Kenopashad- Gajanan Magaraj Satsang
பரம் சத்குரு ஸ்ரீ கஜானன் மகராஜ்
கூறியவை 21 .08 .2011 அன்று ஸ்ரீ மோகன் ஜாதவ்
அவர்கள் ஆற்றிய
சொற்பொழிவில் இருந்து..........
அவர்கள் ஆற்றிய
சொற்பொழிவில் இருந்து..........
(Read original Version in English
ஸ்ரீ பரம் சத்குரு கஜானன் மகராஜ்
நாம் உண்மை எனும் ஆத்மாவை தேடும்போது அது குறித்து நமது புத்தியும் மனமும் ஒரு விளக்கத்தை நமக்கு தற்காலிகமாக அளித்தாலும் மெல்ல மெல்ல ஆத்மா என்பது உண்மையில் என்ன என்ற உண்மை விளங்கத் துவங்கும்போது நம்முடைய அறியாமை விலகத் துவங்குவதை உணரலாம்.உதாரணமாக சுற்றிக் கிடக்கும் கயிற்றையும், பாம்பையும் தூரத்தில் இருந்து பார்க்கும்போது சிலர் அதை பாம்பு என பயந்து கொண்டு அதன் அருகில் செல்லாமல் அந்த பயத்திலேயே இருந்து விடுகிறார்கள். உண்மை என்பது என்ன என்று தெரியாத அப்பாவி மக்கள் பல பயங்களை மனதில் சுமந்து கொண்டு வாழ்கிறார்கள். தான் பார்த்தது கயிரேதான், பாம்பு அல்ல என்ற உண்மை அவர்களுக்கு தெரிய வரும்போது அவர்களை பிடித்து இருந்த பயமும் மெல்ல மெல்ல முழுமையாக விலகி விடுகின்றது.
ஆத்மாவின் உண்மையான உருவம் என்பது என்ன? அதற்கு தனி உருவம் இல்லை, உணர்வும் இல்லை, அது என்றுமே மாறாத ஒன்று. அது உரு மாறிக் கொண்டே, இடத்தை விட்டு இடமாக நகர்ந்து கொண்டே இருக்கும் பொருளும் அல்ல. ஸ்திரமாக உள்ள அது நேற்று, இன்று, நாளை என்ற மாறிவரும் நிலையைப் போன்றது அல்ல, மனித மனங்களுக்கும், காலத்திற்கும் அப்பாற்பட்டது . நாம் அதற்கு ஒரு பெயரைக் கொடுக்க வேண்டும் என்றால் அந்த நிலையை பிரும்மன் என்று வேண்டுமானால் என்று கூறிக் கொள்ளலாம்...ஆனால் அந்த பிரும்மனுக்கும் கூட நிறம் இல்லை, வெவேறு ரூபங்கள் இல்லை, அ��ு உருவை��ும், பெயரையும் தாண்டி நிற்பது.
இவற்றை நம்மால் புரிந்து கொள்வது கடினம் என்றாலும் மனிதனுக்குள் இயற்கையாகவே அமைந்து உள்ள மனோதத்துவார்த்தமான மன அலைகள் மூலம் அதை நாமும் புரிந்து கொள்ள முயற்சி செய்கின்றோம். அந்த புரிந்து கொள்ள முயற்சிக்கும் நிலையின் உண்மையானக் காரணம் இந்த மனிதனின் உடல் என நினைத்தபடி அந்த ஜடமான உடலில் வாசம் செய்யும் ஆத்மாவினால்தான். ஆகவே ஒரு மனிதனின் மனதும் புரிந்து கொள்ளும் சக்தியும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவை. இந்த சக்தியைக் கொண்டு மட்டுமே எல்லையற்ற உண்மை என்ற தத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் இவற்றை ஒரு கருவியாக உபயோகப்படுத்தி 'தபசரண்' என்ற ஆறு வழி ரிஷி மார்க்கத்தின் மூலம் நமது அறிந்து கொள்ளும் சக்தியையும் மனதையும் தூய்மைப்படுத்தி, பக்குவப்படுத்தி உண்மையென்ற நிலையை அறிந்து கொள்ளும் பாதைக்கு செல்ல முடியும்.
நமக்கு வெளியில் தெரியுமாறு இரண்டு காதுகள் உள்ளன. ஆனால் நாம் கேட்பது அனைத்தையும் மூன்றாவது காதாக நமது உடலுக்குள் இருந்து வரும் ஆத்மா கிரகித்துக் கொள்கின்றது. அது போல நமக்கு இரண்டு கண்கள் இருந்தாலும் நாம் என்ற மூன்றாவது கண்ணாக இருந்தவாறு நமது ஆத்மாவே அதைக் கட்டுப்படுத்துகின்றது. அது போலத்தான் நமது பேச்சு, உணர்வு, வாசனை, எண்ணம் போன்ற அனைத்தையுமே ஆத்மா கட்டுப்படுத்துகின்றது .
இங்குள்ள மந்திரத்தைப் பாருங்கள்
ந தாத்ரா சக்க்ஷுனு ந கச்சட்டி வாக் ந கச்சட்டி மனஹா ந கச்சட்டி யதா யதத் அனுஷிஷ்யத ந விஜனிம் தட் விதிதட் ந அன்யத் யிவ அதோ அவிதிதட் ஆதியிதட் ந வ்யாச் சக்க்ஷரே யிஷாம் பூர்வேஷம் இதி சூஷ்ரூமா
இதன் அர்த்தம் என்ன என்றால் நமது கண்களால் பார்க்க முடியாதது, நமது பேச்சும் இந்திரியங்களும் உணர முடியாதது, ரிஷிகள் கூறுவது போல நமது மனத்திறனுக்கு அப்பாற்பட்டதே ஆத்மா அல்லது உண்மை என்ற நிலை . இதை புரிய வைப்பதும் கடினம். ஆகவே நமது மூக்கு, வாய், காது, கண்கள் என உடலில் உள்ள பாகங்கள் பார்க்க முடியாத ஆனால் அவை அனைத்தையுமே இயக்கும் அந்த ஆத்மா எனும் இயக்கத்தின் உருவை நம்மால் எழுத்து மூலம் காட்ட முடியாது.
தேவி அதர்வாஷிர்ஷ உபநிஷத்தில் கூறப்பட்டு உள்ள இந்த மந்திரத்தைப் பாருங்கள்:
யஷ்யாஹா ஸ்வரூபம் ப்ரும்மதயோ ந ஜானன்தி தஸ்மாதுச்யதே அஜ்யேய யஸ்ய அந்தோ ந லபியதே தஸ்மாதுச்யதே அவன்தா யஸ்ய லஷ்யம் னோபலாஷ்யதே தஸ்மாதுச்யதே அலாக்ஷ்யா யஸ்ய ஜனனம் னோபலாஷ்யதே தஸ்மாதுச்யதே அஜ எகைவ சர்வத்ர வர்த்ததே தஸ்மாதுச்யதே ஏக
இதன் அர்த்தம் என்ன என்றால் இந்த ஆத்மா எனும் உண்மையை எவராலும் விளக்கிக் கூற முடியாது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அதை கூற முயன்றாலும் அதை மனிதர்களால் கிரகித்துக் கொள்ளவும் முடியாது. எல்லை கடந்து நிற்கும் அந்த உண்மையை வார்த்தைகளில் அடக்கவும் முடியாது. மேலும் அது அமர்ந்து உள்ள இடத்தைக் காணவும் முடியாது.
சார்லி எங்கே உள்ளளர் என்று கேட்டால் அவர் உள்ள இடத்தைக் காட்ட முடியும். ஆனால் அவருக்குள் உண்மை எனும் ஆத்மா அமர்ந்து கொண்டுள்ள இருப்பிடத்தை யாராலும் காட்ட முடியாது. நான் முன்னர் கூறியது போல உருவமற்ற, வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆத்மா எனும் உண்மையே அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது, அதை மீறி எதுவுமே கிடையாது. ஒரு இயக்கத்தின் மூலமே அதன் சக்தியைக் உணர முடியும், ஒரு கன்னியைப் போன்ற அது பரப்பிரும்மனிடம் மட்டுமே ஒன்றாகக் கலந்து இருக்கும். அப்படி பரப்பிரும்மனிடம் கலந்து இருந்தாலும் தனித்தன்மை கொண்ட உண்மை என்ற ஆத்மாவாகவே இருக்கும். அப்படி என்றால் ஒவ்வொருவரும் தான் காண விரும்பும் பல வித கடவுட்களான ஸ்ரீ ராமர், கிருஷ்ணர், ஹனுமார், கணேஷா போன்றவர்கள் யார்? அவர்களை ஒரு உடலிலான ரூபத்தில்தான் நாம் பார்க்கின்றோம் .
ஆனால் அந்த ரூபங்கள் நாம் காண விரும்பும் உண்மை எனும் ஆத்மா அல்ல. அது அந்த ரூபன்களுக்கும் அப்பாற்பட்டது. இனி அடுத்த மந்திரத்தைப் பார்க்கலாம்:-
யாத வச்ச அனுப்யிதிதம் யேன வாக் அபியுத்யதே தட் எவ பிருமா த்வம் வித்தி இந்த்ரியாணி யட் இதம் உபாசதே
இதன் அர்த்தம் என்ன என்றால் எந்த ஒன்றை நமது வாய் பேச்சினால் விளக்க முடியாதோ அந்த பேச்சை தருவதே உண்மை என்ற அந்த ஆத்மாதான். பல யாகங்களிலும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சாதனாவை அனுஷ்டிக்கின்றார்கள். அவை பல ஆத்மாக்களை குறித்தே இருந்தாலும் அது சாதானாக்களுக்கும் அப்பாற்பட்டது.
ஒரு உதாரணத்துக்காக சொல்வோம். இரவு வந்தது. அனைத்து இடங்களும் இருட்டாக உள்ளது. காலை வந்தது, சூரியன் எழுந்தான். வெளிச்சம் பரவ அனைத்துமே தெரியத் துவங்குகின்றது. ஆகவே அனைத்தையும் காட்டும் அந்த சூரிய ஒளி சக்தி வாய்ந்தது. ஆனால் அந்த சூரிய ஒளியை விட அந்த சூரிய ஒளியை உள்ளடக்கி உள்ள சூரியனைக் கூட காண முடிந்த வகையில் நம்முள் மறைந்து உள்ள ஆத்மாவின் வெளிச்சத்தை நம்மால் காண முடிந்தால் எதன் ஒளி பெரிது என்பதை எண்ணிப் பாருங்கள்?
சார்லி என்ற மனிதன் மிக ஆஜானுபாகுவானவன். அவன் தன முகத்தை மழித்துக் கொள்ள (ஷேவிங் செய்து கொள்ள ) கண்ணாடியைப் பார்க்கின்றான். அந்த முகம் பார்க்கும் கண்ணாடி எத்தனை சிறியதாக இருந்தாலும் அவன் முழு உருவையும் தன்னுள் அடக்கிக் கொண்டு அவன் உருவை அது காட்டும். அது போல சார்லியினாலும் அவன் முகத்தில் உள்ள சிறு கண்களின் சிறு பூதக் கண்ணாடி மூலம் உலகின் அனைத்தையுமே பார்க்க முடியும். அது மட்டும் அல்ல பார்த்த அனைத்தையுமே தன் மனதில் புதைத்து வைத்துக் கொள்ளவும் முடியும். ஆக பார்க்கும் கருவியான கண்களை விட அதை இயக்கி வெளியில் பார்த்ததை தன்னுள் அடக்கிக் கொள்ளும் ஆத்மா பெரியது அல்லவா?
இன்னொரு உதாரணம். தேவதத்தா என்பவன் ஆடிப்பாடிக் கொண்டு நடனமாடிக் கொண்டு இருந்தான். திடீரென கீழே இறந்து விழுந்தான். அவன் உடலில் இருந்த கண்கள், காதுகள், வாய் என எதுவுமே இயங்கவில்லை. ஆக அவன் உயிருடன் இருந்தபோது அவை அனைத்தையுமே எது இயக்கியது? இப்போது ஏன் அது இயக்க மறுத்தது? நம்முள் இருக்கும் ஒரு சிறு பொறி, அது இல்லை என்றால் அது ஒருமுறை அது உடலை விட்டு தெறித்து வெளியில் விழுந்து விட்டால் இயக்கமே இல்லை. இது நாலு கால்களைக் கொண்ட மிருகங்களுக்கும் கூடப் பொருந்தும்.
ஞாயிறு என்ற தினம் முன்னும் பின்னும் உள்ள திங்கள் அல்லது செய்வாய் கிழமைகளுக்கு இடையே வரும். அந்தக் கிழமைகள் இல்லை என்றால் ஞாயிறு என்பது வராதா ? வரும், ஆனால் திங்கள் அல்லது செய்வாய் கிழமை போன்றவை ஞாயிற்றுக் கிழமையை அடையாளம் காட்டும் தினங்களே. அது போலத்தான் சார்லி என்பவன் இருந்தால் அவனுக்கும் தான் யார் என்பது தெரியும். அவன் மற்றவர்களின் தயவினால் மட்டுமே வாழ வேண்டும் என்பது இல்லை. அவனுக்கு என தனித் தன்மை உள்ளது. அவனுக்கு தான் யார் என்பதை யார் உணர்த்துகிறார்கள்? அவனுகள் உள்ள உண்மை எனும் பரமாத்மாவே அவனுக்கு அவனை யார் என உணர்த்துகின்றது. இப்படியாகத்தான் கிருஷ்ணன், வள்ளி, சாரதா என அனைவரும் தன்னைத் தானே உணருகிறார்கள்.
யாத் வாச்சா ந அபியுதிதம் யேன வாக் அபியுத்யதே தத் யேவ பிரும்ம த்வம் விதாதி ந இதம் யதி இதம் உபாசதே
இது என்னக் கூறுகிறது என்றால் 'யாத் வாச்சா ந அபியுதிதம்' அதாவது எதை வார்த்தைகளினால் விளக்க முடியாதோ, ஆனால் அதுவே வாயில் இருந்து வரும் வார்த்தைகளை பேச வைக்கும் சக்தி , அதாவது அந்த உண்மையான இயக்கும் சக்தியே ஆத்மா என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கதையைப் கேளுங்கள்.
ஒரு குருவிற்கு நல்ல சிஷ்யன் இருந்தான். அவன் சத்குருவிடம் பல ஆண்டுகளாக இருந்து ஆன்மீகப் பாடங்களை பயின்றான். ஒரு கட்டத்தில் அந்த சிஷ்யன் ஞானம் பெற தயாராகி விட்டதை அறிந்து குரு அவனிடன் 'இனி இங்கிருந்து நீ சென்று தனியான இடத்தில் தியானத்தில் இருந்து கொண்டு ச்வாத்யாயா என்ற ஆத்ம உண்மையைத் தேடு' என்று கூறி அனுப்பினார். பல வருடங்கள் கடந்தன. சிஷ்யன் தன் மனதில் இருந்தே ஒரு செய்தியை குருவிற்கு அனுப்பினார். 'என்னுடைய ஆத்ம பரிசோதனை முடிந்து விட்டது. உண்மையான ஆத்மா என்ன என்பதை உணர்ந்து விட்டேன். இனி உங்களிடம் மீண்டும் வர ஆசைப்படுகிறேன்'. சிஷ்யன் குருவிடம் நேரில் வந்து இதைக் கூறவில்லை. எங்கோ இருந்தவர் தனது மனதில் இருந்த எண்ண அலைகளை அனுப்பினார். அது குருவை வந்து அடைந்தது. அவரும் சிஷ்யரை வருமாறு கூறி செய்தி அனுப்ப சிஷ்யரும் குருவிடம் வந்தார் அவர் முன் அமர்ந்து தியானத்தில் அமர்ந்துகொள்ள இருவரும் இதயபூர்வமாக மனத்தால் பேசிக் கொண்டார்கள். இருவருடைய வாயும் பேசவில்லை, உணர்வுகள் இல்லை, ஆனால் மனதின் வழியே சென்ற அதிர்வலைகள் இருவரின் எண்ணங்களையும் அவர்கள் உள்ளே இருந்த ஆத்மாக்களே பேசிக் கொண்டன . அதையே அசீதத்துவா என்கிறோம்.
நீங்கள் உங்களுக்கு உண்மையான ஆத்மா என்ன என்பது தெரிந்து விட்டது என்பதினால் அனைத்தையும் அறிந்து கொண்டு விட்டதாக நினைத்தால் அது தவறு. காரணம் கடவுளே அப்படி நினைப்பது இல்லை. உபநிஷத்தில் ஒரு கதை உள்ளது. பிருகு முனிவர் தன தந்தையிடம் சென்று தான் பிரும்மனக் காண விரும்புவதாகக் கூறினார். அதற்கு அவருடைய தந்தை அவரை 12 வருட கால தாபத்தை செய்யுமாறு கூறினார். பிருகு முனிவரும் 12 வருட தவத்தில் இருந்துவிட்டு தன் தந்தையிடம் வந்து கூறினார் 'எனக்கு உண்மை என்ன என்பது புரிந்துவிட்டது. இந்த உலகில் உள்ளவர்கள் உணவை உட்கொண்டால்தான் உயிர் வாழ முடியும். ஆகவே உண்ணும் அன்னமே மனிதர்களின் உண்மை'. அதைக் கேட்ட அவர் தந்தை அவரிடம் இன்னும் 12 வருட கால தபத்தை செய்து விட்டு வருமாறு கூறினார். மீண்டும் 12 வருட தவத்தை தனது மற்ற சிஷ்யர்களுடன் செய்து விட்டு வந்த பிருகு முனிவர் தந்தையிடம் வந்துக் கூறினார் ' எனக்கு இன்னும் ஒரு முக்கியமான உண்மை தெரிந்துவிட்டது. மனிதனை இயக்குவதில் முக்கியமானது அவன் மனதுதான் '.. அவர் தந்தை அதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தது போலக் காட்டிக் கொண்டு 'அப்படியா...சரி, இன்னும் 12 வருடம் தபம் செய்துவிட்டு வா' என்று கூறி அவரை அனுப்பினார் . இன்னும் 12 வருடம் தவம் செய்துவிட்டு பிருகு திரும்பிய போது அவருக்கு ஒன்று புரிந்தது. உடலில் உள்ள ஐந்து இயக்கங்களில் அவற்றில் ஏதாவது ஒன்று அல்லது சில இயக்கம் நின்று விட்டாலும் உடல் இயக்கம் தொடர்ந்து இருக்கும். ஆனால் ப்ராணா என்பது மட்டும் வெளியில் போய் விட்டால் மற்றவை இயங்க முடியாது. அதை புரிந்து கொண்டவர் தன் தந்தையிடம் சென்று அந்த உண்மையைக் கூற அவர் கூறினார் 'இன்னும் சில நாட்கள் தொடர்ந்து முயற்சித்துப் பார்... இயற்கையின் நியதி என்ன என்றால் உடல் என்ற ஒரு போர்வைக்குள்தான் ஆத்மா என்பது இருக்கும். அந்த உண்மை தத்துவத்தை அனுபவித்து புரிந்து கொள்ள வேண்டும். அந்த நிலைதான் பேரானந்தம் என்பது . நாம் இந்த உலகில் ஒரு மனிதராகப் பிறந்துவிட்டால் 'ப்ராரப்தம்' என்ற அனைத்தையும் அனுபவிக்க வேண்டி உள்ளது. பல இன்னல்களையும் சந்திக்க வேண்டி உள்ளது. ஆனால் ஒருமுறை அந்த பேரானந்த நிலைக்குச் சென்று உண்மையான ஆத்மா என்ன என்பதைக் கண்டறிந்து விட்டால் எந்த 'ப்ராரப்தங்களின்' விளைவுகளும் நம் மனதை பாதிக்காது.'
உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்...''காற்று எப்படி வீசுகின்றது....மழை ஏன் பொழிகின்றது....நான் எப்படி வாழ்கின்றேன்...நான் பிறந்தேன், மெல்ல மெல்ல வளர்ந்தேன்...மெல்ல மெல்ல என் மரணத்தை நோக்கி நகர்கின்றேன்.. மரணமும் வருகின்றது...இந்த உலகில் வாழ்கை என்ன என்பதை உணர்ந்தேன்...கஷ்ட நஷ்டங்கள் என்பது இல்லாமல் வாழ்கை என்பது உண்டா? '' இப்படியாக அனைத்தையும் எண்ணிப் பாருங்கள். உண்மையைத் தேடுவது மந்திர மாயங்களைப் போல உடனே நடந்து விடாது. அதைக் கண்டுபிடிக்க வாழ்கையை அனுபவிக்க வேண்டும். ஒரு மந்திரத்தாலோ மாயையினாலோ உங்களுடைய கஷ்டங்களை நினைத்த மாத்திரத்தில் போக்க முடியாது, குழந்தை பிறக்க முடியாது, கல்யாணம் ஆக முடியாது, நல்ல கணவன் மனைவிகளைப் பெற முடியாது. ஆனால் அவற்றை அடைய நீங்கள் கடவுளின் அருளை வேண்டி அதைப் பெறலாம், ஒரு குருவின் வழிகாட்டுதலில் அவற்றை அடையலாம். இல்லை நீங்களே முயற்சித்தும் அதைப் பெறலாம். ஆனால் அவற்றைப் பெற உங்களூக்குள் உள்ள எவரோ உங்களை வழிகாட்டுகிறார்...அது யார் என்பதை ஒரு குருவின் மூலம் காண முயலுங்கள். அந்த உண்மையை தெரிந்து கொண்டு விட்டால் இந்த உலகின் எந்த வேதனைகளும் உங்களை எந்த விதத்திலும் பாதிக்க முடியாது.
யாத வச்ச அனுப்யிதிதம் யேன வாக் அபியுத்யதே தட் எவ பிருமா த்வம் வித்தி இந்த்ரியாணி யட் இதம் உபாசதே
இதன் அர்த்தம் என்ன என்றால் எந்த ஒன்றை நமது வாய் பேச்சினால் விளக்க முடியாதோ அந்த பேச்சை தருவதே உண்மை என்ற அந்த ஆத்மாதான். பல யாகங்களிலும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சாதனாவை அனுஷ்டிக்கின்றார்கள். அவை பல ஆத்மாக்களை குறித்தே இருந்தாலும் அது சாதானாக்களுக்கும் அப்பாற்பட்டது.
ஒரு உதாரணத்துக்காக சொல்வோம். இரவு வந்தது. அனைத்து இடங்களும் இருட்டாக உள்ளது. காலை வந்தது, சூரியன் எழுந்தான். வெளிச்சம் பரவ அனைத்துமே தெரியத் துவங்குகின்றது. ஆகவே அனைத்தையும் காட்டும் அந்த சூரிய ஒளி சக்தி வாய்ந்தது. ஆனால் அந்த சூரிய ஒளியை விட அந்த சூரிய ஒளியை உள்ளடக்கி உள்ள சூரியனைக் கூட காண முடிந்த வகையில் நம்முள் மறைந்து உள்ள ஆத்மாவின் வெளிச்சத்தை நம்மால் காண முடிந்தால் எதன் ஒளி பெரிது என்பதை எண்ணிப் பாருங்கள்?
சார்லி என்ற மனிதன் மிக ஆஜானுபாகுவானவன். அவன் தன முகத்தை மழித்துக் கொள்ள (ஷேவிங் செய்து கொள்ள ) கண்ணாடியைப் பார்க்கின்றான். அந்த முகம் பார்க்கும் கண்ணாடி எத்தனை சிறியதாக இருந்தாலும் அவன் முழு உருவையும் தன்னுள் அடக்கிக் கொண்டு அவன் உருவை அது காட்டும். அது போல சார்லியினாலும் அவன் முகத்தில் உள்ள சிறு கண்களின் சிறு பூதக் கண்ணாடி மூலம் உலகின் அனைத்தையுமே பார்க்க முடியும். அது மட்டும் அல்ல பார்த்த அனைத்தையுமே தன் மனதில் புதைத்து வைத்துக் கொள்ளவும் முடியும். ஆக பார்க்கும் கருவியான கண்களை விட அதை இயக்கி வெளியில் பார்த்ததை தன்னுள் அடக்கிக் கொள்ளும் ஆத்மா பெரியது அல்லவா?
இன்னொரு உதாரணம். தேவதத்தா என்பவன் ஆடிப்பாடிக் கொண்டு நடனமாடிக் கொண்டு இருந்தான். திடீரென கீழே இறந்து விழுந்தான். அவன் உடலில் இருந்த கண்கள், காதுகள், வாய் என எதுவுமே இயங்கவில்லை. ஆக அவன் உயிருடன் இருந்தபோது அவை அனைத்தையுமே எது இயக்கியது? இப்போது ஏன் அது இயக்க மறுத்தது? நம்முள் இருக்கும் ஒரு சிறு பொறி, அது இல்லை என்றால் அது ஒருமுறை அது உடலை விட்டு தெறித்து வெளியில் விழுந்து விட்டால் இயக்கமே இல்லை. இது நாலு கால்களைக் கொண்ட மிருகங்களுக்கும் கூடப் பொருந்தும்.
ஞாயிறு என்ற தினம் முன்னும் பின்னும் உள்ள திங்கள் அல்லது செய்வாய் கிழமைகளுக்கு இடையே வரும். அந்தக் கிழமைகள் இல்லை என்றால் ஞாயிறு என்பது வராதா ? வரும், ஆனால் திங்கள் அல்லது செய்வாய் கிழமை போன்றவை ஞாயிற்றுக் கிழமையை அடையாளம் காட்டும் தினங்களே. அது போலத்தான் சார்லி என்பவன் இருந்தால் அவனுக்கும் தான் யார் என்பது தெரியும். அவன் மற்றவர்களின் தயவினால் மட்டுமே வாழ வேண்டும் என்பது இல்லை. அவனுக்கு என தனித் தன்மை உள்ளது. அவனுக்கு தான் யார் என்பதை யார் உணர்த்துகிறார்கள்? அவனுகள் உள்ள உண்மை எனும் பரமாத்மாவே அவனுக்கு அவனை யார் என உணர்த்துகின்றது. இப்படியாகத்தான் கிருஷ்ணன், வள்ளி, சாரதா என அனைவரும் தன்னைத் தானே உணருகிறார்கள்.
யாத் வாச்சா ந அபியுதிதம் யேன வாக் அபியுத்யதே தத் யேவ பிரும்ம த்வம் விதாதி ந இதம் யதி இதம் உபாசதே
இது என்னக் கூறுகிறது என்றால் 'யாத் வாச்சா ந அபியுதிதம்' அதாவது எதை வார்த்தைகளினால் விளக்க முடியாதோ, ஆனால் அதுவே வாயில் இருந்து வரும் வார்த்தைகளை பேச வைக்கும் சக்தி , அதாவது அந்த உண்மையான இயக்கும் சக்தியே ஆத்மா என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கதையைப் கேளுங்கள்.
ஒரு குருவிற்கு நல்ல சிஷ்யன் இருந்தான். அவன் சத்குருவிடம் பல ஆண்டுகளாக இருந்து ஆன்மீகப் பாடங்களை பயின்றான். ஒரு கட்டத்தில் அந்த சிஷ்யன் ஞானம் பெற தயாராகி விட்டதை அறிந்து குரு அவனிடன் 'இனி இங்கிருந்து நீ சென்று தனியான இடத்தில் தியானத்தில் இருந்து கொண்டு ச்வாத்யாயா என்ற ஆத்ம உண்மையைத் தேடு' என்று கூறி அனுப்பினார். பல வருடங்கள் கடந்தன. சிஷ்யன் தன் மனதில் இருந்தே ஒரு செய்தியை குருவிற்கு அனுப்பினார். 'என்னுடைய ஆத்ம பரிசோதனை முடிந்து விட்டது. உண்மையான ஆத்மா என்ன என்பதை உணர்ந்து விட்டேன். இனி உங்களிடம் மீண்டும் வர ஆசைப்படுகிறேன்'. சிஷ்யன் குருவிடம் நேரில் வந்து இதைக் கூறவில்லை. எங்கோ இருந்தவர் தனது மனதில் இருந்த எண்ண அலைகளை அனுப்பினார். அது குருவை வந்து அடைந்தது. அவரும் சிஷ்யரை வருமாறு கூறி செய்தி அனுப்ப சிஷ்யரும் குருவிடம் வந்தார் அவர் முன் அமர்ந்து தியானத்தில் அமர்ந்துகொள்ள இருவரும் இதயபூர்வமாக மனத்தால் பேசிக் கொண்டார்கள். இருவருடைய வாயும் பேசவில்லை, உணர்வுகள் இல்லை, ஆனால் மனதின் வழியே சென்ற அதிர்வலைகள் இருவரின் எண்ணங்களையும் அவர்கள் உள்ளே இருந்த ஆத்மாக்களே பேசிக் கொண்டன . அதையே அசீதத்துவா என்கிறோம்.
நீங்கள் உங்களுக்கு உண்மையான ஆத்மா என்ன என்பது தெரிந்து விட்டது என்பதினால் அனைத்தையும் அறிந்து கொண்டு விட்டதாக நினைத்தால் அது தவறு. காரணம் கடவுளே அப்படி நினைப்பது இல்லை. உபநிஷத்தில் ஒரு கதை உள்ளது. பிருகு முனிவர் தன தந்தையிடம் சென்று தான் பிரும்மனக் காண விரும்புவதாகக் கூறினார். அதற்கு அவருடைய தந்தை அவரை 12 வருட கால தாபத்தை செய்யுமாறு கூறினார். பிருகு முனிவரும் 12 வருட தவத்தில் இருந்துவிட்டு தன் தந்தையிடம் வந்து கூறினார் 'எனக்கு உண்மை என்ன என்பது புரிந்துவிட்டது. இந்த உலகில் உள்ளவர்கள் உணவை உட்கொண்டால்தான் உயிர் வாழ முடியும். ஆகவே உண்ணும் அன்னமே மனிதர்களின் உண்மை'. அதைக் கேட்ட அவர் தந்தை அவரிடம் இன்னும் 12 வருட கால தபத்தை செய்து விட்டு வருமாறு கூறினார். மீண்டும் 12 வருட தவத்தை தனது மற்ற சிஷ்யர்களுடன் செய்து விட்டு வந்த பிருகு முனிவர் தந்தையிடம் வந்துக் கூறினார் ' எனக்கு இன்னும் ஒரு முக்கியமான உண்மை தெரிந்துவிட்டது. மனிதனை இயக்குவதில் முக்கியமானது அவன் மனதுதான் '.. அவர் தந்தை அதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தது போலக் காட்டிக் கொண்டு 'அப்படியா...சரி, இன்னும் 12 வருடம் தபம் செய்துவிட்டு வா' என்று கூறி அவரை அனுப்பினார் . இன்னும் 12 வருடம் தவம் செய்துவிட்டு பிருகு திரும்பிய போது அவருக்கு ஒன்று புரிந்தது. உடலில் உள்ள ஐந்து இயக்கங்களில் அவற்றில் ஏதாவது ஒன்று அல்லது சில இயக்கம் நின்று விட்டாலும் உடல் இயக்கம் தொடர்ந்து இருக்கும். ஆனால் ப்ராணா என்பது மட்டும் வெளியில் போய் விட்டால் மற்றவை இயங்க முடியாது. அதை புரிந்து கொண்டவர் தன் தந்தையிடம் சென்று அந்த உண்மையைக் கூற அவர் கூறினார் 'இன்னும் சில நாட்கள் தொடர்ந்து முயற்சித்துப் பார்... இயற்கையின் நியதி என்ன என்றால் உடல் என்ற ஒரு போர்வைக்குள்தான் ஆத்மா என்பது இருக்கும். அந்த உண்மை தத்துவத்தை அனுபவித்து புரிந்து கொள்ள வேண்டும். அந்த நிலைதான் பேரானந்தம் என்பது . நாம் இந்த உலகில் ஒரு மனிதராகப் பிறந்துவிட்டால் 'ப்ராரப்தம்' என்ற அனைத்தையும் அனுபவிக்க வேண்டி உள்ளது. பல இன்னல்களையும் சந்திக்க வேண்டி உள்ளது. ஆனால் ஒருமுறை அந்த பேரானந்த நிலைக்குச் சென்று உண்மையான ஆத்மா என்ன என்பதைக் கண்டறிந்து விட்டால் எந்த 'ப்ராரப்தங்களின்' விளைவுகளும் நம் மனதை பாதிக்காது.'
உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்...''காற்று எப்படி வீசுகின்றது....மழை ஏன் பொழிகின்றது....நான் எப்படி வாழ்கின்றேன்...நான் பிறந்தேன், மெல்ல மெல்ல வளர்ந்தேன்...மெல்ல மெல்ல என் மரணத்தை நோக்கி நகர்கின்றேன்.. மரணமும் வருகின்றது...இந்த உலகில் வாழ்கை என்ன என்பதை உணர்ந்தேன்...கஷ்ட நஷ்டங்கள் என்பது இல்லாமல் வாழ்கை என்பது உண்டா? '' இப்படியாக அனைத்தையும் எண்ணிப் பாருங்கள். உண்மையைத் தேடுவது மந்திர மாயங்களைப் போல உடனே நடந்து விடாது. அதைக் கண்டுபிடிக்க வாழ்கையை அனுபவிக்க வேண்டும். ஒரு மந்திரத்தாலோ மாயையினாலோ உங்களுடைய கஷ்டங்களை நினைத்த மாத்திரத்தில் போக்க முடியாது, குழந்தை பிறக்க முடியாது, கல்யாணம் ஆக முடியாது, நல்ல கணவன் மனைவிகளைப் பெற முடியாது. ஆனால் அவற்றை அடைய நீங்கள் கடவுளின் அருளை வேண்டி அதைப் பெறலாம், ஒரு குருவின் வழிகாட்டுதலில் அவற்றை அடையலாம். இல்லை நீங்களே முயற்சித்தும் அதைப் பெறலாம். ஆனால் அவற்றைப் பெற உங்களூக்குள் உள்ள எவரோ உங்களை வழிகாட்டுகிறார்...அது யார் என்பதை ஒரு குருவின் மூலம் காண முயலுங்கள். அந்த உண்மையை தெரிந்து கொண்டு விட்டால் இந்த உலகின் எந்த வேதனைகளும் உங்களை எந்த விதத்திலும் பாதிக்க முடியாது.
கருத்துகள்
கருத்துரையிடுக