இடுகைகள்

பிப்ரவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Uraiyur Kamalavalli Nachichiyar Temple

படம்
சாந்திப்பிரியா திவ்ய தேச ஆலயங்களில் இரண்டாவது எனக் கூறப்படும் ஸ்ரீ நாச்சியார் ஆலயம் திருச்சி நகரின் அருகில் உள்ள உறையூரில் உள்ளது. இங்குள்ள ஆலயத்தில் அமர்ந்த கோலத்தில் தாயார் கமலவல்லி நாச்சியார் எனும் லஷ்மி தேவியும், நின்ற கோலத்தில் அழகிய மணவாளன் எனும் மகாவிஷ்ணுவும் உள்ளார்கள். இந்த தலம் திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரத்திலும் இடம் பெற்று உள்ளது. இந்த ஆலயத் தலப் பெருமை என்ன என்றால் இங்கு ஒவ்வொரு வருடமும்  ஸ்ரீரங்கத்தில் இருந்து எம்பெருமான் வந்து லஷ்மி தேவியை மணக்கின்றாராம். அந்த திருமணத்தில் முப்பத்தி மூன்று கோடி தேவர்களும் வந்து தரிசனம் செய்ததாக ஐதீகமாக கூறப்படுகின்றது. இந்த ஆலயம் எழுந்த வரலாற்றுக் கதை சுவையானது. ஒருமுறை வனங்களில் வசித்து வந்த ரிஷி முனிவர்களுக்கு இடையே ஒரு சர்ச்சை  தோன்றியது. அது என்ன என்றால்  ரிஷி முனிவர்களை அதிகம் மரியாதை செலுத்தி மதிப்பவர் யார்? சிவபெருமானா, பிரும்மாவா இல்லை விஷ்ணுவா? சர்ச்சை பெரியதாகத் தொடர அவர்கள் அனைவரும் பிருகு முனிவரிடம் சென்று அவரை அதற்கான விடையை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். பிருகு முனிவரும் அதற்கா...

In search of a Guru- Life story of Narasimma Swamiji

படம்
சாந்திப்பிரியா இன்று அகில உலகமெல்லாம் புகழ்ந்து போற்றி வணங்கப்படும் சீரடி சாயிபாபாவின் புகழை இந்தியாவின் பல பாகங்களிலும் கொண்டு சென்ற பெருமை நரசிம்ம ஸ்வாமி என்பவரையே சாரும்.  அவரே அகில இந்திய சாயி சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கி பல இடங்களிலும் சாயியின் ஆலயங்கள் எழக் காரணமாக இருந்தவர். சாயிபாபாவின் புகழை இந்தியா முழுவதும் பரப்பியவர். அவர் வரலாறு சோகமானது. அதே சமயம் ஆன்மீக பக்தர்களின் மனதுக்கு இனிமையானது. அவர் தமிழ்நாட்டில் பிறந்தவர். பிராமணர் குடும்பத்தில் பிறந்தாலும் மனிதர்களை மனிதர்களாகவே மதிக்கப் பழகியவர். தமிழ்நாட்டில் ஈரோட்டில் உள்ள பவானி என்ற இடம் பிரபலமானது . அங்குதான் நரசிம்ம ஸ்வாமி அவர்கள் வெங்கடகிரி ஐயர் மற்றும் அவருடைய மனைவியான அங்கச்சி அம்மாள் என்ற பிராமணத் தம்பதியாருக்கு பிறந்தார். அவர் பிறந்த வேளையே விசித்திரமானதாக இருந்தது. கருத்தரித்து இருந்த அங்கச்சியம்மாள் வீட்டின் பின் புறத்தில் இருந்த மாட்டுக் கொட்டகையை நோக்கி நடந்து கொண்டு இருந்தபோது எந்த விதமான பிரசவ வலியும் இன்றி, எவருடைய துணையும் இன்றி வீட்டின் முற்றத்திலேயே நரசிம்ம ஸ்வாமி என பிற்காலத்தில் அழை...