Thanks Mr Pattabiraman
நன்றி
இதுவரை எனக்கு அறிமுகம் இல்லாதவரான திரு பட்டாபிராமன் ( Pattabi Raman <vijayakoti33@gmail.com) என்பவர் மரகதம் அம்மையாரைப் பற்றி நான் எழுதி இருந்த கட்டுரைக்கு பதிலாக கீழ் உள்ள கவிதையை அவர் எனக்கு அனுப்பி உள்ளார். அதை அனுப்பி உள்ள அதே படத்துடன் அப்படியே வெளியிடுகிறேன். அவருக்கு என் நன்றி. - சாந்திப்பிரியா
மரகதவல்லி மீனாட்சி
மாங்காட்டில் உறையும் காமாட்சி
காசியில் வதியும் விசாலாட்சி
தந்தைக்கு உபதேசம் செய்தான்
முருகன் சுவாமிநாதனாக
தாயோ வல்லியாய் உருவெடுத்து வந்தாள்
தணிகை நாதனிடம் வந்தமர்ந்து
தத்துவ உபதேசம் பெற்றாள் போலும்
பாட்டினிலே வருவான் முருகன்
பல்லவியாய் வந்தமர்ந்தான்
என்று பாட்டினிலே வந்தான்
முருகன் மரகத வள்ளிக்கு

அவளின் உள்ளம் முருகனை
குறித்து உருகியதைப்போல்
உள்ளம் உருகுதையா என்ற
பாடலை பலமுறை கேட்டதுண்டு
நானும் முருகனின் நினைவில்
திளைத்து இன்புற்றதுண்டு.
பக்தி பரவசம் அடைந்தேன்
முருகனின் அடியாளின்
சரிதை படித்து
TR Pattabiraman
காசியில் வதியும் விசாலாட்சி
தந்தைக்கு உபதேசம் செய்தான்
முருகன் சுவாமிநாதனாக
தாயோ வல்லியாய் உருவெடுத்து வந்தாள்
தணிகை நாதனிடம் வந்தமர்ந்து
தத்துவ உபதேசம் பெற்றாள் போலும்
பாட்டினிலே வருவான் முருகன்
பல்லவியாய் வந்தமர்ந்தான்
என்று பாட்டினிலே வந்தான்
முருகன் மரகத வள்ளிக்கு

அவளின் உள்ளம் முருகனை
குறித்து உருகியதைப்போல்
உள்ளம் உருகுதையா என்ற
பாடலை பலமுறை கேட்டதுண்டு
நானும் முருகனின் நினைவில்
திளைத்து இன்புற்றதுண்டு.
பக்தி பரவசம் அடைந்தேன்
முருகனின் அடியாளின்
சரிதை படித்து
TR Pattabiraman
கருத்துகள்
கருத்துரையிடுக