Chattampillai Swamigal (T)

ஒரு கணம் சிந்திக்கிறேன்............ நான் இந்த கட்டுரையை எழுதிய தின் காரணம் வினோதமானது. ஒருமுறை ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தபோது சக பிரயாணி இந்த மஹான் குறித்த பழைய புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருந்தார். அவரிடம் பேசிக்கொண்டு செல்கையில் இந்த மஹானைக் குறித்து அறிந்து கொண்டதும், அந்த புத்தகத்தை வாங்கி சற்று படித்துப் பார்த்தேன். அந்த மஹான் ஒரு சித்த புருஷர் என்பதாக அந்த வழிப்போக்கர் கூறினார். அந்த புத்தகம் சென்னையை சேர்ந்த பிரேமா பிரசுரம் என்பவர்களால் வெளியிடப்பட்டு இருந்ததாக நியாபகம் உள்ளது. ஆனால் அந்த புத்தகம் மீண்டும் எங்குமே கிடைக்கவில்லை. 2005 ஆம் வாக்கில் அந்த மஹானைப் பற்றியக் கதையை சில தமிழ் மாத இதழ்களுக்கு அனுப்பினேன். அவை பிரசுரம் ஆகவில்லை. அதன் காரணமும் தெரியவில்லை. காலம் ஓடியது. நான் என்னுடைய வலைதளத்தில் ஆன்மீக கட்டுரைகளை எழுதத் துவங்கியதும் மறக்காமல் மனதில் ஓடிக் கொண்டு இருந்த அந்த மகானின் கதையை 2010 ஆம் ஆண்டு வெளியிட்டேன். பல இடங்களிலும் பல்வேறு வகைகளிலும் அவர் குறித்த படங்களைத் தேடியும் ஒன்று கூட கிடைக்கவில்லை. நான் பல சித்தர்களை ...