இடுகைகள்

Patti Ponnandaal sonna kuttik kathaigal - Part- 2

படம்
சாந்திப்பிரியா  சூரிய பகவானை நமது வலது நேத்திரம் (கண்) இன்று கூறுவார்கள். அதைப் போலவே போல சந்திர பகவான் நமது இடது நேத்திரமாம். சூரிய பகவானின் சக்தி அபாரமானது. தினமும் எவன் ஒருவன் சூரியனைப் பார்க்காமல் உணவு அருந்துகிரானோ அந்த உணவு சாணியில் உள்ள புழுவிற்கு சமம் என்று சாஸ்திரம் கூறுகின்றது. அதாவது சாணியே  ஒரு கழிவுப் பொருள், அதை சாப்பிடும்  பூச்சிகளை பற்றிக்  கூற வேண்டுமா?  அதனால்தான் அத்தனை கேவலமான பிறவி என்பதைக் கூற சாஸ்திரத்தில் அப்படிப்பட்ட வார்த்தைப் பிரயோகம் செய்யப்பட்டு உள்ளது.  சூரியனை ஆராதித்தால்  ஆரோக்கியம் மட்டும் அல்ல ஞானமும் ஐஸ்வர்யமும்  , நன்மைகளும் கூடும் என்பதே உண்மை. அதற்கு உதாரணமே இந்தக் கதைகள் . வைசம்பாயனர் என்பவர் ஒரு முனிவர். அவருடைய சிஷ்யரே யாக்கியவால்யகர்.  ஒரு முறை  வைசம்பாயனர் நதியில் குளித்துவிட்டு வந்தபோது கால் தவறி அங்கு அமர்ந்து இருந்த சிறுவன் மீது மோதி விட்டார் . அவர் மோதிய அந்த அதிர்ச்சியில் அந்த சிறுவனும் மடிந்து விட்டான். ஆகவே அவருக்கு பிருமஹத்தி தோஷம் ஒட்டிக் கொண்டுவிட அதைக் கண்ட  யாக்கியவால்யகர் தனத...

Ponnaandaal patti sonna kuttik kathaigal - 1

படம்
சாந்திப்பிரியா  அன்று  கிருஷ்ணபட்ச  பஞ்சமி . சிவ கைலாயத்தில் அம்மையும் அப்பனும் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். அப்போது பார்வதிக்கு ஒரு விளையாட்டு ஆசை ஏற்பட்டது.  'தினமும் நாம்  அனைவருக்கும்  உணவு தருகின்றோம். ஒரு நாள் கொடுக்காவிடில் என்ன ஆகும். அவை  இன்று பட்டினியால்  கிடக்கட்டும் . நாளை பார்ப்போம்'  என எண்ணியவள் தனது அருகில் சென்று கொண்டு இருந்த சிறிய கருப்பு நிறத்தில் இருந்த எறும்புகளை பிடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிவிட்டாள்.   மறுநாள்  அதைத் திறந்து பார்த்தாள். அவை அனைத்தும் அப்போதும் உயிருடன் இருந்தன. அதை விட ஆச்சர்யமாக எல்லாவற்றின் வாயிலும் சிறிது வெள்ளையாக உணவு ஒட்டிக் கொண்டு இருந்தது.   பார்வதிக்கு  ஒரே குழப்பம். அவைகளுக்கு எங்கிருந்து உணவு கிடைத்தது?  தான் தவறு செய்து விட்டோம் எனவும் அனாவசியமாக ஜீவராசிக்கு தொந்தரவு கொடுத்து விட்டோமே என நினைத்து அதற்கு பிராயச்சித்தம் தேட தானும் பட்டினி  இருந்து தபஸ் செய்யக் கிளம்பியபோது  எதிரில் பிள்ளையார் வந்து கொண்டு இருந்தார். அவர் வயிறு ஒட...

Arthanareeswarar

படம்
அர்த்தநாரீஸ்வரர் சாந்திப்பிரியா  அர்த்தநாரீஸ்வரர் என்றால் பாதி  ஆண் மற்றும் பாதி பெண் உருவில் உள்ள ஈஸ்வரர் என்று அர்த்தம்.  ஒரு முறை சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையே கருத்து வேற்றுமை தோன்றியது. பார்வதிக்கு ஏற்பட்ட கோபம் என்ன என்றால் சிவனை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் தம்மையும் வணங்குகையில் முனிவர்கள் மட்டும் சிவபெருமானை வணங்கிவிட்டுச் செல்கிறார்களே, அது தன்னை அவமதிப்பது போல உள்ளது. ஆனாலும் அதைப் பற்றி சிவபெருமான் கவலைப்படுவது இல்லையே என்பதே. அவளுடைய கருத்து என்ன என்றால் உலகில் உள்ள அனைத்து ஜீவா ராசிகளுமே ஆண் -பெண் உறவில் ஏற்பட்டவையே.  பெண்  இன்றி   ஆணால்  மட்டுமா ஜீவராசிகளை படைக்க முடியும்?  ஆக ஆணும் பெண்ணும் சமம் அல்லவா என்பதினால்  ஆணாக உள்ள சிவனை வணங்குபவர்கள், அவருடைய பத்தினியான தன்னையும் வணங்க வேண்டும். அப்படி செய்தால்தான் அவர் வருபவர்களுக்கு வரம் தர வேண்டும் என கூறினாள்.  அந்தக் கூற்றை ஏற்காத சிவனோ  உலகப் பற்றுதல் இல்லாத முனிவர்கள் மட்டுமே அப்படி செய்கிறார்கள், அவர்கள் கண்களில் சிவத்தை தவிற வேற...

Updated Version - Galli Anjineyar Temple, Bangalore

படம்
கல்லி ( காற்று ) ஆஞ்சநேய ஆலயம் சாந்திப்பிரியா சமீபத்தில் கல்லி ஆஞ்சநேயர ஆலயத்தைப் பற்றிய மேலும் சில விவரங்களும் ஆலய கட்டிட அமைப்பைப்  பற்றியும் கிடைத்த தகவல்கள் இதோ கீழே உள்ளது. எந்த ஆலயத்திலுமே நுழைந்தால் ஏதாவது ஒரு ஸ்வாமியின்  சிலை கண்களில்  தெரியும் நிலையில் சன்னதி காட்சி அளிக்கும். ஆனால் இந்த ஆலயத்திலோ சாலையில் அமைந்து உள்ள நுழைவாயில் மூலம் உள்ளே நுழைந்தால் ஹனுமாரின் சன்னதி உள்ள அறையின் பின் பக்க சுவரே காணப்படுகின்றது. வேறு எந்த சுவாமியின் சன்னதியோ அல்லது சிலையோ வாயிலில் தெரிவது இல்லை.  ஆலயத்தில் சனிக்கிழமைகளில் கூட்டம் நிரம்பி வழிகின்றது. பலரும் தத்தம் வேண்டுதலுக்கு ஏற்ப வெற்றிலை மாலை மற்றும் குறிக்கோள்களைக் கொண்ட காகித மாலைகளையும் ஹனுமாருக்குப் படைக்கின்றார்கள்.  ஹனுமார் சுமார் பத்து அடிக்கும் மேல் உயரமாக இருக்கின்றார். ஒரு பெரிய பாறையில் அவர் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது.  ஹனுமார் சன்னதிக்கு எதிரில் இடதுபுறம் காணப்படும் சன்னதியில்  ராமர், சீதை, லஷ்மணர் என அனைவரும்  நின்று கொண்டு இருக்க எப்போதும் போல ஹனுமார் ராமரின் பாதத்தடியில்...

Kolak Kalai

படம்
  கோலக் கலையும் அதன் சில உண்மைகளும் சாந்திப்பிரியா கோலக் கலை என்பது இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தோன்றி உள்ளது என்பது தெரிகின்றது. கோலம் என்பது ஒரு விதத்தில் பார்த்தால் சித்திரக் கலையைப் போன்றதே. இன்றும் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் மலைகளிலும், பள்ளங்களிலும், குகைகளிலும் உள்ள பாறைகளைப் பார்க்கையில் அவற்றில் கோலங்கள் போன்ற பல உருவங்கள் உள்ளதைக் காணலாம். ஆகவேதான் கோலக் கலை ஆதி முதலேயே இருந்துள்ளது என்பதை நம்ப வேண்டி உள்ளது. வாயிலில் கோலங்களைப் போடுவது ஒரு பழக்கமாக இருந்துள்ளது என்றாலும் அதற்கும் சில காரணங்கள் இருந்துள்ளன. துஷ்ட தேவதைகள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க, தர்ம தேவதைகளை உள்ளே அழைக்க, தூய ஆவிகளை உள்ளே அழைக்க மற்றும் லஷ்மி தேவியை உள்ளே அழைக்க என பல காரணங்களுக்காக பல விதமான கோலங்கள் போடப்பட்டன. அப்படியாக கோலங்களைப் போட்டபோது அதைப் போடும் பெண்கள் சில மந்திரங்களையும் உச்சரித்தவாறே போட்டு வந்தனர் என்பது கிராமியக் கதையாக உள்ளது. அதற்கு மேலும் சென்றால் கோலங்கள் போடுவது புழு பூச்சிகளுக்கு உணவாக இருக்கட்டும் என்பதற...

Random Thoughts

படம்
சாமி படங்கள்- சுவர் அழுக்காகாமல் பூ வைக்க ஒரு யோசனை சாந்திப்பிரியா நாம் பூஜை அறையில் மாட்டும் சாமி படத்தின் மீது பூ வைக்கின்றோம். அவற்றை தலைப் பகுதியில் பிரேமுகுப் பின்னால் சொருகி வைப்பதினால் நாளடைவில் அந்த இடத்தில் கறை ஆகி சுவர் அழுக்காகி விடும். பூக்களை வைக்காத நாட்களில் அந்த இடம் கருப்பாகத் தெரியும். ஆகவே சுவற்றை அசுத்தப்படுத்தாமல் இருக்க நான் பூஜை அறையில் உள்ள சாமிகளின் பிரேமின் தலைப் பகுதியில் ஒரு அங்குலம் நீளமும் அறை அங்குல அகலமுமான கெட்டியான (சிறிது தடிமனான ) வண்ண அட்டையின் ஒரு பக்கத்தில் சிறு ஓட்டை போட்டு (பஞ்ச் மிஷினினால்) பெவிகால் போட்டு ஒட்டி வைத்தேன். அட்டையை இப்போது அந்த அட்டையின் ஒட்டையில்தான் பூவை சொருகி வைக்கின்றோம். சுவர் கறை படுவது இல்லை. நாம் எந்த வீட்டுக்கு குடி சென்றாலும் சுவர்  அழுக்கு ஆகாது. பிரேமின் வண்ணத்துக்கு ஏற்ப அட்டையை வாடர் கலர் செய்து விட்டால் பிரேமுடன் அது ஒன்றி இருக்கும்.  அச்சிங்கமாகவும் தெரியாது.  கீழே உள்ள படத்தைப் பார்க்கவும். 

Ponnandal Ramanathan writes-1

படம்
பாட்டி பொன்னாண்டாள் ராமநாதன் எழுதிய  தெய்வீகத்தில் நான் படித்த மற்றும்  கேட்ட செய்திகள் சில -  பாகம் 1 (1) சத்குருனாதரின் காடாஷம் ஒருவர் மீது இருக்குமானால் அந்த அதிருஷ்டக்காரனின் வாழ்கை ஓடம் சலனமில்லாமல் அமைதியாக , நிம்மதியாக, பயமில்லாமல் சென்று கொண்டு இருக்க அந்த குருநாதனே ஓடத்தை ஏற்றிக் கரை சேர்ப்பார் என்பது சத்தியமான வாக்கு. ----------------------------- (2) சாதுக்களின் தரிசனம், அவர்கள் மீது நாம் வைக்கும் பக்தி மற்றும் தியானமுமே நமக்கு பல புண்ணிய பலன்களையும், புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனையும் தருகின்றது. -------------------------- (3) சத்சங்கம் கிடைப்பது அரிது. கிடைத்தாலும் அதில் கலந்து கொள்ள எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்காது, மனமும் வராது . ராவணன் சிறந்த சிவ பக்தன். ஆனால் அவனுக்கு சத்சங்கங்களில் கலந்து கொள்ள வாய்ப்பே கிடைக்கவில்லை. -------------------------- (4) ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் கருணை கடாஷம் எல்லை அற்றது. ஒரு பாபமும் செய்யாத சீதையை தன் மனைவி என்ற உரிமையில் உலக நியதியை எடுத்துக் காட்டும் பொறுப்பில் அக்னியில் புடம் போட்டு ஏற்றுக...