Ujjain: Chinthamani Ganesh

சிந்தாமணி ஆலயம், உஜ்ஜயினி சாந்திப்பிரியா உஜ்ஜயினி நகரம் பல ஆலயங்களைக் கொண்டுள்ள மிகப் பழமையான நகரம். இங்குள்ள பல ஆலயங்கள் மந்திர தந்திரங்களை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள். சிப்ரா நதிக் கரையில் அமந்துள்ள ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள வினாயகர் தானாகத் தோன்றிய ஸ்வயம்பு வினாயகர். அவருக்கு இருபுறத்திலும் அமர்ந்துள்ளவர்கள் அவருடைய மனைவிகளான ரித்தி மற்றும் சித்தி என்பவர்கள். ஸ்வயம்புவாகத் தோன்றியதாக கூறப்படும் இந்த வினாயகரின் காலம் தெரியவில்லை. ஆனால் 12-13 ஆம் நூற்றாண்டில் மால்வா பிரதேசத்தை ஆண்டு வந்த பர்மார் மன்னர்கள் காலத்தில்தான் இந்த ஆலயம் அமைக்கப்பட்டு உள்ளது என்பது தெரிகிறது. இந்த ஆலயத்தின் காலமும் தெரியவில்லை என்றாலும், இது மிகப் பழமை வாய்ந்த ஆலயம் என்பது நிச்சயம். ஆலயம் சிறிது என்றாலும் கீர்த்தி பெரியது. இந்த ஆலயம் மிகவும் புகழ் பெற்ற ஆலயம். இந்த நகரில் உள்ள பெரும்பாலான மக்கள் தம் வீட்டுத் திருமணங்களில் அடிக்கப்படும் அழைப்பிதழ்களை முதலில் இந்த விநாயகரின் ஆலயத்தில் வந்து வைத்து விட்டுத்தான் மற்றவர்களுக்கு விநியோகிக்கத் துவங்க...