இடுகைகள்

மே, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Ashtavakra Geethai

படம்
அஷ்டவாக்கர கீதை சாந்திப்பிரியா  நாம் அனைவரும் பகவத் கீதை என்பதையே கேள்விப் பட்டு இருப்போம். ஆனால் அதைப் போலவே உள்ளது இன்னொரு கீதையும். அஷ்டவாகர கீதை எனப்படும் அந்த கீதை பலருக்கும் தெரியாது. அஷ்டவாகர கீதை என்பது வேத காலத்தில் எழுதப்பட்டு உள்ள சமிஸ்கிருத நூலாகும். இதை எழுதியவர் யார் என்பது தெரியவில்லை. ஆனால் அதை எழுதியவர் அஷ்டவாகரா என்ற முனிவர் என்று கூறுகிறார்கள். இன்னொரு கூற்றின்படி இந்த நூல் அஷ்டவாகர முனிவர் என்பவர் மிதிலையின் மன்னனான ஜனக மகாராஜருக்கு கூறிய ஞான உரை என்று கூறுகிறார்கள். அஷ்டவாக்கரா யார்? முன்னொரு காலத்தில் உதலாக்கா என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் சிறந்து விளங்கி பண்டிதர். அவருக்கு இருந்த பல சீடர்களில் கஹோடா என்பவரும் ஒருவர். அந்த சீடரின் குணதிசயத்தையும், கல்வியில் இருந்த ஞானத்தையும் கண்ட உதலாக்கா முனிவர் அவருக்கே தன்னுடைய மகளான சுஜாதா என்பவளை மண முடித்துக் கொடுத்தார். சில காலம் ஓடியது. சுஜாதா கர்ப்பம் அடைந்து நிறை மாத கர்பிணியானாள். கிராமங்களில் கூறுவார்கள், கர்பவதிகள் நல்லவற்றையே காது கொடுத்துக் க...

Satyobathesa kathaa

படம்
நாரதரின் சந்தேகம்   சாந்திப்பிரியா 'சத்யோபதேசக் கதை' என்ற பெயரில் வடநாட்டு ஆலயத்  திருவிழாக்களில் நடைபெறும் பிரசங்கங்களில் கேட்டிருந்த ஒரு புராணக் கதை இது  ஒரு முறை விஷ்ணுவிடம் சென்ற நாரதர் கேட்டார், '' பெருமானே எனக்கொரு சந்தேகம். நீங்கள் முன்பொருமுறை என்னிடம் கூறி உள்ளீர்கள். பந்த பாசத்தை துறந்து துறவிகளாகி விட்டால் பிட்ஷை எடுத்தே உண்ண வேண்டும். அந்த நிலையில் தரப்படும் பிட்ஷை கடவுள் கொடுக்கும் உணவிற்கு சமமானது. ஏன் எனில் பிட்ஷை போடுவது யாராக இருந்தாலும், பிட்ஷை போடும் அந்த ஷணத்தின் போது அவர்கள் தெய்வீகமாக இருப்பார்கள். ஆகவே தெய்வமே வந்து பிட்ஷை போட்ட உணவை தூக்கி எறிந்து விடக் கூடாது. ஒரு வேளை, கிடைத்த பிட்ஷை அதிகமாகி விட்டால் அவற்றை உண்டவுடன் தூக்கி எறிந்து விடாமல் அவற்றை பசு உண்பதற்குக் கொடுக்க வேண்டும். அதனால்தான் பிட்ஷை எடுத்தால் கூடியவரை பசுமாட்டின் அருகில் அமர்ந்தபடியேதான் அதே உண்ண வேண்டும் என்பது நியதி. அதைக் கருத்தில் கொண்டுதான் மடங்களில் பசு மாடங்களை வைக்கின்றார்கள் என்று கூறினீர்களே. இப்படியாக சாஸ்திரங்களை பெருதும் மதித்து நடந்து...

Balarama Avatharam

படம்
பலராம  அவதாரம் சாந்திப்பிரியா  இராமாயண யுத்தம் முடிந்து ராமரும் சீதையும் லஷ்மணர் சமேதியாக அயோத்திக்குத் திரும்பினார்கள். அதன் பின் பல நிகழ்ச்சிகள் நடந்தன. ராமரும் லஷ்மணரும் அவரவர் அவதாராம் முடிந்து அடுத்த அவதாரம் எடுக்கச் சென்று விட்டனர். அப்போது கடைசி கட்டத்தில் ராமரைப் பார்த்து தம்பி லஷ்மணர் கேட்டார் '' அண்ணா எனக்கு ஒரு ஆசை. நான் இதுவரை நீங்கள் கூறியபடியேதான் நடந்து வந்துள்ளேன். ஆனால் என்னால் சுயமாக சிந்திக்க முடியாமல் போய் விட்டது. ஆகவே நான் அடுத்த ஜென்மத்திலாவது, அது என்ன பிறப்பாக இருந்தாலும், நானாக முடிவெடுக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல, அந்த அவதாரத்திலும் உங்களுக்குத் துணையாக இருக்கவே விரும்புகிறேன்'' எனக் கேட்டார். ராமர் சிரித்து விட்டு 'அப்படி ஆகட்டும்' என்று கூறி விட்டு சென்றப் பின் சில நாட்களிலேயே இருவரும் தாம் எடுத்த அவதாரங்களை முடித்துக் கொண்டார்கள். அடுத்த அவதாரத்தில் ராமர் கிருஷ்ணராகவும், லஷ்மணர் பலராமனாகவும் அவதாரம் எடுத்தார்கள். ஆனால் பாலராமரின் பிறப்பு சில காரணங்களினால், தேவகி மற்றும் ரோஹிணி என்...

Vallimalai Pondi Devi, Velore

படம்
வள்ளி மலைப்  பொங்கி தேவி சாந்திப்பிரியா வள்ளி தேவி எனும் பொங்கி தேவி   ஸ்ரீ வள்ளிதேவி சில அவதாரங்களை எடுத்து இருக்கின்றாள். அதில் ஒரு அவதாரமாக அவள் காத்தாயி எனும் பெயரில் சித்தாடி எனும் கிராமத்தில் ஆலயம் ஒன்றில் அமர்ந்து இருக்கின்றாள். அப்படிப்பட்ட அந்த வள்ளி தேவி அவதரித்த இடமாக வேலூரில் உள்ள வள்ளி தேவியின் ஆலயத்தையும் கூறுகிறார்கள்.  முருகனின் முதல் மனைவியானவளே வள்ளி தேவி.  அவள் வேடர் குலத்தில் பிறந்து முருகனை மணக்க வேண்டி இருந்தது. அவர்களுடைய  பூர்வ ஜென்மத்தில் வள்ளியும் தெய்வானையும்  மகா விஷ்ணுவின் மகள்கள் ஆவார்கள்.  அவர்கள் தங்களுக்கு அழகானவரும், கோபமே இல்லாத கணவன் வேண்டும் என எண்ணி அதற்காக தபம் இருக்க, முருகப் பெருமான் அவர்கள் முன் தோன்றி அவர்களை தான் பூமியில் வந்து மணப்பதாக உறுதி கூறினார். அவர் கூறியபடியே வள்ளி வேத்தா எனும் வேடரின் மகளாகப் பிறந்தாள். தெய்வானை  இந்தரனுக்கு  மகள்களாகப் பிறந்த பின் அவர்களை அவர் மணந்து கொண்டார். பன்னிரண்டு வருடம் வள்ளியும் முருகனும் லீலைகள் பல புரிந்து...

Adi Sankarachcharya Temple, Kashmir

படம்
காஷ்மீரத்தில் ஆதி சங்கரர் ஆலயம்   சாந்திப்பிரியா மலை மீது உள்ள ஆலயம்  மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியில் இருந்தபோது நான் இரண்டு விஷயங்களைக் குறித்து கேள்விப்பட்டு இருந்தேன். அந்த செய்திகள்  என்ன என்றால் ஆதி சங்கரர் தவம் இருந்த குகை ஓம்காரீஸ்வரத்தில் உள்ளது. அடுத்து ஆதிசங்கரருக்கு ஒரு ஆலயம் காஷ்மீரத்தில் உள்ளது. ஆகவே ஆவலினால் உந்தப்பட்டு  ஒம்காரீஸ்வரருக்குச் சென்று ஆதி சங்கரர் தவம் இருந்த குகையை பார்த்து விட்டுத் திரும்பினோம். ஆனால் காஷ்மீரத்து ஆதி சங்கராச்சாரியார் ஆலயத்திற்குச் செல்லும் பாக்கியம் கிட்டவில்லை. ஒம்காரீஸ்வரருக்குச் சென்று பார்த்து விட்டு வந்ததும் அது பற்றியக் கட்டுரை ஒன்றை வார்த்தை சித்தர் என அழைக்கப்பட்டவரும், தற்போது மறைந்து விட்டவருமான திரு வலம்புரி ஜான் என்பவர் ஆசிரியராக இருந்த தாய் எனும் ஒரு வார இதழில் எழுதி இருந்தேன். அது அநேகமாக 1984 அல்லது 1985 ஆம் ஆண்டாக இருக்கலாம். ஆனால் காஷ்மீரத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் ஆலயம் பற்றி இப்போதுதான் எழுத சந்தர்ப்பம் வந்தது. காஷ்மீரத்தில் கடல் மட்டத்தில்...

Poovarasankuppam- Lashmi Narasimmar Temple

படம்
பூவரசன்குப்பம்  லஷ்மி நரசிம்மர் ஆலயம்   சாந்திப்பிரியா விழுப்புரத்தின் அருகில் உள்ள பூவரசன் குப்பத்தில் உள்ள லஷ்மி நரசிம்மர் ஆலயம் தெற்கு அபிலோகம் எனக் கூறப்படும் அளவுக்கு புகழ் பெற்றது. இது 1200 ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தின் ஆலயம் என்கிறார்கள். இங்கு ஏழு முனிவர்களான சப்த ரிஷிகளுக்கு நரசிம்மர் காட்சி தந்தாராம். ஹிரண்யகசிபுவைக் கொன்ற பாதி மனித பாதி மிருக உடலைக் கொண்ட நரசிம்மர் தன்னை வேண்டி தவம் இருந்த முனிவர்களுக்குக் காட்சி தர தெற்கு நோக்கி வந்தபோது பூவரசன்குப்பத்தின் அருகில் அவர்களுக்குக் காட்சி தந்தார். ஆனால் அவர்களால் உக்ரஹ அவதாரத்தில் இருந்த நரசிம்மரை தரிசிக்க முடியவில்லை. காரணம் அத்தனை சூடாக அந்த பூமியே தகித்ததாம். ஆகவே அவர்கள் அவரது துணைவியாரான அமிருதவல்லித் தாயாரிடம் பெருமானை தாங்கள் தரிசனம் செய்ய வசதியாக இருக்க அவர் கோபத்தை தணிக்குமாறு வேண்டிக் கொள்ள தாயாரும் அவர் மடியில் சென்று அமர்ந்து கொண்டாள். ஒரு கண்ணால் நரசிம்மரையும் இன்னொரு கண்ணால் முனிவர்களையும் பார்த்துக் கொண்டு இடது தொடை மீது அமர்ந்து கொண்டு தன்னைப் பார்த்துக் கொண்டு இருந்...