Goddess Seethal Maatha (T)

தென் இந்தியாவில் மாரியம்மனைப் போற்றி வணங்குவதை போல காலரா, அம்மை போன்ற நோய்களை குணப்படுத்துபவள் மற்றும் பஞ்சகாலத்தில் மழையை பொழிய வைக்கும் தேவி என்ற நம்பிக்கையில் வடநாட்டில் ஷீதல் மாதா எனும் தேவியை வணங்கித் துதிக்கின்றார்கள். ஷீதல் என்றால் குளுமையானவள் என்ற அர்த்தம் உண்டு. வடநாட்டில் டெல்லி, மத்திய பிரதேசம், ஒரிஸா, மேற்கு வங்கம் போன்ற இடங்களிலும், நேபாளம் மற்றும் பாகிஸ்தானின் சில இடங்களிலும் கூட ஷீதல் மாதாவை பூஜிக்கிறார்கள். பல்வேறு தோற்றங்களில் உள்ள ஷீதல் மாதாவை மகாமாயீ மற்றும் மஹா அன்னம்மா என்று வடநாட்டில் அழைக்க தென் இந்தியாவிலோ அவளை மாரியம்மன், ரேணுகா, எல்லம்மா, குளிர்ந்த நாயகி, முண்டகண்ணி அம்மன், கெம்பம்மா, தொட்டம்மா, சகஜம்மா மற்றும் கங்கம்மா என்றும் அழைக்கின்றார்கள். பொதுவாகவே இந்த தேவியை பஞ்ச காலங்களில் மழையை பொழிவிப்பவள், அம்மை, காலரா போன்ற கொடிய நோய்களை குணப்படுத்துபவள், கிராமத்தைக் காப்பாற்றுபவள், குழந்தை வரம் தருபவள், தன்னை வேண்டி நிற்கும் பக்தர்களின் குறைகளைக் களைபவள் என்பதாக நம்புகின்றார்கள் என்பதின் காரணமும் அவள் பார்வதி தேவியின் அவதாரம் என்பதுதான். நெருப்பி...