இடுகைகள்

Himachal Pradesh - Champa Temples

படம்
ஹிமாச்சலப் பிரதேசத்து ஆலயங்கள் சாந்திப்பிரியா ஹிமாசலப் பிரதேசத்தில் பல ஆலயங்கள் உள்ளன. அவற்றில் சம்பா எனும் மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் அற்புதமானவை. ஆச்சர்யப்பட வைக்கும் கதைகளை உள்ளடக்கியவை. அவற்றைப் படித்து மகிழவும்: சுஹி மாதா ஆலயம் இந்த ஆலயத்தைக் கட்டியவர் ராஜா சாஹில் வர்மன் என்ற ராஜ்புத் மன்னன். அவரே சாஹூ எனும் நகரையும் நிர்மாணித்தவர்.  சாஹூ நகரை அவர் அமைத்தபோது அங்கு குடிநீர் கிடைக்கவில்லை. ஆகவே அவர் ஒரு கட்டுக் கால்வாயைக் கட்டினார். ஆனாலும் அதில் தண்ணீர் வரவில்லை. ஆகவே அதன் அருகில் அவர் ஒரு ஆலயத்தை அமைத்தார். அப்போதும் அங்கு தண்ணீர் வரவில்லை என்பதினால் அவர் கடவுட்கள் தன மீது கோபமாக இருப்பதாக நினைத்தார். ஆகவே அவர் பண்டிதர்களைக் கலந்து  ஆலோசனை செய்ய அவர்கள் கோபமாக உள்ள அந்த நீர்  நிலையின் தேவதையை சாந்தப்படுத்தினால் மட்டுமே அங்கு நீர் வரும் என்று ஆரூடம் கூறினார்கள். அதற்கு  மேலும் அவர்கள் அவனுடைய மனைவி அல்லது மகனை பலி கொடுத்தால் மட்டுமே அந்த தேவதை சாந்தி அடையும் என்று கூற மன்னனும் தனது மகனை பலி கொடுக்க ஏற்பாடு செய்தான். ஆனால் அவன் மனைவியோ அதை தட...

தத்தாத்திரேயர் சரித்திரம்

படம்
    தத்தாத்திரேயர் சரித்திரம்: பின்னணி என்னுடைய வாழ்கையில் வினோதமான பல சம்பவங்கள் நடந்து உள்ளன. ஏன் அவை நடந்தது அல்லது எப்படி நடந்தது என்பதை கூற இயலாத நிலைமை . ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியின்  பின்னணியிலும்  ஒவ்வொரு காரணங்கள் இருந்தன. அந்தப் பின்னணியில் ஒரு முறை எழுந்ததுதான் இந்தப் புத்தகமும். என் வாழ்கையில் நீருபூத்த நெருப்பாக தத்தாத்திரேயேர் இருந்துள்ளார் என்பதற்கு அடையாளம் அவர் அவதாரமான ஸ்ரீ ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளின் அருளைப் பெற்று இந்த புத்தகத்தை எழுத வைத்து உள்ளது. என் வாழ்கையில் நடந்த அனைத்துமே ஒரு விபத்து போலவே நடந்தது. ஒரு முறை உஜ்ஜயினிக்கு சென்று கொண்டு இருந்தபோது வழியில் பாமான்கேடா என்ற சிறிய கிராமம் என நினைக்கின்றேன், அங்கு  ஒரு தத்தர் ஆலயம் இருந்தது. நாங்கள் சென்று வாகனம் ஏதோ காரணத்தினால் சிறிது நேரம் அந்த ஊரில் சிறிது நேரம் நிற்க நேரத்தைக் கழிக்க நாங்கள் ஏதேற்சையாக தத்தர் ஆலயத்துக்கு சென்றோம். அப்போது அங்கு தத்தர் ஆலயம் இருந்தது எங்களுக்குத் தெரியாது. அற்புதமான ஆலயம். பெரிய ஆமையின் உருவச் சிலை அவர் முன் நிற்க தத்தர் அற்பு...

தத்தாத்திரேயர் சரித்திரம் - பாகம் -2

படம்
பாகம் -2 தத்தாத்திரேயர் ஆசி பெற்ற காத்தவீர்யன் மார்க்கண்டேயப் புராணத்தில் தத்தாத்திரேயர் எப்படி எல்லாம் தன்னை பூஜிப்பவர்களுக்கு அருள் புரிந்தார் என்பது விளக்கப்பட்டு உள்ளது. ஆனால் பிரகதியில் நடைபெற்ற ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஒவ்வொரு பின்னணிக் காரணம் உண்டு. அதனால் வரம் பெற்று அழிந்தவர்களும் உண்டு, ஆண்டு அனுபவித்தவர்களும் உண்டு. தத்தாத்திரேயர் சரித்திரத்தில் மிக மிக முக்கியமாக கூறப்பட வேண்டியவர்கள் பரசுராமர், ரேணுகா தேவி மற்றும் காத்தவீர்யன் என்ற மூவருமே.  இந்த மூவரின் கதையையும் தத்தாத்திரேயர் சரித்திரத்தில் கூறாவிடில் அந்த சரித்திரம் நிறைவு பெற்றதாக இருக்க முடியாது. தத்தாத்திரேயர்  அருள் புரிந்த காத்தவீர்யன் கதை மூலம் பரசுராமர் மற்றும் ரேணுகாதேவியின் மகிமையையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.   காத்தவீர்யன் கதை காத்தவீர்யன் சூர்ய வம்சத்தில் உதித்தவன். கிருதவீர்யன் என்ற மன்னனுக்கும் அவன் மனைவி சுகந்தி என்பவளுக்கும் பிறந்தவன். அப்போது மகிஷ்மதி எனும்  சூர்ய நாட்டை ஆண்டு வந்தவர்கள் ஷத்ரிய வம்சத்தினர். அவர்களின் பிற்கால வம்சத்தினரே வடநாட்டில் உள்ள ஜெய...

தத்தாத்திரேயர் சரித்திரம் - பாகம்-3

படம்
பாகம் -3 தத்தாத்திரேயரும்  பரசுராமரும் பரசுராமரைப் பற்றிய  கதையைப் படிக்கும் முன் அவருடைய தந்தையின் பிறப்பையும் அறிந்து கொள்வது அவசியம். அம்வசு வம்சத்தினரான குசும்பா என்ற நாட்டை சேர்ந்தவர் புருவன் என்ற மன்னன். அவருக்கு காதி என்ற மகன் இருந்தார். குசும்பா மன்னனுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. அவர்களின் வம்சத்தில் சிலர் ரிஷி முனிவர்களாக இருந்தார்கள். காத்தியும் ஒரு முனிவர் என்பதினால் ஒரு காட்டில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் சத்யாவதி என்பது. அவள் நல்ல அழகும் நற்பண்புகளும் பெற்றவளாக இருந்தாள். அதே காட்டில் பிருகு முனிவரும் இருந்தார். அவருக்கு ரீக்கா என்ற மகன் இருந்தார். ரீக்கா என்ற அந்த மகன் சத்யாவதி மீது ஆசைக் கொண்டு அவளை மணக்க விரும்பினார். சாதாரணமாக திருமணம் நடந்தால் பெண் வீட்டினர்தான் மாப்பிள்ளை வீட்டினருக்கு நிறைய சீதனம் தருவார்கள். ஆனால் அதற்கு மாறாக பிருகு முனிவரின் மகனான ரீக்காவோ ஒரு பக்கம் காது கருப்பாக இருந்த ஆயிரம் குதிரைகளை சீதனமாக தந்து சத்யாவதியை மணந்து கொண்டார். திருமணம் நடந்து முடிந்து சில காலம் ஆகியது. சத...