இடுகைகள்

Thirupathi Sree Venkateswarar - 13

படம்
சாந்திப்பிரியா    அதைக் கேட்ட நாரதருக்கும் பிரும்மாவிற்கும் அழுகையே வந்து விட்டது.  தேவை இல்லாமல் இப்படி ஒரு காரியம் நடக்க நான் காரணமாகி விட்டேனே என நாரதர் வினசப்பட்டார்.  ஆனால் அவற்றை இப்போது யோசனை செய்ய நேரமில்லை.  'இப்போது உடனடியாக நாம்  செய்ய வேண்டிய காரியம் பட்டினியாகக் கிடக்கும் விஷ்ணுவிற்கு ஆகாரம் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று  சிவபெருமானிடம் மன்றாடிய பிரும்மாவை  சமாதானப் படுத்தினார் சிவபெருமான்.  விஷ்ணு  இப்போது  பூமியில் உள்ளதினால் பூலோகவாசியாக உருவை எடுத்துதான் நம்மால் அதை செய்ய முடியும். அதற்கான ஒரே வழி இந்த காரியத்தை செய்ய லஷ்மியும் உடன்பட வேண்டும்.  ஆகவே அவளையும் அழைத்துக் கொண்டு பூலோகம் சென்று ஏதாவது செய்யலாம் என முடிவு செய்தார்கள்.   லஷ்மியைப் பார்க்கப் போகும் வழியில் என்ன உருவம் எடுத்து அந்த வனத்தில் போய் தங்குவது? எப்படி விஷ்ணுவிற்கு உணவு அளிப்பது என்று பல்வேறாக யோசனை செய்தார்கள். அவர்கள் மூவரும் லஷ்மி தவத்தில் இருந்த இடத்தை அடைந்தார்கள். லஷ்மியை தவத்தில் இருந்து எழ...

Thirupathi Sree Venkateswarar -12

படம்
சாந்திப்பிரியா  நடந்ததை நினைத்து விஷ்ணு கவலைக் கொண்டார். ஒரு சிறிய விஷயத்திற்காக இப்படி தன்னை விட்டு  லஷ்மி  விலகிச் சென்று விட்டாளே என்று துக்கம் ஏற்பட்டது.  லஷ்மியும் வைகுண்டத்தை விட்டுச் சென்றப் பின் வைகுண்டம் களை இழந்து காணப்பட்டது.  படோபகாரங்கள் இல்லை. வைகுண்டத்தில் இருந்தவர்களோ ஏனோ தானோ என்று இருந்தார்கள். எங்கு சென்றாலும்  'பெருமானே, லஷ்மி தேவி எங்கே சென்று விட்டாள். அவள் இல்லாமல் இந்த லோகம் வெறிச்சோடிக் கிடக்கிறதே.  லஷ்மி தேவி இங்கு இல்லாததினால் முன்னைப் போல பூமியிலும் மக்கள் எம்மை ஆராதித்து அழைக்காமல் பூஜை புனஸ்காரங்களை செய்வதில்லை. அதனால்  எங்களுக்குக் கிடைக்க வேண்டிய அவிர் பாகம் கூட எங்களுக்கு கிடைப்பது இல்லையே. நாங்கள் ஒரு விதத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் போல இருப்பதாக  அல்லவா உணர்கிறோம்' என்று கூறி கண்ணீர் விட்டார்கள். அவற்றைக் கேட்ட விஷ்ணு கவலைக் கொண்டார். ஆகவே அவளைத் தேடிக் கொண்டு லோகம் லோகமாக- இந்தரலோகம், சந்ரலோகம், தேவலோகம், பாதாளம், கைலாயம் என அனைத்து இடங்களிலும்  சுற்றி அலைந்தவர் அவளை எங்குமே...

Thirupathi Sree Venkateswarar -11

படம்
சாந்திப்பிரியா  லஷ்மி தேவி ஏன் ஆகாசராஜனுக்கு மகளாகக் கிடைக்க வேண்டும் என்பதின் காரணம் லஷ்மி தேவி கோபத்தினால் விஷ்ணுவை பிரிந்து சென்று விட்ட கதை மற்றும் ஸ்ரீனிவாசர் பிறந்தக் கதையுடன் ஒன்று சேர்ந்தது. ஆகாசராஜன் முன் பிறவியில் வராக ஷேத்திரம் எனும் நாட்டை ஆண்டு வந்த ஒரு சோழ மன்னனாக இருந்தவர். அந்த சோழ மன்னன்  விஷ்ணுவின் சாபத்தினால் சில காலத்துக்கு ஒரு பிசாசாக இருந்தப் பின்னர் மீண்டும் மனித உருவில் ஆகாசராஜனாகப் பிறந்தவர். இனி லஷ்மி தேவி விஷ்ணுவை பிரிந்து சென்றக் கதையையும் அதன் பின் அவள் ஆகாசராஜனின் மகளாக பிறந்தக் கதையையும் படிக்கலாம். லஷ்மி தேவி விஷ்ணுவை பிரிந்தாள்  முன்னர் கூறியபடி முனிவர்கள் செய்த யாகத்தில் அதித்தியாக மும்மூர்த்திகளில் யாரையாவது அழைக்கலாம் என எண்ணி  பிருகு முனிவர் சென்றபோது நடந்தக் கதையைப் பார்த்து விட்டோம். அதில் விஷ்ணுவை லஷ்மி தேவிக்கு முன்னால் பிருகு முனிவர் அவமானப்படுத்தி விட்டுச் சென்று இருந்தார்.  அதனால் லஷ்மி தேவி கோபம் அடைந்தாள்.  தனது கோபத்தை கணவரிடம் காட்டிய பின் அவரை விட்டு விலகிச் சென்று விட்டாள்....

Thirupathi Sree Venkateswarar - 10

படம்
 சாந்திப்பிரியா    ஆகாசராஜனின் அரசாட்சியில் மக்கள் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். வெகு காலம் ஆகியும் அவனுக்கு குழந்தைப் பேறு இல்லை. ஆகவே மனம் ஒடித்து போனவன் குழந்தை வரம்  வேண்டி பல யாகங்களை செய்தவண்ணம் இருந்தான். அவர் வேண்டாத தெய்வங்கள் இல்லை. செய்யாத தானங்கள் இல்லை.  எதற்குமே பலன் தெரியவில்லை என்பதினால் முடிவாக புத்திர காமேஷ்டி யாகம் ஒன்றை செய்யத் துவங்கினார். அந்த யாகத்தில் நெல்லை நெய்வித்தியமாகப் படைத்து, யாக முடிவில் ஒரு விளை நிலத்தில் மன்னனே கலப்பையினால் சிறு இடத்தை உழுது, அந்த நெல்லை அதில் பயிரிட்டு  மனைவியுடன் லஷ்மி நரசிம்ம பூஜையை அந்த நிலத்திலேயே செய்து  'ஐயனே இந்த நெல் முளைத்து பயிராகி தானியத்தை தருவது போல எனக்கும் ஒரு குழந்தை எனும் தானியத்தை தர வேண்டும்' என வேண்டிக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பண்டிதர்கள் கூற  மன்னனும் முழு நம்பிக்கையுடன் அந்த யாகத்தை செய்து முடித்தப் பின், அந்த நெய்வித்தியம் செய்த நெல்லை ஒரு விளை நிலத்துக்குப...

Announcemnt

சிறு செய்தி  இந்த தொடர் முடிந்ததும் பாராயணம் செய்ய வசதியாக இருக்கும் வகையில் இடை இடையே நான் தந்துள்ள விளக்கங்களை எடுத்து விட்டு,  ஜீவ சரித்திரத்தை மட்டும் பாராயணம் செய்யும் வகையில் சிறிய புத்தக வடிவில்  இதில் PDF வடிவில் வெளியிட உள்ளேன்.  அப்போது ஜீவ சரித்திரத்தில் படிக்க வேண்டிய பகுதிகளை  மட்டும்  நீங்கள் புத்தக வடிவிலேயே நேரடியாக படிக்க இயலும்.  இதை முதல் முயற்சியாக  செய்ய உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Thirupathi Sree Venkateswarar - 9

படம்
சாந்திப்பிரியா  சிறு விளக்கம் : கதையை மேலே தொடரும் முன் இங்கு ஒரு செய்தியை விளக்க வேண்டும். பரப்பிரும்மனால் படைக்கப்பட்ட மும்மூர்த்திகளுக்கு மூன்று மனைவிகள் இருந்தார்கள். மும்மூர்த்திகளைப் போலவே அவர்களின் மனைவிகளினாலும் ஒரே நேரத்தில் பல்வேறு மாய அவதாரங்களை எடுக்க முடியும். வெவ்வேறு அவதார தோற்றத்தை அந்த மாய உருவங்கள் வெளிப்படுத்தினாலும், அனைத்து அவதாரங்களும் அவர்களின் பிம்பங்களே. ஒவ்வொரு கடவுளுக்கும் பல அவதாரங்கள் உண்டு. சில நேரங்களில் அவர்கள் ஒரே நேரத்தில் பல அவதாரங்களை எடுப்பார்கள். அவற்றில் உண்மை அவதாரத்தை விட்டு மற்ற அனைத்துமே துணை அவதாரங்கள். அந்த துணை அவதாரங்களுக்கு அதிக காலம் ஒதுக்கப்படுவது இல்லை. இருப்பது போல காணப்பட்டு, அப்படியே மறைந்தும் விடுவார்கள். ஆகவேதான் லஷ்மி தேவியானவள் ஒரே நேரத்தில் சீதை மற்றும்  வேதவதியாக தோன்ற முடிந்தது. ஓரே ஆத்மா எப்படி பல உடல்களாகத் தோன்ற முடியும் என்று யோசிக்கிறீர்களா?  கடவுட்களுக்கு ஆத்மா என்பது  கிடையாது. உண்மையில் முதலில் பரப்பிரும்மன் படைத்தது பல லட்சக் கணக்கான ஜீவன்களைக் கொண்ட மும்மூர்த்திகளை...

Thirupathi Sree Venkateswarar -8

படம்
சாந்திப்பிரியா  லஷ்மி தேவியின் பூர்வ ஜென்மக் கதை  ராமர் மற்றும் சீதை பூமியிலே பிறவி  எடுத்து இருந்த அதே நேரத்தில் அயோத்திப் பட்டணத்தின் அருகில் இருந்த நாட்டை பத்மவாசன் என்றொரு மன்னன் ஆண்டு வந்தார். அவர் தீவீர  விஷ்ணு பக்தர். நீதி நெறி தவறாமல் ஆட்சி செய்து வந்தவருக்கு குழந்தைப் பேறு இல்லையே என்றக் குறை இருந்ததினால், பல ஆண்டு காலம் லஷ்மி விரதம் இருந்து லஷ்மி தேவியைப் போல ஒரு பெண் தனக்குப் பிறக்க வேண்டும் என வேண்டி வந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கனவு நனவானது. அவருக்கு மிக அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. அங்க லட்சணம் அனைத்துமே லஷ்மி தேவிக்கு இணையாகவே இருந்தது. பல கலைகளிலும் வல்லவளாக வளர்ந்து வந்த பெண் பருவம் அடைந்தாள். அவளால் பல மாய உருவங்களையும் எடுக்க முடிந்திருந்தது. பல சக்திகளையும் அடைந்து இருந்தாள். வயதுக்கு வந்து விட்டப் பெண்ணுக்கு திருமணம் செய்ய நினைத்த மன்னன் சுயம்வரம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அவள் திருமணம் செய்து கொள்வதற்கு  மறுத்தாள்.  தன்  மனதில் ராமபிரானே உள்ளதினால், அவரையே தான்  மணக்க ...