Nava Narasimmar- Ahobilam
நவ நரசிம்ம பெருமாள் ஸ்தலம்
-அஹோபிலம்-
சாந்திப்பிரியா
-அஹோபிலம்-
சாந்திப்பிரியா
ஒன்பது அவதாரங்களில் நரசிம்மர் காட்சி அளிக்கும் ஒரு மலைப் பகுதியை அஹோபிலம் என்று கூறி அதை நரசிம்ம ஷேத்திரம் என்கிறார்கள். இந்த ஒன்பது நரசிம்மரின் ஆலயங்களும் திருப்பதி மற்றும் ஸ்ரீசைலம் இரண்டுப் பகுதிக்கும் இடையே உள்ளது. தனது பக்தனான பிரஹலாதனிடம் அவன் தந்தை ஹிரன்யகசிபூ கடவுளைக் காட்டு என ஏளனம் பேசி விஷ்ணுவை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொள்ள, கடவுள் இங்கே இருக்கின்றார் என பிரஹலாதன் கூறிய தூணை காலால் அவர் தந்தை எட்டி உதைக்க , அதில் இருந்து நரசிம்மர் உருவை எடுத்து வெளி வந்த விஷ்ணு ஹிரன்யகசிபூவின் உடலைக் கிழித்து எறிந்தார். அப்போது அவர் சக்தியைக் கண்ட தேவர்கள் 'அஹோ ........ பலா ' அதாவது 'என்னே உன் சக்தியும் பலமும்' என்று ஒருமித்தக் குரல் எழுப்பினார்களாம். ஆகவே 'அஹோ ........ பலா ' என அவர்கள் கத்திய இடமும், ஹிரண்யகசிபுவின் உடலை அவர் கிழித்த இடமும் உள்ள மலைப் பகுதி அஹோபிலம் என்று ஆனதாக புராணக் கதை உள்ளது. அது போல இன்னொரு கதை கூறுவது என்ன என்றால் அஹோபிலா என்றால் மிகப் பெரிய குகை என்றும், அந்த குகையில்தான் கருட பகவான் தவம் இருந்து நரசிம்மரை தரிசித்ததினால் அந்த மிகப் பெரிய குகையைக் குறிக்கும் விதமாக இடத்தின் பெயர் அஹோபிலம் என ஆயிற்று . இந்த ஷேத்திரத்தை கருடசலா மற்றும் சேஷாசலா என்றும் அழைக்கின்றார்கள். கருடனைக் குறித்து கருடசலா என்றும் அந்த மலைப் பகுதி நரசிம்மரின் ஒரு அவதாரமான விஷ்ணு பகவானின் வாகனமான ஆதிசேஷன் போல அஹோபலியில் தலை, திருப்பதியில் உடல் மற்றும் ஸ்ரீ சைலத்தில் வால் என பாம்பு போல படர்ந்து உள்ளதினால் சேஷாசலா என அழைக்கப்பட்டதாம்
இந்த மலைப் பகுதி இரண்டு பாகங்களாக உள்ளது. அதாவது கீழ் அஹோலம் மற்றும் மேல் அஹோலம் என்பவையே அந்தப் பிரிவுகள். கீழ் அஹோபலியில் உள்ள ஆலயத்தை பிரஹலாத வரதர் என்கிறார்கள். அதாவது பிரஹலாதருக்கு அருளிய நரசிம்மர் என்பது கருத்து. இந்த ஆலயத்தை ஒட்டி திருப்பதி வெங்கடேசப் பெருமாள் ஆலயமும் உள்ளது. இங்குதான் திருப்பதி வெங்கடேசப் பெருமான் தனது திருமணத்துக்கு முன்பாக வந்து நரசிம்மரிடம் ஆசி பெற்றுச் சென்றாராம். மேலும் இந்து சில சிறிய ஆலயங்களும் உள்ளன.
இந்த இரண்டுப் பிரிவுகளிலும் அதாவது கீழ் அஹோபிலம் மற்றும் மேல் அஹோபிலத்தில் ஒன்பது காட்சிகளில் உள்ள நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. அவை :
இந்த இரண்டுப் பிரிவுகளிலும் அதாவது கீழ் அஹோபிலம் மற்றும் மேல் அஹோபிலத்தில் ஒன்பது காட்சிகளில் உள்ள நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. அவை :
1. ஜ்வால நரசிம்ஹா
ஒரு மலை உச்சி மீது உள்ள இந்த ஆலயம் மேல் அஹொபலியில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாம். இங்குதான் ஹிரண்யகசிபுவை உக்கிரத்தோடு நரசிம்மர் உடலைக் கிழித்துக் கொன்றார் என்பதினால் இது ஜ்வால நரசிம்மர் ஆலயம் என்றப பெயரைப் பெற்றுள்ளதாகக் கூறுகிறார்கள்.
2. அஹோபில நரசிம்ஹா
மேல் அஹோபிலத்தில் உள்ளது அஹோபில நரசிம்மரின் இந்த ஆலயம். இதுவே இங்குள்ள நரசிம்ம ஷேத்திரத்தின் மூல ஆலயம் ஆகும். இங்குள்ள நரசிம்மர் ஸ்வயம்புவாக எழுந்தருளினார் என்றும் உக்ரஹமான உருவில் அவர் இங்கு காட்சி தருவதினால் அவரை உக்ரஹ நரசிம்மர் என்கிறார்கள்.
3. மாலோல நரசிம்ஹா
மேல் அஹொபலியில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த நரசிம்மர் சாந்தமான முகத்தைக் கொண்டவராக காட்சி தருகின்றார். மலோலா என்றால் லஷ்மி என்று அர்த்தமாம். இந்த ஆலயத்தில் உள்ள நரசிம்மர் அவர் மனைவி லஷ்மி தேவி சகிதம் காட்சி தருகிறார்.
4. குரோதகார அல்லது வராஹ நரசிம்ஹா
இந்த ஆலயத்தில் உள்ள நரசிம்மர் பன்றி உருவ முகத்தோடு காட்சி தருவதினால் இதை குரோதகார அல்லது வராஹா நரசிம்மர் ஆலயம் என்கிறார்கள். இந்த ஆலயத்தில் உள்ள நரசிம்மர் லஷ்மி தேவியுடன் காட்சி தருகிறார் என்பது விசேஷம். இந்த ஆலயம் மூல ஆலயமான அஹோபில நரசிம்மர் ஆலயத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீடர் தொலைவில் உள்ளது.
5. கரஞ்ச நரசிம்ஹா
கீழ் அஹோபலியில் இருந்து சுமார் ஒரு பர்லாங் தொலைவிலும், மேல் அஹொபலியில் இருந்து சுமார் ஒரு கிலோ தொலைவிலும் உள்ள இந்த ஆலயம் கரஞ்ச எனும் ஒரு வகை மரத்தின் கீழ் உள்ளதினால் இங்குள்ள ஆலயம் அந்தப் பெயரைப் பெற்றதாம்.
6. பார்கவா நரசிம்ஹா
இந்த ஆலயம் கீழ் அஹோபலத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஆலயம் உள்ள இடத்தில்தான் பார்கவா ராமார் தவம் இருந்து நரசிம்மரை தரிசனம் செய்ததினால் இங்குள்ள குளத்தின் பெயர் பார்கவா தீர்த்தம் என்றும் ஆலயம் பார்கவா நரசிம்மர் எனவும் ஆயிற்று என்கிறார்கள் .
7. யோகானந்தா நரசிம்ஹா
இந்த ஆலயமும் கீழ் அஹோபலத்தில் இருந்து தென் கிழக்குப் பகுதியில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஆலயம் உள்ள இடத்தில்தான் நரசிம்மப் பெருமாள் பக்த பிரஹலாதருக்கு யோகக் கலைக் கற்றுத் தந்ததான ஐதீகம் உள்ளதினால் இதன் பெயரும் யோகானந்தா நரசிம்ஹ ஆலயம் என ஆயிற்றாம்.
8. சத்ரவத நரசிம்ஹா
இந்த ஆலயம் பல அரசமரங்கள் மற்றும் முட்புதர்கள் போன்றவற்றால் சூழ்ந்தப் பிரதேசம். அப்படிப்பட்ட வனப்பிரதேசத்தில் உள்ள ஒரு அரச மரத்தின் கீழ்தான் இந்த ஆலயம் அமைக்கப்பட்டு உள்ளதினால் இதன் பெயர் சத்ரவத நரசிம்மர் என ஆயிற்று. சத்ரவனம் (வனம் என்றால் காடு) என்பது சத்ரவத என மருவி இருக்கலாம் என்கிறார்கள்.
9. பவனா நரசிம்ஹா
ஜ்வால நரசிம்மர் ஆலயத்தின் அருகில் உள்ள பவனா எனும் நதியின் அருகில் உள்ளது இந்த ஆலயம்.
- இந்த ஒன்பது ஆலயங்களைத் தவிர மேல் அஹொபலியில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது உக்ர ஸ்தம்பம் எனும் இடம். அங்கு ஒரு ச்தம்பல் உள்ளதாம். அந்த இடத்தில்தான் நரசிம்மர் உருவில் நரசிம்மப் பெருமாள் காட்சி தந்தாராம்.
- மேல் அஹோபலி மற்றும் உக்ர ஸ்தம்பமத்தின் இடைப் பகுதியில் உள்ளது பிரஹலாத குகை. இங்கு பிரஹலதர் தவம் இருந்தாராம்.
பிரஹலாத குகை
உக்ர ஸ்தம்பத்தில் ஒரு காட்சி
இந்த அஹோபலி நவ நரசிம்ம ஷேத்திரம் ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் ஜில்லாவின் மலைப் பகுதியில் அமைந்து உள்ளது. அங்கிருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் ஆலய வளாகம் உள்ளது. ஆந்திராவின் கடப்பா மாவட்டத்திற்கு சென்று அங்கிருந்தும் இங்கு செல்ல முடியும். அங்கிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலய இடம் உள்ளது. அஹோபலிக்கு வருகைத் தரும் யாத்ரீகர்களின் வசதிக்காக அஹோபால மடத்தினர் வாடகைக்கு தங்கும் இடங்களைக் கட்டி உள்ளார்கள்.
இங்குள்ள ஒன்பது நரசிம்மர் ஆலயங்களுக்கும் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடி உயரத்தில் உள்ளன. ஆகவே அனைவராலும் அந்த அனைத்து ஆலய தரிசனத்திற்கும் செல்ல முடியாது. சில ஆலயங்களை மட்டுமே தரிசிக்க முடியும். காரணம் சில ஆலயங்களுக்குச் செல்ல வாகன வசதிகளும், சாலை வழியும் அமைக்கப்பட்டு உள்ளன. நல்ல உடல்வாகு உள்ளவர்களால் மட்டுமே அங்கு செல்ல முடியும். ஏன் என்றால் பல இடங்களில் மலைப் பகுதியில் ஏறிச் செல்வது கடினமாக இருக்கும்.
ஆலயம் செல்ல தொடர்புக் கொள்ள விலாசம்:
Manager, Malola Guest House
Ahobilam 518 545, Kurnool District, A.P
Phone: 08519 – 252 025/0252 045
094905 15284/094407 9273
Manager, Malola Guest House
Ahobilam 518 545, Kurnool District, A.P
Phone: 08519 – 252 025/0252 045
094905 15284/094407 9273
சிங்க முகத்தைக் கொண்ட விஷ்ணுவே நரசிம்ம அவதாரத்தில் உள்ளவர் என புராணங்கள் கூறுகின்றன. அவருக்கு பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன. அவரை மனதார வேண்டித் துதித்தால் நாம் கேட்டதை தருவார் என்பது நம்பிக்கையாக உள்ளது.
நன்றி
மேலே உள்ள அனைத்துப் படங்களையும் தந்து உதவியவர்கள்
I acknowledge with thanks the following site for their consent to use all the photos reproduced above
http://www.divinebrahmanda.com/2010/01/sri-ahobilam-maha-kshetram-abode-of.html
I acknowledge with thanks the following site for their consent to use all the photos reproduced above
http://www.divinebrahmanda.com/2010/01/sri-ahobilam-maha-kshetram-abode-of.html
கருத்துகள்
கருத்துரையிடுக