இடுகைகள்

Thula Puranam - 19

படம்
துலா புராணம்- 19 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா பாகம்- 20 அகஸ்தியர் ஸ்நானம் செய்து விட்டு பெரும் காற்றும் மழையுமாக இருக்கிறதே என்று பயந்து கொண்டு ஓடோடி வந்தார். வந்தவர் கமண்டலம் கவிழ்ந்து இருந்ததைக் கண்டார். 'ஐயோ, காவேரி எங்கு போய் விட்டாள்' என்று அங்கும் இங்கும் தேடி அலைந்தப் பின் ஆஸ்ரமத்திற்கு சென்று தமது சிஷ்யர்களிடம் 'காவேரி எங்கே' என்று கேட்டார். அவர்களும் பயந்து போய் 'குருவே, நாங்களும் ஸ்நானம் செய்யச் சென்றபோது பெரும் காற்று அடித்ததே என்று ஓடி வந்தோம். வந்து பார்த்தால் கமண்டலம் கவிழ்ந்து இருந்தது. பெரும் நதியே அந்த இடத்தில் காணப்பட்டது' என்று கூறினார்கள். அகஸ்தியருக்கு துக்கம் தாங்க முடியவில்லை. தன்னிடம் காவேரியை ஒப்படைத்து இருந்த பிரும்மா கேட்டால் என்ன சொல்வேன் என்று அழுதபடி அந்த நதி பிறந்து இருந்த இடத்த்குக்குச் சென்று 'காவேரி, காவேரி' எனக் கதறினார் . காவேரி நீ எங்கு சென்றுவிட்டாய் எனக் கதறிய   அகஸ்திய முனிவர் முன் நதியில் இருந்து தோன்றினாள்  காவேரி  உடனே காவேரியும் அந்த நதியில் இருந்து வெளி ...

Thula Puranam -18

படம்
துலா புராணம்- 18 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா பாகம்- 19 அவர் குரலைக் கேட்டவள் கண்களை விழித்து எழுந்தாள் . அவரை நமஸ்கரித்து அர்கியம் பாத்யம் முதலியவற்றை தந்தாள். அப்போது அகஸ்தியர் கூறினார் ' தேவி நான் பிரும்மாவின் கட்டளைப்படி இங்கு வந்துள்ளேன். என் ஆசையை நிறைவேற்ற வேண்டும்'. உடனே அவள் கூறினாள் 'முனீஸ்வரா, நீங்கள் கூறியதை நான் செய்வேன். ஆனால் நீங்களும் என்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். நான் விஷ்ணுமாயா என்ற தேவ கன்னிகை. பிரும்மாவினால் படைக்கப்பட்டவள். என்னுடைய இன்னொரு அம்சம் லோபாமுத்ரா என்பவள் ஆவாள். லோக ஷேமத்திற்காக நான் காவேரி எனும் நதியாக மாறி தென் திசையில் பயணம் செய்ய உள்ளேன். பதினான்கு லோகங்களிலும் உள்ள அறுபத்தி நான்கு கோடி தீர்த்தங்களும் நதி ரூபமாக என்னுடன் வரட்டும். என் நதியில் ஒருநாள் ஸ்நானம் செய்தாலும் கூட யாகங்கள் மற்றும் விரதங்களைனால் கிடைக்கும் புண்ணியத்தைப் பெறவேண்டும் . என் கரையில் உள்ள பூமி சத்ய பூமியாக விளங்கும். என் அருகில் ஒருமுறை சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் அதீத திருப்தி அடைந்து வைகுண்டம் செல்வா...

Thula Puranam - 17

படம்
துலா புராணம்- 17 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா பாகம்- 18 அடுத்து அகஸ்தியரை மீண்டும் வணங்கி எழுந்த அரிச்சந்திரன் அவரிடம் கேட்டார் ' முனிவரே, தயவு செய்து காவேரி ஆறு பிறந்தக் கதை மற்றும் அதன் மகத்துவம் போன்றவற்றை எமக்குக் கூறுவீர்களா?' என்று கேட்டான். அகஸ்தியர் அந்தக் கதையைக் கூறலானார் ''முன்னொரு காலத்தில் கவேரன் என்ற ஒரு ராஜ ரிஷி இருந்தார். அவர் சகல வித்தையிலும் சிறந்தவர். தெளிவான ஞானம் கொண்டவர். சில காலம் மிக கர்வியாக இருந்தப் பின் மனம் மாறி ஆன்மீக வாடைக் கொண்டார். தான் மோட்ஷம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்தையும் துறந்து விட்டு ஹிமய மலை அடிவாரத்தில் சென்று தவம் இருக்கலானார். அவருடைய தவத்தை மெச்சிய பிரும்மா அவர் முன் தோன்றி 'உனக்கு என்ன வேண்டும்' என்று அந்த மன்னனிடம் கேட்டார். அவன் தனக்கு மோட்ஷம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தவம் இருந்ததாகக் கூற பிரும்மா மாயாதேவியை அழைத்தார். அவள் அவர் முன் வந்து நின்றதும் பிரும்மா அவளைப் பார்த்துக் கூறினார் ' மகளே, நீ இந்த யோகிக்கு மகளாகத் தோன்றி அவருக்கு முக்தி அளிக்க ...

Thula Puranam -16

படம்
துலா புராணம்- 16 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா பாகம்- 17 சந்தேகம் வந்ததும் கண்களை மூடிக் கொண்டு நிஷ்டையில் அமர்ந்து உள்ளது போல இருந்த அர்ஜுன சன்யாசியிடம் சென்று அவள் கேட்டாள் 'ஸ்வாமி உங்களைப் பார்த்தால் எனக்கு நீங்கள் சன்யாசி போல தோன்றவில்லை. நான் பல காலமாக அர்ஜுனனை மனதில் நினைத்து ஏங்கிக் கொண்டு இருக்கிறேன். ஒருவேளை நீங்கள்தான் அர்ஜுனனோ என்றும், இப்படி போலி வேடம் அணிந்து கொண்டு என்னைக் காண வந்துள்ளீர்களோ என்று மனம் நினைக்கின்றது. ஆகவே உண்மையில் நீங்கள் யார் என்பதை எனக்கு தெரியப்படுத்த வேண்டும்'. அர்ஜுன  சன்யாசியிடம்  அவர் சன்யாசிதானா  என்பதைக்  குறித்து  தனக்கு  சந்தேகம் உள்ளதாக   சுபத்ரை கூறினாள்  அவள் குரலைக் கேட்டதும் மூடிய கண்களைத் திறந்த அர்ஜுனன் மெல்ல சிரித்து விட்டு அவளிடம் தான் வந்துள்ள அனைத்து விஷயத்தையும் கூறினார். ஆனால் கிருஷ்ணர் இடையில் இருந்ததையும், அவர் கூறிய தந்திரங்களையும் மட்டும் கூறவில்லை. அதைக் கேட்ட அவள் ஆனந்தம் அடைந்தாள். அவள் கூறினாள் 'பார்த்தா, நான் உன்னை ம...

Thula puranam -15

படம்
துலா புராணம்- 15 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா பாகம்- 16 அங்கிருந்து கிளம்பிய அர்ஜுனன் வியாச முனிவருடைய ஆஸ்ரமத்துக்கு சென்று தான் தீர்த்த யாத்திரைக்கு செல்வதற்கான காரணத்தைக் கூறிய பின், தனக்கு கிருஷ்ணருடைய சகோதரியான சுபத்ரையை மணக்க ஆசையாக உள்ளதாகவும், அதற்கு அவருடைய ஆசிகளையும் அருளையும் தர வேண்டும் என்று வேண்டினான். அதைக் கேட்ட வியாச முனிவர் அவனிடம் கூறினார் ' தனஞ்சயா, உன்னுடைய ஆசை மிகப் பெரியது. அதை அடைவது கடினம் என்றாலும் நீ பிரயர்தனப்பட்டால் அவளை மணம் செய்து கொள்ள முடியும். அதற்கு நீ முதலில் செய்ய வேண்டியது சர்வ மங்களத்தையும் சித்தியையும் தரக்கூடிய லஷ்மி ஹிருதய தோத்திரத்தைத்தான். அது சகல நோய்களையும் நீக்கி ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கூட விருத்தி தரும் வல்லமைப் படைத்தது. அதை ஆராதிப்பத்தின் மூலம் நீ மனதில் விரும்பியதை அடைய முடியும். அதை நான் உபதேசிக்கிறேன் கேட்டுக் கொள்' என்று கூறிய பின் அவனுக்கு அந்த மந்திரத்தை உபதேசம் செய்தார். அதை மூன்று வேளை ஜெபிக்க வேண்டும். வெள்ளிக் கிழமைகளில் ஜெபித்தால் அதன் சக்தி மும்மடங்காக இருக்கும். ...

Thula Puranam -14

படம்
துலா புராணம்- 14 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா பாகம்- 15 பாண்டவர்களுடன் திரௌபதி மனமொத்து பல காலம் வாழ்ந்து கொண்டு இருந்தாள். அப்போது ஒரு முறை பாண்டவ சகோதரர்களின் ஒப்பந்தத்தின்படி அவள் தர்மருடன் வசிக்க  வேண்டி இருந்தது.  அவர்களும் ஆனந்தமாக காலத்தை  ஓட்டிக் கொண்டு ராஜ்ய பரிபாலனத்தையும்  பார்த்துக் கொண்டு இருந்தார். இப்படி இருக்கையில் ஒருநாள் அரண்மனை வாயிலில் ஒரு பிராமணர்  'ஐயா, என் பசுக்களைக் காப்பாற்றித் தாருங்கள், என் பசுக்களைக் காப்பாற்றித் தாருங்கள்' எனக் கதறியவாறு அர்ஜுனனிடம் வந்தார். அவரைக் கண்ட அர்ஜுனன் அவரை ஆஸ்வாசப்படுத்தி என்ன ஆயிற்று என்று கேட்டான். அந்த பிராமணர் கூறினார் ' அர்ஜுனா நான் வைத்து இருந்த பசுக்களும், அவற்றில் இருந்து பால் கறக்கும் பாத்திரங்களையும் ஒருவன் திருடிக் கொண்டு போய் விட்டான். நாம் எந்த நாட்டில் உள்ளோமோ அந்த நாட்டில் இப்படி ஒரு திருட்டு நடந்தால் ஒன்று திருடனை அரசர் பிடித்துக் பொருட்களை மீட்டுக் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் எவ்வளவோ களவு போயிற்றோ அதை அரசர் ஈடு  வேண்டும். அப்படி இல...

Thula Puranam- 13

படம்
துலா புராணம்- 13 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா பாகம்- 14 திரௌபதி கேட்டாள்' யோகீஸ்வரா, எதனால் எங்களுக்கு கேசவன் மீது பக்தி ஏற்படும்?  எங்களுக்கு நரகம் கிடைக்காமல் இருக்க என்ன வழி? வேதங்கள் கூறும் நன்னெறியை எமக்குக் கூறுவீர்களா?' . அதைக் கேட்ட நாரதர் கூறத் துவங்கினார் '  திரௌபதி, விஷ்ணு பக்தியினால் சம்சாரக் கடலை எளிதில் கடக்க முடியும். பதிக்கு பணி செய்வதே பெண்களின் தர்மம் என்பார்கள்.  பெண்கள் பதியைத் தவிர  வேறு தேவதைகளை கூட  சேவிக்கக் கூடாது.  பதி ஜீவித்து இருக்கும்போது  தமது உடலை உபவாசங்களினால் வருத்திக் கொள்வது பதியின் ஆயுளைக் குறைக்கும் என்பார்கள். அப்படி செய்தால் அவளும் நரகத்துக்கு செல்வாள். பிரும்மச்சாரிகள் ஒரு குருவிற்கு பணிவிடை செய்ய வேண்டும், புத்திரன் பித்ருக்களுக்கும் சேவை செய்து வர ஸ்த்ரீகள்  சிசுக்களை (குழந்தைகள்) பாதுகாத்து வரவேண்டும். அதனால் மகா விஷ்ணு பெரும் சந்தோஷசம் அடைவார். அவர்களை வைகுண்டத்துக்கு அனுப்புவார். விஷ்ணுவின் ஆசிகள் வேண்டும் என்றால் பதி கோபித்தாலும்  முகத்தைக...