Wonderful Hindu Temples in Malaysia -4

வினோத வெளிநாட்டு ஆலயங்கள் -4
நாகேஸ்வரி  அம்மன்        
சாந்திப்பிரியா

முக்கிய அறிவிப்பு:-  நாம் அனைவரும் இதுவரை நம் நாட்டில்தான் பல மகிமைகள் வாய்ந்த ஆலயங்கள் உள்ளதாக நினைத்து இருப்போம் . ஆனால் பல அற்புதங்களை செய்துள்ள நம்முடைய ஆலயங்கள் மலேசிய நாட்டிலும் உள்ளன என்பதை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. ஆகவே அதைப் பற்றி நான் கேட்டறிந்தவுடன், அந்த ஆலயங்களைப் பற்றி இந்த தளத்தில் பிரசுரிக்க நண்பர் திரு குமரேஷ் பட்டுமலாயிடம் இருந்து ( kbatumalai@gmail.com ) அனுமதி பெற்று அவற்றை பிரசுரித்து உள்ளேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி . இவற்றை அவருடைய அனுமதி என்றி எவரும் வெளியிடக் கூடாது -  சாந்திப்பிரியா 

நாகேஸ்வரி அம்மனின் திருவிளையாடல் 
1945 ஆம் ஆண்டு பாம்பாட்டி சித்தர் வந்து கோலாலம்பூரில் இன்று ஆலயம் உள்ள இடத்தில் இருந்த புற்றை நாகேஸ்வரி அம்மன் உள்ள இடம் என அடையாளம் காட்டினார். அங்கு சிறிய ஆலயத்தை எழுப்பி பக்தர்கள் அந்த அம்மனை வழிபடத் துவங்கினார்கள். ஆனால் சில நாட்களிலேயே அந்த இடத்தில் ரயில்வே தடம் அமைக்க வேண்டும் என்பதற்காக ஆலயத்தை பெயர்த்து வேறு இடத்திற்கு மாற்றினார்கள். ஆனால் அது தேவிக்கு பிடிக்கவில்லை. கோபம் அடைந்தாள். அந்த இடத்தில் வேலை செய்ய வந்த தொழிலாளிகள் அடிக்கடி உடல் நலமின்றிப் போய் வேலை செய்ய முடியாமல் தவித்தனர். தினமும் பயங்கரமானக் கனவு வந்து அவர்களை வாட்டியது. பூமியைத் தோண்டும் இயந்திரம் மீண்டும் மீண்டும் பழுதடைந்து வேலை செய்ய முடியாமல் போயிற்று. ஆகவே வேறு வழி இன்றி அனைவரும் அம்மனை வேண்டிக் கொள்ள அவள் ஒரு பெண்ணின் உடலில் ஏறி (சாமியாடுதல்) தம்மை இடமாற்றம் செய்ததை கண்டித்தாள். ஆனாலும் அவர்கள் வேண்டிக் கொண்டதினால் இனி தான் அங்கேயே இருப்பேன் எனவும் புதிய ஆலயத்தில் தினமும் மாலையில் வருவேன் எனவும் கூறினாள். புதிய ஆலயத்தில் நடுவில் அமைந்து உள்ள புற்றில் இரண்டு நாகங்கள் வசிக்கின்றனவாம். 
அந்த ஆலயத்தை ஒரு வெள்ளை நிறப் பாம்பு காவல் காக்கிறதாம். ஒரு முறை அந்த ஆலயத்தில் திருட வந்தவர்கள் அந்த பாம்பைப் பார்த்து பயந்து ஓடினார்கள். அது மட்டும் அல்லாமல் அது முதல் தம் உடம்பை அசைக்க முடியாமல் அவதிப்பட, அந்த திருடர்களின் மனைவிகள் அந்த ஆலயத்துக்கே சென்று தம் கணவர்கள் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு அம்மனை வேண்டி வணங்க அவர்களுடைய கணவன்மார்கள் குணம் அடைந்தனராம். அந்த ஆலயத்தின் சக்தி மிகப் பெரியதாம். ஆலயத்தில் நாக தோஷங்களை விலக்கிக் கொள்ள ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து வேண்டுதல் செய்வது உண்டாம்.
ஆலய விலாசம்:
Jln Lengkok Abdullah, Off Jln Bangsar, 59000 Kuala Lumpur. Tel:03-22820635

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Kudai Swamigal -E

Vasanthapura Temple ( E)