Vengalamudi aiyanaar temple

வெங்கலமுடி ஐயனார் கோயில் 
-  ஒரு செய்தி -

 நான் தமிழாக்கம் செய்துள்ள  "Village Gods of Tamilnadu" என்ற பகுதியை பாராட்டி வாழ்த்து அனுப்பி உள்ள முதியவர் திரு சுப்பிரமணியம் அவர்கள் அதில் கூறி உள்ள ஒரு அற்புதமான செய்தியை வாசகர்களுக்கு அளிக்கிறேன். திரு சுப்பிரமணியன் அவர்களுக்கு  எனது மனமார்ந்த நன்றி. 
சாந்திப்பிரியா 

திரு சுப்பிரமணியம் 

திரு சுப்பிரமணியம் அவர்கள்எழுதி உள்ள கடிதம் இது :-
'' ஓம்
அன்புடையீர் திரு ராமசந்திரன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
உங்களுடைய முயற்சிக்கு இந்நாட்டு மக்கள் குறிப்பாக ஆன்மீகவாதிகள் மிகவும் கடமைப் பட்டிருக்கின்றனர்.
மிகுந்த கவனமும் எளிய ஆங்கில நடையும் அருமை. அவற்றை சாந்திப்பிரியா மொழிபெயர்த்துத் தந்துள்ளார்கள். அவர்களுக்கும் இந்த முதியவனின் ஆசிகளும் வாழ்த்துக்களும்.
திண்டுக்கல் அருகில் நத்தம் போகும் சாலையில் சாணார்பட்டியிலிருந்து சென்று அய்யாப்பட்டியை அடையலாம்.
அங்கு வெங்கலமுடி ஐயனார் என்று ஒரு கோயில் உள்ளது. கோயிலின் அருகே தல விருட்சமாக ஒரு காட்டுமரம் உள்ளது. அதில் பக்தர்கள் நேர்ந்துகொண்டு வெண்கலத்தினால் செய்யப்பட்ட மணிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து அந்த மரத்தின் அடித்தண்டில் ஆணிகளினால் பொருத்துகின்றனர். அந்த மரம் நாளடைவில் அந்த மணிகளைத் தன் சதையால் மூடி உள்ளே இழுத்து மூடிவிடுகிறது. ஆணிகளும் மரத்தினுள் மறைந்துவிடுகின்றன. மரத்தின் மீது புடைப்பாக மூடிக்கொள்ளப்பட்ட மணிகளின் உருவம் தெரிகின்றது.
அதே வகையினைச் சேர்ந்த மற்றுமொரு மரம் அதே உயரத்திலும் பருமனிலும் இருக்கின்றது. அந்த மரத்திற்கு இந்த உள்ளே இழுத்துக் கொள்ளும் தன்மையில்லை.
இந்தக் கட்டுரைகளுக்கு அணி சேர்க்க அந்தப் புத்தகங்களிலிருந்து படங்களையும் இணைத்தால் நன்று.
அன்புடன் வெ.சுப்பிரமணியன்
ஓம்"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Vasanthapura Temple ( E)

Kudai Swamigal -E