Pancha Linga Shethras (T)

ஆந்திர பிரதேசத்தில் சந்திர பகவான், சூரிய பகவான், இந்திர பகவான், விஷ்ணு பகவான் மற்றும் முருகப் பெருமான் போன்ற ஐந்து தெய்வங்களும் ஐந்து இடங்களில் சிவ பெருமானுக்கு ஆலயம் எழுப்பி உள்ளார்கள். அவை அனைத்தும் சிவபெருமானின் ஆத்ம லிங்கத்தில் இருந்து உடைந்து விழுந்த லிங்கத்தை கொண்டு கட்டப்பட்ட ஆலயங்கள் ஆகும். அந்த ஐந்து சிவாலயங்களை பஞ்சரமா ஆலயங்கள் அல்லது பஞ்சரமா ஷேத்திரங்கள் என்கின்றார்கள். அந்த ஐந்து ஆலயங்களும் :- அமராவதியில் உள்ள அமரரமா ஆலயம் தக்ஷராமம் எனும் இடத் தில் உள்ள தக்ஷரமா ஆலயம் கிழக்கு கோதாவரியில் உள்ள சோமரமா ஆலயம் கிழக்கு கோதாவரியில் உள்ள பல்லக்கொல்லு எனும் இடத்தில் உள்ள ஷீரரமா ஆலயம் மேற்கு கோதாவரியில் சமர்லகோடாவில் உள்ள பீமரமா ஆலயம் என்பன ஆகும் அந்த ஐந்து ஆலயங்களின் வரலாறும் சுவையானது. இந்த ஆலயங்களின் வரலாற்றின்படி தாரகாசுரன் எனும் ஒரு அசுரன் கடுமையான தவம் செய்து பிரும்ம தேவரிடம் இருந்து ஒரு அரிய வரத்தைப் பெற்று இருந்தான். அந்த வரத்தின்படி சிவபெருமானுக்கு பிறக்கும் பிள்ளையைத் தவிர அவனை வேறு யாராலும் பரமசிவன் கட...