இடுகைகள்

ஆகஸ்ட், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Chithambara Manmiyam -12

படம்
சாந்திப்பிரியா பாகம்-12 காளியின் கர்வபங்கம் அடங்கியக் கதை   ஒரு முறை சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்படுகின்றது. நீ பெரியவனா இல்லை நான் பெரியவளா எனத் துவங்கிய சண்டை ' சக்தி இல்லையேல் சிவனும் இல்லை' என பார்வதி வாதாடும் நிலைக்குப் போக கோபமுற்ற சிவபெருமான் பார்வதியை கோர உருவம் கொண்ட காளியாக மாறுமாறு சபித்து விடுகிறார். சிவனை விட்டுப் பிரிய மனமில்லாத பார்வதி அழுது புலம்பி தன்னை மன்னித்து விடுமாறு அவரை கேட்டுக் கொள்ள சிவன் கூறினார் ' இன்னும் சிறிது காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் நீ இதே காளி உருவில் தேவர்களின் சார்ப்பில் போரிட்டு அசுரர்களை அழிப்பாய். அப்போது நீ தில்லை மரங்கள் சூழ்ந்த தில்லைக்கு வந்து என்னை நினைத்து தவம் இருக்க வேண்டும். அங்கு  உன்னுடன் சேர்ந்து நடனமாடி உன்னை என்னுடன் மீண்டும் அழைத்துக் கொள்வேன்'. காலம் ஓடியது. தாரகாசுரன் என்ற அசுரன் தோன்றி தேவர்களை துன்புறுத்தி வரலானான். தேவர்களும் ரிஷி முனிவர்களும் மும்மூர்த்திகளிடம் சென்று அவன் தொல்லையில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு வேண்டிக் ...

Chithambara Manmiyam - 11

படம்
சாந்திப்பிரியா பாகம்-11 சோழ மன்னன் அமைத்த ஆலயம் காலம் ஓடியது. வியாக்கிரபாத முனிவர் ஆணைப்படி இரண்யவர்மர் நடராஜப்  பெருமானுக்கு (அங்கு நடனம் புரிந்த சிவபெருமானுக்கு - அது தனிக் கதை ) திருவம்பல ஆலயத்தையும், திருமூலாடேஸ்வரருக்கு ஒரு திருக்கோவிலும், தில்லை வாழ் அந்தணர்களுக்கு வீடுகளும் கட்டுவித்து அவர்களைக் குடியேற்றினார். பதஞ்சலி முனிவரைக் கொண்டு சிவகணப்படி நியமங்களை எழுதச் செய்து அதை யானை மேல் ஏற்றி தில்லைக்  கோவிலை வலம்  வரச் செய்தப் பின் கனகசபைக்கு எடுத்துச் சென்று  பூஜா விதிகளை அமைத்தார். நித்ய பூஜை, ஆண்டு பூஜை,  ஆணி உற்சவம், பவித்திரம் சாத்துதல்,  ஆடி நீர் விளையாட்டு உற்சவம், மார்கழி மற்றும் தைபூச திருப்பாவாடை போன்றவற்றை விதிப்படி செய்ய ஏற்பாடுகளை செய்தார். இப்படியாக சோழ மன்னன் இரண்யவர்மானால்  சிவாலயம் அமைக்கப்பட்டு இருந்தாலும், பூமியிலே முதன் முதலாக தோன்றிய திருக் கோவிலாக சிதம்பரமே இருந்தது என்பதின் காரணம் கட்டிடம் என்ற அமைப்பில் அங்கு சிவாலயம்  சோழ மன்னன் காலத்தில் தோன்றினாலும், அந்த தில்லை வனத்தில் காலம...

Cithambara Manmiyam - 10

படம்
சாந்திப்பிரியா பாகம்-10 இரண்யவர்மர்  சோழ மன்னனான கதை தில்லையில் இருந்த மூவாயிரம் அந்தணர்களும் அந்தர்வேனிக்கு சென்றார்கள். இரண்யவர்மனும்  வியாக்கிரபாத முனிவரது இரண்டாவது மகனைப் போலவே  இருந்து கொண்டு அனைவருக்கும் தொண்டு செய்து கொண்டு இருந்தவண்ணம் அவர்களுடன் இருந்து வந்தார். இப்படி இருக்கையில் கெளட தேசத்தில் ஆட்சியில் இருந்த மனு மன்னன் மரணப் படுக்கையில் இருந்தார். ஆகவே தனது ராஜ்யத்தை மூத்தக் குமாரனான சிங்கவர்மனிடம்  ஒப்படைக்க விரும்பினார்.  அவர் சிவபெருமானின் அருளினால் தில்லையில் உடல் கோளாறு நீங்கி சேவை செய்து கொண்டு இருந்த நிலை அவர் செவியையும் எட்டி இருந்தது என்பதினால் இனி ராஜ்ய பாரத்தை தனது மூத்த மகனான சிங்கவர்மர்  எனும் இரண்யவர்மர்  ஏற்க வேண்டும்  என எண்ணினார். ஆனால் அவர் இருந்த  இடத்துக்கு தம்மால் செல்ல முடியவில்லை என்பதினால் வசிஷ்ட முனிவரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து விட்டு சுவர்க்கத்தை அடைந்தார். மனு மன்னன் மரணம் அடைந்தப் பின் அவரது இறுதிக் கிரியைகளை இளைய மகன்கள் மூலம் செய்து கொடுத்தப் பின், தற்...

Chithambara Manmiyam - 9

படம்
சாந்திப்பிரியா பாகம்-9 சிங்கவன்மர் இரண்யவர்மர் ஆனக் கதை அதன் பின் ஒருநாள் அந்த வேடனிடம் தான் பூமியிலே உள்ள சிவ ஸ்தலங்களை வழிபட்டுக் கொண்டு இருப்பதாகவும் அந்தப் பகுதியை சுற்றி வேறு எங்கும் வழிபடும் தலம் உள்ளதா எனக் கேட்டார்.  அவனும் அவரை தில்லை வனத்துக்கு அழைத்துப் போவதாகவும், அங்கு உள்ள  முனிவரை சந்தித்தால் அந்த இடத்தின் மேன்மையை அவர் கூறுவார் என்று கூறியப் பின்  யோகத்திலே அமர்ந்திருந்த வியாக்கிரபாத முனிவர் இருந்த இடத்துக்கு அவரை அழைத்துச் சென்றான். வியாக்கிரபாத முனிவரைக் கண்ட சிங்கவர்மர்  அவரை நமஸ்கரித்து கண்களில் கண்ணீர் தழும்ப அவரிடம் தனது வரலாற்றை எடுத்துரைத்தார். தாம் உடல் கோளாறு கொண்டதினால் அரசாளத் தகுதி இன்றிப் போய்விட்டதாகவும், ஆகவே பல இடங்களுக்கும் சென்ற வண்ணம் குறைந்த பட்ஷம் முக்தி இன்பத்தையாவது பெறமுடியுமா என்பதற்காக  இடமிடமாகச் சென்று சிவபெருமானை தரிசனம் செய்து கொண்டு வருவதாகவும்,  இங்கும் முக்தி இன்பம் (மோட்ஷம் பெறுவதற்கான வழி முறை ) கிடைக்குமா என்பதை அறிந்து கொள்ளவே வந்ததாகவும் கூறினார். அதைக் கேட்...

Chithambara Manmiyam - 8

படம்
சாந்திப்பிரியா பாகம்-8 சிங்கவன்மர்  கதை இந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காமல் இன்னொருவரும் தில்லைவனத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தார். இந்த பிரபஞ்சத்தை சிவபெருமான் படைத்தபோது சூரியனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் மனு மற்றும் யமன் என்பவர்கள் ஆவர். பாவங்கள் செய்தவரை பூமியிலே தண்டிக்க மனுவும், இறந்தப் பின் அவர்கள் செய்த பாவத்துக்கு தண்டனைத் தர யமனும் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள். மனுவானவர் இமயமலையின் தெற்கே உள்ள கெளட தேசத்தில் ஆட்சியில் இருந்தார். அவர் வம்சத்தை சேர்ந்த நான்கு மனுக்கள் ஆட்சி புரிந்து மறைந்தப் பின் ஐந்தாம் மனுவிற்கு இரண்டு மனைவிகள் அமைந்தார்கள் . அவர்களில் மூத்தவளுக்கு உடல் முழுவதும் சிங்கம் போல இருக்க சிவந்த தேகத்தைக் கொண்ட சிங்கவர்மர் என்ற பிள்ளையும், இளையவளுக்கு பேரழகான பிள்ளையாக தேவவர்மனும் பிறந்தார்கள். உடல் முழுவதும் சிங்கம் போல தேகத்தைக் கொண்ட சிங்கவர்மர், அந்த உடல் கோளாறினால் ஆளுமைக்கு தகுதியானவனாக இல்லை என்பதினால், இனி இந்த ராஜ்யத்தில் இருந்து அவமானப்படக் கூடாது என எண்ணினான். ஆகவே ராஜ்யத்தில் அவமானமான தோற்...

Chithambara Manmiyam - 7

படம்
சாந்திப்பிரியா பாகம்-7 பிரும்ம தேவர் செய்த யாகம் வியாகிரதபாதா முனிவர் மற்றும் பதஞ்சலி முனிவர் போன்றோரும் முனி ரிஷிகளும் தில்லை வனத்திலே சிவபெருமானை தரிசனம் செய்து கொண்டிருந்த வேளையிலே பிரும்ம தேவர் கங்கைக் கரையில் ஒரு யாகத்தை செய்யத் துவங்கி இருந்தார். ஆகவே தில்லையில் வாழ்ந்து வந்த அந்தணர்களையும் முனிவர்களையும் அதற்கு அழைத்து வருன்மாறு நாரத முனிவரை அவர் தில்லை வனத்துக்கு அனுப்பினார். அங்கு சென்று அனைவரையும் அழைத்த நாரத முனிவரிடம் அந்தணர்களும், முனிவர்களும் 'மாபெரும் முனிவரே, நாங்கள் இந்த தில்லை வனத்திலே ஆனந்தமயமான அமிர்தம் பருகுவதைப் போல போன்ற காட்சியை ரசித்துக் கொண்டு இருப்பதினால், இதை விட மேலானது எதுவுமே இருக்க முடியாது  என்பது தெளிவாகிறதினால் , உங்கள் அவிர்பாகத்தை ஏற்க எம்மால் வர இயலாது'  எனப் பணிவோடு கூறியப் பின் நடந்த இனிய நிகழ்ச்சிகளை விவரமாக எடுத்துக் கூறினார்கள். அன்புடன் அவரை வழி அனுப்பினார்கள். 'அடடா...இவர்கள் கூறுவதைப் பார்த்தால் நானும் அல்லவா அந்த அற்புதத்தைக் காணாமல் இத்தனை நாளும் இருந்துள்ளேன்.  ஆகவே உடனே சென்று ...

Chithambara Manmiyam - 6

படம்
சாந்திப்பிரியா பாகம்-6 சிவபெருமான் தந்த தரிசனம் தைபூசம் வியார்கிழமை அன்று விஷ்ணு பகவான் ஆதிசேஷனுக்கு வாக்களித்திருந்தபடி மதிய வேளையில், ஆயிரம் முகத்தைக் கொண்டவர் எனக் கூறப்பட்ட பானுகம்பர் ஆயிரம் சங்கை ஊத, ஆயிரம் தோள் கொண்டவன் என வர்ணிக்கப்படும் வாணாசுரன் முரசொலிக்க, பஞ்ச துந்துபி ஒலியும் வேத கானமும் முழங்க ஞான சபையிலே சிவபெருமான் தனது இடப்புறத்தில் உமா தேவியோடு அனைவருக்கும் காட்சி தந்தார். வியாக்கரபாத முனிவர், பதஞ்சலி முனிவர், உபமன்யு முனிவர் மற்றும் பிரும்மா, விஷ்ணு என கடவுட்கள், ஆயிரமாயிரம் தேவர்கள், மூவாயிரம் அந்தணர்கள் என அனைவரது மத்தியிலும் தோன்றிய சிவபெருமானின் எழில் தோற்றத்தைக் கண்ட அனைவரும் மெய் சிலிர்த்து, நெஞ்சம் நெகிழ, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகி ஓட சிவனந்தம் எனும் ஆனந்தக் கடலில் மூழ்கினார்கள். அப்போது பதஞ்சலி முனிவர் கூறினார் 'எம்பெருமானே, இந்த ஞான சபையிலே உமாதேவியோடு இன்று முதல் எக்காலமும் பூவுலகில் உள்ள ஆன்மாக்களுக்கு (பூமியில் உள்ள மனிதப் பிறவிகளுக்கு) உம்முடைய ஆனந்த காட்சியை காட்டியவாறே வர வேண்டும்' என்று ...

Chithambara Manmiyam - 5

படம்
சாந்திப்பிரியா பாகம்-5 பதஞ்சலி முனிவர் வருகை  வியாக்கிரபாத முனிவர் தனது தந்தையார் மற்றும் மைந்தரான உபமன்யு முனிவர்களுடன் சிவ நடன தரிசனத்தை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டு சிவ பூஜை செய்தபடி அங்கிருந்தபோது, வைகுண்டத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஆதிஷேஷனுடைய உடல் மீது சயனித்துக் கொண்டு இருந்த விஷ்ணு பகவானின் உடல் திடீரென கனத்தது மட்டும் அல்ல அவர் எதையோ யோசனை செய்வது போல அப்படியும் இப்படியும் ஆடிக் கொண்டே இருந்தார். ஆடிக்கொண்டே இருந்ததினால் தன் மீது படுத்துள்ள விஷ்ணு பகவான் விழுந்து விடக் கூடாதே என்ற கவலைக் கொண்ட ஆதிசேஷன் மிகவும் பவ்யமாக விஷ்ணு பகவானிடம் அது குறித்துக் கேட்டார். பதில் ஒன்றும் கூறாமல் ஆதிசேஷனாகிய சயனத்தின் மீது இருந்து திடீர் என அதிகாலையில் எழுந்த விஷ்ணு பகவான் தனது நித்தியக் கடமைகளை செய்து முடித்தப் பின் தனது சிம்மாசனத்தில் சென்று அமர்ந்து கொண்டார். அதைக் கண்ட ஆதிசேஷன் அவரிடம் கேட்டார் ' பிரபோ, நீர் அடியேன் மீது முன்போல சயனித்து மெல்ல எழுந்திராது திடீர் என இன்று ஏன் இத்தனை விடியற்காலை எழுந்து விட்டீர்கள் ?. உங்களுடைய்ப் போக்...

Chithambara Manmiyam -4

படம்
சாந்திப்பிரியா பாகம்-4   பால முனிவர் வியாக்கிரபாதர் ஆனக் கதை தந்தையின் உபதேசத்தைப் பெற்றுக் கொண்ட தவப் புதல்வர்  தனது தாய் மற்றும் தந்தையை வணங்கி அவர்களுடைய ஆசிகளைப் பெற்றுக் கொண்டு  தென் திசையை நோக்கி தில்லைவனத்தைத் தேடித் பயணித்தார்.  அங்கும் இங்கும் சென்றவாறு இருந்தப் பின் முடிவாக தில்லைவனத்தை அடைந்தவர் அங்கிருந்த சிவகங்கை என்ற குளத்தில் நீராடிக் கொண்டு, அதன் அருகில் இருந்த ஒரு ஆல மர அடியையே தன் இருப்பிடமாக்கிக் கொண்டு, தினமும் அங்கு கரையில் இருந்த சிவலிங்க  பெருமானுக்கு பூஜைகளை செய்து வந்தார். அதோடு மட்டும் இல்லாமல் அங்கு திருமூலட்டாறு எனும் இடத்தில் இருந்த திருமூலட்டேஸ்வரரையும்  (சிவபெருமான்) வணங்கி பூஜித்து வந்தார். தில்லைவனம் என்பது சிதம்பரத்தில் உள்ளது. தில்லை என்பது ஒரு வகையான மரங்கள் ஆகும்.  சிதம்பரம் முதலில் தில்லை மரங்கள்  சூழ்ந்த வனமாகவே இருந்தது.  எந்த காலத்தில் என்று கணிக்க முடியாத காலத்தில் அதாவது வேத காலத்திலேயே அல்லது அதற்கும் முற்பட்டக் காலத்தில் என்று கூறலாம், சிதம்பரத்த...

Chthambara Manmiyam -3

படம்
சாந்திப்பிரியா பாகம்-3   இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த பசுபதி எனும் சிவபெருமான் அனைத்து இடங்களிலும் வியாபித்து இருப்பவர். இந்த உண்மையை அறியாதவர்கள் முக்தியை அடைய முடியாது. ஆகவேதான் சிவபெருமானும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியாத தாம் படைத்துள்ள ஆன்மாக்கள் தம்மை வணங்கித் துதித்து மோட்ஷம் அடைய இந்த பூமியிலே எண்ணிலா ஸ்தலங்களை படைக்க வைத்தார். அவரால் படைக்கப்பட்ட அறுபத்தி எட்டு தலங்களில் ஆறு தலங்களே மிகச் சிறந்தவை என்றாலும், காசி, திருவாரூர் மற்றும் சிதம்பரம் என்ற மூன்று தலங்களே அதி மேன்மைப் பெற்றவை. திருவாரூரிலே பிறந்தவர்களுக்கும், காசியிலே இறந்தவர்களுக்கும், சிதம்பரத்திலே சிவபெருமானின் பாதங்களை தரிசித்தவர்களுக்கும் மோட்ஷம் நிச்சயம் என்பது சத்தியமான உண்மையாகும். திருவாரூரிலே பிறப்பதற்கு பூர்வ ஜென்ம புண்ணியம் வேண்டும். பிறர் பொருளை அபகரிக்காமல், பாவத்துக்கு பயந்து தர்ம நெறியிலே சம்பாதித்து, இறுதி காலத்திலே மோட்ஷம் தேடி காசிக்குக் செல்லும் வழியிலே இறக்காமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு காசியிலே சென்று இறக்கவும் பெரும் புண்ணியம் செய்திருக...

Chithambara Manmiyam-2

படம்
சாந்திப்பிரியா பாகம்-2 முன்னொரு காலத்திலே மத்தியன்தின முனிவர் என்பவர் ஒரு காட்டில் ஒரு குடிசையில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தார். அந்த காலங்களில் இருந்த முனிவர்கள் தாமே தம் மக்களுக்கு  போதகர்களாக இருந்து சாஸ்திர சம்பிரதாயங்களை, வேதங்களை, ஆன்மீக பாடங்களை போதிப்பார்கள். அப்படிப்பட்ட முனிவர் பரம்பரையில் தோன்றும் பாலகர்களும் முனிவர்கலாகவே மாறுவார்கள். இளம் வயதிலேயே அபார ஞானமும் பெறுவார்கள். இந்த சூழ்நிலைக் காலத்தில்தான் ஓரளவு வயதுக்கு வந்த தன இளம் பாலகனுக்கு மத்தியன்தின முனிவரே பாடங்களை போதித்து வந்தார். அப்போது ஒரு நாள் அந்த பாலகன் தனது தந்தையிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். 'தந்தையே, கடவுளை எங்கே தரிசிப்பது ?' கேள்வியைக் கேட்டது சிறு பாலகனே என்றாலும் அதை பாலகனின் தவக் குறைவாகவே கருதிய முனிவர் அதற்கு பதில் கூறினார் ' என் மகனே , ஆகாயத்துக்குள் நின்று கொண்டே ஆகாயத்தை எங்கே காணலாம் என்று கேட்கலாமா?. பிரபஞ்சம் முழுவதுமே நிறைந்தவர் கடவுள். ஆகாயமே கடவுளுக்குள் அடங்கிய சிறு தூசியாகும். நாமெல்லாம் அந்த வியாபகத்துக்குள்ளே...

Chithambara Manmiyam -1

படம்
சாந்திப்பிரியா பாகம்-1 முன்னுரை சிதம்பரத்துக்கு வடமொழியில் அநேக மான்மியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றே சிதம்பர மான்மியம் என்பது. சிதம்பரத்தின் மற்றொரு பெயராக அதை கோவில் என்றும் கூறுவார்கள். திருச்சிற்றம்பலம் எனக் கூறப்படும் சிதம்பரம் இந்த பூமியிலே முதன் முதலில் ஏற்பட்ட கோவிலாகவேஇருந்திருக்கக் கூடும் என்பது ஆன்மீக ரஹசியம்  என்பார்கள். பண்டிதமணி திரு கணபதி பிள்ளை என்பவர் சிதம்பர மான்மியத்தை 1979 ஆம் ஆண்டில் கோவில் என்ற தலைப்பில் ஒரு நூலினை, 1955 ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையில் வெளியாகி இருந்த ஆறு பாக கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதி உள்ளார். ஆக தற்போது நான் எழுதி உள்ள இந்த மான்மியம் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் எழுதப்பட்டு இருந்த புராணக் கதையின் சாயல் ஆகும்.  ஆனால் பண்டிதமணி திரு கணபதி பிள்ளை என்பவரால் எழுதப்பட்டு உள்ள கோவில் எனும் நூலைத் தழுவி எழுதப்பட்டது என்னுடைய இந்த சிதம்பர மான்மியம்.  இதில் ஒன்றை கூற வேண்டி  உள்ளது. அந்த நூலில் காணப்படும் விஷயங்களைக் கொண்டே இது எழுதப்பட்டாலும், அவற்றில் உள்ள அதே நடையில் ...

Lakshmi Puran by Balaram Das - Orissa

படம்
சாந்திப்பிரியா  மனபாஸ குருபார் அல்லது குருபார ஓஷா என்பது லஷ்மியை பெண்கள் ஆராதிக்கும் பண்டிகை ஆகும். அந்த தினத்தன்று விடியற் காலையில் பெண்கள் எழுந்து, குளித்தப் பின் வீட்டின் முன்புறத்தில் சாணம் தெளித்து அலம்பியப் பின் அரிசி மாவினால் கோலமிட்டு, அதில் பூக்களை வைத்து லஷ்மியை வீட்டிற்குள் அழைப்பார்கள். வீட்டிற்குள் வந்த லஷ்மியை பூஜை செய்து ஆராதிப்பார்கள். பூஜை இடத்தில் நெற்களை தூவி வைத்து அதன் நடுவில் கோலமிட்டு அந்த கோலத்துக்கு மத்தியில் சிறு மேசை மீது அரிசியை அளக்கும் மூங்கில் கூடையில் நெல்லை நிறப்பி வைப்பார்கள். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தின் இடையில் வரும் 'மார்கசிற்சா' அல்லது 'அக்ரஹாயனா' எனப்படும் மாதத்தில் ஒவ்வொரு வியாழர் கிழமையும் வீட்டுப் பெண்கள் விரதம் இருந்து , லஷ்மி பூஜை செய்து, லஷ்மி புராணம் எனும் புனித பாராயணத்தைப் படிப்பார்கள். அதை படித்து முடித்ததும், பிரசாதங்களை நெய்வித்தியம் செய்து வீட்டில் உள்ளவர்கள் உண்பார்கள். இந்த பூஜையில் வேத மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்யப்படுவது இல்லை, பண்டிதர்கள் கிடையாது. வீட்டில் உள்ள பெண்களே இதை செ...

Sri Lanka - Sivan Temple

படம்
ஸ்ரீ லங்கா ஆலயம் -வன்னி தான் தோன்றீஸ்வரர் ஆலய வரலாறு சாந்திப்பிரியா ஆவுடையார் இல்லாத சிவலிங்கம்   ஸ்ரீ லங்காவின் வன்னி பிரதேசத்தில் அமைந்து உள்ள ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முந்தைய 'தான் தோன்றி ஈஸ்வரர்' ஆலயம் எனும் சிவபெருமான் ஆலயம் பெரும் புகழ் பெற்றதாகும். ஸ்ரீ லங்காவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு உள்ளதாகக்  கூறப்படும் சில ஆலயங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. ஆனால் அந்த ஆலயங்களைப் பற்றிய செய்திகள் அதிகம் தமிழ் நாட்டில் அறியப்படவில்லை. அந்த ஆலயங்கள் சில மகிமை வாய்ந்தவை என்பது மட்டும் அல்ல, அற்புதங்களைக் கொண்ட கதைகளை உள்ளடக்கியவை. ஆகவே முன்னர் மலேஷியாவில்  இருந்த ஆலயங்களைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டது போல தற்போது  ஸ்ரீ லங்காவின் சில புகழ் மிக்க, புராதானமான ஆலயங்களைக் குறித்து எழுத முடிவு செய்தேன்.  அந்த நிலையில்தான் எதேற்சையாக  நான் சமீபத்தில் வன்னி பிரதேசத்தின் 'தான் தோன்றி ஈஸ்வரர்' ஆலய கும்பாபிஷேக மலரை படிக்க நேரிட்டது. ஆனால் அதில் கும்பாபிஷேகக் காலம் குறிப்பிடப்படவில்லை. அதில் காணப்படும் ஆலய வரலாற்று ...