Kathaayee Amman
சித்தாடி காத்தாயி அம்மன்
சாந்திப்பிரியா
பலருக்கும் சித்தாடி காத்தாயி அம்மன் குல தெய்வம். அவள் முருக பெருமானின் மனைவியான வள்ளி தேவியாவார் . நன்னிலத்தின் அருகில் சித்தாடி என்ற கிராமத்தில் அமர்ந்து உள்ள காத்தாயி தன்னை வணங்கி நிற்கும் தமது குலமக்களை என்றென்றும் காத்து நிற்கின்றாள். தன்னை வணங்கி நிற்பவர்களை கரை ஏற்றுகிறார். அவள் பெருமையைக் நிற்காமல் கூறிக் கொண்டே இருக்கலாம் என்ற அளவுக்கு அவளால் பல குடும்பங்கள் நன்மை அடைந்து உள்ளன. அவள் மகிமைகளை சுற்றி உள்ள கதையை விரைவில் எழுத உள்ளேன். திருவாரூர் மாவட்ட குடவாசல் வட்டத்தில் உள்ள சித்தாடி கிராமத்தில் அந்தக் காத்தாயி குடி கொண்டு உள்ள ஆலயத்தில் வரும் பிப்ருவரி மாதம் மூன்றாம் தேதி முதல் ஆறாம் தேதிவரை ( 03 .02 .2011 முதல் 06 .02 .2011 வரை ) சதா சண்டி மகாயாக ஹோமம் , மற்றும் பல பூஜைகளும் நடக்க உள்ளன.
படித்த பண்டிதர்கள் கூறுகிறார்கள் " குலதெய்வம் இல்லையேல் பிற தெய்வமும் இல்லை ". ஆகவே குல தெய்வத்தை வணங்காதவனை வேறெந்த தெய்வமும் காப்பதும் இல்லை என்பது உண்மை. சித்தாடியை குல தெய்வமாக வணங்குபவர்கள் மட்டும் அல்ல அனைத்து முருக பெருமானின் பக்தர்களும் அவருடைய மனைவியான வள்ளி என்ற கத்தாயியின் ஆலயத்தில் இந்த நேரத்தில் நடைபெறும் அந்த ஆலய விழாவில் பங்கு கொள்ள முடியவில்லை என்றாலும் வருடத்தில் ஒரு முறையாவது தம்மால் ஆன பொருளுதவியை ஆலய பணிக்கு என 'ஸ்ரீ காத்தாயி அம்மன் பக்தஜன டிரஸ்டிற்கு' அனுப்பி ஆலயம் இன்னமும் நல்ல முறையில் சீரமைக்கப்பட உதவுமாறு காத்தாயி குடும்பத்தினரான நான் அனைவரையும் வேண்டுகிறேன்.
படித்த பண்டிதர்கள் கூறுகிறார்கள் " குலதெய்வம் இல்லையேல் பிற தெய்வமும் இல்லை ". ஆகவே குல தெய்வத்தை வணங்காதவனை வேறெந்த தெய்வமும் காப்பதும் இல்லை என்பது உண்மை. சித்தாடியை குல தெய்வமாக வணங்குபவர்கள் மட்டும் அல்ல அனைத்து முருக பெருமானின் பக்தர்களும் அவருடைய மனைவியான வள்ளி என்ற கத்தாயியின் ஆலயத்தில் இந்த நேரத்தில் நடைபெறும் அந்த ஆலய விழாவில் பங்கு கொள்ள முடியவில்லை என்றாலும் வருடத்தில் ஒரு முறையாவது தம்மால் ஆன பொருளுதவியை ஆலய பணிக்கு என 'ஸ்ரீ காத்தாயி அம்மன் பக்தஜன டிரஸ்டிற்கு' அனுப்பி ஆலயம் இன்னமும் நல்ல முறையில் சீரமைக்கப்பட உதவுமாறு காத்தாயி குடும்பத்தினரான நான் அனைவரையும் வேண்டுகிறேன்.
ஆலய விழாவின் அழைப்பிதழ் கீழே தரப்பட்டு உள்ளது. பத்திரிகை மீது கிளிக் செய்து அதை பெரியதாக்கி படிக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக