இடுகைகள்

Siththaadi Kaaththaayi Amman Satha Chandi Homam

படம்
சித்தாடி காத்தாயி அம்மன் சத சண்டி மஹா யாகம் சாந்திப்பிரியா  போன வருடம் போல இந்த முறையும் காத்தாயி அம்மனின் சத சண்டி ஹோமம் வெகு விமர்சையாக நடந்தது.  சாத் பேதம் இன்றி நகர மற்றும் சித்தாடி அக்கம்பக்கத்து கிராமத்தினரும் பக்திபூர்வமாக திரண்டு இருந்தது ஒரு அற்புதமான நிகழ்ச்சியாக இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர் குமுழி இருந்த மண்டபத்தில் காலை ஆறு மணி முப்பது நிமிடத்துக்கு விழா துவங்க சிவாச்சாரியர்கள் கலச பூஜையை செய்து முடித்தனர்.  அடுத்து சதசண்டி மகா ஹோமம் துவங்கியது. ஆறு ஹோம குண்டங்களில் ஆறு சிவாச்சாரியார்கள் அமர்ந்து இருக்க தலைமை சிவாசாரியார் மந்திரங்களை ஓதத் துவந்த ஹோம குண்டத்தில் அமர்ந்து இருந்த சிவாச்சாரியார்களும் அதை உச்சரித்தவண்ணம் ஹோம குண்டத்தில் யாகப் பொருட்களை  போடத் துவங்கினார்கள். முப்பத்தாறு கோடி தேவர்களும் அங்கு கூடி இருந்ததாக நம்பப்பட்ட அங்கு அவர்களை பூஜிக்கும் விதமாக வண்ணமயமான 3600 ரவிக்கை துணிகள்- அதில் முடித்து வைக்கப்பட்டு இருந்த சில யாகப் பொருட்களுடன் - ஹோம குண்டங்களில் போடப்பட்டன. சங்கல்பம் செய்து அமர்ந்து இருந்த ராமகிருஷ்ணன், ராமதாஸன், விஸ்வநாதன் மற்ற...

Kathaayee Amman

படம்
சித்தாடி காத்தாயி அம்மன் சாந்திப்பிரியா  பலருக்கும் சித்தாடி  காத்தாயி அம்மன் குல தெய்வம்.  அவள் முருக பெருமானின் மனைவியான  வள்ளி  தேவியாவார் .  நன்னிலத்தின் அருகில் சித்தாடி என்ற கிராமத்தில் அமர்ந்து உள்ள காத்தாயி  தன்னை வணங்கி நிற்கும் தமது குலமக்களை என்றென்றும் காத்து  நிற்கின்றாள். தன்னை வணங்கி நிற்பவர்களை கரை ஏற்றுகிறார். அவள் பெருமையைக்  நிற்காமல் கூறிக் கொண்டே இருக்கலாம் என்ற அளவுக்கு அவளால் பல குடும்பங்கள் நன்மை அடைந்து உள்ளன.   அவள் மகிமைகளை சுற்றி உள்ள  கதையை விரைவில் எழுத உள்ளேன்.  திருவாரூர் மாவட்ட குடவாசல் வட்டத்தில் உள்ள சித்தாடி கிராமத்தில் அந்தக் காத்தாயி குடி கொண்டு உள்ள ஆலயத்தில் வரும்  பிப்ருவரி மாதம் மூன்றாம் தேதி முதல் ஆறாம் தேதிவரை ( 03 .02 .2011 முதல் 06 .02 .2011 வரை ) சதா சண்டி மகாயாக ஹோமம் , மற்றும் பல பூஜைகளும் நடக்க  உள்ளன.   படித்த பண்டிதர்கள்  கூறுகிறார்கள்  " குலதெய்வம் இல்லையேல் பிற தெய்வமும்  இல்லை ". ஆகவே குல தெய்வத்தை வணங்காதவனை வேறெந்த தெய்வமும்...

Spiritual Masters

படம்
ஆன்மீகவாதிகளின் லட்ஷணத்தை அடையாளம் காட்டும் இந்த கட்டுரை ( நன்றி : http://knowingyourself1.blogspot.com/search/label/வாழ்கை தத்துவம் ) அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று -       சாந்திப்பிரியா    ஆன்மிக துறவிகளின் அடையாளம் 1. சாதி, மதம், சமயம், தேசம், மொழி, இன, வேறுபாடுகள் எதுவும் இருக்கக் கூடாது. 2 . மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கனவிலும் இருக்கக் கூடாது. 3 . எல்லா ஜீவர்களிடத்தும் தயவும், மெய்ப்பொருளின் (கடவுள்) இடத்தில் அன்பும் இருக்க வேண்டும். 4. தம் உயிர் போல் எல்லா உயிர்களையும் ஒன்று என என்ன வேண்டும். 5. ஆன்மநேய ஒருமைப்பாடு எக்காலத்தும் விலகாமல் இருக்க வேண்டும். 6. ஆகாரம், மைத்துனம், நித்திரை, பயம் இவை நான்கும் இருக்கக் கூடாது. 7 . பஞ்ச பூத உணவுகள் எதுவும் புசிக்கக் கூடாது. ஏக தேசத்தில் கொள்ளலாம். 8. அருள் என்ற அமுதம் ஆன்மாவில் சுரக்கும் அதைத்தான் சுவைக்க வேண்டும். 9. நரை, திரை, பிணி, மூப்பு இவைகள் எதுவும் இருக்க கூடாது. 10. கடவுள் ஒருவரே! அவர் ஒளியாக இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து இருக்க வேண்டும். 11. ஏழைகளின் பசி...

Nilal sevai amaippu

படம்
நிழல் சேவை அமைப்பு  நல்ல காரியங்கள் போற்றப்பட வேண்டும்  சாந்திப்பிரியா    திரு மோகன் சுரேஷ் என்பவர் எனக்கு தவறாமல் சில கடிதங்களை அனுப்பி வருகிறார். அவற்றில் வள்ளலார் பற்றிய செய்திகள் அதிகம். ஆனால் அவை அனைத்தும் முத்தானவை...சத்தானவை.  அவர் யார்?  2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிழல் சேவை என்ற அமைப்பை  பாட்மிண்டன் விளையாட்டு வீரர்கள்,  வேளாண்மை துறை நண்பர்கள், சேலம் மற்றும் தென் இந்திய  வங்கியில் பணி புரிபவர்கள் போன்ற நண்பர்களுடன் சேர்ந்து இரத்த தான சேவை, அதை ஊக்குவிப்பது,  முதியோர் இல்லம் மற்றும் அனாதைகளின் இல்லங்களுக்கு உதவுவது,  உபயோகித்த துணிமணிகளை நண்பர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு ஏழை எளியவர்களுக்குத் தருவது போன்ற நல்ல காரியங்களை செய்து வருகிறார். அவர்களுடைய இந்த சேவை பாராட்டப் படவேண்டியது.  நீங்களும் உங்கள் பிறந்தநாள், மற்றும் பண்டிகை தினங்களில் அவர்கள் மூலம் ஏதாவது ஒரு இல்லத்திற்கு தானம் தரலாமே! அவர்களின் விலாசம்: Reg.No.997/24.09.2010  நிழல் சேவை அமைப்பு No.4/42. குருக்கள் காலனி    , சின்னத்திருப்பதி...

Nellitheertham - Somanatheeswarar

படம்
  சாந்திப்பிரியா  கர்நாடகத்தில் தெற்கு கானரா  மாவட்டத்தில் உள்ள மிகவும் பழைமையான குகை ஆலயமே நெல்லி தீர்த்தம்.  ஆன்மீகவாதிகளுக்கு மட்டும் அல்ல இயற்கை அழகை ரசிக்க விரும்புபவர்களுக்கும் அந்த இடம் ரம்யமானது.  இந்த ஆலயத்தில் உள்ள மூல தெய்வம் சோமனதீஸ்வரா என்ற சிவன் அவரைத் தவிர  மஹா கணபதி மற்றும் ஜாபாலி முனிவரின் சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் துளு நாட்டு வழக்கப்படி அந்த ஆலயத்தில் சில பூத கணங்களும் வைக்கப்பட்டு உள்ளன. அந்த ஆலயத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரராக கருதப்படும் சிவபெருமானின் சிலை சாலிகிராமக்கல் என்கிறார்கள். . ஆலயம் அமைந்து உள்ள இடம் ஒரு குகை ஆகும். ஆலயம் கி.பீ. 1487 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது என்கிறார்கள்.  காட்டுப் பகுதியில் கவனிப்பார் அற்று அமைந்து இருந்த அந்த குகை ஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல அழியத் துவங்க  பின்னர் அந்த ஆலய மகிமையை கேள்விப்பட்ட பக்தர்களின் முயற்சிகளினால்  மீண்டும் அது  புதுபிக்கப்பட்டுள்ளது.  ஆலயத்தின் வடக்குப் பகுதியில் நாகப்பா கரே அதாவது பாம்புக் குளம் என்ற ஒன்று உள்ளது. அதில் குளித்தப் ப...

Patti Ponnandaal sonna kuttik kathaigal - Part- 2

படம்
சாந்திப்பிரியா  சூரிய பகவானை நமது வலது நேத்திரம் (கண்) இன்று கூறுவார்கள். அதைப் போலவே போல சந்திர பகவான் நமது இடது நேத்திரமாம். சூரிய பகவானின் சக்தி அபாரமானது. தினமும் எவன் ஒருவன் சூரியனைப் பார்க்காமல் உணவு அருந்துகிரானோ அந்த உணவு சாணியில் உள்ள புழுவிற்கு சமம் என்று சாஸ்திரம் கூறுகின்றது. அதாவது சாணியே  ஒரு கழிவுப் பொருள், அதை சாப்பிடும்  பூச்சிகளை பற்றிக்  கூற வேண்டுமா?  அதனால்தான் அத்தனை கேவலமான பிறவி என்பதைக் கூற சாஸ்திரத்தில் அப்படிப்பட்ட வார்த்தைப் பிரயோகம் செய்யப்பட்டு உள்ளது.  சூரியனை ஆராதித்தால்  ஆரோக்கியம் மட்டும் அல்ல ஞானமும் ஐஸ்வர்யமும்  , நன்மைகளும் கூடும் என்பதே உண்மை. அதற்கு உதாரணமே இந்தக் கதைகள் . வைசம்பாயனர் என்பவர் ஒரு முனிவர். அவருடைய சிஷ்யரே யாக்கியவால்யகர்.  ஒரு முறை  வைசம்பாயனர் நதியில் குளித்துவிட்டு வந்தபோது கால் தவறி அங்கு அமர்ந்து இருந்த சிறுவன் மீது மோதி விட்டார் . அவர் மோதிய அந்த அதிர்ச்சியில் அந்த சிறுவனும் மடிந்து விட்டான். ஆகவே அவருக்கு பிருமஹத்தி தோஷம் ஒட்டிக் கொண்டுவிட அதைக் கண்ட  யாக்கியவால்யகர் தனத...

Ponnaandaal patti sonna kuttik kathaigal - 1

படம்
சாந்திப்பிரியா  அன்று  கிருஷ்ணபட்ச  பஞ்சமி . சிவ கைலாயத்தில் அம்மையும் அப்பனும் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். அப்போது பார்வதிக்கு ஒரு விளையாட்டு ஆசை ஏற்பட்டது.  'தினமும் நாம்  அனைவருக்கும்  உணவு தருகின்றோம். ஒரு நாள் கொடுக்காவிடில் என்ன ஆகும். அவை  இன்று பட்டினியால்  கிடக்கட்டும் . நாளை பார்ப்போம்'  என எண்ணியவள் தனது அருகில் சென்று கொண்டு இருந்த சிறிய கருப்பு நிறத்தில் இருந்த எறும்புகளை பிடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிவிட்டாள்.   மறுநாள்  அதைத் திறந்து பார்த்தாள். அவை அனைத்தும் அப்போதும் உயிருடன் இருந்தன. அதை விட ஆச்சர்யமாக எல்லாவற்றின் வாயிலும் சிறிது வெள்ளையாக உணவு ஒட்டிக் கொண்டு இருந்தது.   பார்வதிக்கு  ஒரே குழப்பம். அவைகளுக்கு எங்கிருந்து உணவு கிடைத்தது?  தான் தவறு செய்து விட்டோம் எனவும் அனாவசியமாக ஜீவராசிக்கு தொந்தரவு கொடுத்து விட்டோமே என நினைத்து அதற்கு பிராயச்சித்தம் தேட தானும் பட்டினி  இருந்து தபஸ் செய்யக் கிளம்பியபோது  எதிரில் பிள்ளையார் வந்து கொண்டு இருந்தார். அவர் வயிறு ஒட...