இடுகைகள்

Scorpian - A Deity

படம்
கொடிய விஷம் உள்ள கொட்டும்  தேள்  கூட ஒரு தெய்வமே ?  சாந்திப்பிரியா நாம் கொடிய விஷம் உள்ள கொட்டும் தேளைக் கூட  ஒரு கொடிய ஊர்வனப் பிராணி என்றுதானே நினைக்கின்றோம். ஆனால் அந்த தேள் கூட ஒரு தெய்வமாக மதிக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆமாம் உண்மைதான் கொடிய தேளை உலகில் சில இடங்களில் தெய்வமாகவே கருதி வணங்குகிறார்கள். நம் இந்தியாவில் கர்னாடகாவின் கோலார்  நகரில் மட்டும் அல்ல குல்பர்காவின் அருகில் உள்ள கண்டகூர் என்ற கிராமத்திலும் தேளை தெய்வமாக வணங்கி வருகிறார்கள். அவ்வளவு ஏன், எகிப்து நாட்டிலும் தேளை  ஒரு தேவதையுடன் சம்மந்தப்படுத்தி ஆராதிக்கின்றார்கள்.   கோலாரம்மா ஆலயத்தின் வெளித்  தோற்றம்  கோலார் பெங்களூரில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு  வொக்க லிங்காயத்து  இன மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள். அங்குள்ள கோலாரம்மா மற்றும் சோமேஸ்வரா என்ற இரண்டு ஆலயங்களையும் சோழ மன்னர்கள்  கிட்டத்தட்ட 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டுகளில்  கட்டி உள்ளார்கள். அந்த கோலாரம்மா ஆலயத்தில் உள்ள பிரதான தேவி பார்வதி எனவும்...

About the Book on Sree Manik Prabhu

படம்
முன்னுரை இந்தப் புத்தகத்தை நான் மானிக்  பிரபுவின் சமஸ்தானத்தினருக்காக எழுதிக் கொடுத்து இருந்தேன். அதை என்னுடைய வலை தளத்தில் வெளியிட்டுக் கொள்ள அனுமதி தந்த சமஸ்தானத்தினருக்கு நன்றி சாந்திப்பிரியா     

Manik Prabhu-1

படம்
அத்தியாயம் -1 ''தேவா உன் திரு உடல் எங்கும் தேவர் அனைவரும் திரிந்திடக் கண்டேன் விலங்குக் கூட்டம் விளையாடுதலையும் பிறப்புக் கடவுள் பிரும்மா முதல் முனிவர்வரை அனைவரையும் கண்டேன் சொல்லில் அடங்கா அங்கம் அனைத்தும் அழிவில்லாது ஜொலிக்கும் வடிவையும் கண்டேன் இன்னிலே தேவா முதலும் இல்லை, நடுவும் இல்லை முடிவோ நிச்சயம் இல்லை. பகவத் கீதை தத்தாத்திரேய அவதாரம் தத்தாத்திரேயர் ஒருமுறை பூமியில் அவதாரம் எடுக்க நினைத்தார். அதனால் ஒரு சிறிய நாடகம் நடத்தி அத்ரி முனிவர் மற்றும் அனுசூயா தம்பதிகளுக்கு சிவா, விஷ்ணு மற்றும் பிரும்மாவின் அவதார மகனாகப் பிறந்தார். உலக நன்மையைக் கருதி அவதூதராக பூமியிலே பிறந்தார். பால்ய லீலைகளை செய்து காட்டியபடி இருந்த அவருடைய யோக சாதனைகள் ஆயிரம் ஆயிரம் உண்டு. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்த முனிவர்கள்கூட எண்ணிப் பார்க்க முடிந்திராத லீலைகள் அவை. நன்மையை நாடி வந்தவர்கள், பற்றற்ற வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருந்த மாமுனிவர்கள் போன்றவர்கள் அவர் சாமான்யர் அல்ல என்பதை புரிந்து கொண்டு , அவர் பரப் பிரும்மனின் அவதாரம் என்பதையும் மிகத...

Manik Prabhu -2

படம்
அத்தியாயம் -2 பிரபோ, உலக அபிமானத்தை துறந்து சின்னஞ்சிறு குழந்தைப் போல சுகமாக இருப்பேனாக ஓர் கன்னிகை கையில் மிஞ்சி இருந்த பிறர் கூட்டு அற்ற ஒற்றை வளையல் போல வீண் பேச்சில் அகப்படாமல் சஞ்சரிப்பேனாக அம்புக் குறி வைத்தவன் அரசன் வரும் ஊர்வல சப்தத்தைக் கூட உணராமல் இருப்பது போல உம்மிடம் மட்டுமே மனதை வைத்து விட்டு வேறு ஒன்றையும் அறியாமல் இருப்பேனாக ஸ்ரீமத் நாராயணீயம் ஸ்ரீ  மானிக் பிரபுவின் அவதாரம் முன்னாள் ஹைதிராபாத் சமஸ்தானத்தில் இருந்த ஒரு சிற்றூர் கல்யாண் என்ற இடம். அது ஒரு கிராமம். ஸ்ரீ மனோகர் நாயக் மற்றும் பாபா தேவி என்ற தம்பதியினருக்கு பிறந்தவரே ஸ்ரீ மானிக் பிரபு. அந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்து இருந்தனர். 1817 ஆம் ஆண்டு. அந்த ஊரில் தத்த ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு கொண்டு இருந்தது. அந்த தேதியில்தான் மானிக் பிரபு மனோகர் நாயக் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தத்தாத்திரேயரின் குரு சரித்திர புத்தகத்தை ஆசாரபூர்வமாக பதினாறு வருடங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டு ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து கொண்டு இருந்த தம்பதியினருக்கு அவர்களின் புதல்வராக...

Manik Prabhu-3

படம்
அத்தியாயம் -3 நான் யார் என்று கூறி மண்ணிலே நடந்திடும் லீலைகளைக் கூறி தான் கொண்ட பிறப்பில் உள்ள தனித்தன்மையை எடுத்துச் சொல்லி தன்னிடம் வந்த மனிதர்களுக்கெல்லாம் உள்ளமே நான்தான் என வான் நிறக் கண்ணன் சொல்ல வலியத் தோள் விஜயன் கேட்டான் பகவத் கீதை மானிக் பிரபுவின் பால காண்டமும் உபனயனமும் ஸ்ரீ மானிக்கின் நிலை குறித்து மற்ற உறவினர்களிடமும் கலந்து ஆலோசனை செய்தப் பின் அவனுடைய பெற்றோர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். பையனுக்கு பூணல் கல்யாணம் செய்துவிட்டால் திருந்தி விடுவான். ஸ்ரீ மானிக்கின் வயது ஏழு ஆகியது. அப்போது அவனுக்கு உபநயனம் செய்து வைத்தார்கள். உபநயன சடங்குகளில் பையனின் காதுகளில் காயத்ரி மந்திரத்தை ஓதுவார்கள். அதற்கேற்ப உபனயன நிகழ்ச்சியில் பையனின் காதுகளில் காயத்ரி மந்திரத்தை பண்டிதர்கள் ஓதத் துவங்கினார்கள். ஸ்ரீ மானிக்கோ அவர்கள் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் முன்னரே கடகடவென அனைத்து மந்திரங்களையும் பொங்கி வழியும் நீர் ஊற்று போல கூறத் துவங்கினார். அனைவரும் வாய் அடைத்து நின்றார்கள். எங்கிருந்து அவர் அத்தனை மந்திரங்களையும் கற்று அறிந்து உள்ளார்? காண்பது கனவா அல்லத...

Manik Prabhu-4

படம்
அத்தியாயம்-4 அழிவற்றவர் அவர் பார்த்ததும் இல்லை இப்படி ஒரு மகானை கேள்விப்பட்டதும் இல்லை அவர் யார் என ஆனால் அவரோ அனைத்தையும் கேட்டுக் கொண்டே இருக்கிறார் நினைத்துப்ப் பார்த்ததும் இல்ல அவரைப் பற்றி அவரோ எண்ண ஓட்டத்தில் மிதக்கிறார் நமக்கோ ஒன்றும் தெரியவில்லை அவரோ அனைத்தையும் அறிந்தவராக இருக்கின்றார் இவரைத் தவிர வேறு எவர் மகானாக இருக்க முடியும் ? இயற்கைக் கூட இவரிடம் குறுக்கும் நெடுக்குமாக பின்னிப் பின்னி இணைந்து இருக்குமோ? பிரகத் ஆரண்ய உபநிஷத் நான் யார் தெரியுமா ? சிறுவர் என்ற வயதைக் கடந்து வயதுக்கு வந்தவர் ஆனார்  ஸ்ரீ மானிக். பசி, உறக்கம் என எதுவும் இல்லை. சாப்பாடு கிடைத்தால் சாப்பிடுவது, இல்லை என்றால் பட்டினி கிடப்பது. உடலைப் பற்றிக் கவலைப்படவில்லை. மனதிலே சொந்த வெறுப்போ, விருப்போ, சொந்த பந்தங்கள் என்றோ எதையுமே வைத்துக் கொண்டு இருக்கவில்லை. அனைத்தையும் கடந்துவிட்ட அவர் ஒரு அவதூத பிரும்மச்சார்யராகவே வாழ்ந்து வந்தார். அவருக்கு இயற்கையே வழிகாட்டி. இயற்கையே துணைவன். என்னதான் மகன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாலும் சொந்த பந்தம் விலகி விடுமா என்ன? அந்த இள...

Manik Prabhu-5

படம்
அத்தியாயம் - 5 பார்த்தா இப்போது என்னைப் பார் வகைவகையான என் வடிவங்களைப் பார் ஆதித்யர்களை, அஷ்ட வசுக்களை அஸ்வினித் தேவர் ருத்ரம் தமை ஏழு மருந்துகள் என்னுள் அடங்கி எங்கும் தெரிவதை நன்கே பார் காண வரும்பும் அனைத்தையும் காண நினைத்தால் என்னையேப் பார் இந்தக் கண்களால் என் உருவைக் காண்வது கடினம் அதனால்தான் பார்த்தா தெய்வப் பார்வையை சேர்த்தே உனக்குத் தருகிறேன் பகவத் கீதை விஸ்வரூப தரிசனம் எத்தனை வேண்டிக் கொண்டும் வீடு திரும்ப மறுத்து விட்ட ஸ்ரீ மானிக்கின் பிரிவு வருத்தம் தந்தாலும் வேறு வழி தெரியாமல் ஊர் திரும்பினார்கள் அவர் உறவினர். ஸ்ரீ மானிக் என்றப பெயர் மறைந்து ஸ்ரீ மானிக் பிரபு என அவர் அழைக்கப்படலானார். அப்போது ஸ்ரீ மானிக் பிரபு இருந்த இடம் மன்தால்  என்ற பகுதி ஆகும். அந்த இடத்தை சுற்றியே நிறைய மரம் செடிகள் மற்றும் காடுகள் உண்டு. அங்கு சென்று சுய தரிசனத்தில் ஈடுபடுவார் ஸ்ரீ மானிக் பிரபு. மலை மீது இருந்து இறங்கி வந்து மக்களுக்கு தொண்டு செய்வார். பல நேரங்களில் அவர் போக்கே விசித்திரமாகவும் ஜீரணிக்க முடியாமலும் இருக்கும். எ...