Grama devathas and deities in Vedik temples

 கிராம தேவதைகளும் 
நகர தெய்வங்களும் 
(வழிபாட்டுத் தலங்கள்  
தோன்றிய  வரலாறு  )

சாந்திப்பிரியா 
பல கிராமங்களில் காணப்படும்  அம்மன் வழிபாட்டுத் தலங்கள், 
எல்லைக் காவல் தெய்வங்கள்  
 
படம்:   http:// www.pbase/neuenhofer/naga cult in_tamilnadu
[இந்தப்  படங்கள் அனைத்துமே ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்'
(Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம
தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப்
பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து கிராம தேவதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா
]
- I-

சில நாட்களுக்கு முன்னர் என்னுடைய ஒரு உறவினர் என்னிடம் சில விவரங்களைக் கேட்டார்.  அவர் கேட்ட சந்தேகங்களின் சாரம் :-
கிராம தேவதைகள் என்பது என்ன?
ஆலயங்கள் மற்றும் கிராம தேவதைகளின் ஆலயங்கள் வெவ்வேறானதா?
பல குடும்பங்களில் கிராம தேவதை எனப்படும் தெய்வங்களை குலதெய்வமாக வழிபடுகிறார்களே. அதன் பின்னணி என்ன?
ஒவ்வொருவருடைய குல தெய்வம் என்பதும் அம்மனாகவே இருக்கும் (பெண் தெய்வம் ) என்பது சரியா?

அவருடைய சந்தேகங்கள் அனைத்துமே விளக்கப்பட வேண்டியவை. நானும் பல நாட்களாக இந்த விஷயங்களைக் குறித்து பல இடங்களிலும் விசாரித்து வந்துள்ளேன். அது போலவே கிராம தேவதைகள் மற்றும் வேத முறையிலான தெய்வ ஆலயங்கள் (இரண்டும் வெவ்வேறானவை) எழுந்த வரலாற்றுப் பின்னணியையும் பலரிடமும் விசாரித்து வந்துள்ளேன். அவற்றைக் குறித்து நான் நீண்ட கட்டுரை எழுத நினைத்து இருந்தேன். ஆனால் என்னிடம் கேட்கப்பட்ட விளக்கங்களுக்கு உடனடியாக விளக்கம் தர வேண்டும் என்பதினால் நான் எழுத இருந்த  கட்டுரையை சிறிய  கட்டுரையாகவே இப்போது எழுதி உள்ளேன்.

கிராம தேவதைகள் கடவுட்கள் இல்லையா? அவர்களுக்கும் கடவுட்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? வேத   முறையிலான  சிவன், பார்வதி, முருகன் , மகாவிஷ்ணு போன்ற கடவுட்களுக்கு  ஆலயங்கள் எப்படி எழுந்தன? முருகனை மட்டும் ஏன் வேதமுறைக் கடவுளாக பார்ப்பதில்லை? கிராம தேவதைகளின் ஆலயம் மற்றும் வேத முறை ஆலயங்களுக்கும்  உள்ள வித்தியாசங்கள் என்ன, பல பிரசித்தி பெற்ற இன்றைய ஆலயங்கள் முன்னர் கிராம தேவதை ஆலயங்களாக இருந்த ஆலயங்களா?  கிராம தேவதை மற்றும் தெய்வீக ஆலயங்கள் என்ற பாகுபாடு ஏன்  போன்றவற்றை முடிந்தவரை  விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

முதலில் சில உண்மைகளை  தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆலயங்கள் எப்போது எழுந்தன என்பது யாருக்குமே தெரியாது. அதைப் பற்றிய  சரியான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் சரித்திர ஆய்வாளர்களின் கூற்றுப்படி வேத காலத்திலும் கூட அதாவது கி.பி 1500 அல்லது கி .பி 1600 ஆம் ஆண்டுகளில் கூட ஆலயங்கள் என்பன இருந்திருக்கவில்லை.   முதன் முதலில் ஆலயம் என்ற ஒன்றை  கண்டு பிடித்ததும் ஆப்கானிஸ்தானில்தான்.  இந்தியாவில் உள்ளதைப் போன்ற   பல இந்து ஆலயங்கள் ஆசியாவின் பல பாகங்களிலும் அதாவது கம்போடியா, தாய்லாந்து, இரான், பாகிஸ்தான், மலேஷியா, சிங்கப்பூர், ஆப்ரிக்க நாடு போன்ற பகுதிகளில் பரவலாக இருந்துள்ளன. ஆனால் தென் பகுதிகளில் அவை இல்லை. தென் பகுதிகளில் இருந்த பெரும்பாலான வழிபாட்டுத் தளங்கள் எல்லாக் காவல் தெய்வ ஆலயங்களே. வேத காலத்தில் இருந்த கடவுள் வழிபாட்டில் வேத மந்திரங்களை ஓதி தெய்வங்களை ஆராதித்திருந்தார்களே  தவிர உருவ வழிபாடோ இல்லை விக்ரஹ வழிபாடோ இருந்ததான செய்திகள் இல்லை.   அவை பின்னர்தான் தோன்றின.

தென் பகுதிகளில் வேத முறையிலான வழிபாட்டுத் தலங்கள் சிறு ஆலயங்களாக எழுந்த காலம் ஒன்றாம் ஆம்  நூற்றாண்டில்தான். ஆலயங்கள் வடநாட்டில்  குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் மூன்றாம் நூற்றாண்டில் துவங்க  பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவிலும் (அதாவது கி. பி 500 ஆம் ஆண்டுக் காலம்) ஆலயங்கள் கட்டப்படத் துவங்கின. பின்னர் அவை சோழ மன்னர்கள் என பல மன்னர்களால் தொடரப்பட்டது என்பதே உண்மை.

அதற்கு முன்னர் தெய்வ வழிபாடு இல்லையா என்ற கேள்வி எழும். உண்மைதான். அதற்கு முன்னரும் அதாவது வேத காலம் பிறந்தப் பின் அங்காங்கே ஆலய வழிபாடுகள் தோன்றத் துவங்கின.  அந்த ஆலயங்கள் எனப்படும் வழிபாட்டுத் தலங்கள்  மண் குடுசைகளிலும், கூறைவேயப்பட்ட நான்கு மண் சுவர்களுக்குள்ளும், குகைகளிலும்,  கற்களினால் உழப்பட்ட இடங்களிலும் மேல் கூரை இல்லாமலும் இருந்த இடங்களில் இருந்தன.

இன்னும் ஒரு கேள்வி எழும். அப்படி என்றால் 10000 20000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மகாபாரதம், ராமாயணம், விஷ்ணு புராணம், சிவ புராணங்களில் கூறப்பட்டு உள்ள தெய்வங்கள் பொய்யானதா?  அதுவும் இல்லை. இங்குதான் ஒன்றை கூர்ந்து கவனிக்க வேண்டும். நடந்த அவை அனைத்துமே தெய்வங்கள் மனிதப் பிறவிகளை எடுத்து வந்து நடத்திய காட்சிகள். ஆகவே அவர்கள் ஆலயங்களில் அமர்ந்திருந்தவர்கள் அல்ல. ராமன், சீதை, லஷ்மி, விஷ்ணு, பார்வதி, போன்ற அனைவருமே  பூலோகத்தில் நடந்த காட்சியில் பங்கேற்ற மனித உருவில் வந்திருந்த  தெய்வங்கள். அவர்களை அந்த வடிவத்தில் மக்கள் ஆலயங்களை கட்டி  ஆராதித்து வந்திருக்கவில்லை. அந்த தெய்வங்களின் உருவங்கள் வெளிவந்தது வேத காலத்துக்குப் பின்னர்தான். விஷ்ணு என்றால் இந்தந்த உருவங்கள், சிவன் என்றால் இந்தந்த உருவங்கள் என ஓவ்வொரு கடவுளின் வடிவங்களும் வேத காலத்துக்குப் பின்னரே வெளியாகத் துவங்கின.

இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால் தெய்வங்களுக்கு ஒரு உருவம் கிடைத்தது வேத காலத்துக்குப் பின்னர்தான் என்பதினால் இந்தியாவின் வடக்குப் பக்கங்களில் இருந்த இடங்களில் கிராம தேவதை வழிபாட்டுத் தலங்கள்  இல்லாமல் வேத முறையிலான இந்து கடவுட்களின்  ஆலயங்கள் மட்டுமே கூரைகளிலும், மண் சுவர்களுக்கு இடையிலும், குகைகளிலும் இருந்திருக்க, தென் பகுதியில்தான்,  ஒரிஸ்ஸா மானிலப் பகுதிகள்வரை   பல இடங்களிலும் கிராம தேவதை  வழிபாடுகள் இருந்து உள்ளன.  கிராம தேவதைகளின் ஆலயங்கள் தோன்றிய  பிறகுதான்  தெய்வீக ஆலயங்கள் தென் பகுதிகளில் பரவலாக தோன்றின. அதே நேரத்தில் வடா பாகங்களிலும் ஆலயங்கள் சிறிதும் பெரிதுமாக போன்றத் துவங்கின. இன்றைக்கும் பல முக்கியமான ஆலயங்களின் பின்னணி வரலாற்றில்  கிராம தேவதைகள்  இருந்துள்ளன. அந்த ஆலயங்கள் கிராம தேவதை ஆலய பூமிகள் மீதே எழுந்துள்ளன.   அது எப்படி?  கிராம தேவதைகள் என்றாலே கருப்பசாமி, சங்கிலிக் கறுப்பர், பேச்சாயி போன்ற மனித ரூபத்தில் உள்ளவர்கள் ஆராதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் அல்ல. அவர்களும் தெய்வத்தின் அம்சங்களே என்பதே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை. இங்குதான் ஆரிய, திராவிட பிரிவுகளின் பிரிவு  காரணமாக அமைந்தது.
.............தொடரும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Vasanthapura Temple ( E)

Kudai Swamigal -E