Goddess Samayapuram Maariyamman (T)

சமயபுரத்தில் தேவி சமயபுரம் மாரியம்மனுடன் சம்மந்தப்பட்ட இரு ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான தேவி சமயபுரம் மாரியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். அங்குள்ள அம்மனை பார்வதி தேவியின் அம்சமாக கருதுகிறார்கள். அவளுக்குள்ள அனைத்து சக்திகளையும் சிவபெருமானே தந்துள்ளார். பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தமது பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டும், தீராத தமது நோய்கள் குணமாக வேண்டும், அம்மை நோய்களால் தாம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றெல்லாம் வேண்டிக் கொள்வார்கள். சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தைப் பற்றி தெரிந்திருக்காத ஆன்மீக பக்தர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அம்மை நோய் வந்தவர்கள் அந்த நோய் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக் கொண்டு பரிகாரம் செய்வார்கள். அப்படி குணம் அடைந்ததும் அவர்களை இந்த ஆலயத்துக்கு அழைத்து வந்து நேர்த்திக் கடன்களை செய்வார்கள். அவளே உலகெங்கும் பல்வேறு ரூபங்களிலும் பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படும் அனைத்து தேவி மாரியம்மன்களுக்கும் தலைவியானவள் ஆகும். தமிழில் மாரி என்றால் மழை என்பது அர்த்தம். ஆகவே மழையைப் போல அருளை பொழிபவள...