Singa Perumal Kovil- T

தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில், செங் கல் பட்டு மாவட்டத்தில் உள்ளது பகவான் நரசிம்ம பெருமாளின் சிங்கப் பெருமாள் கோவில் . இந்த ஆலயம் சுமார் 1500 முதல் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகின்றது. ஆலயம் முழுவதும் மலையின் குகைக்குள் அமைந்து இருக்க ஆலய மூர்த்தியும் அதனுள் மலையின் பாறையில் செதுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்தின் விஷேசம் என்ன எனில் பகவான் நரசிம்மர் அவதரித்தது பிரதோஷ காலத்தில் என்பதினால் பிரதோஷ காலத்தில் இங்கு பகவான் நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகின்றது. திருமஞ்சனம் என்பது அபிஷேகத்தை குறிக்கும் சொல் ஆகும். சிவ ஆகம முறைப்படி பகவானின் சிலை மீது தண்ணீர் அல்லது வேறு ஏதாவது பொருளை ஊற்றி செய்யும் புனித நீராட்டுதலை (குளிப்பாட்டுவதை) அபிஷேகம் என்பார்கள். அதையே வைஷ்ணவர்கள் திருமஞ்சனம் என்பார்கள். ஆகவே இரண்டுமே ஒரே செயலைக் குறிப்பிடுவது ஆகும். இந்த ஆலயத்தில் உள்ள பகவான் நரசிம்மரை பாடலாத்ரி நரசிம்மர் என்று அழைக்கின்றார்கள். பாடலாத்ரி என்றால் சிவப...