இடுகைகள்

Sri Uchi Vinayagar Aalayam, Kajang (Selangor)

படம்
வினோத வெளிநாட்டு ஆலயங்கள் - 5     சித்தி விநாயகர் ஆலயம் முக்கிய அறிவிப்பு :-   நாம் அனைவரும் இதுவரை நம் நாட்டில்தான் பல மகிமைகள் வாய்ந்த ஆலயங்கள் உள்ளதாக நினைத்து இருப்போம் . ஆனால் பல அற்புதங்களை செய்துள்ள நம்முடைய ஆலயங்கள் மலேசிய நாட்டிலும் உள்ளன என்பதை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது . ஆகவே அதைப் பற்றி நான் கேட்டறிந்தவுடன் , அந்த ஆலயங்களைப் பற்றி இந்த தளத்தில் பிரசுரிக்க நண்பர் திரு குமரேஷ் பட்டுமலாயிடம் இருந்து ( kbatumalai@gmail.com ) அனுமதி பெற்று   தமிழில் அவற்றை பிரசுரித்து உள்ளேன் . அவருக்கு என் மனமார்ந்த நன்றி . இவற்றை   அவருடைய அனுமதி என்றி எவரும் வெளியிடக் கூடாது -   சாந்திப்பிரியா     மலேஷியா கஜாங் உச்சி  விநாயகர்  ஆலயம்  மலேஷியாவில்  கஜாங் எனும் இடத்தில் 1937 ஆம் ஆண்டு ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அது முனீஸ்வரர் ஆலயம். ஆனால் அந்த ஆலயத்தில் முருகன் மற்றும் விநாயகரின் சிலைகளும் பூஜிக்கப்பட்டு வந்தன. ஆலயத்தின் நிர்வாகம் புதிய குழுவிடம் சென்றதும் அவர்கள் அந்...

Paathal Bhuvaneswari Temple- Uttaraanjal - 31

படம்
ஆலமரத்து அடியில் கேட்ட ஆலய செய்திகள் -31 பாதாள புவனேஸ்வரி ஆலயம் சாந்திப்பிரியா  ஆலயம்  உள்ளப்  பகுதி    ஹிமாசலப் பிரதேசத்தின் அருகில் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் எனும் மாவட்டத்தில் இருந்து பதினைந்து கிலோ தொலைவில் மலைப்பகுதியில் ஒரு காட்டின் அடர்ந்த பகுதியில் பூமியின் கீழே ஒரு பெரிய குகையில் உள்ளது ஒரு அபூர்வ ஆலயம். அதன் பெயர் பாதாள புவனேஸ்வரி என்பது. அதை த்ரேதா யுகத்தில் இருந்த மன்னனான ரிதுபார்னா என்பவன் தனது கனவில் தோண்டிய இடத்தில் சென்று கண்டு பிடித்ததாகவும் அந்த குகை ஆலயத்திற்கு  1191 ஆம் ஆண்டு ஆதி சங்கரர் வந்து வழிபட்டதாகவும் கூறுகிறார்கள். ஆலயத்துக்குள் செல்வது கடினம் என்பதினால் உள்ளே செல்பவர்கள் சிறிய விளக்கை எடுத்துக் கொண்டு அங்கு கட்டப்பட்டு உள்ள இரும்புக் கம்பியை பிடித்துக் கொண்டுதான் நடக்க வேண்டும். இந்த குகை கைலாசத்தில் உள்ள சிவபெருமானின் வாசஸ்தலத்துக்குப் போகும் வழி எனவும், சிவன் இந்த குகையில் வந்து தங்கி ஒய்வு எடுப்பதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. மேலும் பஞ்ச பாண்டவர்கள் கூட இங்கு வந்து சிவபெருமானை வழிபட...

Varalashmi viratha Manthras and Songs

படம்
வரலஷ்மி விரத பூஜைக்கு  பொன்னாண்டா ள்   ராமநாதன் பாட்டியின் சேவை  இந்த பாட்டியின் பெயர் பொன் னா ண்டாள் ராமநாதன். பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். வயது எண்பத்தி எட்டு. வாழ்வது சென்னையில்.  இவருடைய  பொழுதுபோக்கு தெய்வீக சம்பந்தமானவற்றை எழுதுவது. அதை போடோ காப்பி  எடுத்து  தெரிந்தவர்களுக்கு தருவது. இந்த  வயதிலும் அவர் குரல் இனிமையானது. கல்யாணங்களில் இவர்  பாடும்போது இதுவா இந்த பாட்டியின் குரல் என வியக்கலாம். அனைவரும் நல்ல முறையில் வரலஷ்மி நோம்பு செய்ய வேண்டும் என்பதற்காக வரலஷ்மி விரதத்தன்று ஒருவர் சொல்ல வேண்டிய சுலோகம் மற்றும் அன்று பாட வேண்டிய பாடல்களை தானே எழுதி அதை சிலருக்கு அனுப்பி உள்ளார். மற்றவர்களுக்கு எதுவும் தெரியக்கூடாது. தனக்கு மட்டுமே அனைத்தும் தெரிந்து இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தன்னை வந்தே அனைத்தையும் அனைவரும் கேட்க வேண்டும் என கர்வபங்கம் கொள்ளும் பலரிடையே  பூஜைகளை மற்றவர்களும் சரிவர செய்யட்டும் என்ற எண்ணத்தில் தானே தயாரித்து அனுப்பி உள்ள இந்த காலத்து பாட்டி போற்றப் படவேண்டியவர் . ஆகவே அதை பி...

Sri Sri Sri Trikoteswara Swami Temple -22

படம்
தெரிந்த ஆலயம், பலரும் அறிந்திடாத வரலாறு -22 ஆந்திரா  ஸ்ரீ திரிகோடீஸ்வரச்வாமி ஆலயம் சாந்திப்பிரியா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயவாடாவில் இருந்து தொண்ணூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதே கோடப்பக்கோண்டா என்ற மலைப் பிரதேசம். அது மூன்று மலைகள் சூழ்ந்த இடமாகும். அந்த மூன்று மலைகளையும் பிரும்மா, சிவன், விஷ்ணு எனக் கருதுகிறார்கள். அங்கு திரிகோடீஸ்வரச்வாமி என்ற சிவன் ஆலயம் உள்ளது. அது கீ.பி. 1172 ஆம் ஆண்டு முதலேயே இருப்பதாகக் கூறுகிறார்கள். அந்த ஆலயம் அமைக்க மன்னன் கிருஷ்ணதேவராயர் நிறைய நிலம் தந்து உள்ளாராம். அந்த ஆலயம் அங்கு எழும்பியதைக் குறித்து கூறப்படும் கிராமியக் கதை சுவையானது. குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டில் அந்த ஆலயம் எழுந்த கதை உள்ளதாம். தக்ஷ்ய யாகத்தினால் ஏற்பட்ட பிரச்சனை தீர்ந்ததும் சாந்தமான சிவபெருமான் இந்த மலைப் பிரதேசத்தில் வந்து சுற்றித் திரிந்தாராம். அப்போது பிரும்மாவும் விஷ்ணுவும் அங்கு வந்து தமக்கு பிரும்மனைப் பற்றிய விளக்கம் கூற வேண்டும் என வேண்டிக் கொண்டார்களாம். ஆகவே அவர் தக்ஷிணாமூர்த்தியாக அங்கு வந்து தங்கி அவர்களுக்கு  உபதேசம் செய...

Wonderful Temple for Snakes in Malasia -5

படம்
வினோத வெளிநாட்டு ஆலயங்கள் -5            பாம்பு ஆலயம்   படம் நன்றி:- www.zuzutop.com இதுவரை பாம்புகளை வணங்கும் ஆலயம் இந்தியாவில் நாகர்கோவிலில் மட்டுமே உள்ளதாக நினைத்து இருந்தோம். அனால் அது தவறு மலாசியா நாட்டில் பினாங் எனும் நகரில் என்னும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம் பாம்புகளுக்காக உள்ளது என்பதை அறிந்தபோது வியப்பாகவே இருந்தது. அந்த ஆலயம் புத்த துறவியான சோர் சோ காங் என்பர் நினைவாக 1850 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு உள்ளது. அறுபத்தி ஐந்து வயது வரை வாழ்ந்த அவர் பாம்புகளுக்கு அடிக்கலாம் தந்தவர். அவர் யார் ? அவர் வாழ்ந்த கால கட்டம் கீ பி 960-1276 ஆகும். இளம் வயதிலேயே துறவி ஆனவர் அவர். சீனாவில் தயுன்யான் எனும் மடத்தில் துறவியாக இருந்தவர் பின்னர் எளிய வாழ்வை மேற்கொள்ள காட்டுக்குச் சென்றார். கீ பி 1070 ஆம் ஆண்டில் நாட்டில் மழையே இல்லை. பஞ்சம் ஏற்பட்டது . அப்போது அந்த நட்டு மன்னன் அவரை கேட்டுக் கொண்டதற்கு இணங்கி சோர் சோ காங் மழை பெய்ய வேண்டும் என வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்ய பெரும் மழை பெய்ததாம்.   சோர் சோ காங் படம் நன...

Vizag Kanaga Mahalashmi Temple- Andhra - 30

படம்
ஆலமரத்து அடியில் கேட்ட ஆலய செய்திகள் -30 ஆந்திரா விசாகப்பட்டினத்து  கனக மகாலஷ்மி அம்மன் ஆலயம்   சாந்திப்பிரியா ஆந்திராவில் விசாகப்பட்டின  நகரத்தின்  மத்தியில் ரயில் நிலையம் மற்றும் பஸ்டாண்டில் இருந்து சுமார் நான்கு அல்லது ஐந்து கிலோ தொலைவில் உள்ளதே கனக மஹாலஷ்மி அம்மன் ஆலயம். அவளை லஷ்மியின் அவதாரம் எனக் கூறுகிறார்கள். விசாகப்பட்டினத்தின் மிகப் பிரபலமான ஆலயம் அது. சாதாரணமாக வட நாட்டில்தான் ஆலயங்களில் நாமே சென்று சுவாமியின் சிலைகளை தொட்டு வணங்க அனுமதிப்பார்கள். தென் நாட்டில் அனைத்து ஆலயத்திலும் பூசாரிகள் மட்டுமே சுவாமியை தொட்டு பூஜிக்க முடியும். ஆனால் இந்த ஆலயத்தில் நாமே தேங்காயை உடைத்து சுவாமிக்கு ( அம்மனுக்கு) அபிஷேகம் செய்யலாமாம், அம்மனுக்கு குங்குமம் இடலாம், மஞ்சள் பூசலாம் . நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில்  வரும் வருடாந்திர விழாவின்போது அந்த அம்மனை லஷ்மி தேவியாகவே கருதி ஆராதித்து பூஜிக்கிறார்கள். 1912 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படும் அந்த ஆலயத்தைப் பற்றிய கிராமியக் கதை இது.   பருஜிப்பேட்டா என்ற இடத்தில் முன்ன...

Gnaana Saraswathi Temple, Andhra ( 21 )

படம்
தெரிந்த ஆலயம், பலரும் அறிந்திடாத வரலாறு -21 ஆந்திரா  ஞான  சரஸ்வதி  ஆலயம் சாந்திப்பிரியா  தெலுங்கானா பகுதியில் உள்ள நிசாமாபாத் எனும் நகரில் இருந்து சுமார் நாற்பது கிலோ தொலைவில் உள்ளது பசாரா எனும் சிறிய கிராமம். ஹைதிராபாத்தில் இருந்து சென்றால் சுமார் இருநூறு கிலோ தொலைவு வரும். அங்கு உள்ளதே வரலாற்றுப் புகழ் பெற்ற ஞான சரஸ்வதி ஆலயம். நமக்கு எல்லோருக்குமே கூத்தனூரில் உள்ள சரஸ்வதி ஆலயம் பற்றி மட்டுமே தெரியும். ஆனால் ஆந்திராவில் உள்ள இன்னொரு சரஸ்வதி ஆலயமான இந்த இடத்தைப் பற்றி பலருக்கும் தெரிந்து இருக்க முடியாது.  இந்த ஆலயத்துக்கும் குழந்தைகள் படிப்பு வளரவேண்டும், நல்ல கல்வி அறிவு கிடைக்க வேண்டும் என வேண்டுவார்கள். தேர்வு நேரங்களில் புத்தகம், பேனா , பென்சில் என அனைத்தையும் கொண்டு வந்து சரஸ்வதி முன் வைத்து வணங்குவார்கள். கோதாவரி நதிக் கரையில் அமைந்துள்ள அந்த மூன்று ஆலயத்தில் உள்ள தேவிகளின் சிலைகள் வந்த வரலாறு அதிசயமானது. அதன் கதை கீழே உள்ளது. ஆலயத்தில் சரஸ்வதி  முன்னொரு காலத்தில் வியாச முனிவர் இந்த இடத்தில்தான் வந்து அந்த ஆலயத்தில்...