Siththaadi Kaaththaayi Amman Satha Chandi Homam

சித்தாடி காத்தாயி அம்மன் சத சண்டி மஹா யாகம் சாந்திப்பிரியா போன வருடம் போல இந்த முறையும் காத்தாயி அம்மனின் சத சண்டி ஹோமம் வெகு விமர்சையாக நடந்தது. சாத் பேதம் இன்றி நகர மற்றும் சித்தாடி அக்கம்பக்கத்து கிராமத்தினரும் பக்திபூர்வமாக திரண்டு இருந்தது ஒரு அற்புதமான நிகழ்ச்சியாக இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர் குமுழி இருந்த மண்டபத்தில் காலை ஆறு மணி முப்பது நிமிடத்துக்கு விழா துவங்க சிவாச்சாரியர்கள் கலச பூஜையை செய்து முடித்தனர். அடுத்து சதசண்டி மகா ஹோமம் துவங்கியது. ஆறு ஹோம குண்டங்களில் ஆறு சிவாச்சாரியார்கள் அமர்ந்து இருக்க தலைமை சிவாசாரியார் மந்திரங்களை ஓதத் துவந்த ஹோம குண்டத்தில் அமர்ந்து இருந்த சிவாச்சாரியார்களும் அதை உச்சரித்தவண்ணம் ஹோம குண்டத்தில் யாகப் பொருட்களை போடத் துவங்கினார்கள். முப்பத்தாறு கோடி தேவர்களும் அங்கு கூடி இருந்ததாக நம்பப்பட்ட அங்கு அவர்களை பூஜிக்கும் விதமாக வண்ணமயமான 3600 ரவிக்கை துணிகள்- அதில் முடித்து வைக்கப்பட்டு இருந்த சில யாகப் பொருட்களுடன் - ஹோம குண்டங்களில் போடப்பட்டன. சங்கல்பம் செய்து அமர்ந்து இருந்த ராமகிருஷ்ணன், ராமதாஸன், விஸ்வநாதன் மற்ற...