஆனால் அவன் மனைவியோ அதை தட...