இடுகைகள்

Tua Pek Kong and Bat Temples (Guberar Aalayam) - Penang

படம்
பினாங்கில்  'துவா பெக் காங் '' எனும்  இரண்டு செல்வம்  தரும் ஆலயங்கள் சாந்திப்பிரியா உள்நாட்டு ஆலயங்களைப் பற்றியே படிக்கும் நாம் மாறுதலாக சில வினோதமான வெளிநாட்டு ஆலயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக இங்கு சில ஆலயங்களைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது தருகிறேன். அதில் ஒன்றுதான் பினாங் நகரில் உள்ள ''துவா பெக் காங் ஆலயம்''. பற்றிய செய்தி .  அந்த ஆலயத்துக்குச் சென்று தமக்கு செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக  - நாம் செல்வம் வேண்டி குபேரன் மற்றும் லஷ்மி தேவியை வேண்டுவது போல - சீனர்கள்  வணங்குகிறார்கள்.  கிழக்கு மற்றும் மேற்கு மலேசிய , சிங்கப்பூர் போன்ற இடங்களில் உள்ள சீன தேசத்தினர்  பெருமளவில் வழிபடும் ஆலயம் அது. அந்த ஆலயம் செல்வம் தரும் (குபேரர்)  ஆலயம் போன்றது. செல்வம் பெருகவும், நிறைய பணம் கிடைக்கவும் அங்கு வந்து வேண்டுதல்களை செய்கிறார்கள்.  ஆலயத்தில் உள்ள துவா பெக் காங் சிலை பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த சாங் லீ என்ற சகோதரர்கள் குழப்பத்தில் இருந்த அன்றைய சீனாவை விட்டு தப்பி ஓடியபோது அவர்கள் சென்று கொண்டு இருந்த...

Shithikandapuram Mahadevar Temple

படம்
ஷிதிகண்டபுரம் மகாதேவர் ஆலயம் சாந்திப்பிரியா கேரளத்தில் திருச்சூரில் உள்ள கோரட்டியில் சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் உள்ளது. திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் பாதையில் எர்நாகுலத்திர்க்கு இரண்டு கிலோ தொலைவுக்கு முன்னரே இந்த இடம் வரும். ஆலகால விஷத்தை உண்ட சிவ பெருமான் உலக நன்மைக்காக அந்த இடத்தில் வந்து தமது குடும்பத்தினருடன் தங்கினாராம். 1984 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அச்தமன்கல்யா பிரசன்னத்தில் அந்த ஆலயத்தில் உள்ள சிவ லிங்கம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிய வந்தது. சுமார் ஏறநூட்ட்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் திப்பு சுல்தான் மலபாரில் இருந்தவர்களை துரத்தியபோது அங்கிருந்து வந்து இந்த ஆலயம் உள்ள இடத்தில் தங்கியவர்கள் நீலகண்ட மகாதேவரையே தமது குல தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். மலபாரில் இருந்து ஓடி வந்தவர்கள் அங்கிருந்த ஆலயத்தில் இருந்து பரமசிவனையும் பகவதி தேவியையும் தங்களுடன் கொண்டு வந்து இருந்தார்கள். பின்னர் பகவதியை புளிக்கடவு என்கின்ற நதிக் கரையில் பிரதிஷ்டை செய்து வணங்கினார்கள். அதுபோல மகாதேவரை மேலூர் பரமேல் என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கினார்கள். கோரட்டி ஸ்வரூப் என்பவர...

Kolangal for ensuing festival

படம்
வர இருக்கும் பண்டிகை தினங்களில் புள்ளி வைத்து போடும் சுலபமான கோலங்கள்  சாந்திப்பிரியா படங்களின் மீது கிளிக் செய்தால் பெரிய அளவிலான  படங்களைப் பார்க்கலாம்     

Tirupporur Murugan Temple ( 28)

படம்
தெரிந்த ஆலயம் , பலரும் அறிந்திடாத வரலாறு   - 28 திருப்போரூர்   முருகன் ஆலயம் சாந்திப்பிரியா சென்னையில் இருந்து நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் செங்கல்பட்டைத் தாண்டி உள்ளதே திருப்போரூர் முருகன் ஆலயம். அது பத்தாம் நூற்றாண்டை சார்ந்த பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம். அதில் உள்ள முருகனின் சிலை ஸ்வயம்புவாம். அந்த ஆலயத்துக்கு செல்ல நல்ல பாதை உள்ளது. அந்த ஆலயத்தின் வரலாறு சுவையானது. அது குறித்துப் பல கிராமியக் கதைகள் நிலவுகின்றன. சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1645 ஆம் ஆண்டு வாக்கில் அந்த இடத்தின் அருகில் இருந்த கிராமத்தில் சிதம்பர ஸ்வாமிகள் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மதுரை மீனாஷி தேவியின் பக்தர். ஒரு நாள் தேவி அவர் கனவில் வந்து திருப்போரூரில் முருகனுக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கட்டளை இட்டாள். ஆனால் சுவாமிகளோ அந்த தேவி தன் முன்னால் வந்து தனக்கு தரிசனம் கொடுத்தால்தான் அதை செய்வேன் எனப் பிடிவாதமாக அவளைக் காண வேண்டும் என சாப்பிடாமலேயே விரதம் இருந்தார். ஆகவே ஒரு நாள் அவர் முன்னால் மீனாஷி தேவி தோன்றி அவர் தலையை தொட்டு ஆசி கூறினாள...

Route map for important Temples

படம்
தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள்,  அங்கு செல்லும் வழிதடம் சாந்திப்பிரியா   படத்தை பெரிய அளவில் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்   பலரும் இந்த ஆலயம் செல்லும் வழி எது, அந்த ஆலயம் செல்லும் வழி எது, முக்கியமான ஆலயங்களுக்குச் செல்லும் வழி என்ன எனக் கேட்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு உதவியாக இருக்க சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் செல்லும் வழியையும் முக்கியமாக கும்பகோணத்தை சுற்றி உள்ள நவக்கிரக ஆலயங்கள் செல்லும் வழியையும் மேலே உள்ள படத்தில் தந்துள்ளேன். மேலும் நான் தந்துள்ளதைத் தவிர  வேறு பல ஆலயங்கள் வழியெங்கிலும் வரும். அவற்றில் பழமையான ஆலயங்களை அங்காங்கே வண்டியை நிறுத்திப் பார்க்கலாம்.  வெளியூரில் இருந்து எப்போதாவது செல்பவர்கள்  ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது இரண்டு நாளாவது ஹோடல்களில் தங்கி அனைத்து ஷேத்திரங்களையும்  ஒரு வாரத்தில் தரிசிக்கலாம். கும்பகோணத்தை சுற்றி மற்றும் கும்பகோணத்திலேயே காண வேண்டிய சில ஆலயங்கள் 1) திருவையாறு செல்லும் வழியில் ...

Thirumeeyachur- Sree Lalithambigai Temple

படம்
திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயம் சாந்திப்பிரியா   ஆலயம்  படம் நன்றி : -http://divinebrahmanda.blogspot.com மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் சுமார் இருபது கிலோ தொலைவில் உள்ளது திருமீயச்சூர் என்ற சிறிய கிராமம். மயிலாடுதுறைக்கு பக்கத்தில் உள்ள நன்னிலம் மற்றும் பேரளத்தில் இருந்து மிகவும் அருகில் உள்ளது. இந்த ஆலயமும் சோழர்கள் காலத்தில் ராஜேந்திர சோழன் என்பவரால் கட்டப்பட்டதுதான். ஆலயத்தில் மேகநாதர் சமேதமாக லலிதாம்பிகை உள்ளார். இந்த ஆலய வரலாறும் சுவையானது.  லலிதாம்பிகை  படம் நன்றி : -http://divinebrahmanda.blogspot.com ஒருமுறை காஷ்யப முனிவர் அங்கு இருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு. சிவபெருமான் பிரசாதமாகத் தந்த முட்டையில் இருந்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர் . ஒருவளுக்கு கருடனும் மற்றவளுக்கு அருணனும் பிறந்தனர். ஆனால் ஒருநாள் மோகினி போல தன்னை உருமாற்றிக் கொண்டு திரிந்த அருணனை சூர்யா பகவான் கெடுத்து விட அருணன் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். ஆகவே கோபமடைந்த சிவபெருமானும் சூரியனாரின் ஓளி மறையுமாறு சாபமிட பயந்து போன சூரியனா...

Navagraha Sthoththiram

படம்
நவக்ரஹ ஸ்தோத்திரம்  சாந்திப்பிரியா நவகிரகங்களை நாம் தினமும் துதித்து வணங்குவத்தின் மூலம் நமக்கு அந்தந்த நவகிரக  நாயகர்களினால் ஏற்படும் தொல்லைகள் குறையும். அந்த ஒன்பது நாயகர்களும் அவர்களுக்கு இட்ட வேலைகளையே செய்கின்றார்களே தவிர வேண்டும் என்றே எவருக்கும் கெடுதல்களைப் புரிவது இல்லை. நாம் பூர்வ ஜென்மத்திலும், இந்த ஜென்மத்திலும் செய்துள்ள, செய்து வரும் பாவக் காரியங்களுக்கு  ஏற்ப நமக்கு விதிக்கப்பட்டு உள்ள தண்டனையையே அவர்கள் தருகிறார்கள். நாம் செய்துள்ள பூர்வ ஜென்ம பாப, புண்ணியங்களின் கணக்கின்படி  நமக்கு ஒரு குறிப்பிட்ட பிறப்பு தரப்படுகின்றது.  நமக்கு கொடுக்கப்பட்டு உள்ள அப்படிப்பட்ட பிறப்பில்  இன்ன  காலத்தில் இன்ன  தண்டனை, கீர்த்தி, சோதனை, போன்றவற்றை பெற வேண்டும் என  முடிவு  எடுக்கப்படுகின்றது. அதைத்தான் ஜாதகமாக கணித்து நம் ஜாதகத்தில் அந்த கிரக தோஷம் உள்ளது, இந்த கிரக தோஷம் உள்ளது எனக் கூறுவார்கள்.  கிரக தோஷம் என்ன என்றால் குறிப்பிட்ட  தண்டனையை  தரக்கூடிய நவகிரக நாயகர்கள் தரும் தண்டனை காலத்தையே கிரக தோஷம் என கூறப்படுகின்றத...