இடுகைகள்

ஜூலை, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Sri Chakara Pooja and Sri Panjashari manthra

படம்
ஸ்ரீ வித்யா எனும் ஸ்ரீ சக்கர பூஜை மற்றும் ஸ்ரீமத் பஞ்சதசாக்ஷரி  மந்திர மகிமை சாந்திபிரியா இது ஒரு புராணக் கதையில் வரும் செய்தி . பராசக்தியை 'பஞ்சதசாஷரி ' என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்து அவளை பூஜிப்பதின் மூலம் உண்டாகும் நன்மையைப் பற்றி எடுத்துரைக்கும் கதை. முன்னொரு காலத்தில் தேவர்களை தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டு இருந்த திரிபுராசுரனை சிவபெருமான் வதம் செய்த பின்னரும் அவர் கோபமாகவே இருந்தார். அந்த அசுரனை வதம் செய்ய ஏற்படுத்திக் கொண்ட கோபம் மறையவே இல்லை. அது நீடித்தால் பரசுராமர் ஷத்ரியர்களை அழிக்கக் கிளம்பியது போல தமது இனத்தையே சிவபெருமான் அழித்து விடுவார் எனக் கலங்கினார்கள் அசுரர்களிலும் இருந்த பல நல்லவர்கள். ஆகவே அந்த அசுரனின் சந்ததியினர் விஷ்ணுவிடம் சென்று சிவபெருமானின் கோபம் தணிய என்ன செய்யலாம் எனக் கேட்டனர். அவருக்கும் ஒன்றும் வழி தெரியாமல் நாரதரையே அழைத்து அதற்கு ஒரு உபாயம் கூறுமாறு கேட்டார். நாரதர் யோசனை செய்தார். அவர் கூறினார் ' பிரபோ, இதற்கு ஏன் கவலைப் படவேண்டும், ஸ்ரீ தேவியின் மகா மந்திரத்தை உச்சரித்து ஸ்ரீ சக்கர பூஜையை செய்து விட்டால்...

Karudamale Temple, Kolar - 23

படம்
ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் -23 கருடமலே  விநாயகர் ஆலயம் சாந்திப்பிரியா பெங்களூர்- கோலார்- முல்பாகல் என்ற தடத்தில் கோலாருக்கு அருகில் உள்ளதே கருடமலே கணபதி ஆலயம். அந்த ஆலயம் பெங்களூரில் இருந்து 110 கிலோ தொலைவில் உள்ளது. பெங்களூரில் இருந்து வயிட்பீல்ட் சென்று அங்கிருந்து கோடிலிங்கேச்ஸ்வரர் என்ற இடத்தை அடைந்து அங்கிருந்து பிரியும் பாதையின் வழியே முல்பாகல் என்ற இடத்தை நோக்கிச் சென்றால் கருடமலே ஆலயம் உள்ள கிராமமான கருடமளே வரும். அது மிகச் சிறிய கிராமம். அந்த இடம் முன்னர் காடாக இருந்தது எனவும், காட்டில் பல மலைகள் ஒன்று சேர்ந்த இடம் போல அது தெரிந்ததினால் அதை காட்டு மலை என அழைக்க அதுவே பின்னர் கூட்டு மலை என ஆகி, கருடமலே என மருவி கருடமளே என ஆயிற்றாம் . இன்னொரு காரணம் அங்குதான் அடிக்கடி அனைத்து தேவர்களும் வந்து கூடினார்கள் எனவும் அதனால்தான் அந்த இதயத்தை தேவர்கள் காட்டில் கூடும் மலை என்பதைக் குறிக்க கூட்டு மலை என அழைத்தனர் எனவும் அதுவே மருவி கருடமலே என ஆயிற்று எனவும் கூறுகிறார்கள். அங்குள்ளவர்களில் பெரும்பான்மையோர் தெலுங்கு இல்லை கன்னடத்தை தாழ் மொழியாகக் கொண்டவர்கள்.  ஆலயத்தில்...

Tarot Devi Temple - Indo Pak Border Village

படம்
இந்திய எல்லை பகுதியில் உள்ள   மகிமை வாய்ந்த  ஆலயங்கள் தராட் தேவி ஆலயம்          சாந்திப்பிரியா   நாம் தென்னிந்தியாவில்தான் அதிக அளவு தமது கிராமத்தைப் பாதுகாக்கும் கிராம தேவதைகள் உள்ளன. ஆனால் அது போல நமது தேசத்தில் எல்லையையே பாதுகாத்து வரும் ஒரு துர்க்கை அம்மனைப் பற்றிய செய்தியை சமீபத்தில் படித்தேன். மிகவும் ஆச்சர்யமாக இருந்தது அந்த செய்தி. ராஜஸ்தானில் உள்ளது ஜெய்சல்மீர் என்ற இடம். அது பாகிஸ்தான் நாட்டின் எல்லையைத் தொட்டபடி உள்ள இடம். அந்த மாவட்டத்தில் உள்ளதே தராட் என்ற ஊர். எல்லைக்கு மிக அருகில் உள்ளது அந்த இடம். அங்குதான் துர்க்கை அம்மனின் அவதாரமான தராட் தேவியின் ஆலயம் உள்ளது. அந்த இடம் சுமார் கீ. பீ 837 ஆம் ஆண்டில் பாடீ ராஜபுத்திர மன்னன் தானு ராவ் என்பவரின் ஆளுமையில் இருந்ததாம். அவர் தரோட்டை தனது தலைநகரமாக வைத்து இருந்ததினால் அங்கு தராட் தேவியின் ஆலயத்தை அமைத்து வழிபாட்டு வந்தாராம்.பின்னர் அவர் தன் தலை நகரை ஜெய்சல்மீருக்கு மாற்றிக் கொண்டார். ஆனால் ஆலயாத்தையும் அந்த தேவியின் சிலையையும் அங்கேயே விட்டு விட்...

Thenkasi muththukumaraswami temple - 22

படம்
ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் -22 தென்காசி முத்துக்குமாரசுவாமி எனும் பாலசுப்ரமணியன் ஆலயம் சாந்திப்பிரியா  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் குற்றலாத்துக்கு அருகில் உள்ளதே ஆயிக்குடி என்ற கிராமம். அந்த கிராமத்தில் உள்ளது ஹனுமான் நாடி என்ற ஒரு நதி. அதன் கரையில்தான் முருகனின் ஆலயம் அமைந்து உள்ளது. அந்த ஆலயத்தில் உள்ள மூலவரின் மூர்த்தி பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது என்கிறார்கள். அது பூமியில் புதைந்து கிடந்தது எனவும் அதை வெளியில் எடுத்து ஆலயம் அமைந்ததாகவும் கூறுகிறார்கள். அந்த மூர்த்தி அந்த ஊரில் இருந்த மல்லான் என்பவருக்கு மல்லான் என்ற நதிக்கு உள்ளே கிடைத்ததாம். ஒரு காலத்தில் அந்த ஊரில் முருக பக்தர் சந்நியாசி என்பவர் நதிக்கரையில் தவம் செய்து கொண்டு இருந்ததாகவும் அவர் மரணம் அடைந்ததும் அவரது சமாதியை ஹனுமான் நதிக்கரையில் கட்டியதாகவும், அதன் பின் மல்லானுக்குக் கிடைத்த முருகனின் மூர்த்தியை அவருடைய கனவில் தோன்றி முருகப் பெருமான் கூறியபடியே முருக பக்தர் சமாதி மீது ஆலயம் அமைத்து அங்கு வைத்தனராம். படம் நன்றி:  http://kumbakonam-temples.blogspot.com/2009/08/balasubrama...

Sri Sri Jeyendrapuri Swaami

படம்
நான் சந்தித்த ஸ்வாமிகள்    ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலய பீடாதிபதி   ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர புரி ஸ்வாமிகள் சாந்திப்பிரியா பல வருடங்களுக்கு முன்னால் நான் ஒரு முறை பெங்களூரில் ராஜராஜேஸ்வரி ஆலயத்துக்குக் சென்று தரிசனம் செய்தப் பின் ஸ்வாமிகள் தங்கி இருந்த மடத்தில் சென்று அவரை சந்திக்கச் சென்றோம் . அப்போது ஸ்ரீ திருச்சி மகா ஸ்வாமிகள் உயிருடன் இருந்த காலம். மதியம் இரண்டரை மணி ஆகிவிட்டது. சுவாமிகளை அப்போது சந்திக்க முடியாது என காவலாளி தடுத்து நிறுத்தி விட்டார். ஆகவே திருச்சி மகா ஸ்வாமிகள் சரித்திரம் என்ற புத்தகத்தை அங்கிருந்த கடையில் இருந்து வாங்கிக் கொண்டு திரும்பினோம். அதன் பின் பல ஆண்டுகள் நான் அங்கு செல்லவே இல்லை. காரணம் நான் இருந்தது மத்தியப் பிரதேசத்தில். என்ன காரணத்தினாலோ அந்த புத்தகம் என்னை கவர்ந்தது , இரண்டு அல்லது மூன்று முறை அதைப் படித்தேன். அதை பத்திரமாக வைத்துக் கொண்டேன். 2005 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஒய்வு பெற்றப் பின் 2006 ஆண்டில் பெங்களூரில் வந்து வசிக்கத் துவங்கினேன். அநேகமாக 2006 ஆண்டு இறுதியில் என நினைக்கின்றேன். மீண்டும் ஒரு நாள்காலை ராஜராஜேஸ்வரி ஆலயத்துக்கு செல...

Kashmir Suth Magadev Temple - 21

படம்
ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் -21 காஷ்மீரத்து மலையில் சுத் மகாதேவ் சிவனாலயம் சாந்திப்பிரியா   காஷ்மீரத்தில்  ஜம்மூவில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்தானி என்ற ஊரில் உள்ள மலையில் சுத் மகாதேவ் என்ற சிவ பெருமான் ஆலயம் உள்ளதாம். பட்னிடோப் என்ற மழைப் பகுதியில் ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு மேல்  மலை உச்சியில்  உள்ள பதினாறு  அல்லது  பதினைந்தாம்  நூற்றாண்டை  சேர்ந்ததாக  கூறப்படும்   அந்த ஆலயம் குறித்து கூறப்படும் சுவையான கதை இது. ஆலயம் சுமார் 2800 ஆண்டுகளுக்கு முற்பட்டது.  அப்போது அந்த இடத்தில்   சுத் என்ற அசுரனும் வாழ்ந்து வந்தானாம். அவன் சிவ பக்தன். அவரிடம் இருந்து அறிய வரங்களைப் பெற்றவன். மாபெரும் உடலைப் பெற்றவன். அவன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி  வந்தான். அந்த நேரத்தில் ஒரு சமயம் சிவபெருமான் அந்த மலையில் தவத்தில் அமர்ந்து இருந்தார்.  அப்போது அவனால் பாதிக்கப்பட்ட தேவர்கள் வந்து சிவபெருமானிடம் அந்த அசுரன் செய்த கொடுமைகளைக் கூறி தம்மை அவன் கொடுமைகளில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டினார்கள். ஆகவே கோப...

Harsha matha Temple 16

படம்
தெரிந்த ஆலயம், பலரும் அறிந்திடாத செய்திகள் -16 ஹர்ஷா மாதா ஆலயம், குஜராத்    குஜராத் மற்றும் உஜ்ஜயினில்  ஹர்சித்தி அல்லது ஹர்ஷா மாதா ஆலயம் சாந்திப்பிரியா  முன்னொரு களத்தில் சிவபெருமானின் மனைவியான பார்வதி தட்ஷா யாகத்தின்போது தற்கொலை செய்து கொள்ள அவளை தூக்கிக் கொண்டு அனைத்து இடங்களிலும் சென்ற சிவபெருமானின் தோளில் இருந்தவளை விஷ்ணு துண்டு துண்டமாக வெட்டித் தள்ளி சிவனின் கோபத்தை அழித்தாராம். அப்போது அவள் உடல் விழுந்த இடங்களில் எல்லாம் ஒரு சக்தி ஆலயம் எழுந்ததாம். அதில் அவளுடைய முட்டி எலும்பு விழுந்த இடமே உஜ்ஜயினியில் ஹர்சித்தி மாதா ஆலயம் ஆயிற்றாம். இரண்டு ஆலயங்களுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். இன்னொரு கதை என்ன எனில் சாந்த் மற்றும் பிரசாந்த் என்ற இரு அசுரர்கள் தேவலோகத்தில் அட்டகாசம் செய்து கொண்டு அனைவரையும் துன்புறுத்தியபடி இருந்தனர். சிவனும் பார்வதியும் தாயக்கட்டை ஆடிக்கொண்டு இருந்த இடத்துக்குப் போய் அவர்களையும் தொந்தரவு செய்ய அவனுக்கு தானே கொடுத்த வரத்தினால் அவளை அடக்க முடியாமல் போன சிவன் பார்வதியிடம் அவனை அழிக்குமாறு வேண்டிக்கொள்ள அவள் விஷ்ணுவும் கா...

Baala Parameswari- Bheema nagari Temple

படம்
நமக்கெல்லாம் தெரியாத ஆலய செய்திகள் /விவரங்கள்  பீமாநாகரி அம்மன் அல்லது  பாலபரமேஸ்வரி ஆலயம் சாந்திப்பிரியா   நான் சமீபத்தில் ஒரு நண்பர் மூலம்  நாகர்கோவிலுக்கு  அருகில் உள்ள ஒரு ஆலயத்தைப் பற்றிய  சுவையான கதையைக்  கேள்விப்பட்டேன். அந்த செய்தியின் அடிப்படையில் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்டதே  இந்த கட்டுரை.      படம் நன்றி: http://en.wikipedia.org/wiki/BheemaNagari_Amman   நாகர்கோவில் திருநெல்வேலி நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து நான்கு கிலோ தொலைவில் உள்ளதே பீமாநாகரி என்ற சிறிய கிராமம். நாகர்கோவிலில் இருந்து அந்த கிராமத்துக்கு எளிதில் செல்ல முடியுமாம். அந்த கிராமத்தின் உள்ளே, வயல்வெளிகள் சூழ்ந்த பகுதியில் ஒரு அக்கிரஹாரத்தில் உள்ளதே பால பரமேஸ்வரி ஆலயம். அந்த அம்மனை கோமதி அம்மனின் அவதாரம் என்கிறார்கள். கோமதி அம்மன் பார்வதியின் அவதாரம். அந்த ஆலயம் வந்த கதை சுவையானது. சுமார் நானூறு அல்லது ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் களக்காடு என்ற ஊரில் ஒரு வைதீக பிராமணக்  குடும்பம் வாழ்ந்து வந்தது. விவசாயம் அவர்கள் தொழில். அவர...

Stories from Purana- 5

படம்
இது ஒரு புராணக் கதை-5 பசு எதனால் புனிதமாகக் கருதப்படுகின்றது? சாந்திப்பிரியா பசுவின் உடலில் லஷ்மி தேவி குடியிருக்கிறாள் என்பது மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால் அது எப்படி உலகிற்குத் தெரிய வந்தது என்பதற்கு ஒரு புராணக் கதை உண்டு. முன்னொரு காலத்தில் ஒரு முனிவர் தான் குபேரனுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக குபேரரைப் போலவே பல வருடங்கள் தண்ணீரில் முழுகி இருந்து தவம் செய்தார். அவர் தண்ணீரில் இருந்தது எவருக்கும் தெரியாது. ஒரு நாள் மீன் பிடிப்பவர்கள் தம் வலையை அந்த ஏரியில் போட்டு மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது அந்த முனிவர் அந்த வலையில் மீன்களுடன் மாட்டிக் கொண்டார். வெளியே வலையை இழுத்த மீனவர்கள் அதில் இருந்த முனிவரைக் கண்டு அதிசயித்தனர். ஆனால் தன் தவத்தைக் அவர்கள் கலைத்து விட்ட கோபத்தினால் அவர் அவர்களை சபிக்கப் போனபோது அவர்கள் தம்முடைய அறியாமையினால் செய்து விட்ட காரியத்துக்கு மன்னிப்புக் கேட்டார்கள். அவரும் அவர்களை மன்னிக்க ஒரு நிபந்தனை விதித்தார். அந்த ஊர் அரசனிடம் சென்று நடந்ததைக் கூறி தன் தகுதிக்கு சமமான அன்பளிப்பை கொண்டு வந்து தந்தால் அவர்களுக்கு சாபம் தர மாட்டேன் எனக் ...

Stories from Purana- 4

படம்
இது ஒரு புராணக் கதை- 4 குபேரன் செல்வத்தின் அதிபதியான கதை சாந்திப்பிரியா புலஸ்திய பிரஜாபதியின் மகன் விஸ்ரவஸ் என்பவர். பல காலம் குழந்தை இல்லாமல் இருந்தவருக்கு வெகு காலத்துக்குப் பிறகு பிருமாவின் அருளினால் நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் ஒருவர் ராவணன், மற்றவர் குபேரன். அசுரரானாலும் குபேரனுக்கு இருந்த நல்ல குணத்தைக் கண்ட தேவர்கள் அவரை தம்முள் ஒருவராக இருக்க கடலில் வந்து வாசிக்குமாறும், அனைத்து நதிகளும், நீர் நிலைகளும் அவரை வணங்கி வழிபடும் எனவும் கூற அவரும் அங்கு சென்றார். ஆகவே அந்த கடலுக்குள் இருந்த செல்வத்தினால் அவர் பல செல்வங்களைப் பெற்றார்.   ஆனால் நதிகளும் கடலும் மட்டுமே அவரை தலைவராக ஏற்றுக் கொண்டன.  ஆகவே அதை மாற்றி அனைவரும் தம்மை வணங்க வேண்டும் என விரும்பிய  குபேரன் சுமார் பத்தாயிரம் வருடங்கள்  கடலுக்குள் தனது தலையை மட்டும் முழுக வைத்துக் கொண்டு  தலைகீழாக  நின்று கொண்டு பிருமாவை வேண்டி தவம் இருந்தார். அத்தனை கடுமையான தவம் செய்தும் பிரும்மா அவருக்கு அருள் புரியவில்லை. ஆகவே ஒற்றைக் காலில் நின்றுகொண்டு பல நூற்றாண்டுகள் தவம் இருக்க அவருடைய கடு...

Soorakkudi Agni Veerabathirar Temple -15

படம்
தெரிந்த ஆலயம்,  பலரும் அறிந்திடாத வரலாறு - 15 சூரக்குடி அக்னி வீரபத்திரர் ஆலயம் சாந்திப்பிரியா   ஆலயங்களில் உள்ள அக்னி வீரபத்திரர் தோற்றம். அக்னி வீரபத்திரருக்கு மதுரை சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில் என்ற கிராமத்தின் அருகில் உள்ள சூரக்குடி என்ற சிறு ஊரில் பிரபலமான ஆலயம் உள்ளது. அங்கு உள்ள ஒரு அரச மரத்தடியில்தான் வீரபத்திரர் வந்து தங்கி இருந்து தவம் இருந்து தோஷத்தைக் களைந்து கொண்டாராம். அது மட்டும் அல்ல அந்த நேரத்தில் அவர் அந்த கிராமத்தின் தேவதையாக இருந்து ஊரைக் காத்து வந்தாராம். ஆகவே  ஊர்  மக்கள் அவருக்கு  ஒரு ஆலயம் எழுப்ப முயன்றனர். ஆனால் பல காலம் எத்தனை முயன்றும் கோவில் எழுப்ப முடியாமல் இருந்தது எனவும், ஆனால் ஒரு நாத்தீகருடைய கனவில் ஒரு நாள் வீரபத்திரர் தோன்றி தனக்கு அந்த இடத்தில் ஆலயம் அமைத்து வழிபடுமாறு கூற அவரும் ஊர் பஞ்சாயத்தில் அந்த செய்தியைக் கூறி ஆலயம் அமைத்ததாகவும் ஆலயத்தின் கதை உள்ளது. ஆலயத்தைப் பற்றியக்  கல்வெட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆலயம் எந்த காலத்தில் முதலில் தோன்றியது என்பதும் தெரியவில்லை அக்னி வீரபத்திரர் அங்கு வந்த கதை இத...

Meenkutty Meenashi amman Temple 20

படம்
ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் - 20 மீன்குளத்தி மதுரை மீனாஷி ஆலயம் சாந்திப்பிரியா     கேரளாவில் பள்ளசேனா என்ற சிறிய கிராமத்தில் உள்ளதே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டுள்ள மீன்குளத்தி மீனாஷி ஆலயம். ஆலயத்துக்கு கொடையனூர் சென்று அங்கிருந்து பள்ளசேனாவுக்கு செல்லலாம். இல்லை என்றால் பொள்ளாச்சி சென்று, அங்கிருந்து கோவிந்தபுரம் வழியே கொல்லன்கோட்டை அடையலாம். அல்லது பாலக்கட்டை சென்றடைந்து அங்கிருந்து எட்டிமறை என்ற ஊரின் வழியாக ஆலயத்துக்கு செல்லலாம். பாலக்காட்டில் இருந்து எவரும் ஊருக்குச் செல்லும் வழியைக் கூறுவார்கள். பல நூற்றாண்டுகள் முன்னர் வீர சைவ வெள்ளாளர்கள் என்ற சமூகத்தினர் கும்பகோணம், மதுரை, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்து கேரளாவுக்குச் சென்று வைர வியாபாரம் செய்து வந்தனர். நாளடைவில் அங்கு சென்று வருவது கடினமாக இருந்ததினால் பல குடும்பங்கள் பாலக்காட்டை உள்ளடக்கி இருந்த அன்றைய மலபாரில் சென்று தங்கினார்கள். அவர்கள் மதுரை மீனாஷி அம்மனை தமது குல தெய்வமாக கருதி வணங்கி வந்ததினால் போகும்போது தம்முடன் மீனாஷி அம்மன் ஆலயத்தில் இருந்து ஒரு கல்லையும் எடுத்துச் சென்று இருந்...

Wonderful Hindu Temples in Malaysia -4

படம்
வினோத வெளிநாட்டு ஆலயங்கள் -4 நாகேஸ்வரி  அம்மன்         சாந்திப்பிரியா முக்கிய அறிவிப்பு:-   நாம் அனைவரும் இதுவரை நம் நாட்டில்தான் பல மகிமைகள் வாய்ந்த ஆலயங்கள் உள்ளதாக நினைத்து இருப்போம் . ஆனால் பல அற்புதங்களை செய்துள்ள நம்முடைய ஆலயங்கள் மலேசிய நாட்டிலும் உள்ளன என்பதை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. ஆகவே அதைப் பற்றி நான் கேட்டறிந்தவுடன், அந்த ஆலயங்களைப் பற்றி இந்த தளத்தில் பிரசுரிக்க நண்பர் திரு குமரேஷ் பட்டுமலாயிடம் இருந்து ( kbatumalai@gmail.com ) அனுமதி பெற்று அவற்றை பிரசுரித்து உள்ளேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி . இவற்றை அவருடைய அனுமதி என்றி எவரும் வெளியிடக் கூடாது -  சாந்திப்பிரியா  நாகேஸ்வரி அம்மனின் திருவிளையாடல்   1945 ஆம் ஆண்டு பாம்பாட்டி சித்தர் வந்து கோலாலம்பூரில் இன்று ஆலயம் உள்ள இடத்தில் இருந்த புற்றை நாகேஸ்வரி அம்மன் உள்ள இடம் என அடையாளம் காட்டினார். அங்கு சிறிய ஆலயத்தை எழுப்பி பக்தர்கள் அந்த அம்மனை வழிபடத் துவங்கினார்கள். ஆனால் சில நாட்களிலேயே அந்த இடத்தில் ரயில்வே தடம் அமைக்க வேண...

Wonderful Hindu Temples in Malaysia - 3

படம்
வினோத வெளிநாட்டு ஆலயங்கள் -3  மகா மாரியம்மன்        சாந்திப்பிரியா முக்கிய அறிவிப்பு:-   நாம் அனைவரும் இதுவரை நம் நாட்டில்தான் பல மகிமைகள் வாய்ந்த ஆலயங்கள் உள்ளதாக நினைத்து இருப்போம் . ஆனால் பல அற்புதங்களை செய்துள்ள நம்முடைய ஆலயங்கள் மலேசிய நாட்டிலும் உள்ளன என்பதை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. ஆகவே அதைப் பற்றி நான் கேட்டறிந்தவுடன், அந்த ஆலயங்களைப் பற்றி இந்த தளத்தில் பிரசுரிக்க நண்பர் திரு குமரேஷ் பட்டுமலாயிடம் இருந்து ( kbatumalai@gmail.com ) அனுமதி பெற்று அவற்றை பிரசுரித்து உள்ளேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி . இவற்றை அவருடைய அனுமதி என்றி எவரும் வெளியிடக் கூடாது -  சாந்திப்பிரியா    மகா மாரியம்மன்  மகிமை  சுங்கை ரெங்கம் என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் ஆலயம் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு குடியேறிய தோட்டத் தொழிலாளிகளினால் கட்டப்பட்டதாம். ஆலயத்தில் உள்ள மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இந்த ஆலயத்துக்கு இன்றும்  வந்து கொண்டு இருக்கும் எழுபத்தி இரண்டு வயதான மூதாட்டி தன்னுடைய ஏழாவது வய...

Kerala Saraswathi Devi Temple - 19

படம்
ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் -19 தட்சிண மூகாம்பிகை அல்லது சரஸ்வதி ஆலயம் சாந்திப்பிரியா நாம் அனைவரும் கல்வி அறிவு பெருக கூத்தனூரில் உள்ள சரஸ்வதி ஆலயத்துக்கு சென்று வழிபடுவது உண்டு. ஆனால் அது போல வித்யாபலம் கிடைக்க ( கல்வியறிவு பெருக) கேரளாவிலும்  ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சரஸ்வதி ஆலயம் உள்ளது என்பது பலருக்கும் தெரியவில்லை. அந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அந்த ஆலயம் உள்ள இடம்  கோட்டயத்தில் இருந்து பத்து அல்லது பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ள பண்ணாசிக்காடு என்ற சிறிய கிராமம். கோட்டயத்தில் இருந்து சாங்கனச்சேரி என்ற ஊருக்குச் செல்லும் பிரதான சாலையில் சென்றால் சின்காவனம் என்ற இடம் வரும். அங்கிருந்து சுமார் நாலு அல்லது ஐந்து கிலோ தொலைவில் உள்ளது ஆலயம். பஸ் வசதிகள் நிறைய உள்ளன. அந்த இடத்தில் இறங்கி எவரைக் கேட்டாலும் ஆலயம் செல்லும் வழியைக் கூறுவார்கள். ஸ்வயம்பு தேவியாக  சரஸ்வதி  வந்த இடம். அது பற்றியக் கதை இது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அந்த கிராமத்தில் வைதீக பிராமணர் குடும்பம் இருந்தது. அந்த குடும்பத் தலைவர் ஒவ்வொரு ஆண்டும் ...

Vaikom Magadev Temple -- 18

படம்
ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள்- 18 பரசுராமர் நிறுவிய மகாதேவர் ஆலயம் சாந்திப்பிரியா கோட்டயம் மற்றும் திருவனந்தபுரத்துக்கு இடையே கோட்டயத்தில் இருந்து சுமார் நாற்பது கிலோ தொலைவில் உள்ளதே மகாதேவர் ஆலயம். அது சிவ பெருமானின் ஆலயம். கொச்சினில் இருந்து சுமார் முப்பது கிலோ தொலைவில் இருக்கும். ஆலயத்தில் நான்கு பிராகாரங்கள். அனைத்தும் கறுப்புக் கல்லில் கட்டப்பட்டு உள்ளன. ஆலயத்தில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் ஐந்து அடியாம். அந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தைப் பற்றி இரண்டு விதமான கதைகள் உள்ளன. படம் நன்றி:- http://en.wikipedia.org/wiki/Vaikom_Temple அந்த சிவலிங்கமும் அதைப் போலவே மேலும் இரண்டு சிவ லிங்கங்களும் காரா என்ற முனிவருக்கு அவர் நதியில் குளித்துக் கொண்டு இருந்தபோது கிடைத்தன எனவும், அதை எடுத்து வந்தவர் வைகோம், காடுதுரோத்தி மற்றும் இட்டமனூர் என்ற மூன்று இடங்களில் வைத்து வழிபட்டார் எனவும் கூறுகிறார்கள். சிலர் அது அப்படி இல்லை அது காரா என்கின்ற அசுரனுக்கு சிதம்பரத்தில் சிவ பெருமானே தந்து அதில் தான் உள்ளதாகவும் அதை வணங்கினால் பெரும் நன்மை கிட்டும் எனக் கூறியதாகக்...

Stories from Purana- 4

படம்
ஒரு புராணக் கதை - 4 நாரத  முனிவர்  தேவர்களை  காத்த  கதை. சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் ஹுண்டா என்ற ஒரு அசுரன் இருந்தான். அவன் மிகவும் பலசாலி. அவனை தேவர்களால் வெற்றி கொள்ள முடியவில்லை. அடிக்கடி தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை எழுந்து கொண்டே இருந்தது. ஒரு முறை ஹுண்டாவுக்கும்  தேவர்களுக்கும் எழுந்த சண்டையில் யுத்தம் பல வருடங்கள்  தொடர்ந்து நடந்தது. அதில் நஹுஷா தேவர்களுக்கு தலைமை தாங்கி யுத்தத்தை நடத்தினான். ஹுண்டா யுத்தத்தில் மரணம் அடைந்தாலும் அவன் மகன் அந்த யுத்தத்தை தொடர்ந்தான்.  அவனும் தந்தையைப் போல மகா பலசாலிதான்.  அது மட்டும் அல்ல தனக்கு இன்னும் அதிக சக்தி வேண்டும் என்பதற்காக கடுமையான தவத்தில் அமர்ந்து தன்னை எவரும் அழிக்க முடியாத சக்தியைப் சிவ பெருமானிடம் இருந்து பெற்றான். அவனை அழிக்க வேண்டுமானால் சிவபெருமானின் மனைவியான பார்வதியாலேயே முடியும் எனவும், அதுவும் அவன் சிவனின் காலடியில் பூஜை செய்யும்போது மட்டுமே  நடக்க முடியும் என்றவாறு வரம் பெற்றான். சிவனின் காலடியில் பூஜை செய்யும்போது யார் எதற்காக அவனுடன் போய் சண்...

Stories from Purana -3

படம்
ஒரு புராணக் கதை -3 விஷ்ணு ஹயகிரீவர் தலை பெற்ற கதை. சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் ஹயக்கிரீவன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் பெற்றிருந்த ஒரு சாபத்தின் காரணமாக அவன் தலை மட்டும் குதிரையின் தலையாக இருந்தது. அவன் கஷ்யபிரஜாபதியின் மகன் இன்று கூறுவார்கள். அவன் அசுரனாக இருந்தாலும் நல்லவனாகவே இருந்தான். ஒரு முறை அவன் சரஸ்வதி நதிக்கரைக்குச் சென்று தேவியை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் இருந்து தன்னை எவராலும் எளிதில் அழிக்க  முடியாத வரத்தை வேண்டிப் பெற்றான். அந்த வரத்தின்படி அவனை எவராலும் அழிக்க முடியாது. ஆனால் எவர் ஒருவருடைய தலை குதிரையாக உள்ளதோ அவரால் மட்டுமே அவனைக் கொல்ல முடியும்.  அதுவரை நல்லவனாக இருந்தவன் அந்த வரம் கிடைத்ததும் நல்ல குணத்தைத் துறந்தான். தேவர்களை கொடுமை படுத்தலானான். அனைவரையும் கொல்லத் துவங்க தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று அவரிடம் முறையிட்டனர். அவரும் தமது படையினருடன் சென்று அவனுடன் போர் புரிந்தார். ஆனால் அவனை அழிக்க முடியவில்லை. யுத்தம் பல ஆண்டுகள் தொடர்ந்தது. களைப்படைந்த தேவர்கள் தேவியிடம் சென்று வேண்டினர். அவளும் அவர்களுக்கு ஒரு வில் அ...