இடுகைகள்

Patteeswaran Durgaa Temple

படம்
 பட்டீஸ்வரர் துர்க்கை ஆலயம்  சாந்திப்பிரியா  பட்டீஸ்வரம் என்ற ஊர் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டார் தொலைவிலேயே உள்ளது. பட்டீஸ்வரம் என்றாலே அங்குள்ள துர்க்கை அம்மன் ஆலயம்தான் அனைவர் மனதிலும் வரும் . காரணம் ராகு தோஷம் உள்ளவர்கள் தமது தோஷத்தை களைந்து கொள்ள அந்த ஆலயத்துக்குதான் செல்கிறார்கள். ஆனால் அந்த ஆலயத்தின் முக்கியமான மற்றொரு மகிமை குறித்து பலரும் அறிந்திருக்கவில்லை. அந்த ஆலயத்தில்தான் மிகப் பெரிய பைரவர் சன்னதி உள்ளது.  சோழ மன்னர்கள் அரசாண்ட காலத்தில் அவர்கள் தமது அரண்மனைப் பாதுகாக்க நான்குபுறங்களிலும்  துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் பைரவர் என்பவர்களுக்கு சன்னதிகளை அமைத்து பூஜை செய்து வந்தனராம். அவர்களே இந்த ஆலயத்தில் தாம் வணங்கி வந்த துர்கையின் சிலையைக் கொண்டு வைத்ததாக நம்புகிறார்கள். இந்த பட்டீஸ்வரம் தோன்றியதே பட்டீஸ்வரருக்காக என்றாலும் துர்க்கை உருவில் உள்ள பார்வதியே அதிக முக்கியத்துவம் பெற்று உள்ளாள். இந்த ஐந்து கோபுரங்களை உள்ளடக்கிய மாபெரும் ஆலயம் தோன்றியது ஏழு அல்லது ஆறாம் நூற்றாண்டில் இருக்கலாம். பல காலங்களில் இந்த ஆலயம் பல்லவர்கள். சோழர...

Notice

ஒரு செய்தி இந்த தளத்தில் மேலும் வர உள்ள ஆலய வரலாறுகள் கீழே தரப்பட்டு உள்ளன . நேரமின்மை காரணமாக அவை அடுத்த சில நாட்களுக்குப் பிறகு வெளியாகும். சாந்திப்பிரியா 1. சிதம்பரம் ஆலய வரலாறு 2 . திருவாரூர் ஆலய வரலாறு 3 . சரபேஸ்வரர் தல வரலாறு 4 . வைதீஸ்வரன் ஆலய வரலாறு 5 . திருநாகேஸ்வர ஆலய வரலாறு 6 . மயூரநாத சுவாமி ஆலய வரலாறு 7 . திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலய வரலாறு 8 . கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி ஆலய வரலாறு 9 .திருவிடைமருதூர் ஆலய வரலாறு

Thirukkadaiyur Temple

படம்
திருக்கடையூர் அமிருதகடேஸ்வரர் சமேத  அன்னை அபிராமி ஆலய மகிமை சாந்திப்பிரியா  மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர்  உள்ளது திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சமேத  அபிராமி ஆலயம்.  ஆலயம் சோழர் காலத்தை சேர்ந்தது என்றாலும் அவர்கள் காலத்தில் அது காட்டப்படும் முன்பே அங்கு  சிவனாலயம் இருந்துள்ளது. அந்த காலங்களில் ஆலயம் என்ற கட்டிடங்கள் இல்லாமல் அங்கும் இங்கும் வனங்களில் இருந்த சுயம்பு மூர்த்திகளை அங்காங்கே இருந்த மக்கள் வழிபடுவது வழக்கம். அங்குள்ள ஒரு மரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் அந்த மரத்துப்  பூவை மார்க்கண்டேயர் சிவபெருமான் பூஜைக்கு பயன்படுத்தினார் என்று புராணக் கதை உள்ளதினால் ஆலயம் உள்ள இடத்தில் இருந்த அமிர்தகடேஸ்வரர் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டே வழிபட்டு வந்திருக்க வேண்டும். அந்த ஆலயம் இரண்டு காரணங்களுக்காக விசேஷமானது. முதலாவது இங்கு வந்து கால சம்ஹார மூர்த்தியையும் அமிருதகடேஸ்வரரையும் தரிசனம் செய்பவர்கள் ஆயுள் விருத்தி அடையும். அடுத்து அவர் அருகிலேயே குடி கொண்டு உ...

Aiyavaadi Maha Prathyanga Devi Temple

படம்
மஹா பிரத்யங்கரா  தேவி ஆலயம்  அய்யாவாடி  சாந்திப்பிரியா      ஆதிகாலம்  முதற்கொண்டே  தேவி பிரத்யங்கரா  தான் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ள பக்தர்களுக்கே தன்னை வெளிக் காட்டிக் கொண்டு வந்துள்ளார். மிகவும் உக்ரஹமான முகத்துடன் காட்சி தரும் அவர் உருவம் எத்தனைக்கு எத்தனை பயங்கரமாக உள்ளதோ அதனை கருணை உள்ளம்  கொண்டவள் அந்த தேவி. அவரை அனைவராலும் ஆராதிக்க முடியாது.  அவள் படத்தை தனி நபர்களின் வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளவும் கூடாது என்பது ஒரு விதியாம் . அப்படிப்பட்ட அந்த தேவியின்  ஆலயம் பல இடங்களிலும் உள்ளது என்றாலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிலோ மீடர் தொலைவில் உள்ள ஐயாவாடியில் உள்ள பழமையான ஆலயமே பிரசித்தி பெற்றது. திரு நாகேஸ்வரம் ஆலயத்தில் இருந்து  இது வெகு சமீபத்தில் உள்ளது. உப்பிலியப்பன் ஆலயத்தில் இருந்தும் போக முடியும். அங்கிருந்து இந்த ஆலயம் ஆறு கிலோ மீடர் தொலைவில்  உள்ளது.  இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாத அம்மாவாசை தினத்தன்றும் காலை பத்து மணி முதல் பகல் ஒரு மணிவரை அந்த தேவிக்கு செய்யப்படும் நிகும்ப...

Kathiraamangala Vana Durgai

படம்
கதிராமங்கல வன துர்க்கை சாந்திப்பிரியா   வன துர்கை மாயவரம் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் தல வழிபாட்டுக்குச் செல்பவர்கள் காண வேண்டிய மிகவும் முக்கியமான இடங்களில் வன துர்க்கை ஆலயமும் ஒன்று. மாயவரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிராமமான கதிராமங்கலத்தில் உள்ளது இந்த ஆலயம். சுமார்  2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஆலயம் என்று அதைப் பற்றிக் கூறுகிறார்கள்.   மேலும் ராகு தோஷ பரிகாரத்துக்கு வன துர்க்கை ஆலயத்தை விட வேறு சிறந்த ஆலயமே  இல்லை என்றும்  கூறுகிறார்கள்.  மற்றும் ஒரு விசேஷம். எவர் ஒருவருக்கு தனது குல தெய்வம் யார் என்பது தெரியவில்லையோ அவர்கள் இந்த ஆலயத்தில் வந்து  தமது குல தெய்வமாகவே வன துர்காவை வணங்கினால் அவர்களின் குல தெய்வத்திடம் அதை அவள் சமர்பித்து விடுவதாக ஒரு ஐதீகம் உள்ளதாம். இதை அங்குள்ள பண்டிதர் விளக்கினார்.  திருக்கடையூருக்கு அறுபதாவது வயது திருமணம் செய்து கொள்ளப் போகின்றவர்கள், அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள மார்க்கண்டேயர் ஆலயம் மற்றும் அங்கிருந்து சிறிது தூரம்  தள்ளி உள்ள இந்த வன துர்க்கை ஆலயமும் சென்றுவிட்டு திரு...

Thillai Kaali Amman Temple

படம்
 தில்லை காளியம்மன் ஆலயம்  - சாந்த சொரூபம்  மற்றும் உக்ரஹ சொரூபமாக  உள்ள இரண்டு  தேவிகள் -  சாந்திப்பிரியா   சிதம்பரத்தில் இரண்டு முக்கியமான ஆலயங்கள் உள்ளன. அனைவரும் அறிந்தது சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயமே. ஆனால் அந்த தில்லை நடராஜர் ஆலயத்துக்குச் செல்பவர்கள் அந்த ஆலயத்தில் இருந்து அரை கிலோ தொலைவில் உள்ள தில்லை காளியம்மனையும் தரிசிக்காமல் வந்தால் தில்லை நடராஜரை தரிசித்தப் பலன் கிடைக்காது  என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. சிதம்பர ஆலயத்தில் இருந்து இடதுபுறமாகச் சென்று முதலில் வரும் இடது திருப்பத்தில் திரும்பி நேராகச்  சென்றால் அந்த சாலையின் இறுதியில் தில்லை காளியம்மன் ஆலயம் உள்ளது. அது மட்டும் அல்ல அந்த தில்லை காளியம்மன் வரக் காரணமாக இருந்த   இரண்டு முனிவர்களான 'ஆனந்தீஸ்வரர்'  மற்றும் 'இளமையாக்கினார்'  போன்றவர்களின் சமாதிகளும் அந்த ஊரில் எங்கோ உள்ளது என்றும், அங்கும் போய் அவர்களை தரிசிப்பது இன்னும் விசேஷம் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த முனிவர்களின்  சமாதி உள்ள இடம் எனக்கு கிடைக்கவில்லை. தில்லை காளியம்மன் ...

Vengalamudi aiyanaar temple

படம்
வெங்கலமுடி ஐயனார் கோயில்  -  ஒரு செய்தி -  நான் தமிழாக்கம் செய்துள்ள  "Village Gods of Tamilnadu" என்ற பகுதியை பாராட்டி வாழ்த்து அனுப்பி உள்ள முதியவர் திரு சுப்பிரமணியம் அவர்கள் அதில் கூறி உள்ள ஒரு அற்புதமான செய்தியை வாசகர்களுக்கு அளிக்கிறேன். திரு சுப்பிரமணியன் அவர்களுக்கு  எனது மனமார்ந்த நன்றி.  சாந்திப்பிரியா   திரு சுப்பிரமணியம்   ( http://tamil_chinthanai.blogspot.com )  திரு சுப்பிரமணியம் அவர்கள்எழுதி உள்ள கடிதம் இது :- '' ஓம் அன்புடையீர் திரு ராமசந்திரன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். உங்களுடைய முயற்சிக்கு இந்நாட்டு மக்கள் குறிப்பாக ஆன்மீகவாதிகள் மிகவும் கடமைப் பட்டிருக்கின்றனர். மிகுந்த கவனமும் எளிய ஆங்கில நடையும் அருமை. அவற்றை சாந்திப்பிரியா மொழிபெயர்த்துத் தந்துள்ளார்கள். அவர்களுக்கும் இந்த முதியவனின் ஆசிகளும் வாழ்த்துக்களும். திண்டுக்கல் அருகில் நத்தம் போகும் சாலையில் சாணார்பட்டியிலிருந்து சென்று அய்யாப்பட்டியை அடையலாம். அங்கு வெங்கலமுடி ஐயனார் என்று ஒரு கோயில் உள்ளது. கோயிலின் அருகே தல விருட்சமாக ஒரு காட்...