இடுகைகள்

Ramana Maharishi - Mother's Temple

படம்
ரமண  மகரிஷியின் தாயாரின்  ஆலயம் எழுந்த கதை  சாந்திப்பிரியா (Read the Original Article  '' The Evolution of the Mother's Temple '' written  by David Godman in English    ( First published in The Mountain Path , 2000, pp. 179-87 ) அன்னையின்  ஆலயம்   1922 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதியன்று ரமண மகரிஷியின் தாயார் மரணம் அடைந்தார் . அவர் மரணம் அடையும் சில மணி நேரத்திற்கு முன்னரே தான் மரணம் அடைய இருப்பதை அறிந்து கொண்டு மற்றவர்களிடம் கூறி விட்டார்.  ஆகவே அவர் மரணம் அடைந்ததும் அவரை புதைப்பதா அல்லது சிதையில் எரியூட்டுவதா என்பதை பற்றி அவருடைய பக்தர்கள் நன்கு யோசனை செய்து பார்க்கத் துவங்கினார்கள். சாஸ்தி  முறைப்படி பெண் சாதுவிக்களை புதைக்க வேண்டும், அவர்களை எரிக்கக் கூடாது என்பது விதி. அடுத்தக் கவலை அவளுடைய பூத உடலை புதைப்பதற்கு சரியான இடத்தை தேர்ந்து எடுக்க வேண்டுமே என்பதேயாகும். அதற்குக் காரணம் அருணாசலேஸ்வரர் ஆலயத்தை நிர்வாகித்து வந்தவர்களே அந்த மலையின் இன்னொரு பகுதியில் இருந்த ஸ்கந்தாஷ்ரமத்தையும் நிர்வாகித்து வந்தார்கள்....

63 Nayanmar- Nami Nanthi Adigalar

படம்
 63 சைவ நாயன்மார்கள் -நமி நந்தி அடிகள் - சாந்திப்பிரியா நமி நந்தி அடிகள் நமி நந்தி அடிகள் என்பவர் 63 நாயன்மார்களில் ஒருவர். பெரும் சிவ பக்தர். திருவாரூரில் வாழ்ந்தவர். அவர் தினமும் திருவாரூரில் இருந்த சிவன் ஆலயத்துக்குச் சென்று அங்கிருந்த வாஞ்சினாதரை வணங்கி விட்டு வந்தப் பின்னரே உணவு அருந்துவார். ஒருமுறை திருவாரூரில்  பண்டிகை நடைபெற்றுக் கொண்டு இருந்தது.  பண்டிகை நாட்களில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ஒரு விசேஷமாக கருதப்பட்டது. அது சோழமன்னன் ஆண்ட காலம் . அந்தப் பண்டிகையின் தினத்தன்று நமி நந்தி அடிகளாருக்கு சிவபெருமானின் சன்னதியில் பல விளக்குகளை ஏற்றி வைத்து வணங்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது.  கையிலோ காசில்லை. உள்ள சில்லறையில்  அகல் விளக்குகளை மட்டுமே வாங்க முடிந்தது. பரவாய் இல்லை பிட்ஷை எடுத்து எண்ணை வாங்கி  அதில் விளக்கேற்றலாம் என எண்ணியவாறு வரும் வழியில் இருந்த சில வீடுகளில் எண்ணையை பிட்ஷையாகக் கேட்டார். ஆனால் அவர் செய்த பெரும் தவறு அதிகமாக ஜெயின் இனத்தவர் இருந்த வீதிகளில் சென்று யாசகம் கேட்டதுதான். அந்த கால கட்டங்களில் இ$E ��்த...

Guhai Namachivaya- Thiruvannamalai

படம்
  (Read the Original Article  '' Guhai Namasivaya '' written  by David Godman in English    ( First published in The Mountain Path , 1990, pp. 115-23 )    குகை நமச்சிவாயா இரமண மகரிஷி சுமார் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்து வந்த விருபக்ஷா குகை அருணாச்சல மலை அடிவாரத்தில் சுமார் நூறு மீட்டர் கீழே அமைந்து உள்ளதைக் காணலாம். கோபுரத்தின் கிழக்கு வழியே உள்ளே செல்ல வேண்டிய குகையில்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால்  குகை நமச்சிவாயா என்ற யோகி வாழ்ந்து வந்துள்ளார். அதனால்தான் அந்த குகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் அவர் பெயரிலேயே அமைந்து உள்ளன. கீ. பீ 1548 ஆம் ஆண்டில் கர்னாடகாவின்  ஒரு சைவ பிரிவை சேர்ந்த பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவரே குகை நமச்சிவாயா என்பவர். அவரைப் பற்றிக் கூறப்பட்டு உள்ள வரலாற்று செய்திகளில் அவர் சிறு வயதிலேயே நன் நடத்தையுடன் இருந்து வந்தார், அவர் தெய்வீக நாட்டம் கொண்டவர் என்றும் படிப்பிலும் நாட்டம் இன்றி  உலகப் பற்றிலும் நாட்டம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருந்த அவர் தனது இளமைப் பருவத்திலேயே கடவு...

Sirsi Temples - Dakshin Karnataka

படம்
தக்ஷிண கர்னாடகாவின் சிர்சீயில்  இரண்டு அற்புத ஷேத்திரங்கள் சாந்திப்பிரியா   உத்தர கர்னாடகா  மானிலத்தில் உள்ளது சிர்சீ எனும் சிறிய ஊர். ஹூப்ளி அல்லது சிமகோடாவின் அருகில் உள்ள இந்த ஊருக்கு பெங்களூரில் இருந்தும் செல்லலாம். பெங்களூரில் இருந்து சிர்சீ சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.    ம ரி கா ம் பா ஆ ல ய ம்     சிர்சீயில் சில முக்கியமான ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மரிகாம்பா தேவியின் ஆலயம் . 1611 ஆம் ஆண்டு ஒரு குளத்தில் மூழ்கிக் கிடந்த ஏழு அடி உயர மரத்திலான மரிகாம்பா சிலையை சோன்டாவை சேர்ந்த மன்னன் வெளியில் எடுத்து அதற்கு ஒரு ஆலயம் அமைத்தார். சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்த ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருடாந்திர விழா நடை பெறுகின்றது. அந்த விழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.      ஆலய விழா ஏழு நாட்கள் நடைபெறுகின்றது. மேரி என்றால் பயன்கரமானவள் மற்றும் காம்பா என்றால் காப்பற்றுபவள் என்றும் அர்த்தம் உள்ளதினால் பயங்கரமான தோற்றத்தை ...

Veerabathirar Temple

படம்
வீரபத்திரர் சாந்திப்பிரியா வீரபத்திரஸ்வாமி என்பவர் சிவபெருமானின் முடியில் இருந்து வந்தவர் என்றும் அவர் வேர்வையில் இருந்து வந்தவர் என்றும் கிராமியக் கதைகள் உள்ளன. அவரை புராண இதிகாசங்கள் ஒரு பிரதான தெய்வமாக அல்லது பிரசித்தமான தெய்வமாக காட்டவில்லை என்றாலும் அவரை முக்கியமானக் கடவுளாகக் கருதி அவருக்கு சில இடங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவரை முக்கியமான ஒரு கடவுளாகவே கருதப்படுவதின் காரணம் அவர் சிவபெருமானினால் படைக்கப்பட்டவர் என்பதுதான். அவரைப் பற்றிக் கூறப்படும் கதை இதுதான். தக்ஷ யாகத்தில் அவமானப்பட்ட பார்வதி தன்னை மாய்த்துக் கொண்டதும் அந்த செய்தியைக் கேட்ட சிவபெருமான் கோபம் கொந்தளிக்க தனது தலை முடியில் இருந்து ஒரு முடியை பிடுங்கி எறிந்தார். அதில் இருந்து வீரபத்திரர் வெளிவந்து தாம் என்ன செய்ய வேண்டும் என்று சிவனைக் கேட்க சிவபெருமானோ தக்ஷனின் யாகசாலையை அழித்துத் தள்ளுமாறுக் கூறினார். பயங்கரமான சக்தி கொண்டவராக வெளிவந்த வீரபத்திரர் யாகசாலையை முழுமையாக அழித்தார். கண்களில் கண்ட தக்ஷனின் ஆட்களைக் கொன்று தீர்த்தார். தக்ஷனின் தலையை வெட்டி எறிந்தார். அவருடைய கோபத்தை ...