Thula Puranam - 19

துலா புராணம்- 19 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா பாகம்- 20 அகஸ்தியர் ஸ்நானம் செய்து விட்டு பெரும் காற்றும் மழையுமாக இருக்கிறதே என்று பயந்து கொண்டு ஓடோடி வந்தார். வந்தவர் கமண்டலம் கவிழ்ந்து இருந்ததைக் கண்டார். 'ஐயோ, காவேரி எங்கு போய் விட்டாள்' என்று அங்கும் இங்கும் தேடி அலைந்தப் பின் ஆஸ்ரமத்திற்கு சென்று தமது சிஷ்யர்களிடம் 'காவேரி எங்கே' என்று கேட்டார். அவர்களும் பயந்து போய் 'குருவே, நாங்களும் ஸ்நானம் செய்யச் சென்றபோது பெரும் காற்று அடித்ததே என்று ஓடி வந்தோம். வந்து பார்த்தால் கமண்டலம் கவிழ்ந்து இருந்தது. பெரும் நதியே அந்த இடத்தில் காணப்பட்டது' என்று கூறினார்கள். அகஸ்தியருக்கு துக்கம் தாங்க முடியவில்லை. தன்னிடம் காவேரியை ஒப்படைத்து இருந்த பிரும்மா கேட்டால் என்ன சொல்வேன் என்று அழுதபடி அந்த நதி பிறந்து இருந்த இடத்த்குக்குச் சென்று 'காவேரி, காவேரி' எனக் கதறினார் . காவேரி நீ எங்கு சென்றுவிட்டாய் எனக் கதறிய அகஸ்திய முனிவர் முன் நதியில் இருந்து தோன்றினாள் காவேரி உடனே காவேரியும் அந்த நதியில் இருந்து வெளி ...