DeviKarumari Amman Temple, Bangalore
தேவி கருமாரியம்மன் ஆலயம்,
பெங்களூரு
சாந்திப்பிரியா
பெங்களூரு
சாந்திப்பிரியா
ஒரு முறை விநாயகர் தேவி கருமாரிக்கு தன்னிடம் இருந்த வலம்புரிச்
சங்கினால் அபிஷேகம் செய்ய அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து , தன்னுடைய
ஆலயத்துக்கு வருபவர்கள் முதலில் அவரை வணங்கி விட்டுத்தான் தனக்கு பூஜை
செய்ய வேண்டும் என அருள் புரிந்தாள். அந்த நேரத்தில் திருவேற்காடில்
பாலாம்பிகாவுடன் இருந்த சிவபெருமான் தேவர்களை துன்புறுத்தி வந்த அசுரர்களை
அழிக்கத் தான் செல்ல வேண்டி இருப்பதினால் தான் திரும்பி வரும் வரையில் தான்
செய்து வந்த படைத்தல், காத்தல், அருள் புரிதல், ஆறுதல் தருதல் மற்றும்
அழித்தல் என்ற அனைத்துக் காரியங்களையும் பராசக்தியே தொடர்ந்து செய்து
கொண்டு இருக்க வேண்டும் என்று கூறி தன் உடலில் இருந்து எடுத்த வீபுதியை
அவளிடம் கொடுத்தார். ஆகவே அந்த அம்பிகையும் அகஸ்தியரை அழைத்து தான்
தங்குவதற்கு நல்ல ஒரு இடத்தைத் தேடுமாறுக் கூறினாள் . அவர் எங்கு சென்று
நிற்கின்றாரோ அங்கேயே தான் தங்குவேன் என்று கூற அவரும் திருவேற்காடு போன்ற
இடங்களிலும் மற்றும் தற்போது பெங்களூரில் உள்ள அவளது ஆலயம் அமைக்கும்
இடங்களிலும் கருமாரி அவதாரத்தில் நின்று கொண்டார். கரு என்றால் கருவை
சுமப்பவள், அதாவது மக்கள் அனைவருக்குமே தாயாக இருந்து அவர்களை தன் கருவில்
சுமந்தவள் என்று பொருள். ஆகவேதான் படைத்தல் காத்தல் மற்றும் அருள் புரிதல்
போன்ற அனைத்தையும் தன்னிடத்தில் கொண்டு இருந்தாள். அழித்தலை எப்படி
செய்கிறாள்? அழித்தல் என்பது மனதில் உள்ள தீய எண்ணங்களை அழித்தல் என்பதான
பொருளில் அவள் அழிக்கும் தொழிலையும் செய்து வருகிறாள். அப்படி என்றால் மாரி
என்று ஏன் பெயர் கொண்டாள் ? மாரி என்றால் மழை என்பது பொருள். அவள் தனது
அருளை மழைப் போல பொழிபவள் என்பதான அர்த்தம் தரும் சொல் அது. அதனால்தான்
கரு+மாரி என கருமாரியாக பல ரூபங்களில் இந்த உலகில் இருக்கின்றாள். அவளுடைய
லீலைகள்தான் என்னே!
அதைக் கேட்ட நாரதர் தேவி கருமாரியை வணங்கிச் சென்றார்.
அங்கிருந்துக் கிளம்பிச் சென்ற நாரதரை வழியில் சந்தித்த பிரும்மா ''என்ன நாரதரே எதோ யோசனை செய்த வண்ணம் நடந்து வருகிறீர்கள்'' எனக் கேட்க '' நான் இப்போதுதான் அன்னை கருமாரியை தரிசித்துவிட்டு வருகிறேன். ஆனால் அவளை குறித்த ஒரு முக்கியமான குழப்பத்திற்கு அவளிடமே விடையைக் கேட்க கூச்சமாக இருந்தது. ஆகவே நீங்கள்தான் எனக்கு அதற்கான விளக்கத்தைத் தர வேண்டும்'' என்று கேட்ட நாரதர் '' தேவாதி தேவா நான் பூஉலகில் ஒன்றை கவனித்தேன் தேவி கருமாரியானவள் நகரங்களைவிட கிராமப்புறங்களில் அதிகம் வணங்கப்படுகிறாள். அதன் காரணம் என்னவாக இருக்க முடியும் ?'' என்று கேட்க பிரும்மா கூறினார் '' நாரதா, இதுவும் நல்ல கேள்விதான். தேவியைப் பொறுத்தவரை நகரம் என்றோ கிராமம் என்றோ அவளுக்கு பேதம் இல்லை. யார் அவளை அதிகம் வேண்டுகிறார்களோ அங்கெல்லாம் அவள் நிச்சயமாகச் சென்று அருள் மழைப் பொழிகிறாள். நகரங்களில் உள்ளவர்களுக்கு உண்ண எங்கு உணவு உற்பத்தி ஆகின்றது? கிராமங்களில் உள்ளவர்கள் பயிரிட்டு விளைவிக்கும் தானியங்களினால்தானே? அந்த தானிய விளை நிலங்களுக்குள் போடப்படும் தானியங்களை செழுமையாக விளைவிக்க தண்ணீர் வேண்டும் அல்லவா. அது எங்கிருந்து கிடைக்கும். அதற்கு தேவையான தண்ணீரைத் தர மழை வேண்டும் அல்லவா? ஆகவே அங்கெல்லாம் நல்ல மழை தக்க நேரத்தில் பொழிய வேண்டும், தமது பயிர்கள் செழுமையாக விளைய வேண்டும் என்பதற்காக அவளை ' தாயே ...மாரியைத் தா.........மாரியைத் தா' என்று அங்குள்ளவர்கள் வேண்டுகிறார்கள். அதுவே மாரியாத்தா என்று மருவி விட்டது. அவர்கள் 'மாரியாத்தா ....மாரியாத்தா ' என அவளை மனமுருகி வேண்டும்போது, அழைத்தக் குரலை உதாசீனப்படுத்தாமல் அங்கெல்லாம் சென்று விடுகிறாள் . அதனால் வருடம் தவறினாலும், அவளது ஆராதனை தவறக் கூடாது என எண்ணிக் கொண்டு அங்குள்ளவர்கள் அவளை அதிகம் ஆராதித்து, பெரிய விழாக்கள் எடுத்து, வழிபாடு செய்கிறார்கள். அவளுக்கு கிராமப்புறங்களில் தத்தம் பூமிகளில் ஆலயம் அமைக்கின்றார்கள். ஆகவே அவள் அதிகமாக கிராமங்களில் மட்டுமே ஆராதிக்கப்பபடுகிறாள் என்பது மனப் பிரமையே தவிர உண்மை இல்லை . பராசக்தி அன்னையை தேவி கருமாரியாக ஆராதித்து அனைத்து பிரிவு மக்களுமே ஆலயங்கள் அமைக்கின்றார்கள் என்பதே உண்மை'' என்று கூறி நாரதரின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் பிரும்மன்.
அங்கிருந்துக் கிளம்பிச் சென்ற நாரதரை வழியில் சந்தித்த பிரும்மா ''என்ன நாரதரே எதோ யோசனை செய்த வண்ணம் நடந்து வருகிறீர்கள்'' எனக் கேட்க '' நான் இப்போதுதான் அன்னை கருமாரியை தரிசித்துவிட்டு வருகிறேன். ஆனால் அவளை குறித்த ஒரு முக்கியமான குழப்பத்திற்கு அவளிடமே விடையைக் கேட்க கூச்சமாக இருந்தது. ஆகவே நீங்கள்தான் எனக்கு அதற்கான விளக்கத்தைத் தர வேண்டும்'' என்று கேட்ட நாரதர் '' தேவாதி தேவா நான் பூஉலகில் ஒன்றை கவனித்தேன் தேவி கருமாரியானவள் நகரங்களைவிட கிராமப்புறங்களில் அதிகம் வணங்கப்படுகிறாள். அதன் காரணம் என்னவாக இருக்க முடியும் ?'' என்று கேட்க பிரும்மா கூறினார் '' நாரதா, இதுவும் நல்ல கேள்விதான். தேவியைப் பொறுத்தவரை நகரம் என்றோ கிராமம் என்றோ அவளுக்கு பேதம் இல்லை. யார் அவளை அதிகம் வேண்டுகிறார்களோ அங்கெல்லாம் அவள் நிச்சயமாகச் சென்று அருள் மழைப் பொழிகிறாள். நகரங்களில் உள்ளவர்களுக்கு உண்ண எங்கு உணவு உற்பத்தி ஆகின்றது? கிராமங்களில் உள்ளவர்கள் பயிரிட்டு விளைவிக்கும் தானியங்களினால்தானே? அந்த தானிய விளை நிலங்களுக்குள் போடப்படும் தானியங்களை செழுமையாக விளைவிக்க தண்ணீர் வேண்டும் அல்லவா. அது எங்கிருந்து கிடைக்கும். அதற்கு தேவையான தண்ணீரைத் தர மழை வேண்டும் அல்லவா? ஆகவே அங்கெல்லாம் நல்ல மழை தக்க நேரத்தில் பொழிய வேண்டும், தமது பயிர்கள் செழுமையாக விளைய வேண்டும் என்பதற்காக அவளை ' தாயே ...மாரியைத் தா.........மாரியைத் தா' என்று அங்குள்ளவர்கள் வேண்டுகிறார்கள். அதுவே மாரியாத்தா என்று மருவி விட்டது. அவர்கள் 'மாரியாத்தா ....மாரியாத்தா ' என அவளை மனமுருகி வேண்டும்போது, அழைத்தக் குரலை உதாசீனப்படுத்தாமல் அங்கெல்லாம் சென்று விடுகிறாள் . அதனால் வருடம் தவறினாலும், அவளது ஆராதனை தவறக் கூடாது என எண்ணிக் கொண்டு அங்குள்ளவர்கள் அவளை அதிகம் ஆராதித்து, பெரிய விழாக்கள் எடுத்து, வழிபாடு செய்கிறார்கள். அவளுக்கு கிராமப்புறங்களில் தத்தம் பூமிகளில் ஆலயம் அமைக்கின்றார்கள். ஆகவே அவள் அதிகமாக கிராமங்களில் மட்டுமே ஆராதிக்கப்பபடுகிறாள் என்பது மனப் பிரமையே தவிர உண்மை இல்லை . பராசக்தி அன்னையை தேவி கருமாரியாக ஆராதித்து அனைத்து பிரிவு மக்களுமே ஆலயங்கள் அமைக்கின்றார்கள் என்பதே உண்மை'' என்று கூறி நாரதரின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் பிரும்மன்.
அப்படிப்பட்ட அந்த அன்னைக்கு பல இடங்களில் ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தற்போது குளுமை நிறைந்த பெங்களூரில் ராஜராஜேஸ்வரி நகரில் உருவாகி வரும் தேவி கருமாரியம்மன் ஆலயமும் ஒன்று. அந்த ஆலய விலாசம் :-
Sri Devi Karumariamman Temple
Opp to Shrugagiri Shanmuka Temple,
BEML Layout, Rajarajeshwari Nagara, Bangalore-560098.
Ph: 9945044433 / 9880865461
Opp to Shrugagiri Shanmuka Temple,
BEML Layout, Rajarajeshwari Nagara, Bangalore-560098.
Ph: 9945044433 / 9880865461
கருத்துகள்
கருத்துரையிடுக