Tua Pek Kong and Bat Temples (Guberar Aalayam) - Penang
பினாங்கில் 'துவா பெக் காங் ''
எனும் இரண்டு செல்வம் தரும் ஆலயங்கள்
சாந்திப்பிரியா
சாந்திப்பிரியா
உள்நாட்டு ஆலயங்களைப் பற்றியே படிக்கும் நாம் மாறுதலாக சில வினோதமான வெளிநாட்டு ஆலயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக இங்கு சில ஆலயங்களைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது தருகிறேன். அதில் ஒன்றுதான் பினாங் நகரில் உள்ள ''துவா பெக் காங் ஆலயம்''. பற்றிய செய்தி . அந்த ஆலயத்துக்குச் சென்று தமக்கு செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக - நாம் செல்வம் வேண்டி குபேரன் மற்றும் லஷ்மி தேவியை வேண்டுவது போல - சீனர்கள் வணங்குகிறார்கள். கிழக்கு மற்றும் மேற்கு மலேசிய , சிங்கப்பூர் போன்ற இடங்களில் உள்ள சீன தேசத்தினர் பெருமளவில் வழிபடும் ஆலயம் அது. அந்த ஆலயம் செல்வம் தரும் (குபேரர்) ஆலயம் போன்றது. செல்வம் பெருகவும், நிறைய பணம் கிடைக்கவும் அங்கு வந்து வேண்டுதல்களை செய்கிறார்கள்.
ஆலயத்தில் உள்ள துவா பெக் காங் சிலை
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த சாங் லீ என்ற சகோதரர்கள் குழப்பத்தில் இருந்த அன்றைய சீனாவை விட்டு தப்பி ஓடியபோது அவர்கள் சென்று கொண்டு இருந்த கப்பல் பினாங்கில் வந்து தரை இறங்கியதாம் . ஆகவே அவர்கள் அந்த இடத்தில் இறங்கி அந்த ஊரிலேயே வசிக்கலாயினர். அவர்கள் மரணம் அடைந்தப் பின் அவர்களின் கல்லறை அங்கேயே அமைந்தது. அவர்கள் மரணம் அடைந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னால் அங்கிருந்த சீனர்கள் அவர்களை செல்வத்தின் தேவதைகள் எனக் கருதி 1799 ஆம் ஆண்டு அவர்கள் பெயரை ''துவா பெக் காங்'' என வைத்து அந்த கல்லறையின் பக்கத்திலேயே ஒரு ஆலயம் அமைத்து அவர்களை அங்கு வணங்கலாயினர்.
'துவா பெக் காங்''ஆலயத்தில் உள்ள ஆமை. அதை தொட்டு
வணங்கினால் அதிருஷ்டம் கிடைக்குமாம்
வணங்கினால் அதிருஷ்டம் கிடைக்குமாம்
பின்னர் உள்ளூரில் இருந்த சீனர்களில் இரண்டு பிரிவு ஏற்பட்டு மேலும் இரண்டு இடங்களில் அவர்களுக்கு ஆலயங்கள் அமைந்தன. ஒவ்வொரு வருடமும் துவா பெக் காங்கின் பிறந்த நாள் அன்று உள்ளூரில் உள்ள இரண்டு சீனப் பிரிவினரும் தமது ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக இந்த ஆலயத்துக்கு வந்து அங்கு வைக்கப்பட்டு உள்ள அஸ்தி குண்டத்தில் வைக்கப்படும் தீ கொழுந்துவிட்டு எரியும் வகையில் எறியவிட்டு வரும் ஆண்டில் நல்ல வருமானம் தரும் ஆண்டாக அவர்களுக்கு அமைய வேண்டும் என வேண்டிக் கொள்வார்கள்.
ஆலயத்தின் வெளியில் துவா பெக் காங் மற்றும் அவருடன் துணைக்கு
சீனாவை விட்டு வெளியேறி வந்த இரண்டு சகோதரர்களின் கல்லறைகள்
சீனாவை விட்டு வெளியேறி வந்த இரண்டு சகோதரர்களின் கல்லறைகள்
அதே ஆலயத்தை சேர்ந்த 1977 ஆம் வருடத்துக்கு முன்னால் கட்டப்பட்டு உள்ள வௌவால் ஆலயம் எனப்படும் இன்னொரு ஆலயமும் பினாங் மலைப் பகுதியின் கீழேயே உள்ளது. அங்கும் 'துவா பெக் காங்' குபேரர் போலவே வணங்கப்படுகின்றார் . குகைக்குள் அமைந்துள்ள அந்த ஆலயத்தில் நிறைய வௌவால்கள் சுற்றித் திரிவதினால் அவற்றுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதற்காக எந்தெந்த இடத்தில் தலைப் பகுதிகளை இடித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக வெள்ளை நிறத்தில் கோடுகளை ஆலயத்துக்குள் போட்டு உள்ளனர்.
அங்குள்ள சீனர்கள் தாம் சூதாட்டங்களில் பங்கேற்கப் முன் அங்கு வந்து வேண்டிக் கொண்டு செல்வார்களாம். அதன் பின் அதில் வெற்றி பெற்றவுடன் அந்த ஆலயத்தில் வந்து அவருக்கு நன்றிக் கடனாக ஒரு காணிக்கையை செலுத்துகிறார்கள். ஆகவே அந்த ஆலயத்துக்கு நிறைய வருமானம் அதன் மூலம் கிடைகின்றது.
ஆலயத்துக்குள் உள்ள வௌவால்கள்
அங்குள்ள சீனர்கள் தாம் சூதாட்டங்களில் பங்கேற்கப் முன் அங்கு வந்து வேண்டிக் கொண்டு செல்வார்களாம். அதன் பின் அதில் வெற்றி பெற்றவுடன் அந்த ஆலயத்தில் வந்து அவருக்கு நன்றிக் கடனாக ஒரு காணிக்கையை செலுத்துகிறார்கள். ஆகவே அந்த ஆலயத்துக்கு நிறைய வருமானம் அதன் மூலம் கிடைகின்றது.
ஆலயத்தின் உள்ளே வழிபாட்டு இடம்
ஆலயத்தின் நுழை வாயிலில் ஆலயத்தைப்
பாதுகாக்கும் சிங்கத்தின் சிலை
ஆலயம் செல்லும் வழியை விவரமாகப் பார்க்க கீழ்கண்ட இணையத்தளத்துக்குச் செல்லவும்.
----------------------------
நன்றி:- செய்திகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்த திமோதி தை (Timothy Tye) என்பவரின் http://www.penang-traveltips.com இணையதளத்துக்கு நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக