Ramana Maharishi - Mother's Temple

ரமண மகரிஷியின் தாயாரின் ஆலயம் எழுந்த கதை சாந்திப்பிரியா (Read the Original Article '' The Evolution of the Mother's Temple '' written by David Godman in English ( First published in The Mountain Path , 2000, pp. 179-87 ) அன்னையின் ஆலயம் 1922 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதியன்று ரமண மகரிஷியின் தாயார் மரணம் அடைந்தார் . அவர் மரணம் அடையும் சில மணி நேரத்திற்கு முன்னரே தான் மரணம் அடைய இருப்பதை அறிந்து கொண்டு மற்றவர்களிடம் கூறி விட்டார். ஆகவே அவர் மரணம் அடைந்ததும் அவரை புதைப்பதா அல்லது சிதையில் எரியூட்டுவதா என்பதை பற்றி அவருடைய பக்தர்கள் நன்கு யோசனை செய்து பார்க்கத் துவங்கினார்கள். சாஸ்தி முறைப்படி பெண் சாதுவிக்களை புதைக்க வேண்டும், அவர்களை எரிக்கக் கூடாது என்பது விதி. அடுத்தக் கவலை அவளுடைய பூத உடலை புதைப்பதற்கு சரியான இடத்தை தேர்ந்து எடுக்க வேண்டுமே என்பதேயாகும். அதற்குக் காரணம் அருணாசலேஸ்வரர் ஆலயத்தை நிர்வாகித்து வந்தவர்களே அந்த மலையின் இன்னொரு பகுதியில் இருந்த ஸ்கந்தாஷ்ரமத்தையும் நிர்வாகித்து வந்தார்கள்....