இடுகைகள்

அக்டோபர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Kula Deivam

படம்
குல தெய்வம் சாந்திப்பிரியா  சில மாதங்களுக்கு முன்னர் எனக்கு ஒரு அன்பர் கடிதம் எழுதி இருந்தார். அதில் தனது குல தெய்வம் யார் என்பது தெரியவில்லை என்றும் தன்னுடைய பெற்றோர்களுக்கும் அது தெரியாததினால் தற்போது தன்னுடைய மகனுக்கு முடி இறக்க வேண்டும் என்பதில் என்ன செய்வது என தவிப்பதாகவும் குல தெய்வத்தை தெரியாதவர்கள் அந்த குல தெய்வம் யார் என்பதை எப்படி கண்டு பிடிப்பது எனவும் கேட்டு எழுதி இருந்தார். எனக்கும் அது பற்றிய சரியான விவரம் கிடைக்கவில்லை என்பதினால் ஒரு பண்டிதர் கூறிய அறிவுரையின்படி அந்த நண்பரிடம் குல தெய்வம் யார் என்பது தெரியாததினால் குல தெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு குழந்தையின் தலை முடியை சிறிது கத்தரித்து மஞ்சள் துணியில் முடிந்து வைத்து விட்டு எப்போது குல தெய்வம் யார் என்று தெரிகின்றதோ அப்போது அதை அங்கு சென்று காணிக்கைப் போடலாம் எனவும், இல்லை என்றால் பல பண்டிதர்கள் கூறுவது போல நதியில் அந்த முடியை தமது குல தெய்வத்தை பிரார்த்தித்துக் கொண்டு போடலாம் எனவும் பதில் அனுப்பி இருந்தேன். அது மட்டும் அல்ல நாடி ஜோசியம் பார்த்த...

Kathayee and Valli Devi

படம்
காத்தாயி அம்மன் குடிகொண்ட வள்ளி மலை சாந்திப்பிரியா  வள்ளி உருவில்                           காத்தாயி உருவில் முருகப் பெருமானின் மனைவியே வள்ளி தேவி. அவளே காத்தாயி அம்மன் என்ற பெயரிலும்  கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சித்தாடி எனும் கிராமத்தில் ஆலயத்தில் கம்பீரமாக வீற்று உள்ளாள். ஒவ்வொரு கடவுளும் பல ரூபங்களில் பல இடங்களில் அவதரிக்கின்றார்கள். ரூபம் மட்டுமே மாறுபட்டு இருந்தாலும், அந்த கடவுள் ஒருவரே என இருந்தாலும் அந்தந்த ரூபங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அந்தந்த இடங்களில் தர வேண்டும் என்பதும் முக்கியம். காத்தாயியை  குலதெய்வமாகக் கொண்டவர்கள் காத்தாயிதானே வள்ளி தேவி என  வள்ளி மலைக்கு சென்று வள்ளியை வணங்கி விட்டு செல்வதும், வள்ளி மலையை  குல தெய்வமாகக் கொண்டவர்கள் சித்தாடிக்குச் சென்று  காத்தாயியை வணங்கி விட்டு இருந்து விடக் கூடாது.  எந்த உருவில் நம் முன்னோர்கள் ஒரு கடவுளை குல தெய்வமாக வணங்கினார்களோ அந்த உரு உள்ள இடத்துக்குச் சென்று குல தெய்வத்தை வணங்காவிடில் ஒருவர...

Sree Mukthi Naga Shethra

படம்
ஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா சாந்திப்பிரியா ஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா எனும் ஆலயம் கர்நாடகத்தின் பெங்களுர் மாநகரின் கெங்கேரிக்கு அருகில் உள்ள ராமொஹல்லி எனும் சிறிய கிராமத்தின் அருகில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடம் ஜுஞ்சப்பான குடி பாலு என்ற பெயரில் இருந்தது. அந்த காலகட்டத்தில் அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த கொல்லா என்ற இனத்தவர் நாக வழிபாட்டைக் நடைமுறையில் கொண்டு இருந்தார்கள். அதற்குக்  காரணம் அந்த பகுதியில் 100 வயதான 25 அடி நீளமான ராஜ நாகம் வாழ்ந்து கொண்டு இருந்தது . அங்கு ஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா என்ற ஆலயத்தை ஸ்தாபித்த தற்போது ஸ்ரீ தர்மாதிகாரி எனப் பட்டம் பெற்றுள்ள திரு தெய்வாக்ன ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரி என்பவர் அந்த ஆலயத்தை நிர்மாணித்த கதையே சுவையானது. முதலில் அவர் யார் என்பதை பார்க்கலாம். 1949 ஆம் ஆண்டு பிறந்த அவர் புகழ்பெற்ற தம்பதியினருக்குப் பிறந்தவர் என்றாலும் இளம் வயதில் நிறைய கஷ்டப்பட்டு வளர்ந்தவர். அச்சகத்தில் வேலை செய்தும், தினசரி செய்தித்தாள்களை விநியோகித்தும் பிற வேலைகளை செய்தும் சம்பாத்தவர் படிப்படியாக பட்டப்படிப்பு படித்து 1968 ஆம் ஆண்டு பே...