Tua Pek Kong and Bat Temples (Guberar Aalayam) - Penang
பினாங்கில் 'துவா பெக் காங் '' எனும் இரண்டு செல்வம் தரும் ஆலயங்கள் சாந்திப்பிரியா உள்நாட்டு ஆலயங்களைப் பற்றியே படிக்கும் நாம் மாறுதலாக சில வினோதமான வெளிநாட்டு ஆலயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக இங்கு சில ஆலயங்களைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது தருகிறேன். அதில் ஒன்றுதான் பினாங் நகரில் உள்ள ''துவா பெக் காங் ஆலயம்''. பற்றிய செய்தி . அந்த ஆலயத்துக்குச் சென்று தமக்கு செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக - நாம் செல்வம் வேண்டி குபேரன் மற்றும் லஷ்மி தேவியை வேண்டுவது போல - சீனர்கள் வணங்குகிறார்கள். கிழக்கு மற்றும் மேற்கு மலேசிய , சிங்கப்பூர் போன்ற இடங்களில் உள்ள சீன தேசத்தினர் பெருமளவில் வழிபடும் ஆலயம் அது. அந்த ஆலயம் செல்வம் தரும் (குபேரர்) ஆலயம் போன்றது. செல்வம் பெருகவும், நிறைய பணம் கிடைக்கவும் அங்கு வந்து வேண்டுதல்களை செய்கிறார்கள். ஆலயத்தில் உள்ள துவா பெக் காங் சிலை பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த சாங் லீ என்ற சகோதரர்கள் குழப்பத்தில் இருந்த அன்றைய சீனாவை விட்டு தப்பி ஓடியபோது அவர்கள் சென்று கொண்டு இருந்த...