இடுகைகள்

Ujjain: Chinthamani Ganesh

படம்
சிந்தாமணி ஆலயம், உஜ்ஜயினி சாந்திப்பிரியா உஜ்ஜயினி நகரம் பல ஆலயங்களைக் கொண்டுள்ள மிகப் பழமையான நகரம். இங்குள்ள பல ஆலயங்கள் மந்திர தந்திரங்களை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள். சிப்ரா நதிக் கரையில் அமந்துள்ள ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள வினாயகர் தானாகத் தோன்றிய ஸ்வயம்பு வினாயகர். அவருக்கு இருபுறத்திலும் அமர்ந்துள்ளவர்கள் அவருடைய மனைவிகளான ரித்தி மற்றும் சித்தி என்பவர்கள். ஸ்வயம்புவாகத் தோன்றியதாக கூறப்படும் இந்த வினாயகரின் காலம் தெரியவில்லை. ஆனால் 12-13 ஆம் நூற்றாண்டில் மால்வா பிரதேசத்தை ஆண்டு வந்த பர்மார் மன்னர்கள் காலத்தில்தான் இந்த ஆலயம் அமைக்கப்பட்டு உள்ளது என்பது தெரிகிறது. இந்த ஆலயத்தின் காலமும் தெரியவில்லை என்றாலும், இது மிகப் பழமை வாய்ந்த ஆலயம் என்பது நிச்சயம். ஆலயம் சிறிது என்றாலும் கீர்த்தி பெரியது. இந்த ஆலயம் மிகவும் புகழ் பெற்ற ஆலயம். இந்த நகரில் உள்ள பெரும்பாலான மக்கள் தம் வீட்டுத் திருமணங்களில் அடிக்கப்படும் அழைப்பிதழ்களை முதலில் இந்த விநாயகரின் ஆலயத்தில் வந்து வைத்து விட்டுத்தான் மற்றவர்களுக்கு விநியோகிக்கத் துவங்க...

Indore- Gajarana Maha Ganapathi

படம்
சங்கடங் களை   களையும்  கஜரானா  கணபதி இந்தூர் ஆலய மகிமை சாந்திப்பிரியா    ஆலய சன்னதியில் கஜரானா கணபதி  மத்தியப் பிரதேசத்தில் உள்ள நகரங்களில் மிகவும் முக்கியமானது இந்தூர் நகரம். அங்கு பழைய காலத்தில் கட்டப்பட்ட சிறப்பான பல ஆலயங்கள் உண்டு.  இந்தூர் நகரம் முன்பு மால்வா மன்னர்களினால் ஆளப்பட்டது. அந்த மன்னர்கள் கடவுள் பக்தி மிகுந்தவர்கள். மராடா எனக் கூறப்பட்ட அவர்கள் மகாராஷ்டிராவை  சேர்ந்த மராட்டி வம்சத்தினர். அதனால்தான் இங்கு சிவாஜி மன்னர்  பெரிதும் போற்றப்படுபவர். அந்த வம்சத்தில் ஆட்சி செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் தேவி அஹில்யா என்ற குடும்பத்தினர்.  மத்தியப் பிரதேசத்தின் இந்தூர், உஜ்ஜயினி மற்றும் தேவாஸ் போன்ற இடங்கள் அவர்களது ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. தேவி அஹில்யா  பல ஆலயங்களை நிறுவி உள்ளார். பெரிய பக்திமான். ஓம்காரீஷ்வருக்குப் போகும் பாதையில் வரும் மண்டலீஷ்வர் என்ற ஊரில் அவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறியதும், பெரியதுமான சிவலிங்கங்களை ஒரு ஆலயத்தில் வைத்து வணங்கி வந்தார்...

Ujjain Bagalamuki temple

படம்
பகலாமுகி ஆலயம், உஜ்ஜயினி சாந்திப்பிரியா நல்கேடா பகலாமுகி  ஆலயத்தில் பகலாமுகி நம் நாட்டில் முக்கியமாக ஹிமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், ஒரிஸ்ஸா, திருபுரா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் - அதாவது மலைவாழ் மக்களும், நாடோடிகளும் நிறைந்த மக்கள் இருந்த இடங்களில் தந்திர மந்திர சக்தியை உள்ளடக்கிய ஆலயங்கள் பல உள்ளன. அவை அனைத்தையுமே அந்த காலத்தில் வாழ்ந்திருந்த அரசர்கள் நிர்மாணித்து அங்கெல்லாம் வழிபாடுகளை செய்து உள்ளார்கள். அப்படி கட்டப்பட்டு உள்ள ஆலயங்கள் மிகப் பெரிய ஆலயங்கள் அல்ல. நமது கிராமங்களில் காணப்படும் கிராம தேவதைகளின் ஆலயங்களைப் போல மிகச் சிறியதாகவும் கூட, அவற்றில் சில மேல் கூரைக் கூட இல்லாமல், மரங்களின் அடியிலும் நதிக் கரைகளிலும் கட்டப்பட்டு உள்ளன. அப்படிப்பட்ட ஆலயங்கள் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினி மாவட்டத்தில் நிறையவே உள்ளன. காரணம் அங்கு ஓடிக் கொண்டு இருந்த பல நதிகள் புனிதமான நதிகள் என்று கருதப்பட்டன. மேலும் அந்த இடங்களில் ஆட்சி புரிந்து வந்த மன்னர்கள் தந்திர மந்திர சக்திகளைக் பயன்படுத்தியே தமது எதிரிகளை அடக்கி , ஆட்சியை விஸ்தரித்துக் கொண்டு இருந்தார...

Brahmakumari Hrathayapushpa

படம்
இராஜயோகினி பிரும்மகுமாரி ஹிருதயபுஷ்பா வாழ்க்கை வரலாறு ஆங்கில புத்தகத்தின் கருத்தை தழுவி தமிழில் எழுதியவர் : - சாந்திப்பிரியா ( மூலக் கதை கன்னடத்தில்:- ஹன்னர்மத்   ஆங்கில மொழி பெயர்ப்பு :- ரேவனாசித்தையா ஹன்னர்மத் , ஹூப்ளி )     ஹிருதயபுஷ்பா தாதி ஹிருதயபுஷ்பா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் பிரும்மகுமாரி ஒரு தெய்வீகப் பெண்மணி . இந்த பூமியில் தனக்கு கொடுக்கப்பட்டு உள்ள நாடகப் பாத்திரத்தை நிறைவேற்ற அவதரித்தவர். அவருடைய பிறப்புக் குறித்து சரியான தகவல் இல்லை. அவருடைய பெற்றோர்கள் முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆசிய துணை கண்டத்தில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து இருந்த பாகிஸ்தான் பகுதியில் இருந்த சிந்த் ஹைதிராபாத் மானிலத்தில் இருந்தவர்கள். அவருடைய தந்தையின் பெயர் ரதன்சந்த் ஜமத்மால். அவர் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தவர். தாயாரின் பெயர் சீதாதேவி. அவருடைய தாயார் பெயருக்கேற்ப ஒழுக்கமுடையவர். சிந்தி மதத்தினரான அவர்கள் கப்பலைப் போன்ற தோற்றம் கொண்ட மூன்று அடுக்கு மாளிகையில் வசித்து வந்தனர். ஹிருதயபுஷ்பாவுடன் உடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர். அவர்கள...

DeviKarumari Amman Temple, Bangalore

படம்
தேவி கருமாரியம்மன் ஆலயம்,  பெங்களூரு சாந்திப்பிரியா ஒரு முறை விநாயகர் தேவி கருமாரிக்கு தன்னிடம் இருந்த வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் செய்ய அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து , தன்னுடைய ஆலயத்துக்கு வருபவர்கள் முதலில் அவரை வணங்கி விட்டுத்தான் தனக்கு பூஜை செய்ய வேண்டும் என அருள் புரிந்தாள். அந்த நேரத்தில் திருவேற்காடில் பாலாம்பிகாவுடன் இருந்த சிவபெருமான் தேவர்களை துன்புறுத்தி வந்த அசுரர்களை அழிக்கத் தான் செல்ல வேண்டி இருப்பதினால் தான் திரும்பி வரும் வரையில் தான் செய்து வந்த படைத்தல், காத்தல், அருள் புரிதல், ஆறுதல் தருதல் மற்றும் அழித்தல் என்ற அனைத்துக் காரியங்களையும் பராசக்தியே தொடர்ந்து செய்து கொண்டு இருக்க வேண்டும் என்று கூறி தன் உடலில் இருந்து எடுத்த வீபுதியை அவளிடம் கொடுத்தார். ஆகவே அந்த அம்பிகையும் அகஸ்தியரை அழைத்து தான் தங்குவதற்கு நல்ல ஒரு இடத்தைத் தேடுமாறுக் கூறினாள் . அவர் எங்கு சென்று நிற்கின்றாரோ அங்கேயே தான் தங்குவேன் என்று கூற அவரும் திருவேற்காடு போன்ற இடங்களிலும் மற்றும் தற்போது பெங்களூரில் உள்ள அவளது ஆலயம் அமைக்கும் இடங்களிலும் கருமார...