Shri Adi Sankara's historic places (T)

ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் வாழ்க்கையுடன் சம்மந்தப்பட்ட முக்கியமான இரண்டு இடங்கள் என்ன என்பதை பலர் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களில் கூட அவற்றைக் குறித்து அதிக செய்திகள் கூறப்படவில்லை. அந்த இரண்டு முக்கியமான இடங்கள் ஒம்காரீஸ்வரர் ஆலயத்தின் அடியில் அவர் அவருடைய குருவை சந்தித்து போதனைகளை பெற்றுக் கொண்டு தவம் இருந்த குகை மற்றும் இரண்டாவது காஷ்மீரத்தில் அவர் தங்கிய ஆலயம் ஆகும். ஸ்ரீ ஆதிசங்கரர் கேரளாவில் காலடி எனும் இடத்தில் உள்ள புரானா (அதன் தற்போதைய பெயர் பெரியார்) ஆறு எனும் நதிக் கரையின் அருகில் திரு சிவகுரு மற்றும் திருமதி ஆர்யாம்பாள் என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார். முதலில் அந்த தம்பதியினருக்கு குழந்தைகள் எதுவுமே பிறக்கவில்லை என்பதினால் மனம் ஒடிந்து போய் இருந்தார்கள். ஆனால் ஒரு நாள் அவரது தாயாரின் கனவில் தோன்றி சிவபெருமான் தானே விரைவில் அவர்களுக்கு மகனாகப் பிறப்பேன் என வாக்குறுதி தந்தார். விரைவில் திருமதி ஆர்யாம்பாளும் கர்பமுற்று ஒரு ஆண் மகனைப் பெற்று எடுத்தாள். அவரே ஸ்ரீ ஆதி சங்கரர் ஆகும். ஆறு வயதிலேயே ஆதி சங்கரர் அனைத...