Goddess Jhesta Devi (Goddess Moodevi)- T

நம் வீடுகளில் யாராவது ஆத்திரம் கொண்டு மற்றவர்களை திட்டும்போது மூதேவி....மூதேவி என்று கூறுவது உண்டு. அப்படிக் கூறினால் திட்டப்படுபவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள், அதிருஷ்டமே இல்லாதவர்கள், அவர்கள் இருக்கும் இடத்தில் தரித்திரம் நிலவும் என்று எண்ணுவதால் அந்த வார்த்தையை கெட்ட வார்த்தையாக எண்ணி உபயோகிக்கிறார்கள். புராணங்களின்படி அவள் மஹாலஷ்மியின் மூத்த சகோதரி ஆவார். லஷ்மி தேவியைப் போல அழகான உருவில் இல்லாமல் அமங்கலமான உருவில் இருந்தாலும் உலகில் உள்ள அறுபத்தி நான்கு தரித்திரங்களை விலக்கி வாழ்வில் வசந்தம் ஏற்பட வழி தருபவள் அவளேயாகும். மூதேவி என ஒருவரை திட்டுவதின் மூலம் அவளை நம்மை அறியாமல் ஆராதிக்கின்றோம் என்பதே உண்மையாகும். மூதேவி எனும் ஜேஷ்ட தேவி யார்? வாழ்க்கையில் ஒருவர் செய்யும் தீய மற்றும் நல்ல குணங்களை எடுத்துக் காட்டி, அவற்றின் பலாபலன்களை உலகத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மஹாவிஷ்ணு மூதேவியைப் படைத்தாராம். மூதேவியை பத்தாம் நூற்றாண்டுவரை பல்லவ மற்றும் சோழர்கள் காலத்தில் மக்கள் வணங்கி வந்துள்ளார்கள். முக்கியமாக தென் இந்தியாவின் பல ஆலயங்களிலும் அவளை போற்றி ஆராத...